புதிதாய் ஒர் அதிகாரம் ;
துரை.ந.உ
எங்கள் உலகம்:
படித்தேன் அவளின் மடலை; அடைந்தேன்
படித்தேன் குடித்த உணர்வு 1
நெஞ்சமெங்கோ பெண்பின் அலைந்திருக்க; கொல்லுமிங்கே
கொஞ்சமே மீந்த நினைவு 2
பொழுதெல்லாம் என்னுள் விழுதாகிப் பூப்பாள்;
பழுதாகிப் போகும் மனது 3
குளித்தவளைக் கண்டேன்; குழித்தவளை ஆனேன்;
வளியெல்லாம் எந்தனிசைப் பாட்டு 4
மொய்க்கும்உன் கண்ணுக்(கு) இணையில்லை; இவ்வுலகை
மொய்யெழுதி வைப்பேன் அதற்கு 5
நாட்டு நடப்பு :
தாழ விடாமல்தன் தோள்கொடுப்பான் தோழன்;உன்
தோழ்தாளத் தொங்குபவன் வேறு 6
நெல்லையை தில்லையை சென்னையையும் தாண்டுநீ
எல்லையெல்லாம் இல்லை உனக்கு 7
முயலா முயலுக்கு முன்செல்லும் ஆமை;
இயலும் வரையில் முயல் 8
முயல்பவரை முன்மொழியும் வெற்றி; தயங்குபவர்
பின்னால் ஒளியும் அது 9
தாகம் குடியிருக்கும் பாகத்தில் பெய்யும்
மழைக்குத்தான் உண்டாம் மதிப்பு 10
—
இனியொரு விதி செய்வோம்
படம் : ‘எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.com/
பதிவு : ‘வல்லமை தாராயோ’ : http://duraipathivukal.blogspot.com
கதை : ‘நானோ கனவுகள்’ :http://duraikanavukal.blogspot.com