Author: கிரேசி மோகன்

  • பெண்மை போற்றிடு….!

    கிரேசி மோகன்

    வேலை இருக்குது நிரம்ப -என்னை
    வேகப் படுத்திடு தாயே    –
    பாலைச் சுரந்திடு தளும்ப – உந்தன்
    பாதம் பணிந்திடும் சேய்நான்
    ஆலை கரும்பெனெப் பிழிந்து – எந்தன்
    ஆவி பிரிந்திடும் முன்னே
    சோலை நகைச்சுவைக் காற்றை – இவன்
    நாளும் நுகர்ந்திட அருள்வாய்…!

    கண்ணை இமைகாக்கும், தென்னை குலம்காக்கும்
    அன்னை நமைகாக்கும் அற்புதம் -விண்ணை
    இறங்கவைத்து மண்ணில் இருத்திய தாயின்
    பிறந்தநாள் இன்றவளைப் போற்று….!

    உன்னையே நம்பி உனதா யுதமாக
    அன்னையே வாழ அருள்புரி -முன்னை
    இருந்த நிலையில் பொருந்தி இருக்க
    திரும்ப மனதைத் திருத்து….!

    பொய்தந்த போதுமதை, மெய்த்தவமாய் மாற்றியிரு,
    கைதந்து காத்துக் கரைசேர்க்கும், -சைதன்ய
    சக்தியே, அன்னையே, சச்சிதா னந்தத்தின்,
    சித்திநாளில், நீக்கென் சழுக்கு (குற்றம்)………!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    இலைஇலை(இல்லை)நீர் ஏற்பேன், தலைவணங்கி பார்த்தா
    நிலையாமை சொல்லி நிமிர* -கலையாகும்,
    கீதை கொடுத்திடுவேன் குந்திமக னேகேளாய்
    பாதை வகுத்தோன் பகிர்வு…கிரேசி மோகன்….!

    * -எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர் -ராமர்….!
    -கொடுத்தது கண்டனர், கீதையைக் கேட்டனர் -கண்ணன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181204-DWA The 100 enemies within A4 Canson 200gsm -600dpi wcol wm

    நம்முள் கிடக்குது நூறு பகைவர்கள்
    கம்னு கிடக்கலாமோ காண்டீபா! -ஜம்னுநீ
    தேரையும் போரையும் தேர்ந்தெடுத்த என்னைக்கேள்
    நூறை ஒடுக்க நிமிர்”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் -கிரேசி எண்ணம்

    181129 Dialogue with Arjuna – Gitamrita 160gsm A4-wcol (milker, churner, feeder)

    ”ஊட்டுகிறார் கீதையை உண்ணென பார்த்தனுக்கு
    மாட்டுக்கார் கண்ணன், மதனியின்(பெரியபிராட்டி) -வூட்டுக்கார்(விஷ்ணு):
    கீதா அமுதத்தை, கேசவ் கொடுத்தது,
    சேதாரம் இன்றி சுவை’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    140221 Dialogue with Arjuna -wcol 24×32 -with Choodamani – icam

    இல்லாத ஒன்றை இருப்பதாய்க் காட்டிடும்
    பொல்லாத நெஞ்சமொரு போக்கிரி -வில்லாளி
    போகாதே அஞ்சிப் பரிமுகம் பார்த்தனே
    யோகமாம் கீதை எடு….கிரேசி மோகன்….!

    Share
  • அன்புள்ள அப்பா

     

    அன்புள்ள அப்பா அமுதசுரபி கட்டுரை தங்கள் மேலான பார்வைக்கு…..!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    011201_Nimiththa matram-DWA -24×32 canson 200gsm Indian ink, watercolour, (Arjuna, O great archer, you are but an instrument) icam

     

    ”பிள்ளைப் பிராயத்தை, துள்ளும் இளமையை,
    கொள்ளிக்குக் காத்திருக்கும் கோலத்தை, -உள்ளிருக்கும்
    ஆன்மா அசையாது காண்பதுபோல் காணும்காண்
    மேன்மேலும் மாற்றிடும் மெய்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181130 Yogakshema. Dialogue with Arjuna A4 Canson 200gsm 600dpi wcolour

    பாலுக்கும் காவல்க பாலத்திற்க் கும்மோட்ஷம்
    மாலவர் ஆலவாய் மாப்பிள்ளை(மதுரை சொக்கேஸர்) -போலக்க
    பாலத்தை ஏந்துகிறார், படைத்தகேசவ் சொல்வது,
    பாலமிது கண்ணபா லம்(ராமர் பாலம் போல்)….!

    ”இல்லாமல் நாமிருவர் என்றும் இருந்ததில்லை
    இல்லா திருப்பதே இங்குண்மை ! -வல்லானென்
    வேத மிதையுணர்ந்தால் வேதனைகள் இல்லைகாண்
    பாதமதைப் போரில் பதி”….!

