Tag: கும்பகோணம்

  • கும்பகோணம் டிகிரி காபி ரகசியம்

    கும்பகோணம் டிகிரி காபி தனிச் சுவையோடு இருப்பது எப்படி? எந்தக் கலவையில் இதை உருவாக்குகிறார்கள்? ரகசியத்தை உடைத்துச் சொல்லிவிட்டார் இவர். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மழலை மகாலட்சுமி | சித்தநாதேஸ்வரர் கோவில் | கும்பகோணம்

    மழலை மகாலட்சுமி | சித்தநாதேஸ்வரர் கோவில் | கும்பகோணம்

    கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில், திருநறையூர் ஆகிய தலங்களில் உள்ள மூன்று ஆலயங்களுக்கு வெ.சுப்ரமணியன் அண்மையில் சென்றிருந்தார். இந்த ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு சௌந்திர நாயகி அம்பாள் சமேத சித்தநாத சுவாமி திருக்கோவிலுக்கும் சென்று வழிபட்டு வந்தார்.

    வேறெந்தச் சிவாலயத்திலும் இல்லாத அமைப்புகள், இந்த ஆலயத்தில் உள்ளன. இந்தத் திருத்தலத்தில் மேதாவி மகரிஷி, சித்தநாதரைப் பூஜித்து மகாலட்சுமியை மகளாக அடைந்து வளர்த்து, நாச்சியார்கோவில் அருள்மிகு சீனிவாசப் பெருமாளுக்குத் திருமணம் செய்து கொடுத்ததாக ஐதீகம்.

    சித்தநாத சுவாமி திருக்கோவிலில் மூன்று தட்சிணாமூர்த்திகள், ஐந்து சண்டிகேஸ்வர்கள், மழலை மகாலட்சுமிக்குத் தனிச் சன்னதி என்று பல சிறப்புகள். நவகிரகங்களைத் தட்சிணாமூர்த்தி பார்த்தவாறு இருப்பது கூடுதல் சிறப்பு. இந்தத் தலத்தின் சிறப்புகளை விளக்குகிறார் T.G. குருநாத சிவாச்சாரியார். மகாலட்சுமிக்குச் சிவன் அண்ணா, பார்வதி அண்ணி என இவர் சொல்வது சிறப்பு. பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • கணித மேதை சீனிவாச ராமானுஜன் நினைவில்லம்

    கணித மேதை சீனிவாச ராமானுஜன் நினைவில்லம்

    அண்ணாகண்ணன்
     
    கணித மேதை சீனிவாச ராமானுஜனின் கும்பகோணம் வீட்டை, சாஸ்திரா பல்கலைக்கழகம், நினைவில்லமாகப் பரமாரித்து வருகிறது. கும்பகோணம் சென்று வந்த பலரும் கூட, இந்த வீட்டை நாங்கள் பார்க்கவில்லையே என்று வருந்தினார்கள். நாங்கள் சென்ற சமயத்தில் வீடு பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்க்க ஆவலிருந்தும் முடியாமல் போய்விட்டது என்று நண்பர் முத்துக்குமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். ரேழியும் முற்றமும் கொல்லையும் கொண்ட இந்த வீட்டுக்குள் சென்று வருவது, அந்தக் காலத்திற்கே பயணிக்கும் உணர்வைத் தருகிறது.
     
    29.12.2019 அன்று இந்த இல்லத்தைப் பார்த்து, அங்கிருந்த குறிப்பேட்டில், உடனுக்குடன் நான் எழுதிய வெண்பா இது.
     
    கனவில் உதித்த கணிதப் புதிர்கள்
    மனத்தில் விழித்த மனிதன் – தனித்துவ
    ராமா னுஜனின் ரகசியப் புள்ளிகள்
    சாமான்யன் வாழும் சபை.
     
    இராமானுஜனுக்குக் கனவில் கணித சூத்திரங்களுக்கு நாமகிரித் தாயார் விடை தந்துள்ளார். கடினமான கணக்குகளுக்குக் கனவில் விடை கண்டு, உடனே எழுந்து அவற்றின் வழிமுறைகளை எழுதுவது கணித மேதை ராமானுஜத்தின் வழக்கம். அவர் பயன்படுத்திய கட்டிலையும் கட்டிலிலிருந்து மேலே பார்க்கும்போது காட்சி தரும் உத்திரத்தையும் இந்தப் பதிவில் நீங்கள் காணலாம்.
     
     
    Share