Author: முனைவர்.சி. சேதுராமன்

  • ‘‘புறநானூற்றில் நாட்டுப்புற நம்பிக்கைகள்”

    — முனைவர் சி. சேதுராமன்.

    purananooru

    நம்பிக்கைகள் மக்களால் உருவாக்கப்பட்டு, அம்மக்கள் சார்ந்த சமுதாயத்த்தால் பாதுகாக்கப்படுகின்றன.மனிதனின் தன்னல மற்றும் சமுதாய உணர்வுகளே நம்பிக்கைகளை வளர்த்து வருகின்றன. இந்நம்பிக்கைகள்காலந்தோறும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்களை உணராதபொழுதும், மனித வாழ்வில் ஏற்படும் சில நிகழ்ச்சிகளுக்குக் காரணம் கற்பிக்க இயலாத பொழுதும் மனிதமனமானது சிலவற்றைப் படைத்துக் காரணம் கற்பித்துக் கொள்கிறது. அவ்வாறு காரணம் கற்பித்துக்கொண்டவைகளே பின்னர் நம்பிக்கைகளாக உருவாகின்றன.

    மனித மனத்தின் விளைவாக நம்பிக்கைகள் தோன்றுகின்றன. இந்நம்பிக்கைகள் காலங்காலமாக ஒருதலைமுறையினரிடமிருந்து மற்றொரு தலைமுறையினருக்குப் பரவி வருகின்றன. மனித வாழ்க்கையின்பிரதிபலிப்புகளாகத் திகழும் இலக்கியங்களிலும் இந்நம்பிக்கைகள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன.எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் நாட்டுப்புற நம்பிக்கைகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.

    நாட்டுப்புற நம்பிக்கைகள்:
    அறிவு நிலைக்கு அப்பாற்பட்ட எண்ணங்களையே நம்பிக்கைகள் என்பர; அறிஞர். காரணகாரியத்தொடர்புகளுக்கு உட்பட்டுச் சான்றுகளின் வாயிலாக நிறு முடிவதை நம்பிக்கை என்றும் சான்றுகளின்அடிப்படையிலோ, காரண காரியத் தொடர்பின் வாயிலாகவோ விளக்க முடியாதவற்றை மூடநம்பிக்கை(ளுரிநசளவவைழைn) என்றும் வகைப்படுத்துவர். மனிதனின் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள்பண்பாட்டின்கண் அடங்கி விடுகின்றன. நாட்டுப்புற நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும் பண்பாட்டுவளர்ச்சியின் படிக்கற்கள் என்பது நோக்கத்தக்கது. மனிதன் தனது பிறப்பு முதல் இறப்பு வரையில் பலவிதமானநம்பிக்கைகள் கொண்டிருக்கின்றான். மனிதனின் இந்நம்பிக்கைகளே அவனது வாழ்வை இயக்குகின்றன. மேலும்மனிதன் வாழ்வில் வளம் பெறுவதற்கு இந்நம்பிக்கைகளே அடித்தளமாக அமைந்திலங்குகின்றன.

    இந்நம்பிக்கைகள் எப்பொழுது தோன்றின என்று அறுதியிட்டுக் கூற இயலாது. இந்நம்பிக்கைகள்மக்களின் நடைமுறை வாழ்வில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன. அதனால் இந்நம்பிக்கைகளைசமுதாயப் பண்பாட்டின் வளர்ச்சிக் கூறுகளின் தொகுதி எனக் கூறலாம். மனித வாழ்க்கையில் காணப்படும்நம்பிக்கைகளுக்குக் காரணத்தை அறிய முடியாததாக இருந்தாலும் மனித சமுதாயம் நம்பிக்கை வயப்பட்டுச்செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தனி மனித நம்பிக்கை காலப்போக்கில் சமுதாயநம்பிக்கையாக மாற்றம் பெறுவதுண்டு.

    பழக்க வழக்கங்கள் காலப்போக்கில் சடங்குகளாக மாறுகின்றன. இச்சடங்குகள் என்பதுநிர்ணயிக்கப்பட்ட விரிவான நடத்தைகளின் வடிவமாகும் என்பர். இது மனி மனிதனின் சுயமான ஆக்கமாகவோபண்பாட்டினுடைய தனிச்சிறப்புக் கூறாகவோ அமையும். பண்பாட்டின் ஏனைய அம்சங்கள் இன்றிச்சடங்குகளிலேயே வெவ்வேறு நாகரிகங்களின் நம்பிக்கைகளும் இலட்சியங்களும் மிகத் தெளிவாகவெளிப்படுத்தப்படுகின்றன என்கிறார் ரூத் பெனிடிக்ட்.

    பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர். இயற்கையின் மாறுதலுக்கேற்றாற் போன்றுமனித மனமும் மாறுபடுகின்றது. இயற்கையோடு இயைந்த மனித வாழ்க்கையில் நம்பிக்கைகள் தோன்றின.புறநானூற்றில் பல்வேறுவிதமான நாட்டுப்புற நம்பிக்கைகள் காணப்படுகின்றன. இந்நம்பிகைகள் அனைத்தும்சகுனம் சார்ந்து இயற்கையோடு இயைந்ததாக அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

    சகுனங்கள் குறித்த நம்பிக்கைகள்:
    சகுனம் பார்க்கும் நம்பிக்கை உலகெங்கிலும் காணப்படுகின்றது. பண்டைத் தமிழர; இதனைப் புள்,நிமித்தம் ஆகிய சொற்களால் குறிப்பிடுகின்றனர். நிமித்தம் என்பது வாழ்வில் நிகழவிருக்கும் நன்மைதீமைகளைச் சில குறியீடுகளின் வாயிலாக உணர்த்துவதாகும். நிமித்தங்கள் அனைத்தும் நம்பிக்கையைச்சார்ந்தனவாக உள்ளன. நிமித்தங்களை, நற்செயலையும், நற்பயனையும் அறிவிக்கும் குறியீட்டினைநன்னிமித்தம் என்றும் தீய செயலையும், தீமையையும் தெரிவிக்கும் குறியீட்டினை தீ நிமித்தம் என்றும்அவற்றின் செயற்பாட்டு விளைவு கருதி இருவகையாகப் பகுக்கலாம்.

    இதனை நாட்டுப்புற வழக்கில் நல்ல சகுனம், தீய சகுனம் என்று குறிப்பிடுவர். ஒரு செயலைத்தொடங்கும்போது நல்ல சகுனம் தோன்றினால் அச்செயல் நன்மையாக முடியும் என்றும், தீய சகுனம்தோன்றினால் அச்செயல் தோல்வியடையும் என்றும் நம்புகின்றனர்.

    நல்ல நாள், நேரம் பார்த்தல்:
    ஒரு செயலை நல்ல நாளில் செய்யத் தொடங்கினால் எவ்விதத் தடங்கலின்றி நன்றாக முடியும் என்றுமக்கள் நம்புகின்றனர். மன்னர்கள் போர் தொடங்குவதற்கு நல்ல நாள் பார்த்தனர். நல்ல நேரத்தை முழுத்தம்என்று குறிப்பிட்டனர். இம்முழுத்தத்தை இன்று முகூர்த்தம் என்று கூறுகிறோம். போர் தொடங்கும் முன்னர்நல்ல நாள் குறித்து அந்நாளில் வெண்கொற்றக் குடையையும், வாளையும் செல்ல வேண்டிய திசையில் எடுத்துச்சென்றனர். இதனை வாள்நாள்கோள், குடைநாள் கோள் எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.
    தொல்காப்பியத்தில்,
    ‘‘நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்”(தொல்., பொருள்., 91)
    என நாள் நிமித்தமும், புள் நிமித்தமும் சுட்டப்படுகின்றது.

    மன்னனைக் காணப் போகும்போது இரவலர்கள் நல்ல நாள், நல்ல நிமித்தம்(சகுனம்) பார்த்துச் செல்வர்.அவ்வாறு சென்றால்; நிறையப் பரிசில்கள் கிடைக்கும் என்று அவர்கள் நம்பினர். நாளும் சகுனமும்சரியில்லையெனில் அவர்கள் மன்னனைக் காண்பதற்குச் செல்லமாட்டார்கள். இதனை,

    ‘‘நாள் அன்று போகி, புள் இடை தட்ப,
    பதன் அன்று புக்கு, திறன் அன்று மொழியினும்,
    வறிது பெயர்குநர்அல்லர் நெறி கொளப்
    பாடு ஆன்று, இரங்கும் அருவிப்
    பீடு கெழு மலையன் பாடியோரே” (புறம்., 124)

    என்ற புறப்பாடல் எடுத்துரைக்கின்றது. விதை விதைக்கும்போதும் மக்கள் நல்ல நாள் பார்த்தே விதைவிதைப்பர்.நல்ல நாளில் விதைவிதைத்தால் நன்கு விளைச்சல் பெருகும் என்று மக்கள் நம்பினர். பன்றி உழுத புழுதியில்குறவர் நல்ல நாள் பார்த்து திணையை விதைத்தையும், விளைந்த தானியத்தை உண்பதற்கு நல்ல நாள்பார்த்தனர். நல்ல நாளில் உண்டால் எந்தவிதமான தீங்கும் நேராது என்றும் மக்கள் நம்பினர். மக்களின்இந்நம்பிக்கையினை,

    ‘‘கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,
    கடுங் கண் கேழல் உழுத பூழி,
    நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்
    உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை
    முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்” (புறம்.,168)

    என்ற கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடிய பாடல் தெளிவுறுத்துகிறது.

    மன்னர்கள் போருக்குச் செல்லும்போது நல்ல சகுனங்களைப் பார்த்தே புறப்பட்டனர். எட்டுத் திசைகளிலும்எரிகொள்ளி எரிந்து விழுதல், பெரிய மரத்தின் இலையில்லாத கிளை உலர்ந்து போதல், ஞாயிறுபலவிடங்களிலே செறிந்து தோன்றுதல், அச்சம் தரும் பறவைகள் ஓசையெழுப்புதல் ஆகியவை நனவில் தீயசகுனங்களாகும். இத்தகைய பெரியதீய சகுனங்கள் ஏற்படுகின்றனவா என்று பார்த்து அவ்வாறு ஏற்பட்டால் அதன்உட்பொருளை அறிந்தபின்னர் போருக்குச் சென்றனர். இச்சகுனம் பற்றிய மக்களின் நம்பிக்கையை,

    “வெல் போர் வேந்தே!
    திசை இரு நான்கும் உற்கம் உற்கவும்,
    பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும்,
    வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
    அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும்” (புறம்.,41)

    என்ற கோவூர்க்கிழாரின் பாடல் தெளிவுறுத்துகிறது. இன்றும் பயணத்தின்போது சகுனம் பார்த்துச் செல்லும்பழக்கம் மக்களிடையே இருந்துவருவது நோக்கத்தக்கது. இது பழக்கம் பற்றிய நம்பிக்கையாக அமைந்துள்ளது.

    தலையை விரித்துப் போடுதல்:
    பயணம் செய்யும்போது எதிரில் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு வருவது தீய சகுனமாகக்கருதப்பட்டது. அவ்வாறு வந்தால் உயிருக்குத் தீங்கு நேரும் என்று மக்கள் கருதினர். அவ்வாறு வந்துவிட்டால்அத்தீங்கினின்று தப்புவதற்காக உடனே கடவுளை வணங்கினர். இதனை,

    “தளரு நெஞ்சந் தலைஇ மனையோள்
    உளருங் கூந்த னோக்கிக் களர
    கள்ளி நீழற் கடவுள் வாழ்த்தி”(260)

    என்ற புறநானூற்றுப் பாடல் தெளிவுறுத்துகின்றது. வழிச்செல்வோர் எதிரே, விரித்த தலைமயிருடன் ஒருத்திமுற்படவரின், அதனைத் தீநிமித்தமாகக் கருதுவது இயல்பு. தீநிமித்தத்தால் உண்டாகும் எனக் கருதிய தீங்கைவிலக்குதல் வேண்டி கள்ளியின் நிழலில் இருந்த தெய்வத்தை வணங்கினர். இத்தகைய சகுனம் குறித்தநம்பிக்கை இன்றும் மக்களிடையே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    பறவை அலறுதல்:
    சில பறவைகள் பறப்பதும் சிலவகையான பறவைகள் அலறுவதும் தீயதை ஏற்படுத்தும் சகுனங்களாகமக்களால் கருதப்பட்டன. இச்சகுனங்கள் மக்களிடத்தில் காணப்படும் பல்வேறுவிதமான நம்பிக்கைகளைஎடுத்துரைக்கின்றன.

    ‘‘கூகை அலறினால் சாவு வரும், போத்துப் பறந்தால் பேத்தடி வைக்காதே”
    என்பது அன்றிலிருந்து இன்றுவரை தமிழகத்தில் நிலவி வரும் நம்பிக்கையாகும். அஞ்சத்தக்க கூகையும்பெருங்குரலெடுத்து அலறுகிறது. இது தீயது நிகழப் போகிறது என்பதைக் குறிக்கின்றது. தலைவன்இறந்துவிடுவதையே இவ்வாந்தையின் அலறல் எடுத்துரைக்கின்றது என்று மனைவி புலம்புகின்றாள்.

    ஆந்தைஅலறினால் தீயது நடக்கும் என்ற இந்நம்பிக்கை புறநானூற்றில்,
    ‘‘அஞ்சுவரு குராஅல் குரலுந் தூற்றும்” (புறம்., 280)
    என்று இடம்பெற்றுள்ளது. ஆந்தை அலறுவதைத் தீ நிமித்தம் என்று மக்கள் நம்பினர் இதனை புறநானூற்றின் 40-ஆவது பாடல் குறிப்பிடுகின்றது. சிற்சில பறவை விலங்குகளின் காட்சியும் அவற்றின் குரல்களும் நன்மைதீமைகளைத் தெளிவுறுத்தும் என்று மக்கள் நம்பினர். வல்வில் ஓரியைக் கழைதின் யானையார் பாடிச்சென்றபோது பரிசில் கிடைக்கவில்லை. அதற்காகப் புலவர் ஓரியைப் பழிக்கவில்லை. மாறாக,

    ”புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
    உள்ளி வருநர் பழியலர் அதனால்
    புலவேன் வாழியர் ஓரி” (புறம்., 204)

    என்று தான் புறப்பட்ட நேரத்தையும் எதிர்ப்பட்ட புள்ளையும் நோவது தவிர மன்னனை நோவது பயனற்றது என்றுகுறிப்பிடுகின்றார்.

    மலையமான் திருமுடிக்காரியைக் காண விரும்பியோர் தீய நாளில் சென்றாலும தீய பறவைஎதிர்ப்பட்டிருந்தாலும் கூட ஒன்றும் பெறாது திரும்பமாட்டார்கள் என்பதை,

    “நாளன்று போகிப் புள்ளிடை தட்பப்
    புதனன்று புக்குத்திறனன்று மொழியினும்
    பெயர்குநர் அல்லர்’’(புறம்., 124)

    என்று குறிப்பிடுகின்றார். இங்ஙனம் நல்ல நேரத்தில், நல்ல நாளில், நல்ல சகுனம் பார்த்து எதையும்பழந்தமிழர்கள் செய்தனர் என்பதை புறநானூறு தெளிவுற எடுத்துரைக்கின்றது.

    போருக்கு வீரர்கள் செல்லும்போது சில பறவைகளின் ஒலி சகுனமாகக் கொள்ளப்பட்டது. அரசனுடன்பறவைகள் ஒலிகளைக் கேட்டு அதற்குரிய பலனைக் கூறுவோரும் இருந்தனர். ‘புட்பகை’ பற்றி,

    “புள்ளிடை தட்ப”(புறம்., 124)
    “உட்பகை ஒரு திறம் பட்டெனப் புட்பகைக்
    கேவான் ஆதலின் சாவேம் யாமென” (புறம்., 68)

    என்று புறநானூறு குறிப்பிடுவது நோக்கத்தக்கது. ஆந்தையின் அலறினால் தீயது நடக்கும் என்று மக்கள் நம்பினர்.இந்நம்பிக்கையினை புறநானூற்றின் 40-ஆவது பாடல் தெளிவுறுத்துகின்றது.

    விரிச்சிகேட்டல்:
    விரிச்சி என்பது நற்சொல் கேட்டலாகும். ஒரு செயலின் தொடக்கத்தில் பிறர் சொல்லும் சொற்களைச்சகுனமாகக் கொள்வது உண்டு. இதனையே விரிச்சி என்பர். பகைவர் நாட்ழற்குள் புகுந்து பசுக்களைக்கவருவதற்கு முன்பு வெட்சி மறவர் விரிச்சி கேட்டதைத் தொல்காப்பியர் ‘பாக்கத்து விரிச்சி’ என்றுகுறிப்பிடுகின்றார்.

    முதுசெம்பெண்டிர் நாழியில் நெல்லை எடுத்துச் சென்று, சுளகில் இட்டு, நீரும் பூவும் சொரிந்து விரிச்சிகேட்பர். இதனை முல்லைப்பாட்டு,
    ‘‘பெரும்பெயல் பொழிந்த சிறுபுன்மாலை
    அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
    யாழிசை இனவண் டார்ப்ப நெல்லொடு
    நாழி கொண்ட நறுவீ முல்லை
    அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
    பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்லைப்பாட்டு, 6-11)
    என்று குறிப்பிடுகின்றது.