    சாந்த வதனமும் சரப சயனமும்
    நீந்தும் சரோருக நாபியும் -ஏந்தும்
    கரங்கள் நான்கும் கருத்த வடிவும்
    வரங்க(ள்) அளித்திடும் வஸ்து….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181129 -DWA 7 14 (Mameva yae Prapadyanthe mayametam taranti thaey )A4 160gsm -72dpi Lores wcol -wm

    கிருஷ்கெயில் உவாச…..!
    ————————————————–

    ‘’BATடை ஆட்டினர் BALLபார்த்தன் BOUNDRYக்கு
    சாட்டையால் ஆடிட சிக்ஸராம் -நாட்டினை
    ஆளவந்தோய் அர்ஜுனா அய்யன்சொல் கேட்டுBOWL
    BALLஎறிய கப்(CUP)புனக்கு பார்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181128_DWA wcol Canson A4 200gsm 600dpi Chanchalam hi manah Krishna Gita 6|34

    காற்றினும் கஷ்டம் கவரிமனம் மானிடா!
    ஊற்றெடுத்து ஓடும் உபத்திரவம்! -சாற்றிடு
    கண்ணாநீர் கீதையைக் காதினில்: நான்செய்த
    பண்ணாத பாவமும் போச்சு….!

    மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக
    கூப்பிடாத காலன் கரம்குலுக்க -ஆப்பழியும்(உடல் அழியும்)
    அந்திம நாளேனும் அய்யோ மனமேநீ
    நந்த குமாரனை நம்பு….கிரேசி மோகன்….

    Share
  • ஹஸ்தாமலக கீதம்….!

     

    ——————————————————————————–
    நொச்சூர் ஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகளின் ஆங்கில உரையைப்
    படித்த பாதிப்பில், தமிழில் வெண்பாக்களாகச் செய்துள்ளேன்….
    ….மொழிபெயர்ப்பில் மூலமும் என்மூலம் வந்த கற்பனையும்
    இணைந்துள்ளது(ஸ்ரீ பகவான் ரமண உபயம்)….!
    ————————————————————————————-
    (காப்பு)
    ———
    ‘’அருணா சலர்க்குப்பின், ஆதிசங் கரர்பின்
    கருணா கரர்காம கோடி -உருவாய்
    அரனா கவந்து அரணாக நின்றோய்
    வரனாய்யென் வெண்பாவில் வா’’….கிரேசி மோகன்….!
    —————————————————————————————–
    ‘’ஆத்திலொரு கால்வைத்து ஆன்மப்போ ராட்டமாய்
    சேத்திலொரு கால்வைத்த ஜீவனவன் -காத்திருக்கான்
    காணா(து) ஒளிந்திடும், காணும் அனைத்திலும்
    நானார் உணர்வை நினைத்து’’….கிரேசி மோகன்….!
    —————————————————————————————
    முன்கதை சுருக்கம்
    ————————–

    “பித்தான, பேசாத பிள்ளைமுன் அத்வைத
    சொத்தான சங்கரர்வி சாரிக்க , -அத்தா
    மலகனவன் வாக்கில் மலர்ந்தது கீதம்;
    உலககுரு கொண்டார் உவப்பு”…..கிரேசி மோகன்….!

    ஆதிசங்கரர் கேள்வி….
    ————————–

    “யார்நீ!, உனக்கிங்(கு) எவர்சொந்தம்!, போவதெங்கே!
    பேரென்ன பிள்ளாய் பதிலெனக்கு, -கூறென்று
    வித்தை வினவ , விருட்ஷமாய் எழுந்தது
    அத்தா மலக அமுது”…..(1)….!

    அத்தாமலகர் பதில்…..
    —————————-
    “பால்வடியும் பிள்ளை பதிலாதி புங்கவர்க்கு,
    “நால்வர்ணம், யக்ஷசுர மேல்வர்ணம், -போல்எவரும்
    நானல்ல, இல்லறமோ நைஷ்டிகமோ ஞானியோ
    நானல்ல, நானுணர்வே நான்”….(2)….!

    “காரியமாய் பூமியைக் காத்திடும் காரண
    சூரியன்போல், ஐம்பொறிக்கு சுத்தாத்ம-வீரியமே,
    அன்னவரே நானதற்கு ஆகாயம் தானுவமை,
    எண்ணவரு வோர்க்கு இருப்பு (OR ) எழுத்து”….!
    (OR)
    எண்ணவரு வோர்க்கது ஏய்ப்பு”….!
    எண்ணவரும் ஏகாந்த மே”….(3)….!

    “கனலும் கொதிப்புமாய் கட்டிக் கலந்தாற்போல்,
    உணர்வுடன் ஆத்துமா ஒன்றி;-புணர்ந்திடும்,
    சேதஅ சேதனங்கள் சார்ந்திருக்கும் அவ்வான்ம
    நாதனே, என்றுமுள நான்”….(4)….!

