மகாகவி சுப்ரமணிய பாரதியார் இயற்றிய ‘ஆன்மாவான கணபதியின்’ என்ற பாடலை நாகி நாராயணன் குரலில் கேளுங்கள். இந்தப் பாடல், விநாயகர் நான்மணி மாலையில் இடம் பெற்றுள்ளது. ‘யான் முன்னுரைத்தேன் கோடிமுறை. இன்னுங்கோடி முறைசொல்வேன்’ என அவர் அழுத்தமாகச் சொல்வது எதை என்று கேளுங்கள். பாரதி பிறந்த நாளில் அவரைப் போற்றுவோம். அவரது வாக்கினை நெஞ்சினில் ஏந்துவோம்.
கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.