Tag: தேனுகாமணி

  • ஹைக்கூ கவிதைகள்

     

    தேனுகாமணி

     

    மினுமினுப்பாய்

    ஊர்ந்து செல்கிறது…

    பயம்

    ……

    செடியைப்பார்க்க

    மனம் வரவில்லை…

    பூக்கள் பறிக்கப்பட்ட பிறகு

    ……

    காற்றில் அசைந்து அசைந்து

    கவிதை எழுதும்…

    செடிகொடிகள்

    ……

    முட்புதரில்

    முதலில் சிக்கியது பட்டம்…

    கண்டபிறகு மனம்

    …..

    மரங்களை வெட்டி

    மனிதன் செய்துகொள்கிறான்…

    சவப்பெட்டி

    …..

    மெளனமொழி

    பேசக்கற்றுத்தரும்…

    கண்கள்

    ……..

    தின்று விட ஆசைதரும்

    அளவிற்கு அழகு….

    அரளி விதை

    ……

    தென்றல் என்ன பாடியிருக்கும்

    தலையாட்டி இரசிக்கிறது…

    தென்னை

    …..

    இடி விழுந்த பனையின்

    முனையில் ஒரு காகம்…

    எதை எண்ணி கரைகிறது

    ……

    துக்க வீடு

    தூங்க மனமில்லை…

    விழித்திருக்கிறது விளக்கு

    ….

    மழைமகள் வருகிறாள்

    பூமித்தாய்க்கு கிடைக்கும்….

    பச்சைப்புடவை

    …..

    வளைந்தது நாணல்

    காற்றடிக்கும் திசையில்…

    வாழக்கற்றுத்தருகிறது

    …..

    மழை இரவு

    நடைப்பாதை வாசிக்கு…

    எப்படி வரும் கனவு

     

    Share
  • தீபவிளக்கு எரிகிறது!

    -தேனுகாமணி

    விடியல் விடிகிறது
    நல்விடியல் விடிகிறது
    அனுதினம் மனம்கொண்ட
    தீமைகள் மடிகிறது
    இயலாமைகள் முடிகிறது!

    அதிகாலை நீராடுவோம்
    மனத்தீமைகளுக்குத் தீயூட்டுவோம்
    எண்ணெயில் இலட்சுமி தேவி  dewali
    அரப்பில் சரஸ்வதி தேவி
    தண்ணீரில் கங்கா தேவி
    குங்குமத்தில் கெளரி தேவி
    சந்தனத்தில் பூமா தேவி
    ஆம் இவர்கள்
    வாசம் புரிகிறார்கள்…
    மனத்தின்
    பொய்வேசம் களைகிறார்கள்!

    தீப ஒளித்திருநாள்
    நரகன் உயிர் மடிந்த நாள்
    ராமன் வனவாசம் முடித்த நாள்
    மகாவீரர் நிர்வாணம் அடைந்த  நாள்
    பொற்கோயில் பணி தொடக்க நாள்
    ஆம் இப்படித்தான்…
    தீப ஒளித்திருநாளை
    பல நாடுகள்
    பல இனங்கள்
    கொண்டாட வேறு வேறு
    காரணங்கள்
    கொண்டாட்டங்களில் தான்
    மனம் அடைகிறது
    உண்மை நெறியின்
    பூரணங்கள்!

    வாருங்கள்…
    புத்தாடை அணிந்து
    புதிதாகப் பிறப்போம்
    இனிப்புகள் பகிர்ந்து
    இனிதாக இருப்போம்
    இயன்றதைச் செய்து
    இவ்வுலகில்
    மானுடம் காப்போம்!

    விடியல் விடிகிறது
    நல்விடியல் விடிகிறது
    தீபவிளக்கு எரிகிறது
    தீமைகள் மடிகிறது!

     

     

    Share