    “ஆடியில் பிம்பமது ஆளுள்ள மட்டுமே
    ஜோடியாய் சேர்ந்தாலும் ஜீவனவன், -நாடிக்
    கிடப்ப(து) உணர்வின் கிளரொளியை நம்பி,
    தொடர்ந்தொளிர்அவ் வான்மாநான் தான்”….(5)….!

    “முன்னாடி பார்த்த முகம்மட் டுமிருக்கும் –
    கண்ணாடி பிம்பங்கள் காட்சிப்பொய் -உன்னாடை –
    மேனி ,தனித்தன்மை ,மாயை அதுபோல –
    ஞானி உணர்வான்மன் ஞான் “….(6)….!

    “எண்ணும் மனதை இயக்கும் மனம்யார் ! –
    கண்ணுக்குப் பின்னிருந்து காண்கின்ற -கண்ணன்யார் !-
    கண்மனம் காணாத கம்பீ ரவுணர்வாம்,
    நன்மையா னந்தமே நான்’’ ….(7)….!

    “கணக்கற்ற பிம்பம் குடநீரில், ஆனால்,
    உனக்குற்ற சூரியனோ ஒன்று; -மனக்குற்றம்,
    ஒன்றைப் பலவாய் உடைத்தல், உணர்விலே,
    நின்றென்றும் நீங்காதோன் நான்”….(8)….!

    ’’அருக்கன் இருக்க அனைத்தும் தெரியும்,
    கருக்கல் வருங்கால் காணா(து) -இருக்கும்காண்,
    சூரியர்க்கும், கண்ணுக்கும் ஜோதி கொடுக்கும்நான்,
    பேரியக்க ஆன்மவொளி பார்’’….(9)….!

    ’’காட்சியொரே காலத்தில் காண்போர் அனைவர்க்கும்,
    தீட்ஷண்ய மாக்கும் திவாகரனின் -மாட்சிமைபோல்,
    பட்டுப் பலர்புத்தி பேரொளி வீசிடும்
    நிட்டைப் பரபிருமம் நான்’’….(10)….!

    ”ஏகபிம்ப பானு எழுச்சியிலாத் தண்ணீரில்,
    ஏகமாய் பிம்பங்கள் ஏற்றிடும் -வேகநீர்,
    ஆசையின் வேகத்தில் அவ்வான்மா ஜீவன்கள்,
    வாசனை நீங்கவொளி வீச்சு’’….(11)….!

    ”மார்த்தாண்டன் சூரியனை மேக அறியாமை
    போர்த்தாண்டு கொள்ளும் படுபாவி, -தீர்த்தாண்ட
    வர்க்கு ஒளியாய் வெளிவரும் ஆன்மனாய்
    நிற்கும் நிரந்தரம் நான்’’….(12)….!

    ’’யாதுமாய் நின்றாலும், ஏதும் அதைத்தொடாது,
    ஆதவனே ஒட்டாத ஆகாசமாய், -ஈதுணர்ந்து,
    எப்போதும் ஆன்மனாய் எங்கும் நிலைத்தபடி
    நிற்போனே நிர்மல நான்’’….(13)….!

    “செய்யும் முறையதால் ஸ்படிக நிறம்மாறும்,
    அய்யவுன் புத்தியும் அஃதேபோல், -பெய்யும்,
    மதிபிம்பம் ஆடும் நதிநீரில், ஆன்மப்
    ப்ரதிம்பம் உன்னாட்டம் போல்”….(14)….கிரேசி மோகன்….!
    (சுபம்)
    (முடிவு)
    (மங்களம்)
    ——————————————————————————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181127 DWA -Canson 200gsm -600dpi scan wm-72dpi

     

    ”தீண்டும் மனக்குரங்கின் தூண்டுதலால் வந்துபோகும்
    யாண்டும் குளிர்,வெப்பம் இன்ப,துன்பம் ! -பாண்டு
    மகனே பொறுப்பாய், மனதால் பொருப்பாய்
    புகழாம் போரில் புகு”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181126 -DWA -between the armiesm-24×32 wcol canson 200gsm -icam wm

    இருபுறம் சேனை கருநிறக் கண்ணன்
    அருச்சுனன் தேரை அசைத்து -பொறுமையாய்
    கீதை பகர்கின்றார் காண்டீப சாரதி
    பாதை பகவானின் போக்கு…..கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181124 Dialogue with Arjuna Icam Canson 200gsm A4 (Lord is present in every heart. The mind pays obeisance to him in the form of the cow) wm

    ‘கன்றது கைநெல்லி,நின்றனுமன் கும்பிட,
    வென்றிட வேறென்ன வேண்டுமோ! -இன்றுனது
    உள்ளத்தின் சோர்வதனை கிள்ளியெறி, கீதைகேள்
    உள்ளங்கை நெல்லி உனக்கு’’….கிரேசி மோகன்….!

    Share