சுதந்திரம் பல விதம்!
உடல்தனை வளர்க்கச் சுதந்திரம் வேண்டும் –
உண்ணவும் உடுக்கவும் படுக்கவும் வேண்டும்!
புத்தியை வளர்க்கச் சுதந்திரம் வேண்டும் –
படிக்கவும், அறியவும், புரியவும் வேண்டும்!
உள்ளத்தை வளர்க்கச் சுதந்திரம் வேண்டும் –
எண்ணவும், எழுதவும், பேசவும், வேண்டும்!
அனைத்திலும் உயர்வாய் பிறிதொன்றும் உண்டு …
ஆன்மாவை வளர்க்க சுதந்திரம் வேண்டும் –
பற்றின்றி இருக்கப் பழகிட வேண்டும்
பலன் வேண்டாமல் கடமை செய்திட வேண்டும்
அளவின்றி அன்பை அளித்திட வேண்டும்
அருளின்றி உலகில்லை, உணர்ந்திட வேண்டும்
உலகியல் வாழ்விதை இறைப் பணியெனவே
ஒவ்வொரு கணமும் வாழ்ந்திட வேண்டும்!
படத்துக்கு நன்றி: http://calmhope.org/wp-content/uploads/2013/06/spiritualfreedom.jpg