Tag: விநாயகர்

  • ஆன்மாவான கணபதியின் | மகாகவி பாரதி

    ஆன்மாவான கணபதியின் | மகாகவி பாரதி

    மகாகவி சுப்ரமணிய பாரதியார் இயற்றிய ‘ஆன்மாவான கணபதியின்’ என்ற பாடலை நாகி நாராயணன் குரலில் கேளுங்கள். இந்தப் பாடல், விநாயகர் நான்மணி மாலையில் இடம் பெற்றுள்ளது. ‘யான் முன்னுரைத்தேன் கோடிமுறை. இன்னுங்கோடி முறைசொல்வேன்’ என அவர் அழுத்தமாகச் சொல்வது எதை என்று கேளுங்கள். பாரதி பிறந்த நாளில் அவரைப் போற்றுவோம். அவரது வாக்கினை நெஞ்சினில் ஏந்துவோம்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஓம் எனும் பிரணவ ரூப நாயகா!

    ஓம் எனும் பிரணவ ரூப நாயகா!

    உளுந்தூர்பேட்டை சண்முகம் இயற்றிய ‘ஓம் எனும் பிரணவ ரூப நாயகா’ என்ற பாடலைத் திருமதி விஜயலட்சுமியின் குரலில் கேளுங்கள். 72 வயதிலும் இனிமையாகப் பாட முடியும்; திறமைக்கு முதுமை ஒரு தடையில்லை என இவர் நிரூபிக்கிறார். கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சக்தி கானம் 1 – எடுத்த காரியமும் ஜெயமாக

    சக்தி கானம் 1 – எடுத்த காரியமும் ஜெயமாக

    ஆர்.எம்.கிரியேஷன்ஸ் நிறுவனம், சக்தி கானம் என்ற தலைப்பில் ஒலிப்பேழை ஒன்றை வெளியிட்டது. அதில் இடம்பெற்ற ஏழு பாடல்களையும் நம் யூடியூப் அலைவரிசையில் வெளியிட, தயாரிப்பாளர் ரமேஷ் வெங்கட்ரமணன் அனுமதி அளித்துள்ளார். அவருக்கும் இந்த முயற்சியை ஒருங்கிணைத்த நண்பர் வாரணா அவர்களுக்கும் நன்றி.

    ஆடி மாதம், அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில், சக்தி கானத்தை வெளியிடுவதில் மகிழ்கிறோம். இதோ, முதல் பாடல். வெற்றி கணபதியை வணங்கித் தொடங்குகிறோம்.

    பாடல் – எடுத்த காரியமும் ஜெயமாக
    பாடலாசிரியர் – வாரணா
    இசையமைப்பாளர் – கிறிஸ் மார்ட்டின் போனாமி
    பாடகர் – கிறிஸ் மார்ட்டின் போனாமி
    தயாரிப்பாளர் – ரமேஷ் வெங்கட்ரமணன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அரசமரக் கன்றும் நவதானிய விநாயகரும்

    அரசமரக் கன்றும் நவதானிய விநாயகரும்

    பறவை எச்சத்தில் முளைத்த அரசமரக் கன்றை எடுத்துவந்து, அதனடியில் நவதானிய விநாயகரைப் பிரதிஷ்டை செய்து பூஜை செய்கிறார், நாமக்கல் பாலமூர்த்தி. விநாயகருக்கு இருபுறமும் நாகர் சிலைகளுக்குப் பதிலாக, மரூள் தாவரத்தை நட்டுள்ளார். ஊரடங்கின் காரணமாக, கோவிலுக்குச் செல்ல முடியாத நிலையில், வீட்டுத் தோட்டத்திலேயே இயற்கையாக ஒரு கோவிலை எழுப்பியுள்ளார். இந்தப் புதிய முயற்சியைப் பாருங்கள், பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share