
குன்று மவர்தான்காண்!! காத்திடும் மந்தியவர்!
என்றுமவர் ஏரார்ந்த கண்ணியின் -அன்பினைத்
தட்டாது கட்டுண்ட தாமோ தரனவர்
கொட்டாயில் ஆவதன் கன்று….கிரேசி மோகன்….
”மல்லாண்டு கண்டது மாவீரன் பட்டம்தான்,
புள்ளாண்டான் ஹார்மனியை(சுமுகத்தை) பூமிக்கு -சொல்லாண்ட
கீதை இசைக்கின்றார், கூடாரைக் கொள்ளுமிவர்
பாதைக் குமார்க்க பந்து”….கிரேசி மோகன்….!