மேகலா இராமமூர்த்தி

 

வருகின்றாள் தைமகள்தான் நம்வாசல் நோக்கியே!

வாருங்கள் வரவேற்போம் அவளைநாம் அன்போடு!

வாசலில் கோலமிட்டு வண்ணப்பொடி தூவிடுவோம்!

பூசல்கள் நீக்கியே ஒன்றுகூடி மகிழ்ந்திடுவோம்!

உழவர் திருநாளை உள்ளத்தில் போற்றிடுவோம்!

உழுத மாடுகளைக் கொண்டாடிக் களித்திடுவோம்!

கதிரவனின் அருளாலே கழனியெல்லாம் செழித்திங்கே

புதுப்பொங்கல் பொங்கியே படையலிட்டு மகிழ்ந்திடுவோம்!

நமைச்சூழ்ந்த துன்பமெல்லாம் காரிருள்போல் விலகட்டும்!

அமையட்டும் நல்வாழ்வு அனைவர்க்கும் இனிதாக!

படத்துக்கு நன்றி: http://en.wikipedia.org/wiki/Thai_Pongal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *