Tag: டாக்டர். ஜவஜர் பிரேமலதா

  • புத்தரும் பெரியாரும்

     முனைவர். ஜ.பிரேமலதா,

    தமிழ்  இணைப் பேராசிரியர்,

    அரசு கலைக் கல்லூரி,

     சேலம் -636 007

    முன்னுரை

    இன்றிலிருந்து 2500 ஆண்டுகளுக்கு முன்னர்வாழ்ந்திருந்த சித்தார்த்தர்என்கிற கௌதம புத்தருடைய கருத்துக்களும் 20ம் நூற்றாண்டில் பிறந்த ஈ.வெ.இராமசாமி என்கிற பெரியாருடைய கருத்துக்களும் பெரிதும் ஒத்துப் போகின்றன.

    புத்தரும் பெரியாரும் மனிதநேயம், அன்பு, சுய சிந்தனை, நேர்மை,  பற்றின்மை, சமூக அக்கறை, பெண்ணுரிமை, சமயம், மதக்கருத்து போன்ற பல கருத்துக்களில் ஒன்றுபடுகிறார்கள். இருவரும் சிறந்த அரசியல் முற்போக்காளர்களாகக் கருதத்தக்கவர்கள். மனிதனை மனிதனாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்தவர்கள். போலித்தனமற்றவர்களாக வாழ்ந்தவர்கள்;. எடுத்த முடிவில் இறுதிவரை உறுதியாக நின்றவர்கள். சுய சிந்தனையாளர்கள். அவ்வகையில் இக்கட்டுரை இருவருடைய கொள்கைகளிலுள்ள ஒற்றுமைகளை ஆராய்கிறது.

    வாழ்க்கை ஒற்றுமையடிப்படையில் பார்க்கும் பொழுது, தனக்குரிய அரச பதவியையும் போகத்தையும் துறந்து  பத்தொன்பதாவது வயதில் சித்தார்த்தர்புத்தராகிறார். பெரியாரும் தன்னுடைய செல்வச் செழிப்பான குடும்பத்திலிருந்து விலகி 25ம் வயதில் துறவறம் மேற்கொள்கின்றார்.

     திருமணத்திற்குப் பிறகு இருவரும் துறவறத்தைத் தேர்ந்தெடுப்பதில் ஒன்றுபடுகின்றனர். எனினும் அவர்களின் மனைவிமார்கள் இதற்குக் காரணமில்லை. சுஜாதையும் நாகம்மையும் உயர்வானவர்களே. இருவரும் கணவனுடைய கருத்திற்கு ஒத்துப் போகிறார்கள். பிற்காலத்தில் கணவருடைய பாதையைப் பின்பற்றுகிறார்கள்.  புத்தரும் பெரியாரும்  துணிவுடன் செயல்படுதலில் தாங்களே வழிகாட்டியாக உள்ளனர். செல்வத்தில் பற்றின்மை என்பதில் இருவரும் ஒத்துப் போகின்றனர். தம்மைச் சுற்றியுள்ளவற்றை நேரடியாகக் கண்டு அவற்றின் தன்மைகளைப் புரிந்துகொண்டு வினையாற்றுவதே இருவரின்; அணுகுமுறையாக இருந்துள்ளது. சிக்கல்கள் யதார்த்தமானவை, நம் கண்முன் நிகழ்பவை. அவற்றுக்கு அசாதாரணமான வழிகளில் தீர்வு கண்டுவிடமுடியாது என்று  நினைத்தனர்.  இருவரும் வாழ்நாள் முழுவதும் தம் கருத்துக்களை மக்களுக்குப் போதித்து வந்துள்ளனர். கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் வரையிலும் வாழ்ந்துள்ளனர். இருவரும் மனித வாழ்க்கை மற்றும் உலக நடப்புகள் பற்றி பல ஐயங்கள் கொண்டனர். உலக துன்பங்களிலிருந்து மனிதகுலம் விடுபட வேண்டும் என்பதில் உண்;மையான அக்கறை கொண்டிருந்தனர். இருவருடைய உள்ளத்திலும் உயிர்களிடத்தில் அளவற்ற பரிவிருந்தது. மனிதரின் இயல்பு உன்னதம் பெற வேண்டும். மனித வாழ்க்கை சுதந்திரம் பெறவேண்டும் என்று விரும்பினர். ஆழ்ந்த சிந்தனையாளர்களாக விளங்கியுள்ளனர்.

    ஞானம் பெற்ற பின்னர் சமுதாயச் சீர்திருத்தமே முதலில் செய்யவேண்டியது என  புத்தர்நினைத்திருக்கிறார். எனவேதான், தான் ஞானம் பெற்ற நிலையில் தனக்கான சீடர்களை உருவாக்கி அவர்களிடம் போதனைகளைப் பரப்பினார். அதன் பின்னரே சங்கம் அமைத்தார். அதை ஒரு இயக்கமாக மாற்றினார்.  புத்தர் எந்தவொரு மதத்தையும் நிறுவவவில்லை. என்னிடம் வாருங்கள், நான் உங்களை மீட்கிறேன் என்று சொல்லவில்லை. ஒரு புத்தரால்கூட வழியை மட்டுமே காட்டமுடியும், நீங்கள்தான் உங்கள் பாதையைத் தேர்ந்தெடுத்துக ;கொள்ளவேண்டும் என்கிறார்(பி.எஸ்.ஆச்சார்யா. ப.96). ”பௌத்த சமயம் கொள்கைப் பிடிவாதம் கொண்டதில்லை. அதைப் பின்பற்றுவோர்களிடம் அது அதன் போதனைகளை விமர்சன நோக்குடன் பார்க்காமல் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர்கள் அதை எப்போதும் தங்கள் சொந்த அனுபவத்தின் துணையுடன் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. அதைப் பின்பற்றுவோரிடம் தொடக்கக் காலக் கட்டங்களில் சில அடிப்படையான போதனைகளை நம்பிக்கையின் பேரில் ஏற்றுக் கொள்ளுமாறும், ஆக்கபூர்வமான, திறந்த மன மனோபாவத்தைக் கைக்கொள்ளுமாறும் அது கேட்டுக்கொள்கிறது; என்றாலும்கூட அதன் அக்கறை கோட்பாடுகளை வழக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில் இருப்பதை விடப் புரிந்து கொள்வதை வளர்ப்பதில் இருப்பது அதிகமானது. பௌத்த சமயம் அதைப் பின்பற்றுவோர் மீது பாவ மன்னிப்பு சார்ந்த நிபந்தனைகளைச் சுமத்துவதில்லை.

    சிறுபான்மைக் குழுக்கள் தங்கள் தனிப்பட்ட பண்பாட்டு மரபுகளைப் பராமரிக்கும் சமூகச் சூழ்நிலையில் ஒரு பௌத்தனாக வாழ்வது எளிதாகிறது.”என்கிறார் தாமியென் கோவ்ன்.(பௌத்தம் ப.172-173 )

     புத்தரின் போதனைகளில் இரகசியம் என்று எதுவும் இல்லை. பூகட்டு என்று எதுவும் இல்லை.; சடங்குகள், சம்பிரதாயங்கள்  இல்லை. சமூகத்திலிருந்த மூட பழக்கவழக்கங்களை உற்று நோக்கிய பின்னரே அவற்றை அறிவு பூர்வமாக விமர்சிக்கிறார்.

    ஜென், யோகா, தவம் போன்றவற்றுக்கும் புத்தருக்கும் தொடர்பில்லை. பௌத்தம் என்பது ஒரு வறட்டுத் தத்துவப் பிரிவு மட்டுமே அல்ல. புத்தருக்கும் அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் தொடர்பில்லை. மந்திர உச்சாடனங்களுக்கு பௌத்தத்தில் இடமில்லை.) இதே கருத்துடையராகவே பெரியார் சமூகத் தொண்டில் சமுதாயச் சீர்திருத்தமே முதலில் செய்யவேண்டுமெனத் திட்டமிட்டார். முதலில் சமூக விடுதலை அதாவது சமுதாயத்தைப் பிடித்துக் கிடக்கும் பிற்போக்குக் கொள்கைகள் குருட்டு நம்பிக்கைகள் கடவுளின் பெயராலும் மக்களிடையே நிலவி நிற்கும் குருட்டுத்தனமான எண்ணங்கள் ஆகியவற்றிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என்று நினைத்துள்ளார்.

