Tag: திருமகள்

  • அருளான இலக்குமியே அடிபணிந்தேன் அம்மா!

    அருளான இலக்குமியே அடிபணிந்தேன் அம்மா!

    மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சங்கநிதி பதுமநிதி தந்திடு தாயே
    சஞ்சலம் அணுகாமல் காத்திடுவாய் நீயே
    பஞ்சமெனும் இருள்சூழா பார்த்திடுவாய் தாயே
    பாதமலர் சரணடைந்தோம் பராபரமே உன்னை

    உணவோடுஉடையுறைள் உவந்தளிப்பாய் தாயே
    உலகோர்கள் இகழாமல் வாழ்வளிப்பாய் தாயே
    அளவோடு செல்வமதை அளித்திடுவாய் தாயே
    ஆசையது பெருகாமல் பார்த்துவிடு அம்மா

    பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லையாம் அம்மா
    பொருளீந்து எந்தனைக் காத்திடுவாய் அம்மா
    பொருளோடு ஈகையையும் மனமமரச் செய்வாய்
    அருளான இலக்குமியே அடிபணிந்தேன் அம்மா

    இருப்பாரும் இல்லாரும் தேடுகிறார் தாயே
    எவரெவர்க்கு எதுவேண்டும் என்பதை நீயறிவாய்
    கொடுக்கின்ற தருணமதில் கொடுத்துமே உயர்வாய்
    கோணாத குணமதனைத் தந்திடுவாய் அம்மா

    பொருளும் அருளும் ஒன்றாய் இணைய
    கருணை புரிவாய் இலக்குமித் தாயே
    தருமம் உலகில் தழைக்க அருள்வாய்
    தனமாய் ஒளிரும் இலக்குமித் தாயே

    Share
  • பாக்யம்தான் லக்ஷ்மி வாருமம்மா!

    பாக்யம்தான் லக்ஷ்மி வாருமம்மா!

    ‘பாக்யாத லக்ஷ்மி பாரம்மா’ என்ற புகழ்பெற்ற கன்னடப் பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு இதோ. சென்னை, தாம்பரம், அரங்கநாதபுரம், அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தின் நவராத்திரி விழாவில் பாடப்பெற்றது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தீப ஜோதியாய் வருவாய்!

    தீப ஜோதியாய் வருவாய்!

    திருமகளைப் போற்றும் ‘தீப ஜோதியாய் வருவாய்’ என்ற இந்தப் பாடலை, தபோவனத்தில் தினசரி அதிகாலை பாடுகிறார்கள். கன்னிப் பெண் ஒருவர் கையில் விளக்கேந்தி நடக்க, ஆசிரமத்தில் உள்ள அனைவரும் அவரைச் சூழ்ந்து பாடியபடி செல்வது வழக்கம். இந்த இனிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரும் அவர் மகள் ஷ்ரேயா கிருஷ்ணகுமாரும் பாடக் கேளுங்கள். இந்த நவராத்திரியில் திருமகளின் அருள், எங்கும் நிறைவதாக!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share