Tag: சரஸ்வதி ராஜேந்திரன்

  • பாடிப்பணிவோம்

    சரஸ்வதிராசேந்திரன்

    krishna

    கொண்டை மயில் சீவி
    குழலூதும் கண்ணா
    கோபியர் கொஞ்சும்
    கோகுல கிருஷ்ணா
    மாய லீலை செய்யும்
    ஆயர்பாடி கண்ணா
    கேட்டதை கொடுக்கும்
    கீதையின் நாயகா
    குருவாயூரில் நிற்கும்
    குழந்தை கண்ணா
    மதுராவில் பிறந்து
    கோகுலத்தில் வளர்ந்து
    துவாரகையை ஆண்டவனே
    குன்றம் ஏந்தியே
    குளிர் மழை காத்து
    பசுக்கூட்டதைக் காத்தவனே
    கமலம் போன்றகண்ணா
    கண்ணாய் இருந்து காப்பவனே
    உன் வேய்குழலின் நாதம்
    வீசி வரும் கீதம்
    எங்களுக்கு வேதம்
    பாடிப்பணிவோம் உன் பாதம்

    Share
  • நிதர்சனம்

    சரஸ்வதி ராஜேந்திரன்.

    வெளியூரிலிருந்து திரும்பி வந்த குடும்பத்தினர் வீடு திறந்து கிடப்பதைக் கண்டு பதறினர்.

    மகன் ஒருபக்கம், மகளொருபக்கம், தந்தை ஒரு பக்கம் என ஓடியதைக்கண்ட தாய்,
    “ச்சே … என்ன ஒரு சுய நலம்… அதது பொருட்களை பார்க்க ஓடுதுகள்” என அலுத்துக்கொண்டே தன் பீரோவை செக் பண்ணினாள்.

    நல்லவேளை என் லேப்டாப் இருக்கு என்றாள் மகள்.
    நல்ல வேளை என் பாஸ்போர்ட், விசா இருக்கு என்றான் மகன் .
    நல்லவேளை என் ஏ.டி.எம். கார்டு இருக்கு என்றார் தந்தை.

    முன் ஜாக்கிரதையா நகை, பண த்தையெல்லாம் லாக்கரில் வைத்தது நல்லதாப் போச்சு என்று சொன்ன அப்பா அம்மாவைக் கேட்டார், “உன்னுது ஏதாவதுபோச்சா?”

    “ஆமாம், மேஜையில் இருந்த டைஜின் மாத்திரை அட்டையைக் காணோம்”

    “அப்பா, எதற்கும் நம்ம ஏரியா போலீஸ்கிட்ட சொல்லிவைக்கலாமா?”என்று மகன் கேட்க …

    “வேண்டாம், இதைக் காரணம் காட்டிஅவர் தினமும் என்கிட்ட நூறு ரூபாய் கறக்கிறதுக்கா?” என்றார் அப்பா.

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    சரஸ்வதி ராஜேந்திரன்

    அன்புள்ள  மணிமொழிக்கு

     நலம், நாடுவது அதுவே,   ,மணிமொழிஒரு  இடத்தில் உள்ள செடியை பிடுங்கி வேறு இடத்தில்  நடும்போது   அது முதலில் சற்று வாடி பின் தான்

    தழைக்கும்   அதுதான் இயற்கை ,ஏனெனில்  புதிய மனிதர்கள்  புதிய  சூழ்  நிலை ,புதிய இடம் ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும் ,போக போக பழகிடும்  ஏனெனில் ,பள்ளியில் நீ  வீட்டிலிருந்தபடியே பள்ளியில் இருக்கமுடியுமா?எல்லாஇடங்களிலும்  வீட்டிலிருந்த படி சுதந்திரமாக இருக்க முடியாதே,இது உனக்கும் தெரியும்தானே? உனக்கு நான் அறிவுரை கூறுவதாக எண்ணாதே,  அன்புரைஎன்று எடுத்துக் கொள்ளவும் நீபுதிய பொறுப்புகளை ஏற்றியிருக்கிறாய் அந்த பதவி    அது  மனைவி  என்ற பதவியை ,உனக்கு இப்போது பொறுப்புகள்  அதிகம் நேரமும் இருக்காது ,அதனால்,  நான் சொல்ல வேண்டிய   விஷயங்களை  சுருக்கமாக சொல்லிவிடுகிறேன் மனித வாழ்வின் மகத்துவமான குடும்ப வாழ்வின் வெற்றியை பொறுத்த.துதான் எப்போதும் சுய நலமும் ,சுக வாழ்க்கையும்