    தலைவிதி.முற்பிறப்பில் மோட்சம் நரகம் என்கிற பொய்மைகளை மக்கள் எண்ணத்திலிருந்து அவர்கள் முற்றிலுமாக விடுபட வேண்டும். .அத்தகைய விடுதலைகளுக்குப் பிறகே மக்களை எதையும் சிந்தித்துப் பார்த்து முடிவெடுக்கும் ஆற்றல் மிக்கா;களாக அறிவு நிரம்பியவர்களாக மாற்றிய பிறகே அரசியல் விடுதலை பொருளாதார விடுதலை என்றார்.

    முன்னது பெறா முன்னர் பின்னவை இரண்டும் அவ்வளவு எளிதில் கைகூடா. கைகூடினாலும்  அவற்றின் உண்மையான பயனை மக்கள் துய்க்க முடியாது என்ற முடிவுடன் காங்கிரசு இயக்கத்திலிருந்து விலகிச் சமுதாயத் தொண்டு செய்வதே தம் பணி எனப் பெரியார் தம்மை மாற்றியமைத்துக் கொண்டார் என்கிறார்பண்ணன்(ப.45);.

    பெரியாரும் புத்தரைப் போலவே முதலில் தம் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார். அவருடைய எழுத்தும் பேச்சும் மக்கள் இலக்கியங்கள் ஆயின. குறிப்பாகப் பேச்சு நடை மக்கள் மொழியிலேயே அமைந்தது. மக்களிடம் அரசியலையும் சமயத்தையும் வாழ்;க்கையையும் விளக்கிப் பேசியவர் . தம்முடைய கருத்துக்களின் உள்ளடக்கத்திற்கு சுயமரியாதை இயக்கம்பகுத்தறிவு வாதம் என்றெல்லாம் பெயர் தந்தார். தம் சிந்தனைகளை இயக்கமாக நடத்தினார். பெரியார் எந்தவொரு மதத்தையும் நிறுவவவில்லை. தான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கூறவில்லை.

    பகுத்தறிந்து எதையும் கேள்விகள் கேட்டு தெளிவான பின்னரே கடைப்பிடிக்கும்படி கூறினார். தொடக்கக் காலத்தில்; ஈ.வே.ராமசாமி பெரியார் தமிழ்ச் சமூகத்தைக் கூர்ந்து நோக்கும் ஆராய்ச்சியாளராகவம் இழிநிலையில் இருக்கும் மக்களுக்காகப் போராடும் தலைவராகவும் போராளியாகவும் விளங்குகின்றார். குறிப்பாக, அவர் செய்த சமூகத் தொண்டில் சாதி மத ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவது முக்கியப் பணியாக இருந்தது. கடவுள் மறுப்பு மத எதிர்ப்புப் போன்றவை கூடவே தொடாந்துள்ளன. சாதி மனப்பான்மை, சாதிக் கொடுமைகள் ஆகியவற்றிற்கு மூலம் யார் அல்லது எது? என்று உணர்ந்து பெரியார்அந்த அடிப்படைகளை எதிர்த்து அதில் ஏற்பட்டுள்ள குற்றங்களை எடுத்துக்கூறியும் பேசியள்ளார்.

    இந்தியாவிலும் தமிழகத்திலும் சாதி வேறுபாடுகள் உருவானதற்குக் காரணமாய் இருக்கும் சமூக அமைப்பகளையும் பெரியார்கண்டித்துப் பேசுகிறார் சாதி, சமயம், கொள்கை போன்றவற்றாலும் சுயநலத்தாலும் பிரிந்து கிடக்கிற தமிழர்களிடையே தோன்றுகிற அறிஞாகளாலும், சமய, சாதி இலக்கியங்களாலும்; சமயவாதிகளாலும் பயன் ஏற்பட முடியாது என்பது பொpயாhpன் கருத்தாக இருந்தது. எனவே உருவாகிற அறிவியல் சமூக நன்மைகள் மக்களுக்குப் பயன்பட வேண்டுமெனில் சாதி, சமய மனப்பான்மை போன்ற பண்புகள் நீங்கிட வேண்டும் என்பதை வலியறுத்தும் வகையில் பெரியார்பேசியுள்ளார். மனிதர்களைப் பொதுவில் வைத்து எண்ணுகின்ற இப்போக்கை புத்தத்திலும் பார்க்கமுடிகிறது.

    மனிதர்களைப் பற்றி ஆராய்கின்ற நிலையையே புத்தத்தில் பார்க்க முடியும். மனிதத்தைத் தாண்டி அது சிந்திக்கவில்லை.புத்த மதம் நடப்பு இயல்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. கருத்து முதல்வாதத் தன்மை அதில் இல்லை. அனைவருக்கும் சுதந்தரம், சமத்துவம்,வாய்மை மற்றும் நீதியை உயர்த்திப் பிடிக்கிறது. மனித நேயம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.

    பவுத்தத்தில் சாமி இல்லை; சடங்கு இல்லை; சாதி இல்லை; மாயம் இல்லை; மந்திரம் இல்லை; பூஜை இல்லை; பிரார்த்தனை இல்லை; எல்லாவற்றுக்கும் மேலாய் தனி உடைமைச் சுரண்டல் இல்லை; இவைகளில் எதுவொன்று இருப்பதும் பவுத்தம் இல்லை. மாறாக, பவுத்தத்தில் அன்பு உண்டு, அறிவு உண்டு, சமத்துவம் உண்டு, சமதர்மம் உண்டு, ஒழுக்கம் உண்டு, இரக்கம் உண்டு, வீரம் உண்டு, விவேகம் உண்டு, இவைகளில்  எதுவொன்று இல்லாததும் பவுத்தம் இல்லை. இக்கருத்துக்கள் அனைத்தும் பெரியாரியத்திற்கும் பொருந்தும். பவுத்தம் என்பது ஆராய்ந்து புத்திக்குச் சரி என்றுபட்டால் மாத்திரம் ஏற்பது. உதாரணம், புத்தர் கூறியது: எனக்கும் கடவுள் என்பதற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை.

    நான் சாதாரண மனிதன். நான் சொல்பவை என் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு எட்டியவைகளேயாகும். அவற்றை நீங்கள் ஆராய்ந்து பார்த்து உங்களுக்குச் சரியென்று பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; சரியில்லை என்று தோன்றினால் அதை விட்டு விடுங்கள் என்பதாகும். இன்னமும் விளக்கமாக, நான் கூறுகிறேன் என்பதற்காக நம்பி விடாதே. எதையும் உன் புத்தியைக் கொண்டு ஆராய வேண்டும். இல்லையேல், நீ பகுத்தறிவு கொண்ட மானிடன் அல்லன் என்றும் கூறி இருக்கிறார். (பி;.எஸ்.ஆச்சார்யா. 56) எனவே, எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்பது பவுத்தம் எனலாம். பேளத்தத்தைப் பற்றிக் கூறுமிடத்து, ”எதுவானாலும் அறிவைக் கொண்டு ஆராய்ந்து பயமில்லாமல் தர்க்க ரீதியாக விவாதிக்க வேண்டும். அவன்தான் பௌத்தன். அதுதான் பவுத்தம்.” என்கிறார் பெரியாரும். (பௌத்தநெறி ப.13)

    அதுபோலவே, பெரியாரும்   சமயம் மதம் தொடர்பான கருத்துக்களில் இவ்வாறே கூறுகிறார். மதம் பற்றிக் கூறும்போழுது தம் கருத்தைக் கட்டாயமாக்காமல் மக்களுடைய சிந்தனைக்கே விடுகிறார். தம்முடைய கருத்தில் உண்மை இருப்பதை ஒத்துக்கொண்டால் பின்பற்றும்படியம் அன்றேல் விலகி விடும்படியம் கூறுகிறார். அவருடைய கடுமையான விமாpசனங்களினூடே இத்தகைய ஆழ்ந்த பக்குவமும் காணப்படுகிறது. நான் சொல்வது, உங்கள் அறிவு ஆராய்ச்சி பக்;தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள்; ஒத்துவந்தால் காhpயத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள். உங்கள் சகோதரா;களுக்கும் இதைச் சொல்லி அவா;களையும் ஈடேற்றுங்கள். என்றுதான் நான் சொல்லுகிறேன். இப்படிச் சொல்வதனால் எனக்கு இதில் ஒரு சுயநலப் பலனும் இல்லை என்பதையும் அறியுங்கள்(தொ.3 ப.1352) என்கிறார்.;  கடவுளின் பெயரால் அமைக்;கபட்டுள்ள அனைத்து மதங்களையும் இருவரும் மறுக்கின்றனா;. மனித சமூகத்திற்கு அவை தீங்கிழைப்பதாகக் கூறுகின்றனா;. மக்கள் வேதனைப்படுகிறார்கள்; என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது; அந்தக் காரணத்தைக் கண்டறியமுடியும்; அகற்றமுடியும் என்று உணர்தல். வேதனையைக் கண்டு ஒதுங்காமல், ஓடாமல், ஒளியாமல் இருத்தல். வேதனை குறித்த வியாக்கியானங்களோடு நின்றுவிடாமல் துணிவுடன் போராடுதல். இவையே ஒரு பகுத்தறிவுவாதியின் செயலகளாகும்;. புத்தர் இதைத்தான் செய்தார்.

    எண்ணற்ற யுகங்களுக்குப் பிறகு இதுவே எனது கடைசிப்பிறவி. தேவர்களிலும், மனிதர்களிலும் நான் ரொம்பவும் அருமையானவன். முதிக்கத்தக்கவன். இந்த தேவர்களையும், மனிதர்களையும் பயனடையச் செய்வேன். புலனுணர்வு கொண்ட அனைத்து உயிர்களையும் அழிவில் இருந்து காப்பாற்றுவேன் என்று புத்தர்கூறுகிறார். (பி.எஸ். ஆச்சார்யா, ப.11) இவை புத்தருடைய வாழ்க்கை காட்டும் பாதை. பெரியாரும் இந்த உலகம் சீர் கெட்டிருக்கிறது. இதைச் சீர் செய்ய யாரும் முன் வரவில்லை. நான் முன் வந்தேன் என்கிறார். இருவருடைய தத்துவமும் இயங்கியல் தன்மை கொண்டது. அறிவியல்பூர்வமானது. அனைத்தையும் தழுவிச் செல்வது. அறிவுக்கும் தர்க்கவியலுக்கும் பொருந்தக்கூடியது. அறவொழுக்கம் சார்ந்தது. மனித நேயம் மிக்கது.

    பிறவி குறித்த கருத்தாக்கத்தில் பார்க்கும் பொழுது, புத்த மதம் பிறவிக் கோட்பாட்டை ஏற்பதில்லை.மாறாக, இங்கு இந்தப் பிறவியிலேயே அடையக்கூடிய வாழ்க்கை அனுபவத்தைப் பற்றி கூறுகிறது. பெரியாரும் பிறவிக் கோட்பாட்டை எதிர்க்கிறார். அது மக்களை சிந்திக்கவிடாமல் செய்யும் ஒரு கோட்பாடு என்பது அவருடைய எண்ணம். உங்கள் இலட்சியங்களை அடைய முயலுங்கள்; மற்றொரு பிறவிக்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக்கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள்.

    முன்பிறவி சங்கதி ஏதாவது ஒன்று, உங்கள் சாPரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உஙகளுக்கு இந்தப் பிறப்பில் ஞாபகமிருந்தால் அல்லவா இந்தப் பிறவியின் காரியஙகளை அடுத்த பிறவியில் அனுபவிக்க முடியப்போகின்றது? அன்றியும் கடவள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள்தனமாய்க் கருதி உங்கள் துன்பத்தைநிலை நிறுத்தாதீ ர் கள். உணர்ச்சியும் அறிவம் அற்ற சோம்பேறிகளுக்குத்தான் கடவள்செயல் பொருத்தமாக இருக்கும்(தொ.3.ப.1402) என்பது பெரியாரின் சிந்தனையாக அமைகிறது

    பெண்கள் நிலை –  பெண்கள் நிலையிலிருந்து பார்க்கும் பொழுது,பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டதற்குக் காரணம், அவர்கள் அறிவற்றவர்கள் என்ற மதக் கருத்துதான். பெண்ணிற்குக் கல்வியில்லை என ஒதுக்கி வைத்து, அறிவு இல்லாத காரணத்தால் அசுத்தமானவள் என்று பரப்புரை செய்யப்பட்டு, பிரம்மத்தை அடைவதற்கான ஒரு பாதையான துறவறத்தை ஏற்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தாள்.

    துறவற வாழ்க்கையில் பெண்களை அனுமதித்ததன் மூலம் புத்தர், அறிவு பெறுவதற்கான வாய்ப்பைப் பெண்களுக்கு நல்குகிறார். பெரியார்காலத்திலும் பெண்கல்வி மறுப்பு தொடர்ந்திருக்கிறது. எனவே பெரியார்பெண்களின் கல்வி உhpமை குறித்தும் மகளிர்க்குச் சொத்துரிமை குறித்தும் பேசியுள்ளார். கல்வி அறிவில் விருப்பம் கொள்ளுங்கள். வீரத் தாய்மார்களாக ஆகவிருப்பப்படுங்கள்! நீங்கள் மாறினால் உங்கள் கணவன்மார்களும் மற்ற ஆண்களும் மாற்றம் அடைவது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத்தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள். அப்படிச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். எதிர்காலத்தில் -இவள் இன்னாருடைய மனைவி என்று அழைக்கப்படமாட்டாது இவா; இன்னாருடைய புருஷா; என்ற அழைக்கப்படவேண்டும். அந்த நிலைக்கு உங்களைக் கொண்டுவர அனுதினமும் பாடுபட்டுவரும் திராவிடர் கழகத்தை நீங்கள் அனைவரும் ஆதரித்து வரவேண்டும் (தொ.1 ப.177) என்கிறார் பெரியார்.

    துறவற நிலை – துறவற நிலையிலும் ஒன்றுபடுகின்றனர். ;.புத்தர்துறவு பூண்டாலும், துறவறம் பூண்டு உடலை வருத்திக்கொள்வது வேதனையைத் தரும், தேவையற்றது, பலனளிக்காதது என்கிறார் உபநிஷத்தையும் மோட்ச நம்பிக்கைகளையும் புத்தர் புறம் தள்ளினார். அந்த வகையில், புத்தர் ஒரு யதார்த்தவாதியாகவும் பகுத்தறிவுவாதியாகவும் திகழ்ந்தார்.

    தன்னால் நேரடியாகக் கண்டு, கேட்டு, உணர முடிந்த விஷயங்களுக்கு மட்டுமே அவர் எதிர்வினை புரிந்தார். பிரபஞ்சப் பொருள்களின் தோற்றம் குறித்த தத்துவார்த்த ஆய்வுகளையும் இறப்புக்குப் பிறகான காலகட்டம் குறித்தும் கவலைப்படுவது தேவையற்றது என்றார் புத்தர். தந்தையிடம் கோபித்துச் சில காலம் துறவியாக வாழ்ந்தமையால ;செல்வத்தில் திளைத்துச் சிறிதும் பசிப் பிணி அறிந்திராத பெரியார் காசியில் எச்சிலைக்கு ஏங்கி நின்ற நிலையில் துறவறத்தை துறந்தார். உலக துயரங்களைத் தீர்க்காத இது போன்ற துறவறத்தால்; பயனற்றது என உணர்ந்து இல்லறத்திற்குத் திரும்பினார். தன்னுடைய மனைவி நாகம்மையையும் பகுத்தறிவுப் பாதையில் நடத்தி சமுதாய விடுதலைப் பேராட்டத்தில் ஈடுபடுத்தினார்.  மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்கள் அனுபவித்து வரும் பல்லாயிரக்கணக்கான துயரத்தை இருவரும் கண்டு அதற்கான தீர்வுகளைக் கூறிச் சென்றுள்ளனர். மனிதர்கள் தங்களின் துன்பத்திற்கான காரணத்தை ஆராய்ந்து அதைத் தீர்க்க தாங்களே முன் வரவேண்டும் என்று இருவரும் கூறுகின்றனர். தனது உடலில் பாய்ந்திருக்கும் அம்பு எங்கிருந்து வந்தது என்றோ அதை யார் செய்தது என்றோ ஆராய்ந்து கொண்டிருப்பது மடத்தனம். உடனே அதனைப் பிடுங்கி எறிய வேண்டியதுதான் புத்திசாலித்தனம் என்றார் புத்தர்.

