எழுத்தாளர் சுபாஷிணி திருமலை அவர்களுக்குத் திருவள்ளுவர் நற்பணி மன்றம், வாழ்நாள் சாதனையாளர் விருதினை 08.11.2020 அன்று வழங்குகிறது. வல்லமை மின்னிதழில் நூற்றுக்கும் மேலான படைப்புகளை வழங்கிய, 14 நூல்களை இயற்றிய சுபாஷிணி அவர்களுடனான என் அனுபவங்கள், நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.