‘ஓம்சக்தி பராசக்தி’ முழக்கத்துடன், பக்தர்கள் கைகளில் செல்லக் குழந்தையாக, நெற்குன்றம் துர்க்கையம்மன் ஆடி அசைந்து வரும் அழகிய காட்சி. கண்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.
சென்னை, தாம்பரம், அருள்மிகு நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ஆடித் திருவிழா, மிக விமரிசையாக நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற தீமிதி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பூ மிதித்தனர். அந்த அனல் பறக்கும் காட்சிகள் இதோ.