Tag: சுபாஷிணி திருமலை

  • ‘வாழ்நாள் சாதனையாளர்’ சுபாஷிணி திருமலை

    ‘வாழ்நாள் சாதனையாளர்’ சுபாஷிணி திருமலை

    அண்ணாகண்ணன்

    எழுத்தாளர் சுபாஷிணி திருமலை அவர்களுக்குத் திருவள்ளுவர் நற்பணி மன்றம், வாழ்நாள் சாதனையாளர் விருதினை 08.11.2020 அன்று வழங்குகிறது. வல்லமை மின்னிதழில் நூற்றுக்கும் மேலான படைப்புகளை வழங்கிய, 14 நூல்களை இயற்றிய சுபாஷிணி அவர்களுடனான என் அனுபவங்கள், நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிறுவாணி வாசகர் மையம்

    சுபாஷிணி திருமலை

    இனிய நண்பர்களே!

    வணக்கம்.

    ass
    இலக்கியத்தின் இயங்குவிசை நல்வாசிப்புத்தான்.நல்ல நூல்களைத் தேடி வாசிக்க வாசிக்க , வாசகரின் ஞானம் வளர்ந்து, மொழி மிளிர்ந்து, ரசனை ஒளிர்ந்து ஒளியாய்ப் பரிணமிக்கிறது.

    இது தொடர் இயக்கமாய் இருத்தல் வேண்டும்.

    இவ்வுணர்வை செயல்படுத்தும் நோக்கில் ” சிறுவாணி வாசகர் மையம்” எனும் அமைப்பு பொங்கல் நன்னாளில் பல நல் இதயங்களின் வாழ்த்துக்களுடன் நிறுவப்பட்டது.

    நண்பர்களே ! சிறுவாணி வாசகர் மையம் மூலம் உங்கள் நல்வாசிப்பை நயன்மிகு
    வாசிப்பாய் மிளிரச் செய்ய நாங்கள் நல்ல நூல்களைத் தேனீ போல் தேடித்தேடிப் பதிப்பித்து உங்களுக்கு ஏதுவான விலையில் உங்கள் வீட்டிற்கே அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.

    asp
    இத்திட்டத்தை ஒளிமிகு தங்கத்திட்டமாய் செயலாக்க நீங்களும் உங்கள் நண்பர்களும் அங்கத்தினராய் இணைய அன்பாய் வேண்டுகிறோம்.

    நீங்கள் செய்ய வேண்டியது, வருடசந்தா ₹1200 அளிக்க வேண்டியதுதான். நாங்கள் தங்களுக்கு மொத்த மதிப்பு 1600-க்கான நல்ல நூல்களை மாதம் ஒரு நூல் வீதம் அனுப்பிவைக்கிறோம்.

    புத்தக வாசிப்பால் மனிதமனங்களைப் பண்படுத்தும் எங்களின் முயற்சிக்கு தங்கள் பங்களிப்பை வேண்டுகிறோம்.

    அன்புடன்
    தி. சுபாஷிணி
    G.R.பிரகாஷ்
    ——————————————-
    Siruvani Vasagar Maiyam
    24-5 Sakthi Mahal,
    Chinnammal Street,
    K K Pudur (post),
    Coimbatore-641 038.
    ——————————————-
    வருடசந்தா ₹1200.
    MO/ Cheque /DD மூலமும் சந்தாவை மேற்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்
    ——————————————–
    NEFT/ RTGS மூலம் பணம் அனுப்புவதற்கு…
    Syndicate Bank
    Avinashi Road Branch
    Coimbatore- 641 018.
    Current A/c No: 61211010003590
    IFSC. : SYNB0006121
    Benificiary: Siruvani Vasagar Maiyam

    (SMS மூலம் தங்கள் முகவரி மற்றும் விவரங்களைக் கீழ்க்காணும் எண்ணுக்கு அல்லது மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கவும்.)
    ——————————————
    94881 85920 (பிரகாஷ்)
    siruvanivasagar@gmail.com

    Share
  • தி.க.சி இயற்றமிழ் விருது

    47e8ea04-2777-47f0-8764-fb95e4de126e

    மூத்த இலக்கிய கர்த்தா தி.க.சி.யின் நினைவை போற்றும் விதமாக, ‘நந்தா விளக்கு’ வழங்கும் 2016ஆம் ஆண்டிற்கான ‘தி.க.சி இயற்றமிழ் விருது’, இந்த ஆண்டு நாடக கலைஞரும், திரைப்பட நடிகரும், முதுபெரும் எழுத்தாளருமான பாரதி மணி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ‘நந்தா விளக்கு’ இலக்கிய அமைப்பு தொடங்கப்பட்ட பின், முதலாம் ஆண்டு விருதுக்கு பாரதி மணியின் ‘புள்ளிகள் கோடுகள் கோலங்கள்’ நூலை தேர்வு செய்துள்ளது. திருவண்ணாமலை வம்சி பதிப்பகத்தார் இந்நூலினை பதிப்பித்துள்ளார்கள்.

    கவிஞர் தேவேந்திர பூபதி தலைமையில் வருகிற 02-04-2016 அன்று திருநெல்வேலி ஜானகிராம் ஹோட்டல் அயோத்திய ஹாலில் மாலை 5 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது . நந்தா விளக்கு அமைப்பாளர் எழுத்தாளர் சுபாஷிணி வரவேற்புரையாற்றுகிறார்.

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் பொன்னீலன், தோப்பில் முகம்மது மீரான், பிரபஞ்சன் மற்றும் பேராசிரியர் தொ.பரமசிவன், மக்கள் மருத்துவர் ராமகுரு, மனநல மருத்துவர் ராமானுஜம், பவா செல்லத்துரை, செ.திவான், கழனியூரன், ஜனநேசன், இரா. நாறும்பூநாதன், இளம்பரிதி, சீனி குலசேகரன், பொன் வள்ளிநாயகம், கிருஷி, வே.முத்துக்குமார், சரவணன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    சிறப்பு விருந்தினர்களாக ஜானகிராம் ஹோட்டல்ஸ் ராம்குமார், சங்கர் நகர் ஜெயேந்திரா பள்ளி முதல்வர் திருமதி.உஷா ராமன், தச்சை என்.கணேஷ் ராஜ ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    விருது விழா தொடக்கமாக மாலை 5 மணிக்கு பாரதி மணி நடித்த ‘ ஓரிரு வார்த்தைகள், விசுவாசம், மற்றும் காட்டேரி கும்பல்’ ஆகிய மூன்று குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன.

    Share