எழுவதே இயல்பு
திரிவேணி சுப்ரமணியம்
கோயம்புத்தூர்
எல்லாம் முடிந்ததாய்
ஆங்காரமாய் எழும்
மனதின் பேரிரைச்சல்
தாளாமல் கண்களை மூடுகிறேன்.
நெருப்புக் குழம்பில் வீழும்
நீர்த் துளிகளாய்
மனதில் வழிகிறது கண்ணீர்.
அழுகையின் முடிவில்
சுயம் எழுந்து
முழங்குகிறது கம்பீரமாய்.
வாழ்வதை விட வலுவாய்
எழுவது இயல்பாகிறது!!