     தீண்டத்தகாதாரைத் தங்கள் இழிவிற்கு எதிராகப் போராட வேண்டும் என்கிறார். பெரியாரும், உண்மையான விடுதலைஉங்களுக்கு வேண்டுமானால் உங்கள் இழிவிற்கும் அடிமைத்தனத்துக்கும் அஸ்திவாரமான ஆதாரத்தை அழிக்க நீங்கள் தைரியம் கொள்ள வேண்டும் என்கிறார் (தொ.1ஃ ப.71). பிறருக்காக உழைப்பது, இருக்க வீடும், உண்ண உணவும், உடுத்த உடையும், கல்வியறிவும் இல்லாமல் வாழ்கிறவர்களை அவர்களின உழைப்பைச் சுரண்டி பயன்படுத்திவிட்டுக் கீழ்ச்சாதியென்று சமூகம் கூறுவதாக பெரியார்கூறுகிறார். (தொ.1ப.72).

    முடிவுரை –  புத்தம் என்ற நோக்கில் ஆராயும் பொழுதும் ,அறிவுபூர்வச் சிந்தனைக்கு முழுப்பெயர் பவுத்தம். நேர்மையான வாழ்வுக்கு வழிகாட்டும் நெறிக்குப் பெயர் பவுத்தம். சமத்துவத்திற்கு வழிநடத்தும் தத்துவத்திற்குப் பெயர் பவுத்தம் என்று கூறலாம்.; மேற்கூறிய கூற்று மூன்றும் பெரியாரியத்திற்கும் பொருந்துகிறது என்பதை இக்கட்டுரை தெளிவுபடு;த்தியுள்ளது.

    பார்வை நூல்கள்

    1. ஆச்சார்யா. .பி.எஸ்.,கௌதமபுத்தரின் வாழ்வும்வாக்கும்,நர்மதா வெளியீடு,பாண்டிபசார்சென்னை-17. மு.ப.2015
    2. ஆனைமுத்து வே.,பெரியார்ஈ.வெ.ரா.சிந்தனைகள்(3ம்தொகுதி),சிந்தனையாளர்கழகம்,திருச்சி. மு.ப.1974
    3. தாமியென் கோவ்ன், தமிழில் சி.மணி. பௌத்தம்,அடையாளம் வெளியீடு,பௌத்தநாதம். ஆண்டு 2005
    4. பெரியார் தந்தை, பௌத்த நெறி, திராவிடர் கழக வெளியீடு, சென்னை- 7 ஆண்டு 1957(15.5.57ஆம் தேதி மாலை சென்னை, எழும்பூர் மகாபோதி சங்கத்தில் நடந்த 2501ஆம் ஆண்டுப் புத்தர் விழாவின்போது தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய தலைமைப் பேருரை)

    5.பண்ணன், சிந்தனையாளர்; பெரியார். திருமலைப்பதிப்பகம், சென்னை, ப.55மு.பதிப்பு 1988

    1. மயிலை சீனி. வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், கழக வெளியீடு,சென்னை. ஆண்டு 1964
    Share
  • என்கவிதைகள் – அரவாணிகள்

    முனைவர் ஜ.பிரேமலதா,

    தமிழ் இணைப் பேராசிரியர்,

    அரசுகலைக் கல்லூரி,

    சேலம்-7

     

    Evening-Tamil-News-Paper_19744074345

    தெய்வத்திற்கும் மனிதர்க்கும் 
    தொடர்பு ஏற்படுத்த கடவுளால்
    போடப்பட்ட உறவுப்பாலங்கள்!

    சக்தியின் வடிவானவர்களுக்கு
     உறவுகள் அனைத்தும்
    சக்தியின் வடிவங்களே!

    பெறுவதால் பேறு பெற்ற தாயர்க்குமுன்
    இழப்பதால் வீடு பெறு பெற்ற
    தாயம்மாக்கள்!

    வாழ்வாதாரங்கள் தொடர்ந்து
    மறுக்கப்பட்டபோதும்
    இருப்பியலுக்குப் போராடும்
    ஆதிப்போராளிகள்!

    வர்த்தக நோக்கம் கொண்டோர்க்கு
    புரிந்தாலும் புரியாது
    இறைவனே விரும்பி மேற்கொண்ட
    இவர்களின் வித்தகக் கோலம்!

    ஆண்பாலாய்ப் பிறந்து
    பெண்பாலாய் உணர்ந்து
    பலர்பாலாய் மாறிய
    உயர்பிறப்புகள்!

    தாயின் கருவறையில்
    அனைத்து மனிதர்களும்
    முதல் ஆறுவாரம்
    பெண்ணினமே!

    ஒவ்வொரு
    ஆணுக்குள் பெண்மையும்
    பெண்ணுக்குள் ஆண்மையும்
    இயற்கை அளித்த பெருவரம்!

    y குரோமோசோமும்
    டெஸ்டோஸ்ட்ரோனும்
    ரிசெப்டரும் முறைதவறுவதால்
     உருவாவதே மூன்றாம் பாலினம்!.

    தாயின் கருவறை மரபணுவை
    வீரியமிழக்கச்செய்யும்
    அண்ணன்களின் மரபணுவும்
    தம்பி அரவாணியாக ஒரு காரணம்!. 
    எங்கும் உள்ளது  அரவாணியம்
     எழுத்து வகையில் ஆய்தம்!
    சொல்நிலையில் இடையினம்!
    திணையிலோ முறைமையில் திரிந்த பாலைகள்!

    இவர்கள் பாக்களிலோ மருட்பா!
    பூக்களிலோ வாடாமல்லி!
    தெய்வத்திலோ அர்த்தநாரி!
    மனிதரிலோ பால் கடந்த ஞானிகள்!

    மல்லாக்கப்படுத்து எச்சில் துப்பும்
    ஒன்பது வாயில் கொண்ட
    மனிதர்க்கு மட்டுமே இவர்கள்
    எண்களில் ஒன்பது!

    சாதி,மதம்
    பால், இனம் கடந்த
    இவர்கள் தான் உண்மையிலேயே
    மகத்தான மானுடர்கள்!

     

    —————————————————————————————————————————————————-

    நான்  யார்?
    மழலை பேசிய நாட்களில்
    எடுத்த புகைப்படங்களில்
    அதிகம் கவர்ந்தவை
    தலைசீவி மட்டை வைத்து
    பூ அலங்காரம் செய்த
    பாவடை சட்டைக் கோலம்!

    கண் நிறைய அப்பப்பட்ட
    மையையும் மீறி வெளிப்பட்டன
    பிஞசு முகத்தில்
    அம்மா திணித்த
    அலங்கார ஆசைகள்!

     

    தன் கல்யாணக் கனவுகளை
     வெளிப்படுத்த இவனுக்கும்
    பள்ளி நாட்களில்
    அழகான கைகளென்று இழுத்து
    அக்கா வைத்த மருதாணிப்பூச்சு
    சிவக்க வைத்தது இருவரையும்!

    அக்காவிற்கு கிடைத்த
    பெண்பிள்ளைகளுக்கான
    ஓசிச் சைக்கிளில்
     பழக்கிவிட்ட
    அப்பாவிற்கும் தெரியாமல்
    படர்ந்து விட்டன ஆசைக்கிளைகள்!

    அனைவரின் விருப்பத்திற்கும்
    இணங்கிப் போய்…
    பருவவயதில் தனக்காக வாழ
    மஞ்சள் தேய்த்து
    பாவாடை தாவணி உடுத்திய
    போது கிடைத்ததோ

     

    வசவும் சாட்டையடியும்!
    உடன் பயின்ற தோழர்களோ
    வேற்றுமை கண்டும்
    தோழியரோ ஒற்றுமை கண்டும்
    ஒJங்கிய நிலையில்
    அவனுள் நொறுங்கிப்போனது
    உலகமென்ற ஏதோவொன்று!

    நான் யார்….?
    திரிகால ஞானிகளும்
    கண்டுணர முடியாத தொடர்ந்த
    கேள்விகளினால்
    பாழாகிப்போனது பாழாய்ப்போன
    பள்ளிப்படிப்பு!

    நான்  உடலா…? உள்ளமா?
    சித்தர்களும் விடைதேட  காட்டிற்குள்
    ஓடிய நிலையில்
    ஓடாமலிருக்க
    ஒளித்து ஒளித்து
    வாழ்ந்த வாழ்க்கை
    சந்ததிகளினால் 
    பிழையாகிப்போனது!

