Tag: சரவிபி ரோசிசந்திரா

  • எங்கே சென்றாய்?

    எங்கே சென்றாய்?

    சரவிபி ரோசிசந்திரா
    சென்னை

    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்
    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்

    என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய்
    என்னை நீ அழைத்து எங்கே சென்றாய்

    தினந்தோறும் பணந்தேடி
    எங்கே சென்றாய்
    திசைதோறும் புகழ்தேடி எங்கே சென்றாய்
    உடலுக்குள் உயிர் காணாமல்
    எங்கே சென்றாய்
    உடலைத் தினம் பேணாமல்
    எங்கே சென்றாய்

    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்
    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்

    எதிலும் நான் தெரிகின்றேன்
    எங்கே சென்றாய்
    எல்லாம் நான் அறிகின்றேன்
    எங்கே சென்றாய்

    பேதமின்றி அள்ளித் தந்தேன்
    எங்கே சென்றாய்
    பேரிடரிலும் துணை வந்தேன்
    எங்கே சென்றாய்
    மும்மலம் நீ அறியாமல்
    எங்கே சென்றாய்
    முற்பிறவி நீ தெரியாமல்
    எங்கே சென்றாய்

    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்
    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்

    உயிர்தோறும் என்னைக் காணாமல்  நீ எங்கே சென்றாய்
    உள்ளத்தில்  என்னை எண்ணாமல் நீ எங்கே சென்றாய்

    சிற்றின்பத்தை ரசித்த  நீ
    எங்கே சென்றாய்
    சிந்தையை வெறுத்த நீ
    எங்கே சென்றாய்
    நான் அக்கத்தில்
    இருக்கின்றேன்  நீ
    எங்கே சென்றாய்
    நான் பக்கத்தில்
    பார்க்கின்றேன் நீ
    எங்கே சென்றாய்

    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்
    எங்கே சென்றாய் நீ
    எங்கே சென்றாய்

    நிம்மதியாய்  தினம் வருகின்றேன்
    எங்கே சென்றாய்
    நிம்(ம)தியை மறந்து நீ
    எங்கே சென்றாய்

    Share
  • நீயும் நானும்

    நீயும் நானும்

    சரவிபி ரோசிசந்திரா

    நீயும் நானும் மழைநீரா!
    நீந்தும் விழியில் உவர்நீரா!
    உணவில் கலந்த உமிழ்நீரா!
    உணர்வில் உறைந்த செந்நீரா!

    யாரிடம் சொல்ல நம் கதையை
    யாருக்கும் ‌யாரும் இங்குமில்லை
    எங்கே செல்ல, தெரியவில்லை!
    எனினும் வாழவா வழியில்லை?

    கடந்தது எல்லாம் போகட்டும்
    கடப்பதில் மனம் மகிழட்டும்
    வாழ்க்கை ஒரு பூந்தோட்டம்
    வாழ்ந்திட நினைவுகள் உயிரூட்டும்

    உதவ நமக்கு யாருமில்லை
    உயர்ந்திட உதவி தேவையில்லை
    உழைப்பைப் போன்ற நண்பனில்லை
    உன்னை அறிந்தால் தோல்வியில்லை

    சிரிப்பைச் சிக்கனம் செய்யாதே!
    சிந்திக்க நீயும் மறக்காதே!
    உலகம் பெரியது மறவாதே!
    உன்னைக் குறைவாய் நினைக்காதே!

    நடந்தால் பாதை உருவாகும்
    நலமிருந்தால் வாழ்க்கை வரமாகும்
    வருந்திப் பயனில்லையெனில் வருந்தாதே!
    வருங்காலத்தை நினைத்துக் கலங்காதே!

    Share