படைப்போம் பொங்கல்!

0

செண்பக ஜெகதீசன்                                         i-pongalmages

கழனிகள் களர்நிலங்களாகின்றன

கட்டிடங்கள் வளர்ந்து..

 

கலப்பையை மறந்து உழவன்

கையிலெடுத்துவிட்டான்

கரண்டியும் முழக்கோலும்..

 

மந்தையாய்ச் செல்கின்றன

மாடுகள்- அடிமாடாய்..

 

கரும்பு,

கணுக் கணுவாய்க்

காட்சிப் பொருளாகிவிட்டது..

 

இஞ்சியும் மஞ்சளும்

பஞ்சமாகிவிட்டது-

பார்வைக்குத்தான் வரும்

பொருட்காட்சிசாலையில்..

 

இருக்கும் தென்னைகளில்

ஏறிக் காய்பறிக்க

எவருமில்லை..

 

எல்லாம் இருக்கிறது

கூகுளில்,

கண்ணால் பார்த்து

படைப்போம் பொங்கலைக்

கணினிக்கே…!

படத்துக்கு நன்றி

 

http://www.amazon.co.uk/Individual-Pongal-Recipes/dp/B00HEDFQPU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *