ஜெ.ராஜ்குமார்

 

பழுக்க வைச்ச பழமிருக்கு

வேதிப் பொருளை கொண்டு-

உயிரைப் பறிக்க இருக்கு.

 

நடுக்கம் வருது – காய்கறி மார்கெட்டில்

எந்தப் பொருளையும் பொறுக்கும் போதே..

நியாயம் இங்கு செத்துப்போச்சு

அநியாயம் இங்கு விளைஞ்சிருச்சு..

 

பாடுபட்டு விளைத்த பொருளெல்லாம்

மனிதன் உயிரில்-

கேடுகெட்டு விளையாடுது..

தேடிப் பார்க்க முடியவில்லை – இன்று

தேடும் பொருள் எதிலும் கிடைக்கவில்லை..

நாடு என்று திருந்திடுமோ..

நல்ல காற்று என்று வீசிடுமோ..

 

இயற்கை விவசாயம் ஒன்றே

இருக்க வேண்டும் என்று-

அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வருவோம்..

விதையைப் புதைக்கும்போதே – தீய

எண்ணங்களையும் புதைத்திடுவோம்..

 

விதிமுறைப்படி நடந்திடுவோம்

இனியாவது

வில்லங்கம் வராமல் தடுத்திடுவோம்..

 

வேர்கள் மரத்தைத் தாங்குவதுபோல் – உங்கள்

கொள்கைகள்

காத்திடும் – உங்கள் எதிர்காலத்தை.!

 

படத்திற்கு நன்றி: http://www.pongalfestival.org/pongal-pictures.html

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *