Tag: ஆடிப்பூரம்

  • ஆடிப்பூரம்: ஆண்டாள் அருளிய திருப்பாவை

    ஆடிப்பூரம்: ஆண்டாள் அருளிய திருப்பாவை

    அருட்செல்வி ஆண்டாள் அவதரித்த நாள், ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திர நாள். இத்திருநாளில் ஆண்டாள் அருளிய திருப்பாவையின் முதலிரண்டு பாடல்களை ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரும் அவர் மகள் ஷ்ரேயா கிருஷ்ணகுமாரும் பாடக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அருமருந்தே  மாரியம்மா!

    அருமருந்தே மாரியம்மா!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா, மெல்பேண், ஆஸ்திரேலியா

    பல்லவி

    எண்ணமெலாம் உன்னிடத்தில் எங்களது மாரியம்மா
    மண்ணிலே நல்லவண்ணம் வாழவைக்கும் தெய்வமம்மா

                                                                                                                                 (எண்ணமெலாம்)

    அனுபல்லவி

    கண்ணாலே உனைப்பார்த்தால் கவலையெல்லாம் தீருமம்மா
    கண்மணியே மாரியம்மா காலடியைப் பற்றுகின்றோம்

                                                                                                                                                                              (எண்ணமெல்லாம்)

    சரணம்

    தீராத காதலுடன் தினமும்வரும் அடியவரை
    நோகாமல் காத்திடுவாய் நுண்ணறிவின் இருப்பிடமே
    ஆராதனை செய்து அனுதினமும் பாடுகின்றோம்
    நேராக எமைப்பார்த்து நின்னருளைத் தருவாயே

    மருதமர நிழலினலே வாழுகின்ற தாயேநீ
    உரிமையுடன் வருமடியார் உள்ளமதில் உறைந்திடம்மா
    வருவினைகள் எமையணுகா வகையினிலே காத்திடுவாய்
    அருமருந்தே மாரியம்மா அனைவருமே தொழுகின்றோம்

                                                                                                                                                                               (எண்ணமெலாம்)

    Share