    குடிகார அப்பாவுக்கும்
    முதிர்கன்னி அக்காவுக்கும்
    தாயாயிருந்தும் தாய்மையில்லாத
    அவனை வெறுக்கும் தாய்க்கும்
    இடமுண்டு அவனுக்கு
    இடமில்லாத வீட்டில்!

    ஆண் உடல் – பெண்தன்மை
    பாலறியாமல்  ஐயுற்று குழம்பி
    அறிவு பேதலித்து உடல் நலிவுற்று
    உறவினர் வரும்போது
    கழிவறைக்கு விரட்டபட்ட நிலையில்
    உணர்ந்தான் அவ்வீட்டில்
    தன்னை ஒரு மலமாய்!

    கண்டும் காணாத உறவுகளினால்
    காணாமலே போய் விட்டான்.
    உடலாலும் மனதாலும்
    வெந்து நொந்து….  மகளாய்
     பாசம் காட்ட ஆளிருந்தும்
     பெற்ற பாசம் துரத்த
    ஓடினாள் வீடு தேடி…!
    வாசலில் அவன்….. அவளாக
    அதிகாலை இருட்டில் .
     பாம்பைக் கண்டதுபோல்
    உள்ஓடி கதவடைத்த ஓசை
    அவள் பாடிய தாலாட்டையும் மீறி
    ஒப்பாரியாய் வந்து விழுந்தது 1

    அவ்வோசை அவனின்
     உயிர்நரம்புகளை மட்டுமா அறுத்தது
    கோடானுகோடி ஆண்டுகளாய்
    தாயின் மீது கட்டமைக்கபட்ட
    அத்தனை
    புனைவுகளையும்தான்!

    தவமிருந்து பெற்ற ஒற்றை ஆண்பிள்ளை
    தாயுமில்லை தந்தையில்லை
    நான் தனியன் என்று
    கடைகடையாய்
    கைதட்டி பிச்சை கேட்குமென்று
    யார்தான் நினைத்திருப்பார்?

    சாபமுமில்லை….
    ஊனமுமில்லை….
    இருத்தலியல் சிக்கல்
    பிறந்த அனைவருக்குமிருக்க
    சாதித்துவிட வேண்டுமென
    தினவெடுத்தன அவள் தோள்கள்!

    பிச்சை, பாலியல் தொழில் மறுத்து
     முப்பெரும் கடவுளின்
    முதற்தொழிலை…..
    அன்னம் படைத்தலை
    முனைப்போடு மேற்கொள்ள
    ஆரம்பமாயிற்று போராட்டம்!

    அன்புச்செழியன்
    அன்னலட்சுமியானாள்
    அரவாணியர் சுயஉதவிக்குழு
    அரவாணியர் கலைக்குழு
    அரவாணியர் குழந்தைகள் காப்பகம்
    அரவாணியர்  முதியோர் காப்பகம்
    அரவாணியர் பணிமகளிர்சங்கம்
    அரவாணியர் காப்பகப்பள்ளி….

    இருபதாண்டுகள்
    இணையற்ற விருதுகள்,உறவுகள்
    இணையில்லா பெருமைகள்
    எனினும் நெஞ்சில் ஏக்கங்கள்
    வந்தவழி நினைத்து
    பயணிக்க ஏங்கும் பாதங்கள்!

    கூத்தாண்டவரின் பாதங்களில்
    கண்ணீரால் கரைக்க முயன்றும்
    கரையாத பாறைகள்.
    கண்மூடி திறந்தாலோ இரத்தவழி உறவுகள்..
    தத்தெடுத்த பிள்ளைகள் தாங்கி நின்றாலும்
    ஒரு மகனாய் ஏங்கிய பாச நினைவுகள்!

    முப்பதாண்டு …
    முனைப்புகள் கூர்மையாகி
    வாசலிலே நின்றுவிட்டாள்
    புறத்தில் மாறாத பழைய வீடு
    பயத்தோடு கதவுதட்டி காத்திருக்க
    காப்பவளே இப்போது யாசகனாய்…!

    யார் வேணும்?இடுங்கிய கண்களோடு
    உள்ளிருந்து வந்த தேய்நத குரலுக்கு…
    “அன்னலட்சுமி…அன்புச்செழியன்….”
    வா என்ற சொல்லுமில்லை
    வாஞ்சையோ சிறிதுமில்லை
    வேதனை மென்றிட
    மரணத்தைப் பார்த்துவிட்டாள்!

    கால்களோ மறத்துவிட
    மறந்துவிட்டாள் காலெடுத்து வைப்பதற்கு.
    ஆனாலும் உள்ளிருந்து கிழிந்தசேலையும்
    இடுங்கிய கண்களும்
    தேகமென்று ஒரு  குச்சி  நடந்துவர
    இருள் ஒளியானது .

    சொல்லாமல் சொல்லின
    இவர்களின் இருப்பை….
    அவனை விரட்டிய கௌரவம்
    அவர்களையும் விரட்டி விட்டதென்று.
    இறுக்கம் உடைந்து இரங்கிய பேச்சில்
    பசி அவர்களை தத்துதெடுத்து
    ஆண்டுகள் பல ஆயிற்றென்று.

    கைநீட்ட வைத்த
    அப்பாவின் குடிப்பழக்கம்
    கம்பி எண்ண வைத்ததோடு
    வேலையையும் பறித்துவிட
    நின்றபோன அக்காவின்
    காலம் கடந்த திருமணம்,

    மகளோடு சுமந்த தாயின்
    பொருளாதார சுமை உணராது
    காசநோய் அப்பாவைப்
    படுக்கையில் தள்ளிவிட
    நடைப்பிணமாய் மாறிப்
    போனது அவர்களின்  வாழ்க்கை.

    கேட்ட கதைகள் அத்ததனைக்கும்
    தன் சோகத்தையும் மறந்து கண்ணீர் விட்டாள்.
    அவள்பட்ட வேதனையும்
    அவளைச்சோதித்த சோதனையும்
    நினைத்துப் பார்க்கத் தெரியாத
    பெரியமனசுக்காரி!

    தான் சாபம் விடாதபோதும்
    தெய்வம் தணடித்துவிட்டதென
    நினைக்கக் கூடத்தெரியாத
    அரவாணி  அன்னலட்சுமி
    பெற்றவர்களைத்
    தத்தெடுத்துக் கொண்டாள்!

     

     

     

     

    Share
  • திருவாசகக் கருத்துப் புலப்பாட்டில் உணவுப் பொருட்கள்

    முனைவர் ஜ.பிரேமலதா,

    தமிழ் இணைப் பேராசிரியர்,

    அரசுகலைக் கல்லூரி,

    சேலம்-7

    திருவாசகம் சைவர்களின் வேதம் என்று போற்றப்படுகிறது. திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது அனுபவப் பழமொழி. அதன் சிறப்பிற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மொழியமைப்பும் கருத்துப் புலப்பாட்டுத் திறனும் முக்கியப் பங்காற்றுகின்றன. உணவுப் பொருட்சொற்களைக் கருத்துப் புலப்பாட்டுத் திறனுக்குப் பயன்படுத்தி மாணிக்கவாசகர் நம் மனதை பக்குவப்படுத்தும் முயற்சியில் வெற்றிக் கண்டுள்ளார்.

    images (1)

    கருத்துப் புலப்பாடு

    கருத்துப் புலப்பாடு என்பது, ‘ஒரு செய்தியை மற்றவர் அறிய நன்றாகத் தெரிவித்தல்‘ என்பதாகும். இரெ.குமரன் அவர்கள்,காலம்,.இடம், பொருள், கேட்குநர் திறம் ஆகிய அனைத்தையும் அறிந்து மொழியினை ஆள வேண்டும் என்பதே கருத்துப்புலப்பாட்டிற்கு அடிப்படை என்கிறார்….என்பது ஒரு கருத்தைக் கூறுபவர், தான் சொல்ல வந்த கருத்தைக் கேட்பவர் எளிமையாகப் புரிந்துகொள்வதற்கு ஏற்ற முறையில்    அவரது சூழ்நிலைக்கேற்ப அவர் அறிந்துள்ள பொருட்களின் வழி எளிமையாகக் கூறும்  முறையாகும். இலக்கியத்தின் பாடுபொருளை விளக்குவதற்கு ஏற்ற வகையில் உள்ள எந்த ஒரு செய்தியையும்  கூறுபவர் பயன்படுத்தலாம்.அந்தச் செய்திக் கூறுபவரின் ஆற்றலால் பயன் நல்கிக் கருத்தாகிறது.அவரவர் மனநிலைக்கேற்பக் கருத்து வெளிப்படுத்தப்படுகிறது.
    உணவுப்பொருட்கள்

    உணவுப் பொருட்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. உணவு உடல் வளர்ச்சிக்கும்,நம் இயக்கத்திற்கும் காரணமானது.

