Tag: மகாகவி சுப்பிரமணிய பாரதி

  • அச்சமில்லை! அச்சமில்லை!

    அச்சமில்லை! அச்சமில்லை!

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே – மகாகவி பாரதியுடன் இணைந்து எங்கள் மகன் ஹரி நாராயணனின் வீறுமிகு வீர முழக்கம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பாரதிப் புலவனைப் போற்றுவோம்!

    மேகலா இராமமூர்த்தி

    Subramanya_Bharathi

    அடிமை யிருளது அகன்றிட

    அக்கினிக் குஞ்சென வந்தவன்!

    மடமை எனும்களை அழித்திட

    அறிவுக் கோடரி யானவன்!

     

    சுதந்திர தேவிதன் துயிலெழப்

    பள்ளி யெழுச்சியைப் பாடினான்!

    மதத்தின் பெயரினால் சண்டைகள்

    செய்பவர் தம்மையே சாடினான்!

     

    கண்ணனைக் காதலி ஆக்கியே

    கண்டு மகிழ்ந்திட்ட கோமகன்!

    எண்ணத்தில் உறைந்தவள் சக்தியே

    என்று உரைத்தநல் பாமகன்!

     

    ஆணும் பெண்ணுமே நிகரென

    வீர முழக்கத்தை எழுப்பினான்!

    நாணும் அச்சமும் நாய்கட்கே

    நங்கையர்க் கெதற்கென வினவினான்!

     

    பைந்தமிழ்த் தேர்ப்பாகன் ஆகியே

    பா ரதம் ஓட்டிய பாவலன்!

    நைந்திடும் உள்ளங்கள் ஒளிபெற

    பாரதம் கண்டமா கவியிவன்!

     

    Share