தெய்வ தரிசனம்: ஆடிக் கிருத்திகை: முருகன் துதி

0

ரமணி

தெய்வ தரிசனம்: ஆடிக் கிருத்திகை: முருகன் துதி

images

(எழுசீர்ச் சந்த விருத்தம்:
தான/தனன தானன/தனன தான/தனன தானன/தனன
. தான/தனன தானன/தனன தானனா)

ஆறு படைகளில் ஆல யங்கொளும் ஆறு மாமுக வேலனே
ஏறு மாமயில் சேரும் மாவிணை ஈச னுமைமகன் பாலனே
கூறு மாவடி யார்ம னத்தினில் கோலம் கொண்டமர் குமரனே
சேறு வொன்றையே சீந்து மென்மனம் சேயெ னக்கருள் அமரனே. … 1 (2)

[மாவிணை = அழகிய இரு மனைவியர்]

ஓது மாமறை உன்ன தம்வரும் உன்னைப் பாடிடும் போதிலே
யாதும் நீயெனும் ஞானம் வந்திடும் யானி லங்குள மீதிலே
சோத னைபல தந்த ருள்குகன் சூர பதுமனின் காலனே
தீத ழிந்துளம் நன்மை நாடவே சேயெ னக்கருள் பாலனே. … 2 (2)

ஆழ்ம னத்துயர் நீக்கி ஞானமென் றாழ்ம னத்துயர் வாகவே
பாழ்ம னத்தினில் பற்று நீங்கிடும் பான்மை யென்நெறி யாகவே
ஊழ்வி னையடி யோடு நீங்ககண் ணொற்றி னேன்குகன் பாதமே
வாழ்வி லேயினி வைய மேயிது மாயை யாமெனும் போதமே. … 3 (2)

–ரமணி, 28-07-2016, கலி.13/04/5117

*****

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.