    உணவில்லையேல் உயிர்களில்லை. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.மானம் அழிந்து மதி கெட்டு மனிதன் உயரிய குணங்கள் அத்தனையையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது.அந்நிலையில் உணவு கொடுப்போர் உயிர் கொடுத்தோராகக் (மணிமேகலை.11.95)கருதப்படுகிறார்.உயிர் மற்றும் உடல் வளர்ச்சிக்குக் காரணமான உணவுப்பொருட்களை உயர் நிலையாம் சன்மார்க்க நெறி விளக்கத்திற்குப் பயன்படுத்துகிறார்.

    தேன் , பால்,கரும்பு  

    தாய் தன் குழந்தையைத் தேனே அமுதே கரும்பே எனப் பலப்படப் பாராட்டிக் கொஞ்சுகிறாள்.தேன் பால் கரும்பு இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடையவை.எனவே,தாய் ஒன்றன் சுவையை மட்டும் குழந்தையின்பத்தை ஒப்பிடப் பயன்படுத்தாமல் பலசுவையுடன் குழந்தையின்பத்தை ஒப்பிடுகிறாள்.இவ்வாறு ஒப்பிடுவது குழந்தையின்பம் ஒப்பிட முடியாத அளவு இன்பம் பயக்கக்கூடியது என்பதைக் காட்டுகிறது. தேனை விடப் பால் இனிமையானது. பாலைவிடக் கரும்பு இனிமையானது. எனவேதான், தாய் ஒன்றைவிட உயர்ந்த ஒன்றைக் குழந்தைக்கு உவமை காட்டி மகிழ்கிறாள்.

    மாணிக்கவாசகரும் இதே நிலையிலிருந்தே, சிவன் அருளை,அருமையைச் சிவனை நினைக்கும் போது ஏற்படும் இன்பத்தை இவ்வகை உயர்ந்த பொருட்களோடு ஒப்பிட்டு உவக்கிறார். முதலில் இறைவனைத் தேனமுது (5.58)என்கிறார். பின்னர்த் தேனோடு பால் கலந்து பருகுவது இனிமையானது, மேலும், சுவையுடையது என்பதால் இறைவனைத் தேனைப்பாலை (5.58), தேனோடுபால்(5.36) என்கிறார். தேனோடு பால் கலந்த இக்கலவை உடலுக்கு ஆக்கம் தருவதுபோல், சிவன் அருள் உயிருக்கு ஆக்கம்  தரக்கூடியது.இது மாணிக்கவாசகருக்கு  இன்னமுதாகத்  தோன்றுவதால் தேனைப்பாலை நிறையின்அமுதை அமுதின்சுவையை(27.4) என்றெல்லாம் இதைப் போற்றுவதோடு இறைவனின் திருவடியை இன்னமுது(8.9), ‘ஆராமுதின் அருள்தாளினைப்பாடி‘(16.1)என்று  உவக்கிறார்.

     தனித்தனிச் சுவைகளோடு ஒப்பிடுவதைவிட ஒரு பொருளின் பல சுவைகளை எடுத்துக்காட்டி  ஒப்பிடுவது, சிவனின் அருமையை உணர்த்தும் என்பதால், இறைவனைக் கரும்போடு ஒப்பிடும்பொழுது கரும்பின் பல சுவைகளோடு ஒப்பிடுகிறார்.‘கரும்பு தரு சுவையே’ (38-1) ‘கரும்பின் தெளிவே’(5-55),‘தீக்கரும்பின் கட்டியே’(8-10) எனக் கரும்பின் பல சுவைகளோடு ஒப்பிடுகிறார். இரும்பு தரு மனத்தேனை ஈர்த்தென் என்புருக்கிக்கரும்பு தரு சுவை எனக்குக் காட்டினை’(38-1) என்றும் கரும்பின் தெளிவே(9-90),கன்னலின் தெளிவே’(6-58),தெளிவந்த தேறல்(8-118),தீக்கரும்பின் கட்டியுமாய்’(8-18)எனக் கரும்பின் பல சுவைகளோடு ஒப்பிடுகிறார்.

    இறையருள் இச்சுவைகளையெல்லாம் விட உயர்ந்தது,இவை ஒவ்வொன்றும் தனித்தனி சுவையுடையவை. இறையருளோ இவ்வெல்லாச் சுவைகளையும் விட மிக உயர்ந்தது. இதை உணர்த்த,‘தேனையும் பாலையும் கன்னலையும் அமுதத்தையும் ஒத்தினிய கோன்’(8-14) என அனைத்துப் பொருட்களையும் இணைத்து இறைவனின் சிறப்பை மேலும் மேலும் ஒப்பிட்டு உவக்கிறார்.

    இதன்மூலம் இறையருள் அனைத்து சுவையுடைய பொருட்களையும் விட உயர்ந்தது மதிப்பிடமுடியாத இனிமை தருவது. என உணர்த்துகிறார். தேன்,பால்,கரும்பு என வரிசைப்படுத்தியிருக்கும் முறையைப் பண்டிதமணி  அவர்கள், “இம்மூன்று பொருட்களையும் வரிசைப்படுத்தும் பொழுது தேன்-பால்-கரும்பு என்ற வரிசையில் அமைத்துள்ளார்….தேன் புழுக்களின் எச்சில் மயமாகவும், பால் ஊனுடம்பின் சாரமாகவும் உள்ளவை….கரும்பங்கட்டி எச்சில், ஊன் கலப்பு முதலிய குற்றம் இலாதாய், உடலுக்கு நலம் பயப்பதாகும். இம்முறையில் ஆண்டவன் அன்பரை ஆட்கொள்ளுங்கால், தேனைப்போல, வயப்படுத்தும் பாலைப் போலப், பின் பயன் விளைவித்துக் இனிமை தரும் கரும்பங்கட்டியைப் போலத் தூய இன்பம் அளித்துக் காப்பான்” (1985.285-286)என்று வியக்கிறார்.மாணிக்கவாசகர் பொருட்களின் தன்மையை நுட்பமாக உணர்ந்த காரணத்தினாலே தான் தேன்,பால்,கரும்பின் வரிசையை முறைப்பட அமைத்து இறையருளோடு பொருத்தமுற ஒப்பிடுகிறார்.

    பழங்களோடு ஒப்பிடல்

    உடல்,உள நல ஆரோக்கியத்திற்கு உகந்தவை கனி வகைகளே. தூய இனிப்புச்சுவை கனி வகைககளில்தான் உள்ளது.உடலுக்கு உயிர்சக்தியைக் கொடுக்கக்கூடியது ஆதலால் தான் நோயுற்றவர்களுக்குக் கனி வகைகளைக் கொடுக்கின்றனர். உலகப் பற்றுகள் என்னும் நோய் பீடித்தவர்கள் உயிர் நலம் பெற, முக்தி நலம் பெற இறையருள்தான் கனிச்சாறாகும். ஆனால், இங்குச் சிவனோ கனிச்சாறாகவே இருக்கிறான் என்கிறார். இறைவனை,

    பழச்சுவை(20-7,9-15) 
      செங்கனி(9-14), 
      மதுரக்கனி(32-10)
      கன்னற்கனி(3-17)
    என்றெல்லாம் பலப்படப் போற்றுகிறார்.

