Tag: ரமணியின் கவிதைகள்

  • தெய்வ தரிசனம்: ஆடிக் கிருத்திகை: முருகன் துதி

    ரமணி

    தெய்வ தரிசனம்: ஆடிக் கிருத்திகை: முருகன் துதி

    images

    (எழுசீர்ச் சந்த விருத்தம்:
    தான/தனன தானன/தனன தான/தனன தானன/தனன
    . தான/தனன தானன/தனன தானனா)

    ஆறு படைகளில் ஆல யங்கொளும் ஆறு மாமுக வேலனே
    ஏறு மாமயில் சேரும் மாவிணை ஈச னுமைமகன் பாலனே
    கூறு மாவடி யார்ம னத்தினில் கோலம் கொண்டமர் குமரனே
    சேறு வொன்றையே சீந்து மென்மனம் சேயெ னக்கருள் அமரனே. … 1 (2)

    [மாவிணை = அழகிய இரு மனைவியர்]

    ஓது மாமறை உன்ன தம்வரும் உன்னைப் பாடிடும் போதிலே
    யாதும் நீயெனும் ஞானம் வந்திடும் யானி லங்குள மீதிலே
    சோத னைபல தந்த ருள்குகன் சூர பதுமனின் காலனே
    தீத ழிந்துளம் நன்மை நாடவே சேயெ னக்கருள் பாலனே. … 2 (2)

    ஆழ்ம னத்துயர் நீக்கி ஞானமென் றாழ்ம னத்துயர் வாகவே
    பாழ்ம னத்தினில் பற்று நீங்கிடும் பான்மை யென்நெறி யாகவே
    ஊழ்வி னையடி யோடு நீங்ககண் ணொற்றி னேன்குகன் பாதமே
    வாழ்வி லேயினி வைய மேயிது மாயை யாமெனும் போதமே. … 3 (2)

    –ரமணி, 28-07-2016, கலி.13/04/5117

    *****

    Share