    விரிச்சி கூறும் கட்டுவிச்சியான பெருமுது பெண்கள் குரல் தடுமாறாமல் கூறல் வேண்டும். அவ்வாறுதடுமாறினால் தீயது நிகழும் என்று மக்கள் நம்பினர். புண்பட்ட நிலையில் கிடக்கும் தலைவனின் இறப்பைஇதுகுறிப்பதாக மனைவி அஞ்சுகிறாள். அவளின் நம்பிக்கையை,

    “நெல்நீர் எறிந்து விரிச்சி யோர்க்கும்
    செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா’’ (புறம்., 280:6-7)
    என்று புறநானூறு எடுத்தியம்புகின்றது.

    விளக்கு அணைதல்:
    நல்ல செயல்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது விளக்கு அணைதல் கூடாது. அவ்வாறுஅணைந்தால் அது தீயதை விளைவிக்கும் என்று மக்கள் நம்பினர;. இந்த நம்பிக்கை எல்லோரிடத்திலும் இருப்பதுகுறிப்பிடத்தக்கது. புறநானூற்றில்,

    ‘‘நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா” (புறம்., 280)
    என விளக்கும் அணைதல் பற்றிய நம்பிக்கை இடம்பெற்றுள்ளது. நீண்ட நகரின் மாளிகையில் ஏற்றி வைத்தவிளக்குகளும் அணைந்து விடும். அதனால் போரில் புண்பட்டுக் கிடக்கும் தலைவன் இறந்துபடுவான். தலைவன்இறந்து நான் உயிர்வாழ்வது அரிதினும் அரிதாகும் என்று மனைவி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.இன்றும் ஏற்றிய விளக்கு அணைவது தீயதை உணர்த்தும் சகுனமாக மக்களால் நம்பப்படுகின்றது.

    கனவு:
    எல்லா மக்களிடமும் கனவு குறித்த நம்பிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொருகனவிற்கும் ஒவ்வொருவிதமான பலன் உண்டு. பகற்கனவு பலிக்காது என்பர். அதிகாலையில் காணும் கனவுபலிக்கும் என்பர். இலக்கியங்களில் கனவு குறித்த செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. இக்கனவுகள் வாழ்வில்நிகழப் போகும் நிகழ்வுகளை முன்னரே எடுத்துரைக்கும் தன்மை வாய்ந்தவை.

    சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் பகைவர்கள், இரு நான்கு திசைகளிலும் உற்கம்உற்கவும், வற்றல் மரம் தீப்பற்றி எரியவும், ஞாயிறு பலவாகத் தோன்றவும், அஞ்சத்தக்க பறவைகள்ஆரவாரிக்கவும், பல் கழன்று விழவும், தலையில் எண்ணெய் ஊற்றவும், கோட்டு மாவூரவும், படைக்கருவிகள்கட்டிலொடு சாயவும் கனவு கண்டு தங்களுக்கு ஏற்படப் போகும் அழிவைக் குறித்து,

    “எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
    களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
    வெள்ளெரி நோன் படை கட்டிலொடு கவிழவும்,
    கனவின் அரியன காணா, நனவில்
    செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி,
    மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்”
    என்று அஞ்சியதாக புறநானூறு(41) குறிப்பிடுகிறது.

    வெள்ளியும் எரிகோளும்:
    வெள்ளிமீன் வட திசையில் இருந்தால் நாட்டில் வளம் பெருகும். தென்திசைக்குச் சென்றால்மழைபெய்யாது; பஞ்சம் ஏற்படும். இன்றும் இந்நம்பிக்கை மக்களிடையே இருந்து வருவது நோக்கத்தக்கது.மக்களிடையே காணப்படும் இத்தகைய நாட்டுப்புற நம்பிக்கையானது புறநானூற்றிலும் காணப்படுகின்றது.பாரியின் நாட்டில் சனிமீன் புகையினும், எல்லாத் திசையிலும் புகை தோன்றினாலும் வெள்ளி தெற்கேசென்றாலும் மழை வளம் தவறாது என்ற பாரியின் நாட்டின் வளம் குறித்துக் குறிப்பிடும்போது,

    “மைம்மீன் புகையினும். தூமம் தோன்றினும்
    தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
    வயலகம் நிறைய, புதல் பூ மலர,
    மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்’’ (புறம்., 117)
    என்று கபிலர் இயம்புகின்றார்.

    வெள்ளிக் கோள் தென்திசையில் எழுவது தீய சகுனமாகக் கருதப்பட்டது. மேலும் வானில் எரிமீன்,குளமீன், தாள் மீன் ஆகிய விண்மீன்கள் புகைந்து தோன்றினும் தீய சகுனமாகும் (நிமித்தங்களாகும்). இவைநாட்டில் வறுமையும் பஞ்சமும் ஏற்படப் போவதை முன்கூட்டியே தெரிவிக்கும் தீய சகுனங்களாக மக்கள்கருதினர். மக்களின் இத்தகைய சகுனம் குறித்த நம்பிக்கையை,

    ‘‘வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல்,
    பள்ளம், வாடிய பயன் இல் காலை” (புறம்., 388)
    “அகன் ஞாலம் பெரிது வெம்பினும்,
    மிக வானுள் எரி தோன்றினும்,
    குள மீனொடும் தாள் புகையினும்’’ (புறம்., 395)
    என்ற பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

    அதேபோன்று தூமகேது வானத்தில் தோன்றினால் நாட்டை ஆளுகின்ற அரசர்களுக்கு ஆகாது என்றுமக்கள் நம்பினர். அவ்வாறு ஒரு தூமகேது தோன்றிய ஏழாவது நாளில் சேரமான் யானைக்கட்சேய் மந்தரஞ்சேரல்இரும்பொறை மாய்ந்தான். இதனை,

    “ஆடுஇயல் அழல் குட்டத்து
    ஆர்இருள் அரை இரவில்
    முடப் பனையத்து வேர்முதலாக்
    குடைக் குளத்துக் கயம்காய,
    பங்குனி உயர் அழுவத்து,
    தலை நாள்மீன் நிலைதிரிய,
    நிலை நாள்மீன் துறை படிய,
    பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது,
    அளக்கர்த் திணை விளக்காகக்
    கனை எரிபரப்ப, கால் எதிர்பு பொங்கி
    ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே:
    அது கண்டு யாமும், பிறரும் பல்வேறு இரவலர்,
    பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்
    நோய் இலன் ஆயின் நன்றுமன்தில் என
    அழிந்தி நெஞ்சம் மடிஉளம் பரப்ப,
    அஞ்சினம்: எழுநாள் வந்தன்று, இன்றே” (புறம்., 229)
    என்று கூடலூர்க்கிழார் குறிப்பிடுகிறார்.

    மேடராசி பொருந்திய கார்த்திகை நாளின் முதற்காலின்கண் நிறைந்த இருள் கொண்ட பாதி இரவு;அப்போது முடப்பனை போன்ற வடிவை உடைய அனுஷ நாளின் முதல் நட்சத்திரம் முதலாகக் குளம்போன்றவடிவை உடைய புனர்பூச நட்சத்திரத்தின் கடைப்பகுதியாக விளங்கும்; அத்தகைய பங்குனி மாதத்தில்முதற்பதினைந்தில் உச்சமாக விளங்கும் உத்தரம் சாய்ந்தது; அதற்கு எட்டாம் நாட்சத்திரமாகிய மூலம் அதற்குஎதிரே எழும்; அந்த உத்தரத்திற்கு முன் செல்லப்பட்ட மீன்களில் எட்டாவதாக உள்ள மிருகசீரிடம், துறையிலேதாழ்ந்து படியக் கீழ்த்திசையிற் போகாமலும் வடதிசையிற் போகாமல், தீத்திசையாகிய வடகிழக்கே வீழ்ந்ததுஒரு மீன். கடல் சூழ்ந்த உலகின் விளக்காக முழங்குகின்ற தீப்பரக்கக் காற்றால் விசிறப்பட்டு வீழ்ந்தது. அம்மீன்விழுவதைப் பார்த்து யாமும் இரவலர் பிறராகிய பல்வேறு வகையினரும், வேந்தன் நோயில்லாமல் இருக்கவேண்டும் என்று அஞ்சினோம். நாங்கள் அஞ்சியவாறே ஏழாம் நாள் வந்தது. இன்று மன்னன் இறந்தான் என்றுஇப்பாடலில் நாட்டுப்புற மக்களின் நம்பிகை இடம்பெற்றுள்ளது.

    பேய் பற்றிய நம்பிக்கை:
    கண்ணுக்குப் புலப்படாத பேய்கள் இரவில் உலவுவதாகவும் இவை பெரும்பாலும் சுடுகாட்டிலேயேஉலவியதாகவும் மக்கள் நம்பினர். இப்பேய்கள் பிணங்களை விரும்பி உண்ணும்; இறந்த வீரர்களின் குருதியைத்தலையில் தடவித் தலையை வாரும் என்ற பேய்கள் குறித்த நம்பிக்கை மக்களிடம் நிலவியதை,

    ‘‘வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப்
    பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடு”(புறம்., 238)

    என்று புறநானூறு குறிப்பிடுகிறது. போர்க்களங்களில் கழுகுகளும், நரிகளும் பேயொடு சேர்ந்து பிணங்களைஉண்டதாக மக்கள் நம்பினர்(புறம்., 373). பேய்கள் பிணந் தின்றதையும், இறந்து கிடந்த வீரரின் குருதியைத்தலையில் தடவித் தலைவாரியதையும் புறநானூறு(369, 62) குறிப்பிடுகிறது.

    பேய்கள் போர்க்களத்தில் மண்டையோடுகளில் சமைத்து அதனைக் கொற்றவைக்குப் படைக்கும் என்றுமக்கள் நம்பினர். மக்களின் இந்நம்பிக்கையானது,
    “பொருந்தாத் தெவ்வ ரருந்தலை யடுப்பிற்
    கூவிள விறகி னாக்குவரி நுடங்க
    ஆனா மண்டை வன்னியந் துடுப்பின்
    ஈனா வேண்மா ளிடந்துழந் தட்ட
    மாமறி பிண்டம் வாலுவ னேந்த
    வதுவை விழவிற் புதுவோர்க் கெல்லாம்
    வெவ்வாய்ப் பெய்த புதுநீர் சால்கெனப்
    புலவுக்களம் பொலிய வேட்டோய்” (372)
    என்று புறநானூற்றில் குறிப்பிடப்படுகிறது. மனம்பொருந்தாத பகைவர் உடலினின்றும் நீங்கிய அரியதலைகளாற் செய்ப்பட்ட அடுப்பிலே கூவியங்கட்டையாகிய விறகிட்டெரித்து ஆக்கப்படும் கூழிடையே,வரிக்குடர்கள் பிறழ்ந்து பொங்க நீங்கிய மண்டையோட்டை அகப்பையாகவும் வன்னிமரத்தின் கொம்பை யதிற்செருகப்பட்ட காம்பாகவும் கொண்ட துடுப்பினால் ஈனாத பேண்மகள் தோண்டித் துழாவிச் சமைத்த மாக்களும்உண்ண மறுக்கும் ஊன்சோறாகிய பிண்டத்தை பேய்மடையன் எடுத்துக் கொற்றவைக்குப் படைப்பானாய்ஏந்திக்காட்ட களவேள்விசெய்தவனே என்று பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி மாங்குடிக் கிழார் என்றபுலவர் பாடும்போது இந்நம்பிக்கையைக் குறிப்பிடுகிறார்.

    பேய்கள் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவையாகும். இப்பேய்களிடம் இருந்துதப்பிப்பதற்குப் பல்வேறுவிதமான செயல்களைச் செய்தனர். வீட்டில் இரவம், வேம்பு இவற்றின் குழைகளைச்செருகி வைத்தனர். யாழையும் பிற கருவிகளையும் முழக்கினர். வெண் சிறுகடுகைப் புகைத்தனர். ஆம்பற்குழலை ஊதினர். காஞ்சிப் பண்ணைப் பாடினர். தூபம் எடுத்தனர். இவ்வாறு செய்தால் தீங்கு செய்ய வரும் பேயைஓட்டிவிடலாம் என்று மக்கள் நம்பினர். இதனை,

    “தீம் கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ,
    வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க,
    கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி,
    ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,
    இசை மணி எறிந்து, காஞ்சி பாடி,
    நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ,
    காக்கம் வம்மோ காதலம் தோழி!
    வேந்துறு விழுமம் தாங்கிய
    பூம் பொறிக் கழல் கால் நெடுந்தகை புண்ணே”(புறம்.,281)
    என்று அரிசில் கிழார் (புறம்., 98;15, 281) குறிப்பிடுகின்றார்.

    இந்நம்பிக்கை பற்றிய செய்தியை,
    “வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
    நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
    எல்லா மனையும் கல்லென்றவ்வே;’’ (புறம்., 296)
    என்று வெள்ளைமாளர் பாடுவதும் நோக்கத்தக்கது. இன்றும் பேய் பற்றிய பல்வேறு கதைகளும் நம்பிக்கைகளும்மக்களிடம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இன்றும் வேம்பின் குழைகளை எடுத்து அடித்துப் பேய்ஓட்டும்பூசாரிகள் கிராமங்களில் இருக்கின்றனர்.

    சமய நம்பிக்கைகள்:
    சங்க கால மக்கள் இம்மை வாழ்வின் செம்மையிலும் இன்பத்திலும் விருப்பமுடையதாக இருந்தது.அவர்களின் சமயம் சார்ந்த வாழ்க்கை வாழ்வியல் நெறியாக இருந்தது. இம்மை, மறுமை, சொர்க்கம், நரகம், விதிஉள்ளிட்ட நம்பிக்கைகள் மக்களிடம் இருந்தது.

    கடவுள் பற்றிய நம்பிக்கை:
    பழந்தமிழ் மக்கள் மரங்களைத் தெய்வமாகக் கருதி வழிபட்டனர். வேங்கை, கடம்பு, அரசு, ஆல் ஆகியமரங்களில் தெய்வம் உறைவதாகக் கருதினர். அம்மரங்களைத் தாங்கள் வணங்கும் கடவுளாகக் கருதியமக்களின் கடவுள் பற்றிய நம்பிக்கையை,

    ‘‘கடவு ளாலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
    நெருந லுண்டன மென்னாது பின்னும்
    செலவா னாவே களிகொள் புள்ளினம்”(புறம்.,199)
    என்ற பெரும்பதுமனார் பாடல் எடுத்தியம்புகிறது. இன்றும் மக்கள் வேம்பினை அம்மன் தெய்வமாகவும், கடம்பு,வேங்கை ஆகிய மரங்களை முருகனாகவும், ஆலமரத்தை சிவனாகவும் கருதி வழிபட்டு வருவதுகுறிப்பிடத்தக்கது.

    சொர்க்கம் நரகம்:
    அவரவர் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப நன்மையும் தீமையும் ஏற்படும் என்று அன்றிலிருந்துஇன்று வரை மக்கள் நம்புகின்றனர். அன்பையும் அறத்தையும் புறக்கணித்தவர்கள் நீங்காத நிரயம்(நரகத்திற்குச்)செல்வர் என்று மக்கள் நம்பினர். இதனை,
    ‘‘அன்பும் அறனும் நீக்கி நீங்கா
    நிரயம் கொள்பவ ரோடொன்றாது காவல்
    குழவி கொள்பவரின் ஓம்புமதி”(புறம்., 5)
    என்று புறநானூறு எடுத்தியம்புகிறது. இறந்தோரில் சிறந்தவர்(நல்லவர்) மட்டுமே சொர்க்கத்திற்குச் செல்வர்.தீயவர் நரகிற்குச் செல்வர். நல்லோர் இறந்து விண்ணுலகு எய்தும்போது அவரை சொர்க்கத்தின் தலைவனாகவிளங்கும் இந்திரனே எதிர்நின்று வரவேற்பான் என்று மக்கள் நம்பினர். இத்தகைய நம்பிக்கையைபுறநானூற்றின் 241-ஆவது பாடல் குறிப்பிடுகிறது.

    ஒருவர் இறந்த பின்னர் அவருக்குத் துணையாக அவர் செய்த நல்வினைகளே உடன் செல்லும்.இந்நம்பிக்கை இன்றுவரை மக்களிடையே நிலவி வருகின்றது. இந்நம்பிக்கையினை,
    ‘‘வாழச் செய்த நல்வினை அல்லது
    ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை’’(புறம்.,367)
    என்ற ஔவையார் பாடல் புலப்படுத்துகிறது.

    போர்க்களத்தில் பகைவருடன் போர் புரிந்து மரணிப்பவர்கள் சொர்க்கத்தில் தெய்வ மகளிரை மணந்துமகிழ்வர் என்ற நம்பிக்கையும் நிலவியது. இந்நம்பிக்கையை,
    ‘‘மாசு இல் மகளிர் மன்றல் நன்றும்,
    உயர் நிலை உலகத்து, நுகர்ப” (புறம்.,287)
    என்ற புறநானூற்றுப் பாடல் எடுத்துரைக்கின்றது. படைத்தலைவன் தனது படைவீரர்கள் கிளர்ந்தெழுந்துபோர்புரியும் வகையில் அவர்களுக்கு இத்தகைய நம்பிக்கையூட்டும் சொற்களைக் கூறுவதாக இதனைக்கருதலாம்.

    வீர வாழ்க்கை வாழ்ந்து தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செவ்வனே முடித்தவர்கள் விசும்பில்வலவன் இயக்காத வான ஊர்தியிலேறி விண்ணுலகு(சொர்க்கத்திற்கு) செல்வர் என்ற நம்பிக்கையை,
    ‘‘புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
    வலவன் ஏவா வான வூர்தி
    எய்துப என்பதம் செய்வினை முடித்தே” (புறம்., 27)
    என்று புலவர் ஒருவர் தெளிவுறுத்துகிறார். தாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து செவ்வனேமுடித்தவர்கள் சொர்க்கத்திற்குச் செல்வர். இத்தகைய நம்பிக்கையை,
    ‘‘உயர்ந்த வேட்டத்து உயர;ந்திசி னோர்க்குச்
    செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்
    தொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும்
    தொய்யா வுலகத்து நுகர்ச்சி இல்லெனில்
    மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்” (புறம்., 214)
    என்ற கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தபோது பாடிய பாடல் எடுத்துரைக்கின்றது. சொர்க்கம் குறித்த மக்களின்நம்பிக்கையை, (134, 141, 174) ஆகிய புறப்பாடல்களும் எடுத்துரைக்கின்றன.

    ஊழ்வினை நம்பிக்கை:
    ஊழ்வினை குறித்த நம்பிக்கை மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துள்ளது. தமதுவாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கும், முன்னேற்றத் தடை ஏற்படுவற்கும் முதன்மையான காரணமாகஊழ்வினையே விளங்குகின்றது என்று மக்கள் நம்புகின்றனர். ஊழ்வினையை வெல்ல முடியாது என்ற எண்ணம்மக்களின் மனதில் வேரூன்றிப் போய்விட்டது. இவ்வூழ்வினையை, பால், வரை, தெய்வம் எனப் பலவாறுகுறிப்பிடுவர். காதலர் ஊழின் ஆற்றலால் மீண்டும் சந்தித்து உறவு கொள்வர். இவ்வகையில் கணியன்பூங்குன்றனாரின்,

    ‘‘வானம் தண்டுளி தலைஇ யானாது
    கல்பொருது இறங்கும் மல்லல் பேர்யாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல ஆருயிர்
    முறைவழிப் படூஉம்” (புறம்., 192)
    என்ற பாடல் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றது.

    மலையிற் பெய்த நீர் வெள்ளமாக ஓடும்போது அதிலகப்பட்ட மரத்தெப்பம் போன்றே உயிர்கள் விதியின்வழிச் செல்லும் என்று குறிப்பிடும் அவர் அதனால் பெரியோரை வியத்தலும், சிறியோரை இகழ்தலும் தமக்குஇயல்பில்லை என்று தெளிவுறுத்துகிறார். இப்பாடல் பழந்தமிழ் மக்களின் ஊழ்வினை நம்பிக்கைக்குச் சான்றுபகர்வதாக அமைந்துள்ளது. இன்றுவரை அனைத்துத் தரப்பு மக்களிடமும் இவ்வூழைப் பற்றிய நம்பிக்கை மிகுந்துகாணப்படுவது குறிப்பிடத்தக்கது. ஊழ் குறித்த செய்திகள், புறநானூற்றில்(75, 176, 236, 192) நான்கு பாடல்களில்இடம்பெற்றுள்ளன.
    வீடுபேறு (முக்தி)

    இலக்கியங்களின் பயன் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கும் ஆகும். அதிலும் வீடுபேறுஎன்பது மக்கள் அனைவரும் முயல்கின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை வீடுபேறு அடைவதே மக்களின்குறிக்கோளாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. இவ்வுலகம் நிலையில்லாதது; அதனால் இதன் தன்மையைஅறிந்து இதனினும் சிறந்த இன்ப உலகமான வீட்டின்பம் பெறும் (வீடுபேறு) சிறந்த செயல்களைச் செய்தல்வேண்டும் என்பதைப் பக்குடுக்கை நன்கணியார்,

    ‘‘ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
    ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
    புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
    பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
    படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
    இன்னாது அம்ம, இவ் உலகம்;
    இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே” (புறம்.,194)

    என்று பாடுகின்றார். நல்லது செய்தால்தான் இறையருளாகிய வீடுபேறு ஒருவருக்குக் கிட்டும்.இல்லையென்றால் அவரை எமன் வந்து வருத்துவான். நல்லது செய்ய முடியவில்லை என்றால்தீயனவற்றையாவது செய்யாதீர்கள் என்ற மக்களின் வீடுபேறு குறித்த நம்பிக்கையை,

    ‘‘கணிச்சிக் கூர்ம் படைக் கடுந் திறல் ஒருவன்
    பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ;
    நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
    அல்லது செய்தல் ஓம்புமின்; அதுதான்
    ல்லாரும் உவப்பது; அன்றியும்,
    நல் ஆற்றுப் படூஉம் நெறியும்மார் அதுவே’’ (புறம்.,195)
    என்று நரிவெரூஉத்தலையார் எடுத்தியம்புகின்றார்.

    இன்றும் மக்கள் நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்றும் தீயது செய்தால் தீயது நடக்கும் என்றும்நம்புகின்றார்கள். இத்தகைய நம்பிக்கையை, ‘‘வினை விதைத்தவன் வினையறுப்பான்; தினை விதைத்தவன்தினையறுப்பான்” என்ற பழமொழி எடுத்துரைப்பதும் நோக்கத்தக்கது.

    மறுபிறப்பு பற்றிய நம்பிக்கை:
    இப்பிறவியில் நிறைவேறாத ஆசைகளோ, செயல்களோ இருப்பின் அவர்கள் மறுபிறப்பெடுத்து அதனைநிறைவேற்றுவர். மார்கழி மாதத்தில் இறந்தோருக்கு மறுபிறப்பில்லை என்றும் மக்கள் நம்புகின்றனர். அவரவர்செய்த நன்மை தீமைகளுக்கேற்ப மறுபிறப்பு என்பது இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவர் செய்தகொடுமைக்குப் பழிக்குப் பழி வாங்குவதற்காக மறுபிறப்பெடுத்து வந்து பழி வாங்குவர் என்ற நம்பிக்கையும்மக்களிடையே இன்றும் நிலவி வருகின்றது. பாரி தன்னைவிட்டுப் பிரிந்தபோது தன்னுயிர் நீங்காததால் கபிலர்வருந்தினார். இப்பிறவியல் பாரியுடன் கூடிய நட்பு தொடராது தமடைபட்டதே என்று துன்புற்ற கபிலர்மறுபிறவியிலாவது பாரியுடன் தனது நட்பானது தொடர வேண்டும். அதனை விதியே செய்யும் என்று கருதிமறுபிறவிக்காகத் தானும் பாரியைத் தொடர்வதாகக் கபிலர்,

    “இனையை யாதலி னினக்கு மற்றியான்
    மேயினே னன்மை யானே யாயினும்
    இம்மை போலக் காட்டி யும்மை
    இடையில் காட்சி நின்னோ
    டுடனுறை வாக்குக வுயர்ந்த பாலே” (புறம்., 236)
    என்று பாடுகின்றார். இப்பாடல், ‘‘இம்மை மாறி மறுமையாயினும் நீயாகியர் எம் கணவனை, யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே” என்ற அகப்பாடலை நினைவுறுத்துவதாக அமைந்துள்ளது. இப்பாடலில் விதி, மறுபிறப்புஆகியவை குறித்த நம்பிக்கைகள் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.

    இறந்தவர் பற்றிய நம்பிக்கை:
    இறந்தவர்களை நினைத்து வழிபடும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகின்றது.இறந்தவர்களுக்காகப் படைக்கப்படும் உணவினை அவர்கள் வந்து உண்பார்கள் என்று மக்கள் நம்புகின்றனர்.இவ்வாறு உணவு படைப்பதைப் பிண்டம் படைத்தல் என்பர். இது மூடநம்பிக்கையாக இன்று கருதப்பட்டாலும்இறந்தவர்களுக்குப் பிண்டம் படைக்கும் பழக்கம் இருந்துவருவது நோக்கத்தக்கது. பாண்டியன் பல்யாகசாலைமுதுகுடுமிப் பெருவழுதியின் போர் அறத்தைப் பாடும் நெட்டிமையார்,

    “தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்”(9)
    என்று குறிப்பிடுகின்றார். தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய பிண்டோதகக் கிரியையைப் பண்ணும்; பொன்போல் புதல்வர்ப் பெறாதீரும் பாதுகாப்பான இடங்களுக்குச்செல்லுங்கள் என்று கூறிப் போர்புரிந்ததாக புலவர் கூறுவது நோக்கத்தக்கது. இதற்கு விளக்கம் எழுதும் ஔவைதுரைசாமிப்பிள்ளை அவர்கள், ‘‘பிண்டம் – சோறு; உதகம் – நீர். ஒரு குடியில் இறந்தோர், தென்றிசைக்கண் இருந்து, தம் குடியிற் பிறக்கும் புதல்வர் தம்மை நோக்கிப் படைக்கும் சோறும் நீரும் உண்டு வாழ்வர்”(ப.,27)என்று கூறுகின்றார். இறந்தோர் தங்களுக்குப் படைக்கும் சோற்றையும், நீரையும் வந்து உண்பர் என்று மக்கள்நம்பினர்.

    இறந்தவர்களுக்கு உணவு படைத்து வழிபட்டால் நல்லது நடக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.இறந்தவர்கள் தெய்வமாக நின்று தங்களையும் குடும்பத்தினரையும் காப்பர் என்றும் மக்கள் நம்புவதால்தான்இப்பிண்டம் படைத்தல் என்ற பழக்கம் தொடர்கின்றது எனலாம். பிண்டமாகப் படைக்கப்பட்ட உணவை எவ்வாறுதன் கணவன் உண்டான் என்று மனைவியானவள் கண்ணீர் விட்டு வருந்துவதாக,

    “நோகோ யானே தேய்கமா காலை
    பிடியடி யன்ன சிறுவழி மெழுகித்
    தன்னமர் காதலி புன்மேல் வைத்த
    இன்சிறு பிண்டம் யாங்குண் டனன்கொல்
    உலகுபுகத் திறந்த வாயிற்
    பலரோ டுண்டன் மரீஇ யோனே” (புறம்., 236)
    வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடும்போது குறிப்பிடுகிறார்.

    மேலும் பிண்டம் படைப்பதற்குரிய இடத்தை மனைவியானவள் பசுவின் சாணத்தை வைத்துமெழுகுகின்றாள். சாணத்தைத் தண்ணீர்விட்டுக் கரைத்து மெழுகாது சாணத்தில் கண்ணீரைவிட்டுக் கரைத்துமெழுகுவதாக தும்பிசேர் கீரனாரின்,
    ‘‘இன்றே,
    அடங்கிய கற்பின், ஆய் நுதல் மடந்தை,
    உயர் நிலை உலகம் அவன் புக,…. வரி
    நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி,
    அழுதல் ஆனாக் கண்ணள்,
    மெழுகும், ஆப்பி கண் கலுழ் நீரானே’’ (புறம்.,249)
    என்ற பாடல் இயம்புகின்றது.

    மழை பற்றிய நம்பிக்கை:
    பருவ நிலைகள் மாறப் போவதை எறும்புகள், பூனைகள், விலங்குகள் உள்ளிட்ட உயிரனங்கள் உணர்ந்துகொண்டு அதற்கேற்ப செயல்படும். இவ்வுயிரினங்களின் செயல்பாடுகளைப் பார்த்து அடுத்து என்ன நிகழும்என்று பழந்தமிழ் மக்கள் அறிந்து கொண்டனர். எறும்புகள் தங்களது முட்டைகளைக் கொண்டு மேட்டு நிலப்பகுதிக்குச் சென்றால் மழையானது பெய்யும் என்று நம்பினர். இன்றும் கிராமப்புறங்களில் இந்நம்பிக்கைமக்களிடையே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மக்களின் இத்தகைய நம்பிக்கையை,

    ‘‘பொய்யா வெழிலி பெய்விட நோக்கி
    முட்டை கொண்டு வற்புலஞ் சேரும்
    சிறுநுண் ணெறும்பின் சில்லொழுக் கேய்ப்பச்’’ (புறம்., 173)
    என்ற சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவனின் பாடல் புலப்படுத்துகின்றது. இந்நம்பிக்கையானது, ‘‘எறும்பு முட்டை கொண்டு திட்டையேறின் மழைபெய்யும்” என்று பழமொழியாக மக்களிடையே வழங்கப்பட்டுவருகின்றது. மக்களின் இந்நம்பிக்கையை இளம்பூரணர் தமது உரையில், ‘‘எறும்பு முட்டை கொண்டுதெற்றியேறின் மழை பெய்தது மழை பெய்யு மென்பது” (தொல். வினை. சூ. 45, இளம்.) என்று குறிப்பிடுவதும்நோக்கத்தக்கது.

    மழை பெய்யாமல் நாட்டில் வறட்சி ஏற்பட்டால் மக்கள் இறைவனை மழைவரம் வேண்டி வழிபடுவர்.இறைவனை வழிபட்டால் மழைபொழியும் என்று மக்கள் நம்பினர். அதேபோன்று மழை அதிகமாகப் பொழிந்துஅழிவானது ஏற்பட்டால் அதனைத் தடுப்பதற்காக மக்கள் இறைவனை வழிபடுவர். இறைவனை வழிபட்டால்அதிகமாக மழைபொழியாது என்றும் மக்கள் நம்பினர். இன்றும் இந்நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகின்றது.

    திருவிழாக் கலாங்களில் மழைவரும் என்று அறிந்தால் உடனே மழைபொழியக் கூடாது என்பதற்காகதேங்காயை உடைத்துச் சூடத்தைக் காட்டி அதனை விழாவிற்காகப் போடப்பட்ட பந்தலின் மீது எறிவர். அவ்வாறுஎறிந்தால் பெய்து கொண்டிருக்கும் மழையோ அல்லது பெய்யப் போகும் மழையோ உடனடியாக நின்றுவிடும்என்று மக்கள் நம்புகின்றனர். மக்களின் இந்நம்பிக்கையை,

    “மலைவான் கொள்கென வுயர்பலி தூஉய்
    மாரி யான்று மழைமேக் குயர்கெனக்
    கடவுட் பேணிய குறவர் மாக்கள்
    பெயல்கண் மாறிய வுவகையர் சாரற்
    புனத்தினை யயிலு நாட” (புறம்., 143)
    எனக் கபிலர் குறிப்பிடுகின்றார்.

    தெய்வத்தைப் போற்றும் குறமாக்கள், மழையற்ற காலத்து, மலையை மழை வந்து சூழ்க என்று பலியைத்தூவி வேண்ட மிகுதியான மழை பெய்தது; மழை மிகுதியாகப் பெய்ததால் அதனை நிறுத்துவதற்காக,மழை(முகில்) மேலே போவதாக என்று தெய்வத்தை வேண்டினர். அவர்களின் வேண்டுதலுக்கேற்ப, மழையும்இடம்மாறிப் பெய்தது. அதனால் குறமாக்கள் மகிழ்ந்தனர் என்று இப்பாடலில் மக்களின் நம்பிக்கையை புலவர்தெளிவுறுத்துகிறார். இந்நம்பிக்கை குறித்த செய்தியானது,

    “குன்றக் குறவ னார்ப்பி னெழிலி,
    நுண்ப லழிதுளி பொழியு நாட” (ஐங்குறு. 251)
    என ஐங்குநுறூற்றிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    புறநானூற்றில் குறிப்பிடப்படும் நம்பிக்கைகள் இன்று வரை மக்களிடையே இருந்து வருகின்றது.இவ்வாறு பல்வேறுவிதமான நம்பிக்கைகளை எடுத்துக் கூறி பண்பாட்டுக் களஞ்சியமாக புறநானூறுவிளங்குகின்றது. புறநானூறு குறிப்பிடும் நாட்டுப்புற நம்பிக்கைகள் வாழ்வியல் சார்ந்தவையாகவும், மக்களின்பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவும் அமைந்திலங்குகின்றன.

     

     

     

    முனைவர் சி. சேதுராமன்,
    தமிழாய்வுத் துறைத்தலைவர்,
    மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை – 622 001.
    Malar.sethu@gmail.com

     

     

     

     

     
    படம் உதவி: http://garuda-sangatamil.com/pages/third/images/purananooru.jpg

    Share
  • கோவலன் கதைப்பாடலில் சிலம்பின் செல்வாக்கு

    மு​னைவர் சி.​சேதுராமன்

    ஒரு காலத்தில் ​தோன்றி சிறப்புடன் விளங்கிய இலக்கியமானது ​ காலங்கள் பல கடந்தாலும் பிற்காலத்தில் எழுந்த இலக்கியங்களிலும் ​பெரும்தாக்கத்​தை ஏற்படுத்தும். எல்லா இலக்கியங்களும் ​பெரும் தாக்கத்​தை ஏற்படுத்துவதில்​லை. ஒரு சில இலக்கியங்க​ளே இத்த​கைய தாக்கத்​தை ஏற்படுத்தும் இலக்கியங்களாக விளங்குகின்றன. அவ்வாறு தாக்கத்​தை ஏற்படுத்திய இலக்கியங்களுள் சிலப்பதிகாரம் முதன்​மையான இடத்தை வகிக்கின்றது.