    பலா-வாழை

    பெண்ணாசை,மண்ணாசை,பொன்னாசை இம்மூன்று ஆசைகளும் தான் உலகப்பற்றுக்குக் காரணம். இப்பற்றுக்களில் ஈடுபாடுகொண்டவர்களின் மனம் கல்லைப்போல இறுகி விடும். அத்தகையவர்களின் மனதை கனிவிக்கும் அருட்திறம் உடையவன் இறைவன் ஒருவனே. உலகப்பற்றுக்களில் ‘பலாப்பலத்து ஈ’ போலப் பற்றிக் கிடந்த தன்னை, தன் மனதை இறைவன் தன் கருணைத்திறத்தால் ஆட் கொண்டு உண்மைப்பொருளை உணரவைத்துவிட்டான். தில்லைக்கூத்தனை என்னுள் ஏற்றுக்கொண்ட பிறகு என்கூடும்,உயிரும் கனிந்து மகிழ்வால் கும்மாளமிடத் தொடங்கிவிட்டன என்கிறார். உலகப்பற்றுக்களில் மூழ்கி பலாப்பலத்து ஈ போல இறுகிக்கிடந்த தன்னை இறைவன் தன் அருட்திறத்தால் கனிவித்து ஆட்கொண்ட தன்மையை வியக்கும் நிலையில் இறைவனையே கனியாக்கி ‘கல்நார்உரித்த கனியே’(14-97)என்கிறார்.

     மனம் ஆணவம் நீங்கி கனிந்த தன்மை பெற்றதை  வாழைப்பழத்தோடு ஒப்பிடுகிறார். இறைவன் என் மனதை வாழைப்பழம் போல கனியவைத்துவிட்டான் என்கிறார். வாழைப்பழத்தின் மனம் கனிவித்து’(96-34)என்ற தொடரில் இதை உணர்த்துகிறார். தானே கனியாக இருக்கும் இறைவன், தன் அன்பர்களின் மனதைக் கனிவிக்கும் திறமுடையவனாகவும் விளங்குகிறான்.

    நெல்லிக்கனி 

    நெல்லிக்கனி மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடியது .அதுபோல இறைவன் எளிதாக மாணிக்கவாசகருக்குக் கிடைத்துவிட்டான். இறைவன் மிக எளியவன். அன்பருக்கு அன்பனாய்,தொண்டருக்குத் தொண்டராய்த் தானே வந்து அருள் செய்பவன். இக்கருணை வள்ளல்,மாணிக்கவாசகருக்காகப் பிட்டு சுமந்தும், குதிரைச்சேவககனாய் வந்தும் அருள் செய்தவர். சமயக் குரவர்களில் மாணிக்கவாசகர் ஒருவரே இவ்வாறு இறைவனைத் தொண்டராய் அடையும் பேறு பெற்றவர்.தனக்கு எளியனாய் வந்து அருட்செய்ததை எளிய பழமொழி மூலம் விளக்குகிறார்.
    தடக்கையின் நெல்லிக்கனியாயினான் (3-162)
    எளியன் என்று தான் கூறிய சொல்,தன் வாழ்க்கையில்  நடந்த நிகழ்வுகளின் வழி ஊரறிந்த இரகசியமாகவும் உள்ளது என்பதை இவ்வடிகளின் மூலம் புலப்படுத்துகிறார். மக்கள் அன்றாடம் பேச்சு வழக்கில் பயனபடுத்தும் தொடர்களை இலக்கியத்தில் கையாள்வது ஒருவகை உத்தியாகும். பலாப்பலத்து ஈ, உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற பழமொழிகளை இடம் நோக்கி கருத்துப் புலப்பாட்டின் எளிமைக்காகத் திறம்படக் கையாண்டுள்ளார்.

    புளியம்பழம்

       தமிழர்கள் இனிப்புச்சுவைக்கு அடுத்து புளிப்புச் சுவையையே பெரிதும் விரும்புகின்றனர். புளிப்புச் சுவையுடைய இயற்கைப் பொருட்களில் புளியங்காய் முதலிடம் பெறும். இது முற்றும்போது இனிப்புச்சுவையுடைய புளியம்பழம் ஆகிறது. காயாக இருக்கும் போது தோலும் உள்சதையும் இணைந்து பிரிக்க முடியாத நிலையில் இருக்கும். ஆனால், பழமாகும்போது தோல் முற்றி விடும்.சதைப்பகுதிப் பழமாகி தோலிலிருந்து விடுபட்டுக் காணப்படும். எளிதாக ஓட்டுப் பகுதியை பிரித்து விடலாம்.

    மாணிக்கவாசகர் இவ்விரு நிலைகளையும் தன் வாழ்க்கை அனுபவத்தோடு ஒப்பிடுகிறார். திருப்பெருந்துறையில் இறைவனாகிய குருநாதரைச் சந்திக்கின்ற வரையில் அவர் உலக இன்பத்தில் மூழ்கியிருந்தார். பல பற்றுக்களால் பற்றப்பட்டிருந்தார். அவற்றிலிருந்து மீளவேண்டும் என்ற உணர்வுகூட அவரிடம் இல்லை.  ஆனால், குதிரை வாங்கச் சென்ற வழியில் இறைவன் அவரை ஆட்கொண்டார். மாணிக்க வாசகர் குதிரை வாங்கவே பெருந்துறை சென்றார். இறைவனைத் தரிசிக்கும் நோக்கத்துடன் செல்லவில்லை.ஆனால் இறைவனாகிய குருநாதரைக் கண்டவுடன் மிக இயல்பாக வசப்பட்டு விட்டார்.இந்நிலையில் அவரைப் பற்றியிருந்த அவர் பற்றியிருந்த பற்றுக்களெல்லாம் தீயிலிட்ட பங்சினைப் போல மறைந்து போய்விட்டன.பற்றற்ற நிலையில் பற்றுக்களாகிய புளியம் ஓட்டினை விட்டு, இறைமை உணர்வுடன் இனிப்புச் சுவையுடைய பயன்பாட்டிற்குரிய புளியம்பழம் நிலைக்கு அவரது உயிர் கனிந்து விட்டது. இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பின்னர், தானிருந்த நிலையைப் புளியம் பழமொத்திருந்தேன் என்கிறார்.தன் பற்றுக்களுக்கும், இவ்வுலக வாழ்விற்கும் காரணமான உடலைப் புளியந்தோடு என்கிறார்.

     ”அளி புண்ணகத்துப் புறந்தோல் மூடி அடியேனுடைய
    யாக்கை புளியம் பழமொத்திருந்தேன்”(25-5) இறைவனின் திருவடியை அடையும் வேட்கையினால், இப்பரு உடலைவிட்டு நீங்கி இறைவனடியை சேர விரும்பும் உயிரின் ஆசையை, இப்பாடல் வரிகளில் புலப்படுத்துகிறார்.

    திருமந்திரப்பாலொன்றும் இதே கருத்தை வெளிப்படுத்தியுள்ளது.
    “அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி
    புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கி”(திருமந்திரப் பாடல்.2920)என்ற பாடல் பற்றறுத்து பக்குவப்பட்ட உயிர்கள் ஓட்டிலிருந்து நீக்கிய புளியம்பழம் போன்றவை. கனிந்த நிலையிலுள்ள அவ்வுயிர்களையே பராசக்தி பற்றுவாள் என்கிறது.

     இதே நிலையினைக் குலாப்பத்தில்,இறைவனாகிய குருநாதரைச் சந்திக்குமுன் அமைச்சராக இருந்தபோது பட்டாடையும் பொற்கலமுமே உறவு என நினைத்து வாழ்ந்திருந்தேன. இறைவனால் ஆட்கொள்ளப்பட்டபின் ஓடும் கவுந்தியுமே உறவாகிவிட்டது. பட்டாடையும் பொற்கலமும்  அமைச்சர் பதவியும் தராத   மகிழ்வை ஓடும் கவந்தியும் தந்து விட்டன.ஆனந்தக் கூத்தனைச் சிவனை  என்னுள் ஏற்றுக் கொண்டபிறகு என் கூடாகிய உடலும், உயிரும் மகிழ்வால் கும்மாளமிடத்தொடங்கிவிட்டன.

    குலாப்பத்திலும்,

    “தேடும்பொருளும் சிவன்கழலே எனத்தெளிந்து
     நாடும் உயிரும் குமண்டையிடக் குனிந்து அடியேன்
     ஆடும் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.(4-1)
    என்று தன் உயிரின் நிலையை உணர்த்துகிறார்.