    குடும்ப வாழ்க்கை என்பது ஒரு வேள்வி போன்றது  ஒரேகுடும்பத்தில் பிறந்த

    நம்மிடையே எத்தனையெத்தனை  வேறுபாடான குணங்களிருக்கிறது அதே

    போல்தான் புகுந்த வீட்டிலுள்ளவர்கள் குணமும் அப்படித்தானே இருக்கும்

    அதனால் ஒருவருக்குகொருவர் விட்டுக் கொடுக்க வேண்டும் ,தேவைப்படும்போது தியாகமும் செய்யவேண்டும் . .உன் மாமனார் ,மாமியாரை பெற்றவர்போல் பாவிக்க வேண்டும் ,உன் நாத்தி .மைத்துனரை

    தங்கை,தம்பி என்று நினைத்துக்கொண்டால்  எந்த பிரச்சனையும் இருக்காது

    இப்படியாக எண்ணி  பொறுமையாகவும் ,சகிப்புத்தன்மையுடனும் இருந்து  நீ

    புகுந்த வீட்டில் எல்லோரையும் சரிக்கட்டிக்கொண்டு  வழி நடத்துவாய்  என்று எனக்கு தெரியும் ஏனெனில்  நீபுத்திசாலியாற்றே, விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்று  நீயே சொல்வாயே ,

    அதுதான் சிறந்த பண்பு .,வீடென்றால் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும் ,இதை பகுத்துணர்ந்து  உன் புத்திசாலித்தனத்தால் எல்லவற்றையும்

    வென்று  கனவனும் ,மனைவியும்  ஒற்றுமையாக வாழ்ந்து  நன்மக்கட்பேறு பெர்று  குடும்பத்தை மங்கலமாக  ஆக்குவாய்  என்ற நம்பிக்கை எனக்குண்டு குடும்ப பார்ம்பரியத்தைகாப்பதுதானெ பாரதப்பண்பாடு ,உன்னைப்போல் நானும் உன் பிரிவை தாங்கிக் கொள்ள என்னை தயார் படுத்திக்கொள்கிறேன் சேக்கிழார் சொன்னதை ஞாபகத்தில் வை  பெண் மனையறத்தின் வேர்  என்பதை

    குடும்பத்தை பற்றிஎன் நண்பர் எழுதிய பாடலுடன்  என் கடித்த்தை முடிக்கிறேன்.

                 கூட்டாமல் கழிக்காமல்  குடும்பம் இல்லை

                  கோணாமல்  நாணாமல் இன்பம்  இல்லை

                 நீட்டாமல்  முடக்காமல்  வாழ்க்கை இல்லை

                 நெளிவின்றிச்  சுளிவின்றி நியதி இல்லை

                 ஊட்டாமல்  ஆட்டாமல்  குழந்தை இல்லை

                  ஓயாமல்   சாயாமல் .  முதுமை இல்லை

                  பூட்டாமல்  திறக்காமல்  கதவு  இல்லை

                   புகழாமல்  இகழாமல்  வளர்ச்சி இல்லை

    மகளே ,  குடும்ப வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டிய இந்த கவிதையைவிட  வேறு  உதாரணம் வேண்டுமா என்ன ?

     உன் அன்பில் மகிழும் அம்மா  அமுதா கணேசன்

    Share