Tag: சரஸ்வதிராசேந்திரன்

  • பாதப் புகலொன்றே போதுமப்பா

    சரஸ்வதிராசேந்திரன்

    OLYMPUS DIGITAL CAMERA

     

     

     

     

     

     

     

     

    பாதப் புகலொன்றே போதுமப்பா

    முதல்வனே மூஷிக வாகனனே

    முதல் வணக்கம் உனக்கே ஐயனே

    பரமன் கொழுந்தே உமை பாலகனே

    பேழை வயிறோனே மோதகப்பிரியனே

     

    அழகு முருகனுக்குதவிய ஆசை

    அண்ணனே ஆனை முகத்தோனே

    அப்பமோடு அவல்பொரி படைப்பேன்

    அருள் தருவாய் ஆதி சக்தி மகனே

     

    சங்கரன் மகனே சஞ்சலம் தீர்ப்பாய்

    சங்கரி மைந்தா உன் தாள்பணிந்தேன்

    உத்தமன்உனையேஉறுதியாய்நம்புகிறேன்

    பித்தன்எனைஆண்டருள்வாய் பித்தனின் மகனே

     

    தொல்வினைகள் தொல்லை செய்யாமலே

    தடுத்தென்னை தாங்கி நிற்பாய் ஐயனே

    பேரெதுவும் வேண்டாம் புகழ்வேண்டாம்உன்

    பாதப்  புகலொன்றே போதுமப்பா  தூயனே

     

     

    Share
  • எங்கும் மங்களம்அருளிடு ஐங்கரனே !

    சரஸ்வதிராசேந்திரன்

    ஆதி   முதல்வனே

    ஆனை முகத்தவனே

    ஆதிசக்தி மைந்தனே

    ஆனந்த வினாயகனே

    முன்னை வினையின்

    முதலைக் களைபவனே

    அருள்வாய் உனைதினம்பணிந்தேன்

    அன்னை பராசக்தி அருள் மகனே !

     

    மத்தள   வயிறோனே

    உத்தமி  புதல்வனே

    மோதகப் பிரியனே

    மூஷிக    வாகனனே

    வடிவேல்  சோதரனே

    அடியினைத் தொழுவேன்

    தேனொடுபாலும்தினம் தருவேன்

    திருவருள் தந்திடுவாய் சம்பு குமாரா

     

    சங்கரன்  புதல்வனே

    ஐங்கர   நாயகனே

    அவல்பொரிஅப்பமுடன்

    அரிசிக்கொழுக்கட்டை

    வடை சுண்டலும்படைப்பேன்

    அடைக்கலம் தருவாய் ஐயனே

    சீக்கிரம்  வந்திடப்பா  வந்தெனக்கு

    சிவனாந்தம் தந்திடுவாய் சிவன் மகனே

    கணபதியே  உன் பாதம்

    வணங்கி துதிசெய்தேன்

    வல்வினை எல்லாம்

    வேறருப்பாய்வினாயகா

    வல்லபை விக்ன நாயகா

    வாழ்த்திப் பணிந்தேன் உன் பாதம்

    பொங்கும் கருணைப் பொழிந்து

    எங்கும் மங்களம் அருளிடு ஐங்கரனே

    Share
  • விதையொன்றுபோட….

    சரஸ்வதிராசேந்திரன்

    சந்தானமும் ,காஞ்சனாவும் ஊரை எதிர்த்து,உறவை பகைத்து திருமணம் செய்துகொண்டவர்கள் ,அதனால் ஒன்றும் பாதகமில்லை சந்தானம் ரியல் எஸ்டேட் பிஸினெஸ் பண்ணி லட்சம் லட்சமாய் சம்பாதித்து வீடு ,கார் என சமூக அந்தஸ்தோடு இருக்கிறான் . அவர்களுக்கு ஒரே மகள் ,,ஊரே வியக்கும் வண்ணம் நூறு பவுன் போட்டு விமர்சையாக திருமணம் செய்ய ஆசைபட்டான் சந்தானம் மனைவியிடம் தன் விருப்பத்தை சொன்னபோது.

    ‘’இப்ப என்ன அவச்ரம் அவளுக்கு?’’

    ‘’உனக்குத் தெரியாது காஞ்சனா ,பெண்ணும் ,கீரைத்தண்டும் முற்றினால் விலை போகாது இதுதான் சரியான வயது ’’

    ‘’இல்லை அவள் ..வேலைக்குபோகனும்னு ..’’

    ‘’அதுக்கெல்லாம் அவசியமில்லை ..போற இடத்திலே நல்ல வசதி’’

    கேட்டுக்கொண்டே வந்த அகிலா ’’ யாருக்கப்பா திருமணம் ?’’கேட்டாள்

    ‘’உனக்குத்தான் அகிலா ‘’

    ‘’ எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் ‘’

    ‘’ நான் என் நண்பனிடம் வாக்கு கொடுத்திட்டேன் அகிலா’’

    ‘’சாரி ப்பா ‘,பெற்றவர்களை நான் மதிப்பவள் தான் ஆனால்..அதுக்காக நான் சுயத்தை இழக்க முடியாது ‘’

    ‘’’’சுயமா அதென்ன ?’’

    ‘’ நீங்க உங்க மனசுக்கேத்த பெண்ணைத்தானே எல்லா தடைகளையும் மீறி பண்ணிகிட்டீங்க, உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?

    ‘’அப்ப நீ யாரையாவது லவ் பண்றியா?சொல்லு ‘’

    ‘’இது வரை யாரையும் காதலிக்கலே அந்த நேரம் வரும்போது சொல்றேன் ,அது வரை பொறுமையா இருங்க ‘’ சொல்லி விட்டு போனாள்.

    வாயடைத்து நின்றார் சந்தானம் .விதையொன்று போட சுரைஒன்றா முளைக்கும்

    Share