    இறை ஒன்றே நிலையானது. மற்ற அனைத்தும் நிலையற்றவை என்பதை உணர்த்த விரும்பிய மாணிக்கவாசகர், மேற்கண்டவாறு பழங்களின் தன்மையோடு வாழ்க்கையை ஒப்பிட்டு விளக்கியுள்ளார்.பூவாகி பின் பழமாகி அதுவும் மாறி அழுகி மண்ணில் வீழும் பழங்களின் வாழ்க்கையோடு மனித வாழ்க்கையை ஒப்பிடுகிறார்.   ”அரும்பாய்க் கவிமலராய்க் காயாகி வம்பு பழுத்து உடலம் மாண்டு” (40-6)என்று அரும்பாகி, மலராகி, காயாகி, பழுத்து, பின் பழம் வீழ்ந்து அழிவது போல நம் உடலும் அழிந்துவிடும் என்கிறார்.   ‘பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்‘ எனத் தொடங்கும் குண்டலகேசிப் பாடலும் இதே உண்மையை உணர்த்துகிறது.

    தயிர்

    மாணிக்கவாசகர் உள்ளம்,முதலில்  இறைக் கருணையைப் பற்றாமல் புலன்களால் அலைப்புண்டு அவரையும் அலைக்கழிக்கிறது. தன் உள்ளம் தன்னைப் படுத்தும் பாட்டை  மத்திடு தயிராகி (5-10) என்ற உவமை மூலம் விளக்குகிறார். “மத்துறு  தண் தயிரிற் புலன் தீக்கதுவக் கலங்கி” (6-30) என்றும் ”மத்திட உடைந்து தாழியைப் பாவு தயிர் போல் தளர்ந்தேன்” என்றும்  கூறுகிறார்.ஐம்புலன்களைப் பலமுகம் கொண்ட மத்தாகவும், உள்ளத்தைத் தயிராகவும் உவமிக்கிறார். திருநாவுக்கரசரும் “மத்துறு தயிர் போல் மறுகும் உன் சிந்தை” (4-96-3) என்று புலன்களின் வழி சென்ற  தன் உள்ளம் படும் பாட்டை எடுத்துரைக்கிறார்.

    நெய்

    இறைவனை ஆவின் பால் என்றழைக்கிறார். ஆன்நெய்(5-38).பசுவின் நெய் தூயது.பக்கவிளைவுகளற்றது.ஆயுர்வேதத்தில் மருந்தாகப் பயன்படுத்தக்கூடியது. நெய் பாலில் மறைந்திருகக்கூடியது. அதுபோல இறைவனும் உயிர்களின் ஆன்மாதோறும் மறைந்துள்ளான். பாலில் மறைந்துள்ள நெய் பின் வெளிப்படுவது போல வாய்ப்பு நேரும்பொழுது, இறைவனும் வெளிப்படுவான். சிவவாக்கியர் இந்நிலையை, ‘ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே‘ என்கிறார். மாணிக்கவாசகர் இந்நிலையை, ‘பாலில் நெய் போலப் பேசாதிருந்தாய்‘(21-5) என்கிறார்.இதே கருத்தை,”சேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்ப பாயமு தாகிநின் றண்ணிக் கின்றானே”(திருமந்திரப் பாடல்.2365)”காலினில் ஊறும் கரும்பினிற் கட்டியும்      பாலினுள் நாற்றமும் போலுளன்”(பாடல் எண்.2639)முதலான இத்திருமந்திரப்பாடல்களும் இறைவன் கருப்பங்கட்டியுமாய்,பாலில் மறைந்த நெருப்பாய்,பழரசமாய்,பூவினுள் விரவிய மணமாய் விளங்குகிறான் என்கின்றன.
    பாலில் மறைந்துள்ள  நெய் பின் வெளிப்படுவது போல, வாய்ப்பு நேரும்பொழுது இறைவனும் வெளிப்படுவான். சிவவாக்கியர் அந்நிலையை ‘ஊமையான காயமாய் இருப்பன் எங்கள் ஈசனே‘ என்கிறார். மாணிக்கவாசகர் இந்நிலையைப் பாலில் நெய் போலப் பேசாதிருந்தாய்(21-5) என்கிறார்

    எள்ளும் எண்ணெயும்

    ‘எள் என்றால் எண்ணெயாக இருக்கவேண்டும்‘ என்பது தமிழில்  ஒரு பழமொழி. இப்பழமொழி வேகத்தையும்,செயல்திறனையும் குறிக்கிறது. சிவனை நினைத்தளவிலேயே அவனுடைய  அருள் அவனை நினைத்தவர்களுக்குக் கிடைத்துவிடும். சட்டோ நினைக்க மனத்து அமுதாம் சங்கரனை, ‘எள்ளும் எண்ணெய் போல் நின்ற எந்தையெ (5-46) என்கிறார். அன்பர்கள் இறைவனை நினைத்தளவிலேயே வேண்டியதைக் கொடுக்கும் அருட்பேராற்றல் கொண்ட வள்ளல் என்பதை இதன் மூலம் புலப்படுத்துகிறார்.

    சிவனே ஓர்அமுதம் 

    உயிர்களுக்கெல்லாம் அமுது என விளங்கக் கூடியவன் சிவன் ஒருவனே. உயிர்களைக் காக்க வேண்டி ஆலாலவிடத்தையே அருந்தியவன். சிற்றுயிர்களுக்காக இவ்வுலகின் முதல்வனான சிவன் தாயாகிக் கருணையினால் தன் உயிரையும் பொருட்படுத்தாது விடம் அருந்திய திறத்தை, சிற்றுயிர்க்கிரங்கிக் காய்ச்சின ஆலமுண்டாய்(6-50) என்கிறார். சிற்றுயிர்களுக்காக மட்டுமின்றி,மிருமாலையும்,பிரமனையும்,தேவர்களையும் காக்கும் பொருட்டு ஆலமுண்டதை,“ஆலாலம் உண்டலனேல் அன்றயன் மால் உள்ளிட்ட மேலாயத் தேவரெல்லாம் வீடுவர் காண் சாழலோ “ என்கிறார்.

    பிறர் நலனுக்காக  ஆலாலத்தை அமுதாக உண்ட சிவனை ,

    வானோர்க்கு அமுதம்(5-69) 
    ஆலாலம் அமுது(13-12) 
     ஆலாலம் ஆரமுது(12-19)
     நஞ்சமுதாக்குங்கண்டன்(6-82) போன்ற தொடர்களால் குறிப்பிடுகிறார்.

    முடிவுரை

    சிவனின் பெருமை, அருட்தன்மை,தூய தன்மை,எளிமை, இருப்புநிலை முதலியவற்றோடு தன்நிலையையும் விளக்குவதற்கு எளிய மக்களும் புரிந்து கொள்வததற்கேற்ற வகையில் எளிய வகை உணவுப் பொருட்களின் பெயர்களைப் பயன்படுத்துகிறார்.உணர்ந்து உணர்ந்து, நினைந்து நினைந்து படித்து இன்புறத் தக்கவகையில் திருவாசகம் இருப்பதற்குக் காரணம் இதுபோன்ற எளிய உத்திகளே காரணம்.. இக்காரணம் பற்றியே திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படுகிறது. திருவாசகம் உணவுப் பொருட்களை வைத்து தன் கருத்தை எளிய மக்களும் புரிந்து கொள்ள உதவுவது அதன் சிறப்பு. அத்திருவாசகத்தையே வள்ளலார், நற்கருப்பஞ்சாற்றில் ,தேன்கலந்து ,பால்கலந்து,செழுங்கனி தீஞ்சுவை கலந்து செய்யப்பட்ட இனிப்புப் பதார்த்தமாகச்  சித்திரிக்கிறார்.ஆனால், உயிரில் கரைந்துவிடும் இத்தன்மையுடைய இந்த இனிப்பு உவட்டாமல் இனிக்கக்கூடியது என்று மேலும் இதனைச் சிறப்பிக்கிறார்.

    துணை நின்ற நூல்கள்

    1.குமரன்,இரெ., சங்க இலக்கிய அகப்பாடல்களில் கருத்துப் புலப்பாட்டு உத்திகள்,அனன்யா பதிப்பகம்,தஞ்சாவூர்-மு.ப.-2001
    2.வரதராஜன்.ஜி,(உ.ஆ.,),திருமந்திரம் மணிவாசகர் பதிப்பகம்,சென்னை
    3.வெள்ளைவாரணம்.ம.திருவாசகம், காசித்திருமடம்,12ம. பதிப்பு -2003.

    Share