Tag: ஸ்வேதா

  • திருப்பாவை – 30 பாசுரங்கள்

    திருப்பாவை – 30 பாசுரங்கள்

    தனித்துவம் மிக்க தமிழ்க்கவி, அமுதெனத் தமிழ்செய்த அருட்கவி, எண்ணமும் வண்ணமும் புதுக்கிய ஏரார்ந்த செல்வி, தமிழ்நிலத்தின் தவப்பயன், ஆயிரம் ஆண்டுகளின் பெருமிதம், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவை இதோ. 30 பாசுரங்களும் ஒரே பதிவாக. செல்வி ஸ்வேதா பாடுகிறார். பார்த்து மகிழுங்கள். நண்பர்களுக்கும் பகிருங்கள். கோதையின் தமிழைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • திருப்பாவை – 1 | மார்கழித் திங்கள்

    திருப்பாவை – 1 | மார்கழித் திங்கள்

    திருப்பாவை – 1 | மார்கழித் திங்கள் | லட்சுமிப்பிரியா குரலில்

    ஆண்டாள் நாச்சியார் பாடிய உயர் செவ்விலக்கியமான திருப்பாவையைப் பாடி மகிழ்வோம், வாருங்கள். மார்கழித் திங்கள் எனத் தொடங்கும் முதல் பாடலை நமக்காகப் பாடியிருப்பவர், செல்வி லட்சுமிப்பிரியா.

    திருப்பாவை – 1 | மார்கழித் திங்கள் | ஸ்வேதா குரலில்

    ஆண்டாள் அருளிய திருப்பாவையைப் பாடப் பாட, அதில் தோயத் தோய, நாவினிக்கும், மனமினிக்கும், பாடும், கேட்கும், நினைக்கும் பொழுதெல்லாம் இனிக்கும். இந்த அற்புதப் பாடலைச் செல்வி ஸ்வேதாவின் குரலில் கேளுங்கள்.

    ஓவியத்திற்கு நன்றி: விஷ்ணு

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share