    Puhar-KannagiInPandyaCourt

    கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இக்காப்பியம் ஏனைய காப்பிய நூல்கள் போன்று அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்காமல் கோவலன் – கண்ணகி என்ற குடிமக்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டிலங்குகின்றது. இதனால், இச்சிலப்பதிகாரத்தைக் குடிமக்கள் காப்பியம் என்று கூறுவர். காப்பியங்களுக்கான இலக்கண அமைப்பு பொருந்துமாறு இயற்றப்பட்ட காப்பியமாகச் சிலப்பதிகாரம் விளங்குகின்றது. காவிரி, வைகை, முதலான ஆறுகளும் புகார், உறந்தை, மதுரை, வஞ்சி முதலான நகரங்களும், குரவைக் கூத்து, சாக்கைக் கூத்து உள்ளிட்ட கூத்துகளும், திருமால், சிவன், இந்திரன், முருகன் உள்ளிட்ட கடவுளர்களும், அடர்ந்து வளர்ந்த பெருங்காடுகளும் இந்நூலில் நன்கு வருணிக்கப்பட்டுள்ளன.

    அக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை குறித்த செய்திகள் இதில் பெருமளவில் இடம் பெற்றுள்ளன. சிலப்பதிகாரப் பதிகம் இதனை உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் எனக் குறிப்பிடுகின்றது. இடையிடையே உரைகளும் வரிப்பாட்டுகளும் கலந்து வந்துள்ளன. பொருட்செறிவு, தெளிவான இனிய எளிய நடையுடன், அணிகள் பல பொதிந்த தமிழின் வளமான நூலாகும். இறையனார் களவியல் உரைகாரர், இளம்பூரனார் போன்ற உரையாசிரியர்களால் அதிகளவில் மேற்கோளாக எடுத்தாளப்பட்ட பெருமை உடையதாகச் சிலப்பதிகாரம் திகழ்கிறது. தமிழறிஞர்களால் மிகுதியாக ஆய்வுக்கு உட்பட்ட நூலும் இதுவேயாகும். சிலப்பதிகாரம், நூல் முகத்தில் உரைப் பாட்டினையும், கானல்வரி, வேட்டுவவரி, ஆற்றுவரி, ஊசல்வரி, கண்புவரி என்னும் இசைப்பாட்டுகளும் நிறைந்தது புகார் காண்டம், மதுரைக் காண்டம் மற்றும் வஞ்சிக் காண்டம் எனும் உட்பகுப்புகளால் பிரிக்கப்பட்டுள்ளது. முப்பது காதைகளைக் கொண்டது. இச்சிலப்பதிகாரம் பல்வேறு இலக்கியங்களில் பல நிலைகளில் செல்வாக்குப் பெற்றதாக விளங்குகின்றது. இலக்கியங்கள் மட்டுமல்லாது நாட்டுப்புற இலக்கியமான கதைப்பாடலிலும் இச்சிலப்பதிகாரத்தின் செல்வாக்கு மிகுந்து காணப்படுகிறது.

    கோவலன் க​தை – நூல் அறிமுகம்

    இது ​பெரிய எழுத்துக் ​கோவிலன் க​தை என்றும் ​கோவலன் க​தை என்றும் வழங்கப்படுகிறது. இக்​கோவிலன் க​தை​யைப் புகழேந்திப் புலவர் என்பர் எழுதியுள்ளார். இவ​ரைப் பற்றிய ​செய்திகள் கி​டைத்ததில், நள​வெண்பா​வை இயற்றிய புகழேந்திப் புலவரும் கோவலன் க​தை​யை எழுதிய புக​ழேந்திப் புலவரும் ஒருவரல்லர். நாட்டுப்புற மக்களி​டை​யே காணப்பட்ட ​கோவிலன் க​தை​யை அப்படி​யே மக்கள் விரும்பும் வண்ணம் ​இ​சையுடன் கூடிய கதைப்பாடலாகப் புக​​ழேந்திப் புலவர் இயற்றியுள்ளார்.

    புகழ்​பெற்ற புலவர் புக​ழேந்தியாரின் ​பெயரில் எழுதினால் அனைவரும் விரும்பி நூலி​னைப் பயில்வர் என்ற காரணத்தா​லோ அல்லது ​வேறு ஏ​தேனும் காரணத்தினா​லோ இந்நூலின் ஆசிரியர் தமது உண்​மையான ​பெயரி​னைக் குறிப்பிடாது புக​ழேந்திப் புலவரின் ​பெயரி​னைக் குறிப்பிட்டு எழுதியுள்ளார். இந்நூலில் எவ்விடத்திலும் இத​னை இயற்றிய புலவரின் ​பெயர் காணப்படாதது ​நோக்கத்தக்கது. நாட்டுப்புற உடுக்கடிக் க​தைப்பாடல் அ​மைப்பி​லே​யே இக்க​தை ஆசிரியரால் கூறப்படுகின்றது. இந்நூலி​னை பி.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ் அவர்களால், மின்ட் ​போஸ்ட், ​சென்​னை – 1 என்ற முகவரியிலிருந்து ​வெளியிடப்பட்டுள்ளது. ​வெளியிடப்பட்ட ஆண்டு குறிக்கப்படவில்​லை. இந்நூலி​னை திருமகள் அச்சகத்தார், (சென்னை-1)  வாங்கி அதே ​போன்று 1980-ஆம் ஆண்டு நூலாக வெளியிட்டுள்ளனர்.​ கோவலன் க​தை என்ற த​லைப்பில் சகுந்த​லை நிலையத்தார் மண்ணடி, ​சென்​னை-1 என்ற முகவரியிலிருந்து இரண்டாம் பதிப்பாக ஆகஸ்ட்-2007ஆம் ஆண்டு ​வெளியிட்டுள்ளனர்.

    கோவலன் க​தை நூல​மைப்பு

    ​கோவலன் க​தை நூலானது சிலப்பதிகார நூ​லைப் ​போன்று அமையவில்​லை. இதில் பதிகம் என்​ற பகுதி காணப்படவில்​லை. நாட்டுப்புறக் க​தைப் பாடலைப் ​போன்று,

    “முந்தி முந்தி விநாயக​னே முக்கணனார் தம் மக​னே

    ஐந்து கரத்​தோ​னே அருளு​மையாள் புத்திர​னே

    விக்கின விநாயக​னே ​வெண்​ணெயுண்​டோன் தன் மருகா

    முக்கணனார் ​பெற்​றெடுத்த மூஷிக வாக​ன​னே

    ​வெட்பா​லைக் குள்ளிருக்குஞ் சப்பாணிப் பி​ள்​​ளையா​ரே

    சப்பாணிப் பிள்​​ளையா​ரே ​பொற்பாதம் நான் மற​வேன்

    ​கோவலனார் தம் க​தை​யைக் குவலயத்தில் நான்பாட

    வின்னங்கள் வாராமல் விநாயக​னே முன்னடவாய்!

    என்று ​தொடங்கி சுப்பிரமணியர் துதி, ​சொக்கநாதர் துதி, திருமால் துதி, சரஸ்வதியம்மன் துதி ஆகிய கடவுளர்களின் துதியானது இடம்​பெற்றுள்ளது. அதன் பின்னர் புலவர் ​நேரடியாக​வே க​தை​யின் வரலாறு என்று க​தையைக் கூறத் ​தொடங்குகின்றார்.

         சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தாக அ​மையவில்​லை. மாறாக,

        “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

        கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்

        வங்கண் உலகுஅளித்த லான்.

     

        ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

         காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு

        மேரு வலம்திரி தலான்.

     

         மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்

         நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்

         மேநின்று தாஞ்சுரத்த லான்.

     

         பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்

         வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு

         ஓங்கிப் பரந்துஒழுக லான்”

    என்று இயற்​கை வாழ்த்தாகத் ​தொடங்குகின்றது,

         மங்கல வாழ்த்துப் பாடலில் ​கோவலன் கண்ணகி திருமண நிகழ்விலிருந்து சிலப்பதிகாரத்தின் க​தையானது ​​தொடங்குகின்றது. ஆனால் ​கோவிலன் கதையானது கண்ணகி, ​கோவலன், மாதவி, வசந்தமா​லை உள்ளி​டோரின் முற்பிறப்பு வரலாற்​றைக் கூறுவதிலிருந்து ​தொடங்குகிறது. சிலப்பதிகாரத்தில் ​கோவலன், கண்ணகி ஆகி​யோரின் முற்பிறப்பு வரலாறு மது​ரைக் காண்டத்தில் கட்டு​ரைகாதையில் கூறப்படுகின்றது.

        கோவிலன் க​தையானது  ​க​தையின் வரலாற்றில் ​தொடங்கி கண்ணகியம்மன் திரு​வொற்றியூருக்கு வருதல் வ​ரையில் நிறைவுறுகிறது. சிலம்பி​னைப் ​போன்று இக்க​தையில் கண்ணகி தெய்வமான பின்​பே கதைநி​றைவுறுவது குறிப்பிடத்தக்கது.

    ஊழ்வி​னை

    காலங் காலமாக மக்களி​டை​யே நிலவி வரும் விதிக் கொள்கையானது சிலப்பதிகாரத்தின் முக்கிய ​நோக்கங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. ஊழ்வினையானது ​தொடர்ந்து வந்து ஒருவ​ரைப் பற்றும். இதனை,

    “ஊழ்வினை யுருத்துவந் தூட்டும் என்பதூஉம்”

    என்று சிலப்பதிகாரம் எடுத்து​ரைக்கின்றது. சிலம்பின் இவ்வூழ்வி​னைக் ​கொள்​கையானது அதன் பின்வந்த அ​னைத்து இலக்கியங்களிலும் ​பெருந்தாக்கத்​தை ஏற்படுத்தி அவ்விலக்கியங்களிலும் இடம்​பெற்றுள்ளது.

         ​கோவிலன் க​தைப் பாடலில் இவ்வூழ்க் ​கொள்​கையானது கதையின் ​தொடக்கத்தி​லே​யே இடம்​பெற்றுள்ளது. க​தையின் ஒவ்வொரு பகுதியிலும் இக்கொள்​கையானது ஆசிரியரால் வலியுறுத்தப்படுகின்றது. சிலப்பதிகார ஆசிரியர் ஒவ்​​வொரு நிகழ்ச்சியி​னைக் குறிப்பிடும்​போதும் இவ்வூழ்வி​னை​யை வலியுறுத்திக் கூறிக் ​கொண்​டே ​செல்வார் அது​போன்​றே புக​​ழேந்திப் புலவரும் இவ்வூழ்வி​னை​யை வலியுறுத்துகிறார்.

         மாதகி​யை நாட்டியமாட அ​ழைத்தல் ​வேண்டும் என்று வற்புறுத்துகிறான் ​கோவலன். மாதகி நாட்டியத்​தை ​வைக்கவில்​லை​யெனில் நான் இறந்து விடுவேன் என்று கூறுகின்றான். அத​னைக் கேட்ட அவனது தந்தை முத்துச் ​செட்டி,

         “அப்​போது முத்துச் ​செட்டி அழகு து​ரை மன்னவனும்

          எண்ணாது ​மெண்ணுகிறான் எண்ணி மனங்குன்றுகிறான்

          சாதகமும் ​பொய்க்காது த​லைவிதியுந் தப்பாது

          பன்னிரண்டு பிராயத்தில் ​பைங்​கொடி மாதகியாள்

          மாதகி யண்​டையிந்த மன்னவன் ​போவா​னென்று

          சாதகமும் உ​ரைத்தது சரியாக ஆச்சுதுகாண்” (​கோவிலன்க​தை, ப., 17)

    என்று நி​னைக்கின்றான். ஊழ்வி​னையின் வலி​மை​யை ​கோவலனின் தந்​தைவழி புலவர் எடுத்து​ரைக்கின்றார்.  காம​தேனு இட்ட சாபவிதியின்படி கோவலன் 16 வயதில் இறக்க ​வேண்டும் என்ற ஊழ்வினை விரட்ட ​கோவலன் கண்ணகியுடன் மது​ரை ​செல்கிறான்.

         கண்ணகியின் காற்சிலம்பு புலம்பிய​தைக் கண்ணகி ​கோவலனிடம் கூறி மது​ரைக்குப் ​போக ​வேண்டாம் என்று தடுக்கிறாள். ஆனால் கோவலன் அத​னைக் ​கேளாமல்,

         “​செத்தாலும் ​தென்மது​ரை சிலம்பு விற்றால் ​தென்மது​ரை

          அள்ள ​வேணுந் திருட ​வேணும் மணிமது​ரைச் சீ​மையி​லே

          என் சிலம்​பை விற்றா​லே ​யெனக்குப் ப​கைவரு​மோ?” (ப., 54)

    என்று ​கேட்டு மது​ரைக்குக் கண்ணகியுடன் ​செல்கின்றான். எவ்வாறு சிலம்பில் ஊழ்வி​னை உறுத்தூட்ட ​கோவலன் ​சென்றா​னோ அ​தே​போன்று இக்கோவிலன் க​தையிலும் ஊழ்வி​னை அவ​னை அ​த்துக் ​கொண்டு மது​ரைக்கு ஏகுகின்றது.

    பின்னால் நடக்கப் ​போவ​தை முன்ன​ரே கூறுதல்

    kan

         ​கோவலன் மது​ரையில் ​இறக்கப் ​போகின்றான் என்ப​தை இளங்​கோவடிகள் பல்​வேறுவிதமான நிகழ்வுகள் வழி எடுத்து​ரைப்பார். கண்ணகியின் கண்கள் துடிப்பது, கண்ணகி கனவு காண்பது, ​வை​யை ஆறானது ​கோவல​னையும் கண்ணகி​யையும் பார்த்து இருவருக்கும் துன்பம் ​நேரப் ​போவ​தைச் சகிக்க முடியாமல் தனது முகத்​தை பூக்களாலும் த​ழைகளாலும் மூடிக்​கொண்டு ​போவதாகவும், மதுரையின் மதில்ச் சுவரின் மீதிருந்த ​கொடிகள் கோவலனையும் கண்ணகி​யையும் பார்த்து மது​ரைக்கு வாராதீர்கள் என்று கூறுவ​தைப் ​போன்று காற்றில் அ​சைந்ததாகவும், கண்ணகி ​கோவலனுக்கு மாதரிவீட்டில் உணவு சமைத்துப் பரிமாறுவதற்காக ​மெழுகிய​போது கோவலனுக்கும் கண்ணகிக்கும் ​நேரப் ​போகும் துயரத்​தை உணர்ந்து மண்மகள் மயங்கிப் ​போய்விட்டதாகவும் அவளின் மயக்கத்​தைத் தெளிவிப்பவள் ​போன்று கண்ணகி நீர் ​தெளித்து ​மெழுகினாள் என்றும், ​கோப்​பெருந்​தேவியின் கனவும் என்று பல்​வேறு சம்பவங்கள் ​கோவலன் இறப்​பையும் கண்ணகியின் துன்பத்​தையும் முன்ன​ரே எடுத்துக் கூறுவதாக இளங்​கோவடிகளால் சிலப்பதிகாரத்தில் எடுத்து​ரைக்கப் ​பெற்றுள்ளது.

    இளங்​கோவடிகள் பின்பற்றிய இ​தே ​போன்று ​கோவலன் இறக்கப் ​போகிறான் என்ப​தை பலரின் வாயிலாகவும் எடுத்துக் கூறுகிறார். கண்ணகி சிலம்​பைக் கழற்ற மு​னையும்​போது அச்சிலம்பானது புலம்பி ​கோவலன் மது​ரையில் இறக்கப் ​போகிறான். என்று கூறுகிறது. அத​னை ஏற்காத ​கோவலன் மீறிச் செல்கிறான்.

    அவ்வாறு மது​ரை​யை ​நெருங்குகின்ற​போது ​​எதிரில் ​தென்பட்ட ஊர்க​ளைப் பற்றிக் ​கோவலன் கண்ணகிக்குக் கூறிக் ​கொண்​டே வருகின்றான். அப்​போது வழியில் இருந்த விநாயக​ரை வழிபட்டு, கோவலனார் எந்தவிதமான துன்பமும் இன்றி சிலம்பு விற்று வருவாரா? என்று ஆரூடம் ​கேட்கிறாள் கண்ணகி. முதலில் வாய்திறக்க மறுக்கும் விநாயகர் பின்னர்,

    “இந்தப் பயணம் எழில் மது​ரை ​போவாரானால்

    மாண்டு மடிந்திடுவார் வரப்​போறதில்​லை​ யென்றார்

    துரும்​பெடுத்து ​மேற்​போடுந் துன்மார்க்க மது​ரையது

    ​கொடி​யெடுத்து ​மேற்​போடுங் ​கொடிதான ​தென்மது​ரை

    இந்த மது​ரை தமக்கு இவர் ​போனால் ​பெண்ணர​சே

    திரும்பி வரப்​போவறதில்​லை ​தேன்​மொழி​யே உன்புருஷன்

    பாவி தட்டான் தாயாதி பாண்டிய​னோ பங்காளி

    மூத்த தமயனவன் தமுதற்ற​மையன் பிள்​ளை​யென்று

    ஒப்பாரி ​கொண்டு உறவு ​சொல்லித் தான​​ழைப்பான்

    வாத்திரயாரடித்ததனால் வனம் ​போனபிள்​ளை​யென்று

    ​செப்பிய​​ழைத்துச் சிலம்பு தன்​னைப் பறித்துக்

    கட்டினகட்​டோட கச்​சேரி ​கொண்டு ​போவான்

    நீதி​கேளாப் பாண்டியர்கள் நிற்கத் த​லை​வெட்டி ​வைப்பார்

    பழிகார மது​ரை ​தேடி பட்டணத்தார் ​போனா​​லே

    இறந்து மடிந்திடுவார் இனித்திரும்பப் ​போவதில்​லை

    பின்​னேவருங் காரியத்​தை முன்​னே நான் ​சொல்லிவிட்​டேன்

    என்று விநாயகர் எடுத்துக் கூறிய​தைக் கண்ணகி கூறினாள். ஆனால்      அத​னைக் ​கோவலன் ஏற்காது பிடிவாதமாக மது​ரை​யை நோக்கி நடந்தான்.

    அ​தே​போன்று மது​ரையில் சிலம்பி​னை விற்கும்​போது சிந்தாமணி என்ற தாசியானவள் ​கோவல​னைத் தடுத்து அவனுக்கு ​வேண்டிய செல்வத்​தைத் தருவதாகக் கூறி நீ உனது அரண்ம​னைக்குப் ​போ என்று கூறித் தடுக்கிறாள். அதற்குக் ​கோவலன்,

         “தாசியவள் நீ ​கொடுக்க தனவணிகன் வாங்கு​வே​னோ

          ஆர்​போட  ​வேணு​மோ அவர்கள​தைப் ​போர்க்க ​வேணும்

    அவளரண்ம​னை​யை விட்டு ஆணழகர் வாரா​ரே” (ப., 59) 

    என்று கூறிவிட்டு சிலம்பி​னை விற்க அரசவீதிக்கு வருகின்றான். அப்​போது அரசியானவள் அவ​னை அழைத்து அந்தச் சிலம்பி​னைக் கையில் எடுத்துப் பார்த்து,

    “தவமாய்த் தவமிருந்து ​தையல​ரைப் ​பெற்​றெடுத்​தேன்

    வரமாய் வரமிருந்து ​வை​கையி​லே ஒப்ப​டைத்​தேன்

    அன்று கண்​டேன் மக​ளை இன்று கண்​டேன் சிலம்​பை

    என்று அழுது புலம்புகிறாள் ஆரணங்கு ராசகன்னி

    ​கோவல​ரைத்தான் பார்த்து ​கொம்ப​னையா​ளேது ​சொல்வாள்

    பாம்​பெடுத்து ​மேற்​போடும் பழிகாரத் ​தென்மது​ரை

    இந்த மது​ரையி​லே இறந்து ​போகநாளாச்​சே

    ஆ​னையின் ​மேல் திரவியத்​தை அனுப்புகி​றேனும்ம​னைக்கு

    அத்​தை​யெடுத்து முந்தன் அரண்ம​னைக்குப் ​போய்ச் ​சேரும்” (ப., 72)

    என்று கூற அத​னையும் ஏற்காது ​கோவலன் சிலம்​பை விற்க மது​ரை வீதியில் சுற்றித் திரிகின்றான்.

    அப்​போது அவன் ​வேத ஆசிரியரின் பள்ளிக்கூடத்திற்கு வந்த கோவலனின் வருத்தத்​தைக் க​ளைந்து, அவனிடம்,

    “அழிகார மது​ரையி​லே பட்டணத்தா​ரேன் வந்தீர்

    ​கொடும்பாவி மது​ரையி​லே ​கோவல​ரே​யேன் வந்தீர்

    நிந்​தையிட்டுத் த​லைவாங்கும் நீதியில்லா மது​ரையிது

    அநீதமாய் மாய வந்தீர் ஆணழகர் ​கோவல​ரே

    காராம்பசு​வை விற்றுக் கட்டழக வுந்தனுக்கு

    கூத்தியார் கடன​டைக்கக் ​கொற்றவ​ரே நான்தா​ரேன்

    அத்​தை ​யெடுத்து உந்தன் அரண்ம​னைக்குப் ​போய்வாரும்” (ப.,73)

    என்று கூறவும் ​கோவலன் அத​னைப் ​​பொருட்படுத்தாது ​கோவலன் நடந்தான். இவ்வாறு பலரும் கோவலனைத் தடுக்க அவன் அவற்றை​​யெல்லாம் உதறிவிட்டுச் சிலம்பி​னை விற்க முனைகின்றான். இவற்றிற்​கெல்லாம் ஊழ்வி​னை​யை​யே சிலப்பதிகாரமும் ​கோவலன் க​தையும் பின்ணணியாகக் காட்டுகின்றன.

    அரசியல் பி​ழைத்தவ​ரை அறம் அழிக்கும்

    அரசியலில் தவறி​ழைத்​தோ​ரை அறக்கடவு​ளே தண்டிக்கும் என்ற கருத்தானது புகழேந்திப் புலவரின் கோவலன் க​தையில் ஆழமாகவும் விரிவாகவும் எடுத்து​ரைக்கப்​பெற்றுள்ளது. சிலம்பின் செல்வாக்கினால் புக​ழேந்திப் புலவர் கண்ணகி​யே காளியாக உருமாறி, அழிப்பாதாகப் ப​டைத்துக் காட்டுகின்றார்.

    கண்ணகி பாண்டியர் அரச​வைக்குச் ​செல்வதாக இளங்​கேவடிகள் ப​டைத்துக் காட்டுவார். ஆனால் புகழேந்திப் புலவ​ரோ பாண்டியர்கள் கண்ணகி​யைத் ​தேடிவருமாறு ப​டைத்துக் காட்டுகின்றனர். அவ்வாறு வந்த பாண்டியர்க​ளைப் பார்த்து கண்ணகியானவள்,

    “அறிவு ​கெட்ட பாண்டிய​னே ஆளன் பழி​கொடடா

    புத்தி ​கெட்ட பாண்டிய​னே பழிக்குப் பழி​கொடடா

    விவரங்​கெட்ட பாண்டிய​னே ​வேந்தன் பழி​கொடடா

    என் கணவன் பழி​கொடடா கனிவு ​கெட்ட பாண்டிய​னே

    ஆள​னை ஏண்டா ​கொன்றாய் அறிவு ​கெட்ட பாண்டிய​னே”(ப., 102)

    என்று ​கேட்டவுடன் தங்களது தவறி​னை உணர்ந்து,

    “அறியாமல் ​கொன்று விட்​டோம் அரி​வை​யே என் ​செய்​வோம்

    ​தெரியாமற் ​கொன்று விட்​டோம் ​தேவி​யே ஏது ​செய்​வோம்

    முற்பழி பிற்பழி தானிப்பழி தாரு​மென்றாள்

    இப்படிக்குச் ​சொன்னாள் ஏந்தி​ழை நான் விட்டிடு​வேன்”(ப., 104)

    என்று கூறி பாண்டியர்கள் மன்றாட கண்ணகியாள் அவர்க​ளை வருமாறு கூறி அப்பாண்டியர்கள் ஆறாயிரம் ​பே​ரையும் அழித்தொழிக்கின்றாள் காளியாகிய கண்ணகியாள். அரசியல் பி​ழைத்​தோ​ரை கடவுளே மனிதவடிவில் வந்து அழிக்கும் என்று புகழேந்திப் படைத்துக் காட்டியிருப்பது சிலப்பதிகாரத்தின் செல்வாக்கி​னையும் அதன் தாக்கத்​தையும் காட்டுவதாக அ​மைந்திலங்குகின்றது.

    “அறிவ​ரை​போகிய ​பொறியறு ​நெஞ்சத்து இ​றைமு​றை பி​ழைத்​தோன் வாயி​லோ​யே!” என்றும் “தேரா மன்னா” என்றும் கண்ணகி கூறும் கடுமையான வார்த்​தைக​ளை​யே புக​ழேந்திப் புலவர் விரித்துப் பாடுகின்றார் என்பது ​நோக்கத்தக்கது.

    கண்ணகி – ​கோவலன் அறிமுகம்

    இளங்​கோவடிகள் கண்ணகி​யையும் ​கோவல​னையும்,

         “மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்

    ஈகைவான் கொடியன்னாள் ஈராறுஆண்டு அகவையாள்,

    அவளுந்தான்,  

    போதில்ஆர் திருவினாள் புகழுடை வடிவென்றும்

    தீதிலா வடமீனின் திறம்இவள் திறம்என்றும்

    மாதரார் தொழுதுஏத்த வயங்கிய பெருங்குணத்துக்

    காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னோ

    “இருநிதிக் கிழவன் மகன் ஈர்-எட்டு ஆண்டு அக​வையான்;

    அவனும்-தான்

    மண்​தேய்த்த புகழினான்; மதிமுக மடவார்தம்

    பண்​தேய்த்த ​மொழியினார் ஆயத்துப் பாராட்டிக்

    கண்​டேத்தும் ​செவ்​வேள் என்று இ​சை​போக்கிக் காதலால்

    ​கொண்​டேத்தும் கிழ​மையான்; ​கோவலன் என்பான் மன்​னோ”

                   (மங்கல.வா.பாடல்)

    என்று காப்பியத்தின் ​தொடக்கத்தி​லே​யே அறிமுகப்படுத்துகின்றார்.

    ஆனால் புக​ழேந்திப் புலவர் தனது க​தைப் பாடலில் ​கோவல​னை​,

         “அட்டாளுஞ் ​சொக்க​ரைப் ​போல் அழகு​டைய மன்னவனும்

          தேமல்வி​றையழகன் ​தெள்ளு மணிவாசகனார்

          உருமா​லைக் கட்டழகன் உத்தமனார் ​கோவலனும்

          அள்ளித் ​தெளித்தது​போல் அழகு சிறு ​தேமல்

          மாங்கா முடியழகன் மாதளம்பூ ​மேனியனாம்

          ​செக்கச் சிவந்தவன்காண் ​செங்கீ​ரைத் தண்டழகன்

          அட்டாளுஞ் ​சொக்க​ரைப்​போல் அழகு​டைய மன்னவன்தான்

          ​சோமன் கட்டி வீதிவந்தால் சுவாமி ​சொக்க​ரேச​ரென்பார்

          மண்​டை கட்டி வீதி வந்தால் மது​ரை வாழ் ​சொக்க​ரென்பார்

          ……………. …………………………….. ……………………………… ……………………………….. …………………………..

          இப்படிக்குக் ​கோவலனும் இருந்து வளர்நா​ளையி​லே”(ப., 10)

    என்று அறிமுகப்படுத்துகின்றார். கண்ணகி​யை,

         “காவிரிப்பூம் பட்டணத்தில் கண்ணியாள் மாதினுக்கு

          பன்னிரண்டு வயதாச்சு ​பைங்​கொடியாள் கண்ணகிக்கு

          நா​ளொரு ​மேனியாக நட்சத்திரம் ​போல் வளர்ந்தாள்

          ​பொழு​தொரு ​மேனியாக ​பொன்வண்டு ​​போல் வளர்ந்தாள்

          இப்படிக்குத்தான் வளர்ந்தாள் ஏந்தி​ழை கண்ணகியும்

          வளர்பி​றைச் சந்திரன் ​போல் மங்​கையரும் தான் வளர்ந்தாள்” (ப.,29)

    என்று வருணித்துக் கூறுகின்றார். கண்ணகி​யைக் காளியின் மறுவடிவாகக் ​கொண்​டே புலவர் ​கோவலன் கதை​யை நகர்த்துகின்றார். மாதகி ​கோவலனிடம் ​பொற்பதுமை செய்து தருமாறு கூறிய​போதும், பொற்பதுமை ​பேசவேண்டும் என்ற போதும், கோவலனிடம் இருந்து மாதகி அ​னைத்​தையும் பறித்துக் கொண்டு சிங்க முகக் ​கேணியில் தள்ளிய​​போதும் கோவலன் தனது ம​னைவி கண்ணகி​யை நி​னைத்து,

         “ஆவி​போகும் ​வே​ளையி​லே யா​ரை நி​னைக்கலுற்றார்

          பத்தாத பத்தினி​யே பழுதுபடாரத்தின​மே

          மா​லை பறி​போகுதடி மணவாளன் மாளுகி​றேன்

          தாலிபறி​போகுதடி த​லைவனிங்​கே மாளுகி​றேன்

          கூ​றை பறி​போகுதடி ​கொற்றவனார் மாளுகி​றேன்

          பத்தினியும் ​மெய்யானால் பக்கத்து​ணை வந்திடுவாய்

          கண்ணகியும் ​மெய்யானால் காக்க நீ வாருமென்றார்” (ப.,40)

    தன்​னைத் துன்பத்தில் இருந்து காக்க ​வேண்டும் என்று வருந்திக் கூறுகின்றான். ஒவ்​வொரு இடத்திலும் கண்ணகியா​லே​யே கோவலன் காப்பாற்றப்படுகின்றான். கண்ணகி காளியின் மறுவடிவமாக​வே ​கோவலன் க​தை முழுவதும் காட்டப்படுகிறாள்.

    இளங்​கோ கண்ணகி​யைக் காப்பியத்தின் இறுதியி​லே​யே தெய்வமாக்குகின்றார். ஆனால் புக​ழேந்திப் புலவ​ரோ கோவலன் கதையின் ​தொடக்கத்தில் இருந்தே காளி​தேவியாகவே காட்டுகின்றார். ​கோவலனுடன் காட்டுவழியில் ​செல்லும்​போது, அங்கு கண்ணகி தனித்திருந்த நி​லையில் துன்புறுத்த வந்த கள்வர்களைக் கண்ணகி கல்லாகப் ​போகுமாறு சாபம் கொடுக்கின்றாள். அதன்பின் அங்குவந்த ​கோவலனின் வேண்டுகோளுக்கிணங்க அவர்க​ளை மன்னித்து மீண்டும் உயிர்​கொடுக்கின்றாள்.

    அ​தே​போன்று ​கோவலன் இறந்துவிட்டதும் பாண்டியனிடம் நீதி கேட்க இளங்​கோ ப​டைத்த கண்ணகி அரச​வை ​செல்வாள். ஆனால் கண்ணகி கோட்டைவாயிலில் நின்று கொண்டு தன்​னைப் பார்க்க வருமாறு வாயில்க் காப்பவனிடம் கூற அதன்படி பாண்டியர்கள் கண்ணகி​யைப் பார்க்க வந்தனர். இவை புதுமையாகவும் வியப்பாகவும் இக்க​தையில் அமைந்துள்ளது.

    பத்தினியாள் மாதகி

    இளங்​கோவடிகள் மாதவி என்று காப்பியத்தில் குறிப்பிட்டு, கோவலனுக்காக வாழ்ந்தவளாக​வே காட்டுகின்றார். கோவலனிடத்தில் இருந்து எ​தையும் அபகரித்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடவில்​லை. அரங்​கேற்றக் கா​தையில்,

    “மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன

    மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து

    நகர நம்பியர் திரிதரு மறுகில்

    பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,

    மாமலர் நெடுங்கண் மாதவி மாலை   170

    கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு

    மணமனை புக்கு மாதவி தன்னொடு

    அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி

    விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.

    வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன்” (அரங்​கேற்று)

    என்று மாதவியின் ம​னையில் ​கோவலன் தங்கி இருந்த​தைக் குறிப்பிடுகிறார். அ​தே​போன்று ​கோவலன் இறந்த பின்னர் அவனுக்கும் தனக்கும் பிறந்த மகளைக் கண்ணகி மகள் என்று கூறி அவ​ளை​ பெளத்த துறவியாக்குகின்றாள். அ​தே​போன்று மாதவியும் புத்தமதத்தில் ​சேர்ந்து துறவியாகிறாள்.

    ஆனால் புக​ழேந்திப் புலவர் தான் வாழ்ந்த காலத்திற்​கேற்ப மாதகியைப் ப​டைத்துக் காட்டுகிறார். பரத்தையர் குலத்தில் பிறந்தவர்கள் எவ்வா​றெல்லாம் நடந்து ​கொள்வர் என்ப​தை மாதகி​யை ​வைத்துச் சித்திரித்துக் காட்டுகிறார் புலவர். பத்து வயதில் கோவலனின் திருமணத்திற்கு ஆடவந்த மாதகி அவளுடன் கூடப் பிறந்த ​பொன்னுருவி மா​லை​யைக் கழற்றி எறிய அது ​கோவலனின் கழுத்தில் விழுந்தது.

    அத​னைக் ​கோவலனால் கழற்ற இயலவில்​லை. மாதகி தான் கொண்டு வந்திருந்த இளநீரில் ஊர​வைத்த களிப்பாக்கி​னை எடுத்துத் தாம்பூலத்துடன் ​மைதடவிக் ​கொடுக்க அத​னை வாங்கி உண்ட கோவலன் மாதகி​மேல் ​மையல் ​கொண்டு கண்ணகி​யைப் பிரிந்த அவளுடன் ​சென்றுவிடுகின்றான். மாதகி ​கேட்கக் கேட்க பொன்னையும் ​பொரு​ளையும் அள்ளி அள்ளிக் ​கொடுக்கின்றான் கோவலன்.

    கண்ணகி ஒ​லையி​னைப் பார்த்த ​கோவலன் மாதகியிடம் வி​டைகேட்க அவ​ளோ உன்​னைப் ​போன்று ஒரு பொற்பதுமை ​செய்து வைத்துவிட்டுப் ​போ என்று கூறுகின்றாள். அதன்படியே ​கோவலனும் ​செய்து வைக்க, அப்பதுமை பேசவேண்டும் என்று கூற கோவலன் கண்ணகி​யை நி​னைத்தவுடன் பதுமை பேசியது. கோவலன் கண்ணகியிடம் செல்லும்போது பொற்பதுமை ​பேசாது ​போக​வே மாதகி அவ​னை ஓ​லை​யெழுதி மறுபடி வரவ​ழைத்து சிங்கமுகக் கேணியில் நீர் எடுத்துத் தருமாறு ​கேட்கிறாள். ​கோவலனிடம் இருந்து அனைத்​தையும் பறித்துக் ​கொள்கிறாள். அவனு​டைய அழகையும் பறித்துக் கொள்கிறாள். ஏதுமற்ற கோவலனிடம் தன்னிடம் பணி​செய்யும் நட்டுவனாருக்கும், க​லைஞர்களுக்கும் பொன்தர​வேண்டும் என்று ​கேட்க அத​னைத் தருவதற்குத் தன்னிடம் ஏதுமில்​லை. எப்படியாவது தருகி​றேன். கண்ணகி​யைப் ​போய்ப் பார்க்க அனுமதிதா என்று ​கேட்ட ​கோவல​னை ஆற்றில் பிடித்துத் தள்ளுகிறாள் மாதகி.

         இவ்வாறு பல ​கொடு​மைக​ளைக் ​கோவலனுக்குச் ​செய்யும் கொடுமையான பரத்​தையாகக் ​கோவலன் கதையில் சித்திரிக்கப்படுகிறாள். இருப்பினும் ​கோவலன் இறந்தபின்னர் கோவலனின் வேண்டுகோளுக்கிணங்க அவனது சி​தையுடன் மாதகியும் இறந்து போவதற்குச் சம்மதம் ​தெரிவித்து,

    “நீ-என்ன சுகமறியவாய் என்றன் தமக்​கைய​ரே

    நான்கூட மாளுகி​றேன் நாயகனார் தம்முட​னே

    எங்களிருவ​ரையும் எடுத்துத் தகனஞ் ​செய்யும்” (ப.,108)

    என்று கூறிவிட்டு ​தனது மடியில் மலர்க​ளை ​வைத்துக் ​கொண்டு சிதை​யேறினாள். கண்ணகியாள் சிதைக்குத் தீ​வைத்தாள். அவர்களிருவ​ரையும் தீப்பற்றி எரித்தது. அவர்களது சாம்ப​லை எடுத்துக் காசியில் க​ரைப்பதற்காக கண்ணகி எடுத்த​போது மாதகியின் மடியில் கட்டியிருந்த மலர்கள் கருகாது அப்படி​யே இருக்கக் கண்டாள் கண்ணகி. அத​னைப் பார்த்த கண்ணகி,

          “பத்தினியாள் என்று ​சொல்லிப் பா​வைமனதில் எண்ணி” (ப., 109)

    வியந்து மனதிற்குள்​ளே​யே மாதகி​யைப் ​போற்றினாள். இப்பகுதி சிலப்பதிகாரத்தில் இடம்​பெறாத ஒன்றாகும்.

    புக​ழேந்தியாரின் புது​மைகள்

    பரத்​தை​மை ஒழுக்கத்​தின் ​கேடுக​ளை விளக்குவதற்காக​வே புகழேந்திப் புலவர் மாதகி​யைக் கொடுமை செய்பவளாகப் ப​டைத்துக் காட்டுகின்றார். மேலும் மாதகியின் தாய் வசந்தமா​லைதான் பல்வேறு கொடுமைகளை ​​​கோவலனுக்குச் ​செய்கின்றாள். மாதகியாகவே எந்த​வொரு ​தீங்கும் கோவலனுக்குச் செய்யவில்​லை. மாதகி தன்னு​டைய தா​யிடம் வந்து என்ன ​செய்ய ​வேண்டும் என்று ​கேட்ப​தை,

         “எல்லாம் பறித்துக் ​கொண்​டேன் இளங்​கொடி​யே தாயா​ரே

          திருப்பதி திம்ம​னைப் ​போல் நின்றாண்டி ​கோவலனும்

          அவ​னை இனி என்ன ​செய்கிறது ஏந்தி​ழை​யே தாயா​ரே

          சிங்கமுகக் ​கேணியி​லே ​​தேன்​மொழி​யே தள்ளு​மென்றாள்” (ப., 44)

    என்று புலவர் ப​டைத்துக் காட்டுகிறார்.

    பரத்​தைய​ரை நாடினால் எவ்வா​றெல்லாம் துன்புற ​நேரிடும் என்பதை மாதகி வசந்தமா​லை ஆகி​யோரின் வழி புக​ழேந்தியார் தெளிவுறுத்துகிறார். இளங்கோவடிகள் குறிப்ப​தைப் ​போன்று மாதரி என்று ​​பெய​ரைக் குறிப்பிடாது ஆச்சி என்று புக​ழேந்தியார் குறிப்பிடுகின்றார். கண்ணகி​யை கவுந்தியடிகள் அ​டைக்கலப் பொருளாக மாதரியிடம் அடைக்கலப்படுத்தி, “தாயும் நீ​யே ஆகித் தாங்குக” என்று கூறியது ​போன்று ​கோவலன் கண்ணகி​யை ஆச்சி (ஆய்ச்சி என்ப​தே வழக்கில் ஆச்சி என்று மருவி வந்திருத்தல் வேண்டும்)யிடம்,

         “மது​ரைக்கு யான்​போய் வருமளவுந்தாயா​ரே

          ​பெற்ற பிள்​ளை​போலாகப் ​பேணி வளர்த்திடுவாய்

          கண்ணகி​யை உன் மகள்​போல் காத்து வளர்த்திடுவாய்

          பத்தினி​யை உன்மகள் ​போல் பார்த்​தே இருத்திடுவாய்

          உத்தமி​யை உன் மகள் ​போல் உகந்து நீ காத்திடுவாய்

          ஆய​னைக் காத்ததது​போல் ஆச்சி நீ காத்திடுவாய்

          மாய​னைக் காத்தது​போல் மாதா​வே காத்திடுவாய்

          நான் ​​தென்மது​ரைத் தா​னேகித் திருமபி வருமளவும்

    அ​டைக்கல​மென் ம​னைவி ஆச்சி​யே உன்னிடத்தில்” (ப.,64)

    என்று அ​டைக்கலப்படுத்திவிட்டுச் ​செல்கிறான்.

    மது​ரை ​செல்லும் ​கோவலனிடம் தனக்கு ஏ​தேனும் அ​டையாளம் செய்துவிட்டுப் ​போ என்று கண்ணகி கூறுவதும் ​கோவலன் மரப்​பெட்டி​யை ​வைத்து விளக்​கேற்றி மாம்பழம், மல்லி​கைப்பூ, தேங்காய், சந்தனம், நி​றை ​செம்பில் தண்ணீர் இவற்​றை​யெல்லாம் வைத்துவிட்டு, எனக்கு ஏதும் துன்பம் நேர்ந்தால் ​செம்பில் தண்ணீர் கு​றையும், மல்லி​கைப் பூவாடும் மாங்கனி அழுகிவிடும், சந்தனம் உலரும் ​தேங்காய் உ​டையும், விளக்கு அவியும்மரப்​பெட்டி உ​டையும் என்று அ​டையாளம் ​செய்துவிட்டுப் ​போகின்றான். இந்தப் பகுதி சிலப்பதிகாரத்தில் இடம்​பெறாத ஒன்றாகும்.

    அ​தே​போன்று கருடனின் முட்​டைக​ளையும் குஞ்சுக​ளையும் துன்புறுத்திய வஞ்சிப்பத்த​னையும் அவனது குடும்பத்​தையும் பழிவாங்க கருடன் அரசியின் காற்சிலம்பி​னை எடுத்துக் ​கொண்டு போய் பாம்புப் புற்றினுள் ​போட்டுவிட்டு அவனது குடும்பத்​தைப் பழிக்குப் பழி வாங்குகின்றது கருடன். வஞ்சிப்பத்தனின் ம​னைவி முத்துமா​லை, மகன்கள் சுந்தரலிங்கம் ​சோமலிங்கம் ஆகி​யோரின் பெயர்கள் ​கோவலன் க​தையில் மட்டு​மே இடம்​பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வஞ்சிப்பத்த​னைக் காப்பாற்ற அவனது மகன்கள் வேதவாத்தியாரிடம் இருந்த ​கோவல​னைக் கண்டு வந்து அவனிடமிருந்த சிலம்பி​னை அபகரிக்கத் திட்டந்தீட்டித் தருவதும், வஞ்சிப்பத்தன் காணாமல் ​போன தனது அண்ணன் மகன் என்று கூறி ​கோவல​னை அ​ழைத்து அவனுக்குச் ச​மையல் ​பொருட்கள்​கொடுத்து உணவு ச​மைத்து உண்ணுமாறு கொடுப்பதும், பின்னர் கோவலனிடம் உள்ள சிலம்பி​னை கீ​ழே ​வைத்துவிட்டு உண்ணுமாறு கூறுவதும் முத்துமா​லை உலக்​கையால் ​கோவல​னை அடித்துச் சிலம்பி​னைக் களவாடுவதும் ​கோவல​னை அரசனிடம் கட்டி இழுத்துச் ​சென்று நிறுத்துவதும் கோவல​னைக் கண்ட பாண்டியர்கள் அவனது காலில் விழுவதும் அத​னைக் கண்ட வஞ்சிப்பத்தன் கள்வனின் காலில் அரசர்கள் வீழ்ந்து வணங்கலாமா என்று கூறுவதுமாகிய நிகழ்ச்சிகள் சிலம்பில் இடம்​பெறாத நிகழ்ச்சிகளாக புக​ழேந்திப் புலவரால் ப​டைத்துக் காட்டப்படுகின்றன.

    அ​தே​போன்று ​பாண்டியனின் அ​மைச்சர்கள் குற்றத்​தை விசாரிக்க ​வேண்டும் என்று ​கோருவதும் கோவலன் பாம்புக் குடத்துக்குள் ​கைவிட்டுச் சத்தியம் செய்யுமாறு கூறுவதும், கொப்பரையில் ​​கொதிக்கின்ற ​நெய்யி​லே ​கை​யைவிட்டுச் சத்தியம் செய்யுமாறு கூறுவதும் மழுவி​னைக் காய்ச்சி அத​னை எடுக்குமாறு கூறுவதும் என்னு​டைய சிலம்புதான் என்று அத​னை ஏந்திக் கொண்டு ​சென்று சிவன் ​கோயிலுக்குச் ​சென்று அரச​வைக்கு வருவதும் யா​னை​யை ​வைத்துச் சத்தியம் ​செய்ய ​வைப்பதும், குழி​தோண்டி அத​னைச் சுற்றிவரச் செய்து பள்ளத்திற்குள் ​கோவல​னைத் தள்ளுவதும் ​கொல்லவந்த யா​னை மத்தகத்தில் ​கோவல​னைத் தூக்கி ​வைத்துக் ​கொண்டு கூத்தாடுவதும், பாண்டியர்கள் கோவலனைக் கொல்ல மழுவரசர்க்கு ஆ​ணையிடுவதும், பாணடிய மன்னரைப் பார்த்து கண்ணகியாள் உங்க​ளைப் பழி வாங்குவாள் மது​ரை​யை அழித்து மன்ன​னைக் ​கொன்று கண்டதுண்டமாக்குவாள் என்று கூறுவதும் புகழேந்தியார் ​கோவலன் க​தையில் இடம்​பெறும் புது​மைமிகுந்த நிகழ்ச்சிகளாகும்.

    அ​தே​போன்று கண்ணகி ​கோவல​ன் இறந்தவுடன் தன்​னைத் தடை​செய்த ஆச்சி​யரின் வீடுக​ளை எரிப்பதும் பின்னர் ஆச்சி வேண்ட மீண்டும் அவற்​றை மறுபடி உண்டாக்கிக் கொடுத்ததும், கோவலன் இறந்து கிடந்த இடத்​தை மாடுகள் ​மேய்க்கும் சிறுவர்க்கு உணவுசமைத்துக் ​கொடுத்துக் ​கேட்டுக் கண்ணகி அ​டைந்து கோவலனை மீண்டும் உயிர்ப்பித்து அவனிடம் நடந்தவற்​றை அறிந்து அவன் தான் ​கொ​லை​செய்யப் பட்ட விதத்​தையும் அதற்குக் காரணம் யார் யார் என்ப​தையும் எடுத்துக் கூறி தன்னுடன் மாதகி​யையும் இணைத்துவிட​வேண்டும் என்று கூற அது​கேட்ட கண்ணகி அவ​னை மீண்டும் கொன்றுவிடுகிறாள். பின்னர் பாண்டிய மன்னர்க​ளைக் கொன்றுவிட்டு வஞ்சிப்பத்த​னையும் அவனது ம​னைவி​யையும் கொல்கிறாள். வஞ்சிப்பத்தனது மகன்க​ளை,

    “வா​வென்று ​சொல்லி​யே ​மைந்தர்க​ளைத் தான​ழைத்து

    எழுத்தாணி ​கொண்டு ஏந்தி​ழையாள் குத்தியவள்

    சிறுகுடலும் ​பெருகுடலுஞ் ​சேர்த்து​மே தான்பிடுங்கி

    அகாசமாக​வேதான் அந்தரத்தில் விட்​டெறிந்தாள்

    காலா​லே தான் கவ்விக் ​கொண்டு கடு​கென​வே ​போச்சுதுகாண் 

                                                                    (ப., 88)

    என்று ​கொல்வதும் அவர்களது குடல்க​ளைக் கருடன் கவ்விக் கொண்டு ​செல்வதும், ​கோவலன் மாதகி அஸ்தி​யைக் க​ரைக்க காசிக்குச் ​செல்வதும் சிவபெருமான் அவள் வருமிடத்தில் பல கோவில்க​ளை எழுப்பி அவளுக்குக் காசி​யைக் காட்டி கங்​கையில் கரைக்கச் ​சொல்வதும் கண்ணகி அஸ்தி​யைக் கரைக்க அது பூக்களாக மாறி மிதந்தது. பின்னர் திரு​வொற்றியூருக்கு வந்த கண்ணகி தாகமெடுப்பதாகக் கூற கிணற்றில் இறங்கித் தண்ணீர் குடி என்று சிவனார் கூற அவளும் கிணற்றில் இறங்கித் தண்ணீர் அருந்த அப்படி​யே பெரிய கல்​லை எடுத்து அத​னைச் சிவனார் மூடிவிட பலஇடங்களிலும் கண்ணகி தோன்ற சிவனார் அவற்​​றைக் கல்​வைத்து மூடிவிட கண்ணகியின் ​கோபந் தீர்க்க அவள் ​கேட்ட பலினைக் ​கொடுக்க​வே அவள் வட்டப்புரியம்மனாக மாறி பலி வேண்டாம் எரு​மைக்கடா பலிதந்தால் இன்பமாக நான் ​கொள்​வேன் என்று கூறிவிடுகிறாள்.

    புக​ழேந்திப் புலவர் அதன் பின்னர் இக்க​தை​யைப் படித்தவர்கள் அ​டையக் கூடிய பய​னை,

    “வட்டபுரியம்மன் க​தை வ​கையுட​னே ​வையகத்தில்

    கற்றவர்கள் ​கேட்டவர்கள் கலியுகத்தில் ​சொன்னவர்ள்

    ஆல்​போல் த​ழைத்து அறுகு​போல் ​வே​ரோடி

    மூங்கில் ​போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார்

    வாழி வாழி​யென்று ​சொல்லி வரமளித்தார் ஈஸ்வரனார்” (ப.,91)

    என்று சிவ​பெருமா​னே கூறுவதாக எடுத்து​ரைக்கின்றார். இப்பகுதி சிலப்பதிகாரத்தில் இடம்​பெறும் வரந்தருகா​தையில்,

    “​செல்லும் ​தேஎத்துக்கு உறுது​ணை ​தேடுமின்;

    மல்லன்மாஞாலத்து வாழ்வீர் இங்​னெ” (சிலம்.,வரந்தரு., 210-202)

    மறு​மை உலகத்திற்குச் ​​செல்லும் உற்ற து​ணையாகிய அறத்தி​னை​யே எப்​போதும்​தேடுங்கள் வளமிக்க இப்​பேருலகில் வாழ்கின்றவ​ரே! அதற்காவன இவ்வுலகி​லே​யே இயற்றினீராக வாழ்ந்து உயர்வீராக!” என்று எடுத்து​ரைப்பதுடன் ஒத்திருப்பது ​நோக்கத்தக்கது. புக​ழேந்திப் புலவர் ​சைவசமயத்த​தைச் சார்ந்தவர் என்பதும் இக்​கோவலன் கதை முழுவதும் சிவ​பெருமானுக்கு முதன்​மைதருவதாகவும் அமைந்துள்ளது. இதற்கு மாறாக சிலப்பதிகாரம் அனைத்துச் சமயங்கள் பற்றியும் எடுத்து​ரைத்து சமண சமயக் கொள்கைகளை ஆங்காங்கு எடுத்து​ரைத்துப் ​போவதும் ​வேறுபட்டதாக அ​மைகின்றது.

    சிலம்பின் ​செல்வாக்கால் பிற்காலத்தில் எழுந்த இந்த கதைப்பாடல் பனுவலானது பல்​வேறு வ​கையிலும் சிலப்பதிகாரத்திலிருந்து மாறுபட்ட கதையமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரக் கதையிலிருந்து பல இடங்களில் மாறுபட்டு காலத்திற்கு ஏற்றாற்​போன்று புக​ழேந்திப் புலவரால் ​கோவலன் க​தை பு​னையப்பட்டு கற்றாருக்கு இன்பமளிப்பதாக உள்ளது.

    மு​னைவர் சி.​சேதுராமன்,

    தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,

    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி,

    புதுக்​கோட்​டை.

    Share
  • பரிபாடலில் சிவன்

    –மு​னைவர் சி.​சேதுராமன்.

     

    சிவா

    மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை

    எட்டுத்​தொ​கை நூல்களுள் ‘ஓங்கு’ என்ற அ​டை​மொழியால் குறிப்பிடப்​பெறும் நூல் பரிபாடல் ஆகும். இவ்வ​டை​மொழி​யே இந்நூலின் சிறப்​பை விளக்குவதாக அமைந்துள்ளது. ​​
    தொல்காப்பியம்,
    “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
    பாடல் சான்ற புல​னெறி வழக்கம்
    கலி​யே பரிபாட்டு ஆயிரு பாவினும்
    உரியதாகும் என்மானார் புலவர்” (அகத் – சூ. 56)
    என்று பரிபாடலுக்கு இலக்கணம் கூறுகின்றது. அகப்​பொரு​ளை கலிப்பாவினாலும் பரிபாடலாலும் பாடுதல் ​வேண்டும் என்ற ​தொல்காப்பியம் கூறும் இலக்கணத்திற்கு இலக்கியங்களாகக் கலித்​தொ​கையும் பரிபாடலும் அ​மைந்திலங்குகின்றன. இப்பரிபாடல் அகப்புற இலக்கியமாக அ​மைந்துள்ளது.

    தொல்காப்பியர் சிவ​னைப் பற்றி யாதும் ​தொல்காப்பியத்தில் குறிப்பிடவில்​லை. ​மேலும் சங்க நூல்களில் சிவன் எனும் ​பெயர் இடம்​பெறவில்​லை என்பதும் ​நோக்கத்தக்கது. சிவனு​டைய இயல்வுகள் பலவும் சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டுத்​தொ​கை நூல்களில் இடம்​பெற்றுள்ள கடவுள் வாழ்த்துப் பாடலில் பாரதம் பாடிய ​பெருந்​தேவனாரால் சிவனு​டைய உருவத் திரு​மேனியின் சிறப்பு எடுத்து​ரைக்கப் ​பெற்றுள்ளது. பரிபாடலில் திருமால், ​செவ்​வேள், ​கொற்ற​வை பற்றிய பல ​செய்திகள் இடம்​பெற்றிருந்தாலும் சிவன் குறித்த ​செய்திகளும் இடம்​பெற்றுள்ள​மை ​நோக்கத்தக்கது.

    பரிபாடல் இலக்கணம்:
    தொல்காப்பியர் ​செய்யுளியலில் பரிபாடலுக்கு உரிய இலக்கணத்​தை விளக்கும்​போது, “அது நான்கு வ​கைப்பட்ட ​வெண்பா இலக்கணத்​தையு​டையது. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, ​வெண்பா, கலிப்பா, மருட்பா என்று கூறப்படும் எல்லாப் பாவினு​டைய உறுப்புக்க​ளைப் ​பெற்று வரும். ​கொச்சகம், அராகம், சுரிதகம் எத்து ​சொற்சீரடி அதில் அ​மைந்திலங்கும். அது காமப் ​பொருள் பற்றிப் பாடப்படும்” என்று குறிப்பிடுகிறார்.

    இந்நூலில் முருகன், திருமால் காளி பற்றியும் ​வை​யை பற்றியும் இ​றையுணர்வு மிக்க பாடல்கள் இடம்​பெறக் காண்கி​றோம். இதனால் தான் ​தொல்காப்பியர் காலத்திற்குப் பின் இ​றைபக்தி பற்றிப் பாடும் வழக்கம் உண்டாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது. ​வை​யை குறித்து வரும் பாடல்களில் மட்டும் காமம் கண்ணிய பாடல்கள் விளங்குகின்றன.

    சங்கத்தார் தொகுத்த பரிபாடல்கள் 70 என்பது இறையனாரகப் பொருள் உரையாலும் (சூ.1), தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் பேராசிரியர் உரையாலும் (செய்யு. சூ. 149) தெரிய வருகிறது. இப் பாடல்களில் யார் யாரைக் குறித்து எத்தனை பாடல்கள் இருந்தன என்பதை,
    “திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
    தொருபாட்டுக் காடுகாட் கொன்று – மருவினிய
    வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
    செய்யபரி பாடற் றிறம்”
    என்ற ​வெண்பா குறிப்பிடுகிறது.

    பரிபாடலில் திருமாலுக்கு 8 பாடல்கள், செவ்வேளுக்கு 31 பாடல்கள், காடுகாள் (காட்டில் இருக்கும் காளிக்கு அதாவது கொற்றவைக்கு) 1 பாடல், வையைக்கு 26 பாடல்கள், மது​ரைக்கு 4 பாடல்கள் என மொத்தம் 70 பாடல்கள் உள்ளன என்று ​வெண்பா ​தெளிவுறுத்துகிறது. ஆனால் இன்று இவை முழுமையாகக் கிடைக்கவில்லை.

    இவற்றுள் இப்பொழுது நமக்குப் பிரதிகளில் கிடைப்பன முதலிலிருந்து 22 பாடல்களே. எஞ்சியவை இறந்துபட்டன. எனினும், பழைய உரைகளிலிருந்தும், புறத்திரட்டுத் தொகை நூலிலிருந்தும் 2 முழுப் பாடல்களும், சில பாடல்களின் உறுப்புகளும் தெரிய வருகின்றன. இவை ‘பரிபாடல்-திரட்டு’ என்னும் தலைப்பில் நூலிறுதியில் சேர்க்கப் பெற்றுள்ளன. 22 பாடல்களில் 6 திருமாலுக்கும், 8 முருகனுக்கும், 8 வையைக்கும் உரியனவாயுள்ளன. பரிபாடல் திரட்டில் உள்ள 2 முழுப் பாடல்களுள் ஒன்று திருமாலைப் பற்றியும், மற்றொன்று வையையைப் பற்றியும் அமைந்தவை. பாடற் பகுதிகளுள் சில மதுரையையும் வையையையும் குறித்தன. ஒரு சில உறுப்புகள் இன்னவற்றைச் சார்ந்தவை என்று தெரியக் கூடவில்லை.

    இந் நூலைத் தொகுத்தார், தொகுப்பித்தார், பெயர் ஒன்றும் அறியக்கூடவில்லை. தொகுத்த பாடல்களின் அடிவரையறை பற்றிய குறிப்பும் கிடைக்கவில்லை. பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி என்றும், பேரெல்லை 400 அடி என்றும், தொல்காப்பியர் வரையறுத்துள்ளனர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, இயற்றிய ஆசிரியர் பெயர், இசை வகுத்தோர் பெயர், பண்ணின் பெயர்,பற்றிய பழங் குறிப்புகள் உள்ளன. ஆயினும், பிரதிகளின் சிதைவினால் முதற் பாடலுக்கும் 22–ஆம் பாடலுக்கும் இக்குறிப்புகள் கிடைக்கவில்லை. 13ஆம் பாடலுக்கு இசை வகுத்தோர் பெயர் காணப்படவில்லை. முதற் பாடலில் அராகமாக வருகின்ற 14 ஆம் வரி முதல் 28 ஆம் வரி வரையிலுள்ள பகுதி தெளிவின்றி உள்ளது. இப் பகுதியில் பொருள் வரையறை செய்வதற்குப் பிரதிகளின் உதவியும் பழைய உரையின் உதவியும் கிடைக்கவில்லை. இவ்வாறே ஏனைய பாடல்கள் சிலவற்றிலும் ஒருசில இடங்கள் உள்ளன.

    “பரிந்த பாட்டு பரிபாட்​டென வரும். அதாவது ஒரு ​வெண்பாவாகி வருதலின்றிப் பல உறுப்புகளுடன் ​தொடர்ந்து ஒரு பாட்டாகி முடிவது. பரிபாடல் என்பது பரிந்து வருவது. பல வடிவம் ​பெற்று வருவது.நான்கு பாவாலும் வந்து பல அடியும் வருமாறு நிற்கும்.

    பரிபாடலின் சிறப்பு:
    பரிபாடல் இ​சை​பொருந்திய பாடல்கள் ஆகும். இப்பரிபாடல் இ​சைப் பாடலாக இருந்த​மையால் இதற்கு இ​சை அ​மைத்தனர். பிற்காலத்தில் ​தேவார திவ்விய பிரபந்த நூல்கள் ​தோன்றக் காரணமாக அ​மைந்த​வை இப்பரிபாடல்க​ளே ஆகும். இ​சைய​மைப்​பை ஒட்டி இப்பாடல்கள் அ​மைந்துள்ள​மை குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலில் உள்ள 12 பாடல்கள் பா​லைப் பண்ணிலும், அடுத்துவரும் 5 பாடல்கள் ​நோதிறம் பண்ணிலும், இறுதியாக வரும் 4 பாடல்கள் காந்தாரப் பண்ணிலும் அ​மைந்துள்ளன. இறுதியில் உள்ள பாடலின் பண்​ணை அறிய இயலவில்​லை. சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந் நூல் பிற்காலத்தில் அழிந்துபோகும் நிலை எய்தியபோது பல சுவடிகளைச் சோதித்துத் தற்காலத் தமிழரும் பயன் பெறும் வகையில், டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் பரிமேலழகர் உரையுடன் 1918-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும் வெளியிட்டுள்ளனர்.

    பரிபாடல் திரட்டு என்பது சில நூல்களில் இறுதியில் ​கொடுக்கப்​பெற்றுள்ளது. ம.து ​தொடர்ச்சியாக உள்ள நூலில் காணப்படாமல் பண்​டைய உ​ரையாசிரியர்களால் காட்டப்பட்ட ​​மேற்​கோள்களிலிருந்தும், புறத்திரட்​னென்று ​தெரிந்த பாடல்கள் ஆகும். இதில் 11 பாடல்கள் இடம்​பெற்றுள்ளன. இதில் ஒரு பாடல்(1) திருமால் பற்றியும், 6 பாடல்கள் (6,7,8,9,10,11) மது​ரை​யைப் பற்றியும், ​வை​யை குறித்து 3 பாடல்களும் (2,3,4) இடம்​பெற்றுள்ளன. இத்திரட்டில் இடம்​பெற்றுள்ள ஐந்தாவது பாடல் ​பொருள் விளங்காத பாடலாக அ​மைந்துள்ளது. 1-4 வ​ரையுள்ள பாடல்கள் ​தொல்காப்பியம் ​செய்யுளியல்​பேராசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர் உ​ரைப்பகுதிகளிலும், 5-ஆவது பாடல் நாற்கவிராச நம்பியின் அகப்​பொருள் 129-ஆம் நூற்பாவின் உ​ரையில் இடம்​பெற்றுள்ளது. 6-11வ​ரையுள்ள பாடல்கள் புறத்திரட்டில் இடம்​பெற்றுள்ளது ​நோக்கத்தக்கது.

    ​சைவமும் சிவனும்:
    சைவ சமயம் என்பது சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். சைவம் சிவனுடன் ​தொடர்பு​டையது எனத் திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார். சிவ வழிபாட்டி​னை சிவநெறி என்றும் சைவநெறி என்றும் கூறலாம். சைவ சமயத்தினைச் சுருக்கமாகச் சைவம் என்று அழைக்கின்றார்கள். பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், ​சே​யோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும், இம்மதத்தினை சிவ மதம் என்றும் தமிழர் சமயம் என்ற நூலில் பாவணார் குறிப்படுகிறார். இச்​சைவ சமய​மே உலகில் தோன்றிய முதல் சமயம் என்று கூறப்பெறுகிறது.

    தொன்மையான ​மொகஞ்சதா​ரோ அகழ்வாராய்ச்சியின் ​போது கண்டுபிடிக்கப் பெற்ற ஒரு முத்திரை, சிவ உருவத்தின் முன்னோடியாகக் கருதப்பெறுகிறது. மூன்று தலையினையுடைய தியானத்தில் இருப்பவரைச் சுற்றி மிருகங்கள் இருப்பதாக அமைந்த இந்த முத்திரை பசுபதி முத்திரை என்று அழைக்கப்பெறுகிறது. அகழ்வாராய்ச்சி அறிஞரான சர் ஜான் மார்சல் மற்றும் பலர் இந்த முத்திரை சிவனது தோற்றத்தினைக் குறிப்பதாகக் கூறியுள்ளனர்.

    சிவன் என்ற தமிழ்ச் சொல்லிற்கு சிவந்தவன் என்று பொருளாகும். தமிழர்கள் குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாக வழிபட்ட​ சே​யோன் என்பதன் பொருளும் சிவந்தவன் என்பதால் சேயோனே சிவன் என்று தமிழறிஞர்கள் கருதுகிறார்கள். முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமார் கடவுள் எனப் பல்​வேறுவிதமான சிவப்பெயர்கள் சங்கநூல்களில் காணக்கிடக்கின்றன. சிவம் என்ற சொல்லுக்கு “செம்மை” (பூரணத்துவம்), “மங்களமானது” என்று பொருளாகும். முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றனர்.

    உலகத்தின் கடவுள் (எந்நாட்டவருக்கும் இறைவன்) எனவும், பரப்பிரம்மம், ஆதி அந்தம் இல்லாதவன் என்றும் இறைவன் என்று வழங்கப்பெறுகிறார். தேவநாகிரி சொல்லான சிவ (शिव) என்பதற்கு களங்கமற்ற மற்றும் அழிப்பவர் என்று பொருளாகும். சிவபெருமானை அகங்காரத்தினை அழிப்பவர் என்று புராணங்கள் பிரம்மன் தலை கொய்தது முதல் தட்சன் அழிவு வரை மேற்கோள்களோடு கூறுகிறன. வேதங்களில் ருத்ரன் என்ற சிவ அம்சம் அழிக்கும் தொழில் செய்யும் மும்மூர்த்திகளுள் ஒருவராகக் குறிப்பிடப்படுவது ​நோக்கத்தக்கது.

    சிவ​பெருமான் எக்கணமும் யோகநிலையில் ஆழ்ந்திருப்பதால் யோகி என்றும், அட்டமா சித்திகளில் வல்லவர் என்பதால் சித்தன் என்றும், சிவபக்தர்களின் பக்தியில் மூழ்கி, அவர்கள் கேட்கும் வரங்களின் விளைவுகளை ஆராயாமல் வரம் தருவதால் பித்தன் எனவும் குணங்களின் அடிப்படையில் அழைக்கப்படுகிறார். மேலும் ச​டை முடி​யையுடையதால் சடையாண்டி, சூலாயுதத்தினை வைத்திருப்பதால் திரிசூலன், மூன்றுகண்களை உடையதால் முக்கண்ணன் எனத் தோற்றத்தினை வைத்தும் பல பெயர்களின் அழைக்கப்படுகிறார்.

    அத்துடன் கையிலாய மலையில் வசிப்பதால் கயிலைவாசன் எனவும், சுடுகாட்டில் வசிப்பதால் சுடலையாண்டி எனவும் வசிப்பிடம் கொண்டும் பல பெயர்களின் சிவ​பெருமான் அறியப் பெறுகிறார். அடைக்கலம் காத்தான் எனத் தொடங்கி யாழ்மூரிநாதன் வரை ஆயிரம் தமிழ்ப்பெயர்களும் சிவபெருமானுக்கு கூறப்படுகின்றன.

    சிவபெருமான் சிவன் என்ற சொல்லால் குறிக்கப் பெறாது பிற சொற்களாலே குறிக்கப் பெறுகிறான். அதாவது சங்க இலக்கியத்தில் சிவன் என்ற சொல்லே இல்லை என்று சொல்லலாம். அதற்குப் பதிலாக ஆதிரையான், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப் பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன், முக்கட் செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப் பெறுகிறான்.

    முப்புரங்க​ளை எரித்தல்:
    வானிடத்தில் பறந்து திரியும் இயல்புடைய பொன், வெள்ளி, இரும்பு மதில்களைக் கொண்ட நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அரக்கர்களைச் சிவபெருமான் தன் சிரிப்பினால் எரித்தான் என்பது புராண வரலாறு ஆகும்.
    இச்செய்தி,
    “மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய
    மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்
    பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான்” (பரி.5, 25-27)
    எனப் பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.

    தாரகாசுரனு​டைய மகன்களான வித்யுன் மாலி, தராகாட்சன், கமலாட்சன் ஆகிய மூவரும் தந்​தையின் மரணத்திற்குப் பிறகு ​தேவர்க​ளைப் பழி வாங்க ​வேண்டு​மென்று பிரம்ம​தே​வனைக் குறித்துத் தவம் ​மேற்​கொண்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமு​றை முப்புரங்களும் ஒன்று ​சேரும்​போது ஒ​ரே பாணத்தால் அவற்​றை அழிக்கக் கூடிய ஆற்றல் வாய்ந்தவ​னே தங்​க​ளை அழிக்க வல்லவன் என அவர்கள் பிரம்மனிடம் இருந்து வரம் ​பெற்றனர். இவ்வரத்தின் வலி​மையினால் அவர்கள் அனைவருக்கும் தீங்கி​ழைத்து வந்தனர். அவ்வசுரர்கள் மூவரும் நி​னைத்த மாத்திரத்தில் பறந்து ​சென்று திரிபுரங்க​ளை அ​டைந்து ​தேவர்களுக்கும் உலகத்தவருக்கும் ​கொடு​மைகள் இ​ழைத்து வந்தனர். ​தேவர்கள் அவர்க​ளை அழிப்பதற்காகச் சிவ​பெருமா​னிடம் வந்து ​வேண்டினர். அவரும் அதற்கு இ​சை​ய​வே, அசுரர்க​ளை வதம் ​செய்வதற்காக சிவன் ஏறிச் ​செல்லும் இரதமாகத் ​தேவர்கள் தங்க​ளை​யே அர்ப்பணித்துக் ​கொண்டனர்.

    சூரியனும் சந்திரனும் இரு சக்கரங்களானார்கள். அஸ்தகிரியும் உதயகிரியும் இருசுகளாயின. மந்தர ம​லை​யே இரதமாகியது. ஆகாயம் ​கொடுமுடி ஆனது. ​தேவர்கள் இரதத்தின் அலங்காரப் ​பொருள்களானார்கள். விந்தியம​லை கு​டையாகியது. பிரம்ம​தேவன் கடிவாளத்​தைக் ​கையி​லேந்திச் சாரதியானார். பிரணவம் குதி​ரைக​ளை ஓட்டிச் ​செல்லும் சாட்​டையாக மாறியது. ​வேதங்கள் நான்கும் குதி​ரைகளாயின. ​மேரும​லை வில்லாக வாசுகி அதன் நாண் கயிறாகியது. சரசுவதி வில்லின் நுனியி​லே கலகல என ஒலிக்கும் சிறு மணிகளாக விளங்கினாள். விஷ்ணு பாணமானார்.

    பட்டணத்​தை ​நெருங்கியதும் சிவன் வில்​லை வ​ளைத்து ஊங்காரம் ​செய்தார். திரிபுரங்கள் ஒன்றாயின. ​நெற்றிக்கண்​ணைச் சிவன் திறந்தார். தீ முப்புரங்க​ளையும் எரித்தது. வில்​லை வ​லைத்துப் பாணத்​தை எய்தார். முப்புரங்களும் அழிந்தன. இக்க​தை சிவபுராணத்தில் இடம்​பெற்றுள்ளது. இத​னை​யே பரிபாடலும் எடுத்து​ரைக்கின்றது. இம்முப்புரத்​தை மும்மலங்கள் என்று கூறுவர். ஆணவம், கன்மம், மா​யை ஆகிய இவ்வான்ம பந்தமானது சிவஞானம் என்ற தீயால் எரிக்கப்படுகிறது, ஆன்மாக்கள் சிவத்​தொடர்பு ​பெற்றுச் சிறக்கின்றன. திரிபுரம் எரித்த சிவனு​டைய அருட்​செயலுக்குத் திருமந்திரமானது,
    “அப்பணி ​செஞ்ச​டை ஆதி புராதனன்
    முப்புரம் ​செற்றனர் என்பர்கள் மூடர்கள்
    முப்புரமாவது மும்மல காரியம்
    அப்புரம் எய்த​மை யாரறிவா​ரே” (திருமந்திரம்., 343)
    என்று ​விளக்கமளிக்கிறது.

    சிவ​பெருமான் திரிபுரம் எரித்த ​செய்தியானது,
    “……… ……… …. தாஅம் பணிவுஇல் சீர்ச்
    ​செல்வி​டைப் பாகன் திரிபுரம் ​செற்றுழிக்
    கல்உயர் ​சென்னி இமயவில் நாண் ஆகித்
    ​தொல்புகழ் தந்தாரும் தாம்” (பரிபாடல் திரட்டு,1;74-77)
    எனப் பரிபாடல் திரட்டில் உள்ள முதற் பாடலில் இடம்​பெற்றுள்ளது.

    சிவ​பெருமா​னை மற்றவர்க​ளே பணிவர். சிவன் பிற​தேவர்க​ளைப் பணியமாட்டார். அ​னைத்துத் ​தேவர்களுக்கும் த​லைவராக விளங்குகின்றார். சிவன் வி​ரைந்து ​செல்லும் கா​ளை​யை ஊர்தியாக உ​டையவர் என்று சிவ​பெருமானின் இயல்பி​னையும் அ​னைத்துக் கடவுளர்களுக்கும் முதன்​மையானவராக முழுமுதற் கடவுளாக விளங்குவ​தையும் இப்பாடல் எடுத்து​ரைக்கின்றது.

    சிவன் கங்​கை​யைத் த​லையில் ​வைத்தது:
    ம​லையரசனின் (பர்வதராஜன்) மற்றும்​ மைனாவதி தம்பதியினரின் மகளான கங்​கை, சிவபெருமானிடம் என்றும் புனித தன்மை உடையவளாகத் திகழ வரம் பெற்றார். இதனால்​தேவ​லோகத்தி​னைப் புனிதம் செய்ய இந்திரன் அழைப்பால் தேவலோக நதியாக மாறினாள். பகிரதனின் முன்னோர்கள் சாபம் பெற்று சாம்பலாக இருந்தார்கள். அவர்களுக்கு முக்தி கிடைக்க கங்கை நதி பூமிக்கு வந்தால் மட்டுமே இயலும் என்பதை அறிந்த பகிரதன் கங்கையை நோக்கித் தவமிருந்தார். தேவலோகத்திலிருந்து பூமிக்கு வரும் பொழுது எழும் பிரவாகத்தினை கட்டுப்படுத்த சிவபெருமானால் மட்டுமே இயலும் என்று கங்கை கூறியதால், பகிரதன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து கங்கையைப் பூமிக்கு வரும்பொழுது பிரவாகத்தினை தடுத்து காத்தருள வேண்டினார். பகிரதன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் கங்​கை​யைச் சடாமுடியில் தாங்கிப் பூமி தாங்கும் அளவில் மட்டும் வெளிவிட்டார். இதனால் சிவபெருமான் கங்காதரன் என்றும் சலதாரி என்றும் பெயர்பெற்றார். சிவபெருமான் கங்கையைச் சடையில் வைத்திருப்பதை,
    “இரு நிலம் துளங்காமை வடவயின் நிவந்து ஓங்கி
    அரு நிலை உயர் தெய்வத்து அணங்குசால் தலை காக்கும்
    உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட
    எரிமலர்த் தாமரை இறை வீழ்த்த பெருவாரி
    விரிசடை பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்ப
    தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி” (பரி 9;1-7)
    என்று பரிபாடல் குறிப்பிடுகிறது.

    நீலமணிமிடற்​றோன்:
    தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறுவதற்காகப் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. இதனால் சகல உயிர்களும் இறந்துவிடும் என்று ​தேவர்கள் பயந்தனர். அதனால் இவ்வுல​கைக் காப்பாற்றுவதற்காக அ​னைவரும் ​சேர்ந்து சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டனர்.

    அவர்களின் ​வேண்டு​கோ​ளை ஏற்ற சிவ​பெருமான் ஆலகால விஷத்தை உண்டு இவ்வுலகைக் காப்பாற்றினார். சிவன் ஆலகால விடத்​தை உண்ட​போது அருகிலிருந்த உமா​தேவியார் எல்லா உயிர்கட்கும் உறைபவனாம் சிவனின் உடலில் நஞ்சு சேர்ந்தால் சகல உயிர்க்கும் பாதிப்பினை உருவாக்குமென அஞ்சி, ஒடி வந்து சிவனாரின் கண்டத்தை இருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்து போனது ஆலகாலம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட சிவன் திருநீலகண்டரென்ற திருப்பெயர்ப் பெற்றார். இத​னை,

    “மறு மிடற்று அண்ணற்கு மாசி​லோள் தந்த
    ​நெறி நீர் அருவி அசும்பு உறு ​செல்வம்” (பரி 8: 127)

    “மணிமிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்​தோய் நீ” (பரி., 9:7)

    திருவாதி​ரை விழா:
    சிவபெருமானுக்குத் திருவாதிரை நாள் சிறப்புடையதாகக் கருதப்பட்டது. அதிலும் மார்கழித் திருவாதிரை நாள் சிறப்புடைய திருநாளாகக் கருதப்பட்டது. மழைக்காலத்தின் கடைசிப் பகுதியாகிய மார்கழி மாதத்தில் சந்திரன் முழுதாக நிறைந்துள்ள திருவாதிரை நாளில் சிவபெருமானுக்குத் திருவிழாவை முப்புரி பூணூ​லை உ​டைய பார்ப்பனர் அந்த விழாவில் இ​றைவனுக்குப் பலிப் ​பொருள் (பூ​சைப் ​பொருள்கள்) இட்ட ​பொன் கலங்க​ளையும் பிறவற்​றையும் ஏந்தித் ​தொடங்கினர். இதனை,
    “க​னைக்கும் அதிரிகுரல் கார் வானம் நீங்க
    பனிப்படு ​பைதல் வித​லைப் பருவத்து
    ஞாயிறு காயா நளிமாரிப் பின்குளத்து
    மாயிருந் திங்கள் மறுநி​றை ஆதி​ரை
    விரிநூல் அந்தணர் விழவு ​தொடங்கப்
    புரி நூல் அந்தணர் ​பொலம்கலம் ஏற்ப” (பரி., 11;74-80)
    எனப் பரிபாடல் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.

    முருகனின் தந்​தை:
    ஆதி அந்தணனாகிய பிரமன் அறிந்து தேர்க்குதிரைகளை ஓட்ட, வேதமானவை குதிரைகளாகவும், வையகமே தேராகவும், வாசுகி நாகம் நாணாகவும், மேரு மலை வில்லாகவும், பொன்-வெள்ளி-இரும்பு ஆகிய மூவகைப் புரங்களை ஒரு தீக்கணையாலே வேகும்படியும், அத்திசையே தீயாக எய்தவனும்; அமரர் மூலமாக (அவர்களை அதிஷ்டித்து) வேத யாகங்களின் அவியுணவை ஏற்பவனும் ஆகிய இளமை பொருந்திய கண்களையுடைய பார்ப்பானாகிய சிவபெருமான், உமையம்மையைத் திருக்கரம் பற்றிய அழகு (காமர் – அழகு) பொருந்திய திருமணத்தில், விண்ணோர்களிலெல்லாம் வேள்வி முதல்வனாக இருக்கின்ற விரிகதிர் போன்ற மணிகளைப் பூண்ட இந்திரனுக்குத் நெற்றியில் இமையாத கண்ணுடைய தான் அளித்த வரமாகிய, “தனக்குக் காமப் புணர்ச்சி இல்லையாயினும் ஒரு விலக்கமாக (புத்திரனைப் பெற்று) அமைய வேண்டும்” என்பது தான் உண்மைப் பொருளாக விளங்குவதால் “செய்வதற்கில்லை” என்று கூறி ஒதுக்காது, அழிவில்லாத மழுவுடைய அவன், எரி போலக் கனன்று ஏழு உலகங்களும் அச்சமுறுமாறு உருவினைக் கொண்டான்.

    அந்த நெருப்புருவத்தின் கருவினைப் பெற்றுக்கொண்ட உடல் பழுத்துத் தவம் பெருக்கி மெலிந்த சப்தரிஷிகளும், அதன் பெருமை உணர்ந்து அதனைப் பிரித்தெடுத்துத் தாம் வசீகரணம் செய்துகொண்டு மாதவர்களாகிய அவர்கள் தம் மனைவியர் வயிற்றில் அமையச் செய்தால் அது தகாதென (அதாவது சிவபெருமான் திருவருட் பிரசாதத்தைத் தாம் உண்டு அதனை அற்பமான புணர்ச்சி மூலம் தம் மனைவியர் வயிற்றில் அமைத்தல் பெருமானுடைய திருவருளாகிய அக்கருவின் பெருமைக்குத் தாகாது என), அவர்களே பெற்றுக் கொள்ளட்டும் என்று வேள்வித்தீ வளர்த்து அந்த முத்தீயில் அவியுடன் இட்டனர். அவ்வாறு அவ்வேள்வித் தீயில் திகழ்ந்ததான பிரசாதத்தை வடதிசையில் திகழும் விண்மீன்களான ஏழு மகளிருள் அருந்ததி தவிர மற்ற அறுவரும் உண்டனர்.

    மாசு மறு ஏதும் இல்லாத கற்புடைய மாதவர் மனைவியராகிய அவர்கள் தவறாமல் உன்னைக் (முருகப்பெருமானை) கருக்கொண்டனர் என சிவனருளால் முருகப்​பெருமான் ​தோன்​றிய​தை,
    “ஆதி யந்தணன் அறிந்துபரி கொளுவ
    வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து
    நாக நாணா மலைவில் லாக
    மூவகை, ஆரெயில் ஓரழல் அம்பின் முளிய
    மாதிரம் அழலவெய் தமரர் வேள்விப்
    பாக முண்ட பைங்கண் பார்ப்பான்
    உமையொடு புணர்ந்த காம வதுவையுள்
    அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி
    இமையா நாட்டத் தொருவரங் கொண்டு
    விலங்கென விண்ணோர் வேள்வி முதல்வன்
    விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்த
    தரிதென மாற்றான் வாய்மைய னாதலின்
    எரிகனன் றானாக் குடாரிகொண் டவனுருவு
    திரித்திட் டோனிவ் வுலகேழு மருளக்
    கருப்பெற்றுக் கொண்டோர் கழிந்தசேய் யாக்கை
    நொசிப்பி னேழுறு முனிவர் நனியுணர்ந்து
    வசித்ததைக் கண்ட மாக மாதவர்
    மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற்
    சாலார் தானே தரிக்கென அவரவி
    யுடன்பெய் தோரே யழல்வேட் டவ்வழித்
    தடவுநிமிர் முத்தீப் பேணியமன் னெச்சில்
    வடவயின் விளங்கா லுறையெழு மகளிருள்
    கடவுள் ஒருமீன் சாலினி யொழிய
    அறுவர் மற்றையோரு மந்நிலை அயின்றனர்
    மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்
    நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே
    நிவந்தோங் கிமயத்து நீலப்பைஞ் சுனைப்
    பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல்
    பெரும் பெயர் முருக!” (பரி 5; 21-50)
    என்ற பரிபாடல் எடுத்தியம்புகிறது.

    இப்பாடலில் சிவன் முப்புரங்க​ளை எரித்த நிகழ்வும் இடம்​பெற்றுள்ளது ​நோக்கத்தக்கது. ​மேலும் இப்பாடல் முருகப் பெருமானின் திருவவதாரத்தைக் குறிப்பது. சிவபெருமான் உண்மை பொருளாவதும், எல்லோரும் புணர்ச்சியின் மூலமே மகவு பெறும்பொழுது அரிதினும் அரிய பரமசிவம், மற்ற உயிகள் போலன்றி அரிய செயலாகப் புணர்ச்சி இன்றியே முருகப் பெருமானைப் பெற்றனர் என்பதும் இப்பரிபாடல் கூறும் சிவபெருமான் திறம் ஆகும்.

    சிவனின் தன்​மைகள்:
    சிவ​பெருமான் கா​ளை​யை வாகனமாக உ​டையவன்; ஆதி​ரை நாளுக்குரியவன். இத​னை,
    “புங்கவம் ஊர்வோனும்” (பரி., 8:2)
    “ஆதிரை முதல்வனின் கிளந்தநாதர் பன்னொருவரும் (பரி., 8: 6)
    என்று பரிபாடல் எடுத்து​ரைக்கின்றது.

    முடிவுகள்:
    பரிபாடலில் சிவன் குறித்த ​செய்திகள் 4 பாடல்களில் இடம்​பெற்றுள்ளன. பரிபாடல் திரட்டில் ஒருபாடலில் மட்டும் சிவ​னைப் பற்றிய ​செய்தி இடம்​பெற்றுள்ளது. சிவனின் அருட்​செயல்களான முப்புரம் எரித்தல் ஒரு பாடலிலும்(5), கங்​கை​யைத் தாங்கியது ஒரு பாடலிலும்(9), சிவனின் ​தோற்றம் குறித்த ​செய்தி இருபாடல்களிலும்(8,9), சிவனின் தன்​மைகள்(8) ஒரு பாடலிலும், சிவன் முருகப்​பெருமா​னைப் ​பெற்ற​மை(5) ஒரு பாடலிலும், சிவனுக்குரிய திருவாதி​ரை நாள் (11) ஒரு பாடலிலும் குறிப்பிடப்பட்டுள்ள​மை ​நோக்குதற்குரியது. பிற ​கடவுளர்க​ளைக் குறிப்பிட்டாலும் சிவ​​பெருமா​னே முழுமுதற் கடவுளாகப் பரிபாடலில் குறிப்பிடப்பட்டுள்ள​மை சிறப்பிற்குரியது. இப்பரிபாடலில் சிவன் என்று எந்தப்பாடலிலும் குறிப்பிடப் ​பெறா​மை குறிப்பிடத்தக்கது. செல்வி​டைப் பாகன், சலதாரி, மணிமிடற்றண்ணல், புங்கவம் ஊர்​வோன், ஆதி​ரை முதல்வன் என்​றே பரிபாடலில் சிவ​பெருமான் குறிக்கப்படுகிறார்.

    Picture Credits: https://www.facebook.com/LordShivaPictures

    Share