தெய்வ தரிசனம்: 08. கோவிந்தன் கோலம்

0

ரமணி

08. கோவிந்தன் கோலம்

Tamil-Daily-News-Paper_82039606572

(குறும்பா)

கோவிந்தன் நாமத்தைப் பாடுவமே
பாவுந்தும் பொருள்தன்னில் ஆடுவமே
. கோவிந்தன் ஆவிடையன்
. நாவுந்தக் காவிடையன்
நாவிந்தப் பேராழத் தேடுவமே. … 1

[காவிடையன் = காக்கும் இடையன்]

கண்ணனாக வந்துதித்த போதினிலே
கண்ணாயிரன் கருவத்தின் கோதறவே
. இந்திரனின் பூசையிலை
. இந்தமலை பூசையிலே
கண்ணனாணை கோபர்கள் காதினிலே. … 2

[கண்ணாயிரன் = ஆயிரம் கண்ணுடைய இந்திரன்; கோது = குற்றம்]

மழைவேந்தன் வெள்ளத்தால் தாக்கிடவே
குழல்வேந்தன் கோவர்த்தன் தூக்கிடவே
. கோவிந்திரன் நேர்வந்தான்
. கோவிந்தன் பேர்தந்தான்
விழைவேந்த கோவிந்தன் போக்கிடமே. … 3

கோவென்றே பூமியின்பேர் உற்றிடுமாம்
கோவிந்தன் பூமிதேடிப் பெற்றவவனாம்
. பன்றியாக ஆழ்கடலில்
. சென்றுபூமி மீட்டிடலில்
கோவிந்தன் பேர்வந்த கொற்றவனாம். … 4

கோவென்றால் புலனென்றும் பொருளுண்டே
கோவைந்தால் உள்ளத்தில் மருளுண்டே
. கோவைந்தும் கட்டுணவே
. கோவிந்தன் உட்டுணையே
நாவுந்தும் நாமத்தில் அருளுண்டே. … 5

[உட்டுணை = உள்துணை]

மலையேறும் போதினிலே கோவிந்தா
நிலையாகும் காதினிலே கோவிந்தா
. சங்கீர்த்தனம் கோவிந்தா
. சங்கரர்பா கோவிந்தா
தொலையாத பாவம்கொள் கோவிந்தா! … 6

[சங்கரர்பா கோவிந்தா = ஆதிசங்கரரின் ’பஜகோவிந்தம்’]

–ரமணி, 26/11/2015, கலி.10/08/5116

உதவி:
கோவிந்தன் என்ற சொற்பொருள்
https://ta.wikipedia.org/wiki/கோவிந்தன்_என்ற_சொற்பொருள்

purAnic encyclopedia: vETTam maNi

*****

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *