பாரதக்கொடி

சந்திர சேகர்

ஒற்றுமையாய் பணிவோம் – தாயின்

ஓங்கும் மணிக்கொடியை

வெற்றிகள் கூறிடுவோம் – சுற்றி

வீர நடம் புரிவோம்

செம்பசும் வெண்கொடியே – ஆன்ம

செல்வத் திருக்கொடியே

அன்பறம் உண்மை வளர் – சக்கரம்

அணி செயும் கொடியே

சூரிய சந்திரர்க்கும் – நமதிசை

சொல்லிப் பறக்குது பார்
பாரிலிதன் பெருமை – எங்கும்

பரவத் தொண்டு செய்வோம்

இந்த உடலினிலே – ஒரு துளி

இரத்தம் உள்ள மட்டும்

எந்தாய் வாழ்க வென்றே – இதனை

ஏந்திப்பிடித்திடுவோம்.

நல்லதை ஆதரிப்போம் – தீமை

நலியப் போர் புரிவோம்

எல்லாரும் இன்புறவே மணிக்கொடி

ஏற்றிப்பணிந்திடுவோம்.

——-  கவியோகி சுத்தானந்தர்

3 thoughts on “பாரதக்கொடி

  1. ‘…நல்லதை ஆதரிப்போம் – தீமை
    நலியப் போர் புரிவோம்…’

    ~என்றன்று கவியோகி சுத்தானந்தர் தீர்க்கதரிசனமாக சொல்லியுள்ளார். இனி,கடமை நமது.

  2. ’வல்லமை’யின் வாசகர்களிடம் நான் மன்னிப்பு வேண்டுகிறேன்! இது நான் செய்த தவறு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *