Author: கிரேசி மோகன்

  • ’’வடபத்ர ஸாயி’’….!

     

    வடபத்ர ஸாயி வடவேங் கடத்தில்
    இடமுற்ற ஏழுகொண்டல் வாடு -படமுற்ற
    பாம்பில் படுத்த பெருமாளே, கண்ணிநுண்
    தாம்புக்(கு)உட் பட்டதாமோ தர்…..கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180620 New Forever-lr 10×14”

    ஒருவர் படுக்க இருவர் அமர
    வருகை புரிந்தவரால் நிற்க -ஒருயிரவில்
    பொய்கைபேய் பூதத்தார் பின்னிப் பிணைந்திட
    செய்த மழையோன் சரண்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180617 Krishna Philharmonic- 10×14” wm

    ”மல்லாண்டு கண்டது மாவீரன் பட்டம்தான்,
    புள்ளாண்டான் ஹார்மனியை(சுமுகத்தை) பூமிக்கு -சொல்லாண்ட
    கீதை இசைக்கின்றார், கூடாரைக் கொள்ளுமிவர்
    பாதைக் குமார்க்க பந்து”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக
    கூப்பிடாத காலன் கரம்குலுக்க -ஆப்பழியும்(உடல் அழியும்)
    அந்திம நாளேனும் அய்யோ மனமேநீ(கொரில்லா ஸிம்பாலிக் -கேசவ் கரெக்டா….!)
    நந்த குமாரனை நம்பு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180616 -Balanarasimha and Prahlada lr

    வாமனனாய் வந்தார், வடிவில் சிறுத்(து)அரி,
    பூமன(பிரகலாத ஸ்வாமி) பக்திக்(குட்)உட் பட்டதால்: -கோமண
    சோணை ரமணமுனி சொன்னது பக்திமனத்
    தூணில் ஒளியும் துரும்பு(அங்குஷ்டாப்யாம்)….!

    ஏந்தி இலக்குமியை யோக நரசிம்மமாய்
    சாந்தி தவழ்கின்ற சிங்கத்தை -மாந்தி
    திளைப்போர் வினைத்தூண் இளைத்து துரும்பாய்
    களைத்தல் கதையின் கருத்து….!

    கொச்சு பிரகலாதன் கொஞ்சு மழலையில்
    உச்சரிக்க நாமம் உரத்(து)அப்போ -உச்சி
    குளிர்ந்தவன் மேனியைக் கட்டிடும், சிங்கம்
    மெலிந்துகர் ஜிக்க மியாவ்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

     

    180614 – Yogacharya Krishnamacharya – bw A4 – graphite

    ”பதஞ்சலி பின்வந்த பிதாமகரே, ஆன்ம
    பதஅஞ்சலி ஏற்றிடுவீர், பாதம் -பதிந்தோம்உம்
    ஆஸிபல கூறிடும் ,ஆச்சார்ய க்ருஷ்ணமாச்சார்
    தேசிகரே யோகத் தெளிவு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180611 New Forever – 26×36 cms (10×14”) Arches -cold pressed – lr

    ஆண்டவா, பழுப்புவண்ணம் பூண்டவா, நீள்விசும்பில்
    நீண்டவா, பாரதப் பாண்டவராய் -வேண்டவா?,
    தூண்டவா பக்தியால் ?, தீண்டவா பாரதியாய் ?
    கீண்டவா தீங்கைக் கிழித்து….கிரேசி மோகன்….!

    நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற
    போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில்
    இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த
    இடப்பயல் தாளே இருப்பு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180525 Gopala nandan -gov pattabhishekam A4 lr

    கிள்ளை(கிளி) மணிமுடிமேல், பிள்ளை மணிவண்ணன்,
    வெள்ளைப் பசுவேந்தும் வாத்ஸல்யம், -கொள்ளை
    அழகுதான் கேசவ், குழந்தையும், கன்றும்
    பழகச் சுரந்திடும் பால்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180613 DWA icam l

    பாதத்தில் மாருதி, பதுமநாபர் பார்த்தனுக்கு
    கீதை மொழிந்தபின் காட்டுகிறார் -பாதாதி
    கேசத்தை விஸ்வரூபக் காட்சி கமல்சார்டூ(பார்ட்-2)
    கேசவ்தன் சித்திரத்தில் காண்’’…..கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    திரிலோக சஞ்சாரி நாரதன் உ(க)லகம் கண்ணனை கண்டதும் நன்மையில் முடிந்தது…..!

    ”நாத தனிமனுஷன் நாரதன் தம்புரா
    ஓதுமே நாரண ஓங்காரம்(ஓம்நமோநாராயணா) -யாதவரைக்
    கண்டதில் நாரதன் , கார்வண்ணன் நன்மையாய்க்
    கொண்டலாய்ப் பாடினான் கண்டு’’….கிரேசி மோகன்….!
    (அல்லது)
    விண்டனன் ஓங்கார விஷ்ணு…..!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180611 New Forever – 26×36 cms (10×14”) Arches -cold pressed – lr

    ஆண்டவா, பழுப்புவண்ணம் பூண்டவா, நீள்விசும்பில்
    நீண்டவா, பாரதப் பாண்டவராய் -வேண்டவா?,
    தூண்டவா பக்தியால் ?, தீண்டவா பாரதியாய் ?
    கீண்டவா தீங்கைக் கிழித்து….கிரேசி மோகன்….!

    Share
  • என்றும் இளமையோடு!

    ’’இடுக்கண் வருங்கால் இளிக்காய், துவர்க்கும்
    கடுக்காயை உண்ண இடர்போம் -படுக்கையில்
    இஞ்சி அளவு இரப்பையில் சேர்கடுக்காய்
    கஞ்சியின் கல்லும் கனி’’….கிரேசி மோகன்…..!

     

     

    என்றும் இளமையோடு வாழ#திருமூலர் கூறும் எளிய வழி!

     

    நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில்,

    #உஷ்ணம், #காற்று, #நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

    உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

    நமது தேகத்தை நீட்டித்து,ஆயுளை விருத்தி செய்ய

    திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

    ஒருவனுடைய உடல், மனம்,ஆன்மா ஆகிய மூன்றையும்

    தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

    கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

    தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய

    அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

    “பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது

    என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

    கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம்

    வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

    கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

    நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

    எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

    நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

    துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

    ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து

    பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

    பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

    அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால்,

    நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான

    அளவில் பெற்று வரலாம்.

    கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

    கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு,

    நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின்

    சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

    கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

    #கண் பார்வைக் கோளாறுகள்,

    #காதுகேளாமை,

    #சுவையின்மை,

    #பித்த நோய்கள்,

    #வாய்ப்புண்,

    #நாக்குப்புண்,

    #மூக்குப்புண்,

    #தொண்டைப்புண்,

    #இரைப்பைப்புண்,

    #குடற்புண்,

    #ஆசனப்புண்,

    #அக்கி, #தேமல், #படை,

    #தோல் நோய்கள்,

    உடல் உஷ்ணம்,

    வெள்ளைப்படுதல்,

    மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,

    #மூத்திரஎரிச்சல், #கல்லடைப்பு,

    #சதையடைப்பு, #நீரடைப்பு,

    #பாதஎரிச்சல், #மூலஎரிச்சல்,

    #உள்மூலம், #சீழ்மூலம், #ரத்தமூலம், #ரத்தபேதி,

    #பௌத்திரக்கட்டி,

    சர்க்கரைநோய், இதயநோய்,

    மூட்டு வலி, உடல் பலவீனம்,

    உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,

    ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற

    அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

    இதை பற்றி சித்தர் கூறும் பாடல்…

    “காலை இஞ்சி

    கடும்பகல் சுக்கு

    மாலை கடுக்காய்

    மண்டலம் உண்டால்

    விருத்தனும் பாலனாமே.-“

    காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

    நண்பகலில் சுக்கு-

    இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம்

    (48 நாட்கள்) சாப்பிட்டுவர,கிழவனும் குமரனாகலாம்

    என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

    எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு

    வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

    கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    KRISHNA FOR TODAY….
    ———————————————

    கண்ணன் உள்ளம் கவர் கள்வன் Thief Of HEARTS ….

    180609 Makhan chor A4 watercolour sketch 180403/coloured on 180609 wm

    “மத்யானம் ஆய்ச்சியர் மல்லாந்த வேளையில்
    தத்யோனம் வெண்ணை திருடுமிவன் -உத்தியோகம்,
    இன்னாரென்(று) இல்லாது இல்லம் புகுந்தெடுப்பான்;
    மன்னார்AND COCHOR மனது”….
    மன்னாரண்ட் கோசோர் மனது”….

    ”மாடுமேல ஏறிநின்று கோடிவீட்டு கோபாலர்
    பாடுபட்ட கொள்ளையில் பங்குபெற -கோடுவம்ஸ(கோடு -சந்திரன் -சந்திரவம்ஸ)
    மன்னனர் மணிவண்ணர் மாட்டிடம் ’’ஆகாட்டு’’
    வெண்ணையந்த வள்ளலின் வாய்க்கு’’….

    கிரேசி கிரியேஷன்ஸ் ”சாக்லேட் கிருஷ்ணா” 777வது ஷோ போட்ட போது எழுதியது….!(1000த்துக்கு இன்னும் கிட்டத்தட்ட 25 ஷோக்களே பாக்கி)….!
    ————————————————————————————————————————————————————

    “எம்பியுறி வெண்ணை எடுப்பார்கைப் பிள்ளையவன் –
    தம்பி பலராம தேவர்க்கு -நம்பீசன் –
    எட்டான் புலனுக்கு ,எட்டுவான் பக்த்திக்கு –
    எட்டினான் ஏழேழு ஏழு (777 )….கிரேசி மோகன் ….நன்றி கிரேசி கிரியேஷன்ஸ் AND கேசவ் ….!

    Share