பதவி மோகம்
முனைவர் கு. வளர்மதி,
உதவிப்பேராசிரியர்,
இளங்கலைத் தமிழ்த்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
சிவகாசி.
“மனிதனை ஆட்டிப் படைக்கும்
அமைதியான ஆயுதம் ‘பதவி’
நிரந்தரமில்லா மனித வாழ்வில்
நாற்காலி மட்டும் நிரந்தரமா?
பதவிமோகத்தில் பேசும் மனிதன்,
பகைக்கு மட்டுமே சொந்தக்காரன்!
எத்தனையோ தலைவர்கள் உலகிலே;
வந்தார்கள், சென்றார்கள், பெயர்பெற்றார்கள்!
ஆணவத்தில் அதிகாரத்தில் தத்தளித்த
மனிதர்கள் போனார்கள், பெயர்தொியாமல்…!
சகமனிதனை மனிதனாகப் பார்!
பதவிவெறியில் மாக்களாக நடத்தாதே;
காலமாற்றத்தில் எதுவும் நிரந்தரமில்லை!”
