ரமணி

திரு. ஜி.குருநாதன், ‘ரமணி’ என்னும் புனைப்பெயரில் 1986 வருடம் கதைகள் எழுதத் தொடங்கியவர். அப்போது எழுதிய ஐந்து சிறுகதைகளில் மூன்று, ‘சிறுகதைக் களஞ்சியம்’, ‘இதயம் பேசுகிறது’, ‘அமுதசுரபி’ இதழ்களில் வெளிவந்தன. ‘அமுதசுரபி’யில் வந்த கதை, அவர்கள் 1990 வருடம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல்பரிசைப் பகிர்ந்துகொண்டது. அதன்பின், கணினித் துறையில் ஈடுபாடு காரணமாக, இத்தனை வருடங்கள் கதை எழுதுவதை விட்டுவிட்டவர், இப்போது பணிஒய்வு பெற்ற நிலையில் மீண்டும் எழுதத் தொடங்கியுள்ளார். இப்போது எழுதிய சிறுகதைகளில் மூன்று ‘இலக்கிய வேல்’ மாத இதழில் வெளிவந்துள்ளன. கதை எழுதுவதுடன், ‘சந்தவசந்தம்’ கூகிள் மரபுக்கவிதை குழுமத்தில் சேர்ந்ததனால் மரபுக்கவிதைகள் புனைவதிலும் தேர்ச்சிபெற்று, ஆன்மீகம், உலகியல் போன்ற துறைகளில் மரபுக்கவிதைகள் எழுதி அவற்றைச் ‘சந்தவசந்தம், முகநூல்’ மற்றும் பிற இணையக் குழுமங்களில் பதிந்து வருகிறார்.