திருமகளைப் போற்றும் ‘தீப ஜோதியாய் வருவாய்’ என்ற இந்தப் பாடலை, தபோவனத்தில் தினசரி அதிகாலை பாடுகிறார்கள். கன்னிப் பெண் ஒருவர் கையில் விளக்கேந்தி நடக்க, ஆசிரமத்தில் உள்ள அனைவரும் அவரைச் சூழ்ந்து பாடியபடி செல்வது வழக்கம். இந்த இனிய பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமாரும் அவர் மகள் ஷ்ரேயா கிருஷ்ணகுமாரும் பாடக் கேளுங்கள். இந்த நவராத்திரியில் திருமகளின் அருள், எங்கும் நிறைவதாக!
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.