கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

காற்றினும் கஷ்டம் கவரிமனம் மானிடா!
ஊற்றெடுத்து ஓடும் உபத்திரவம்! -சாற்றிடு
கண்ணாநீர் கீதையைக் காதினில்: நான்செய்த
பண்ணாத பாவமும் போச்சு….!
மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக
கூப்பிடாத காலன் கரம்குலுக்க -ஆப்பழியும்(உடல் அழியும்)
அந்திம நாளேனும் அய்யோ மனமேநீ
நந்த குமாரனை நம்பு….கிரேசி மோகன்….