கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

ஆண்டவா, பழுப்புவண்ணம் பூண்டவா, நீள்விசும்பில்
நீண்டவா, பாரதப் பாண்டவராய் -வேண்டவா?,
தூண்டவா பக்தியால் ?, தீண்டவா பாரதியாய் ?
கீண்டவா தீங்கைக் கிழித்து….கிரேசி மோகன்….!
நாக்கில் நரம்பின்றி நாளை நமதென்ற
போக்கில் தடம்புரண்டு போய்விழுவோம் -தூக்கில்
இடப்பட்டும் தூங்கும் மடப்பயலே அந்த
இடப்பயல் தாளே இருப்பு….கிரேசி மோகன்….!