Author: முனைவர்.சி. சேதுராமன்

  • அறிஞர் நன்னன் அவர்களுக்கு அஞ்சலி

     

    Nannan_1_10024

     
    தமிழர் நெஞ்சம் நிறைந்திருக்கும்.
    நானிலத்தோர் நாளும் வாழ
    நல்ல தமிழ் நவின்ற நன்னா!
    நற்றமிழர் வாழ்வுயர நற்றமிழைக்
    காத்த தமிழ்க் காரி!
    இன்தமிழ் இலக்கணத்தை
    இன்சுவையாய் எடுத்துரைத்து
    இளையோரின் இதயத்தில்
    இடம்பிடித்த இலக்கண மன்னா!
    கொடிகாத்த குமரனைப் போல்
    தமிழ் மொழி காத்த தூயவனே!
    பகுத்தறிவுப் பகலவனாய்
    பார்போற்ற தமிழ் வளர்த்தாய்
    நன்னன் முறை என்றுலகோர்
    நற்றமிழ் வளர வழிவகுத்தோய்!
    சாத்துக்குடலில் பிறந்திட்ட தமிழ்க்கடலே!
    பதினேழு ஆண்டுகளாய் பாமரரும்
    பைந்தமிழைக் கற்றுக் கொள்ள
    பைந்தமிழைக் கற்பித்த பாவலனே!
    என்றமிழைக் கற்பதற்கோ
    எமனுன்னை வானுலகம் அழைத்திட்டான்
    எழுபது நூல்களையே எளிதாய் எழுதி எங்கள்
    ஏற்றத்திற்கு வித்திட்ட
    ஏற்றமிகு தமிழ்ப் புலவ!
    தொடக்க கல்வி முதல் உயர்கல்வி நிலையம் வரை
    தொடங்கியதே உம் பணியே!
    நற்றமிழ் வளர்க்கும் அறப்பணியே!
    தன்னை வளர்க்காது
    தமிழ்தனையே வளர்த்திட்ட
    தரணி புகழ் தமிழ் நன்னா! உலகில்
    வந்த பணி முடிந்ததென்று
    வானுலகப் பணியேற்று
    வானுலகம் சென்றனையோ?
    மொழிகாத்து இனம் காத்து
    தமிழர் நலம் காத்த தமிழ் நன்னா!
    தமிழும் தமிழுலகும்
    உலகும் உள்ளவரை
    உம்புகழ் நிலைத்திருக்கும்
    தமிழர் நாவில் நன்னா உம் பெயரொலிக்கும் அதில்
    தமிழர் நெஞ்சம் நிறைந்திருக்கும்.

     

    மு​னைவர் சி.​சேதுராமன் தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
    Malar.sethu@gmail.com

    Share
  • எப்போது வருவாய் நீ?

     

    முனைவர் சி. சேதுராமன்,
    தமிழாய்வுத்துறைத் தலைவர்,
    மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.),
    புதுக்கோட்டை.
    Malar.sethu@gmail.com

     
    எந்தமிழ்த் தாய்பெற் றெடுத்த கவிமகனே
    எல்லோரின் உள்ளத்தில் எழுகின்ற கவிச்சுடரே!
    எங்கே எங்கள் கவிக்கோ? என்றிங்கு
    எந்தமிழர் எல்லாரும் ஏங்கிப் புலம்புகின்றார்
    ஏந்தலே! கவியரங்கில் கவிபாடி எம்மை மகிழ்வித்தாய்!
    எழில் நிறைந்த கவிதைகளில் ஏழையரைப் பாடி வைத்தாய்!
    ஏற்றமிகு சிலம்பின்கதை இருநாற்சொல்லில் இயம்பினாயே!
    பால்வீதி படைத்து பலர் நெஞ்சைக் கவர்ந்தாயே!
    சிலேடைக் கவிதைகளால் எம்சிந்தை குளிர்வித்த சீமானே!
    பாலைநிலா படைத்து பலர் மனத்திலும் குடிபுகுந்தாய்!
    விதைபோல் விழுந்தவன் என்று கவிபாடி இன்று
    விதையாக மாறிவிட்டாய்!
    நேயர் விருப்பத்தை நிறைவு செய்த நேயனே!
    கண்ணீரில் தவிக்கவிட்ட எங்கள் கவிக்கோவே!
    கவியுலகில் புதுமையினைப் புகுத்திட்ட பாவலனே!
    கற்பனையின் ஊற்றே! கலைவளர் நற்கவிச்சுடரே!
    கவிதை அரங்குகளை கவிபெறச் செய்தாயே!
    உம்கவிதை வாங்குதற்கோ எமன் உன்னை அழைத்திட்டான்?
    அருந்தமிழின் மீது அருங்காதல் கொண்டவனே!
    அழகுதமிழ்க் கவிதைகளை அள்ளி அள்ளித் தந்தவனே!
    அருந்தமிழர் நெஞ்சங்களில் அழகாய் அமர்ந்தவனே!
    அனைவரும் உன்கவிதை கேட்பதற்குத் தவிக்கின்றோம்
    அன்பார்ந்த தமிழினிலே அருமருந்தாய்க் கவிபடைக்க
    அப்துல் ரகுமானே எப்போது வருவாய் நீ?

    Share
  • சிவபுரி பெற்றெடுத்த சிவநேயச் செல்வர்

    -முனைவர்  சி.சேதுராமன்

    தமிழகத்தில் உள்ள ஒவ்வோர் ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக்கோடிக் கிராமமாக விளங்கும் எனது ஊரான மேலைச்சிவபுரிக்கும் தனித்ததொரு சிறப்பு உண்டு. ஆம், இங்குதான் தமிழன்னையின் உயர்விற்கு அயராதுபாடுபட்ட தமிழ்ப்பெருந்தகை மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் பிறந்தார். அவரால் மேலைச்சிவபுரி தமிழக வரலாற்றிலும் தமிழிலக்கிய வரலாற்றிலும் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றது. கதர்ச்சட்டை, கதர்வேட்டி கதர்த்துண்டு, கையில் குடை,  காலில் சாதாரண நடையன், நெற்றியில் திருநீறு இத்தகைய எளிமையான தோற்றத்துடன் தீட்சண்யமான கூர்ந்த பார்வையுடன் கம்பீரமாகத் திகழ்ந்தவர்தான் மூதறிஞர் வ.சுப.மா.

    manikkanar1987-ஆம் ஆண்டு நான் கணேசர்  செந்தமிழ்க் கல்லூரியில் பி.லிட்., முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். எனது வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே மூதறிஞரின் வீடு. அப்போது நான் கல்லூரிக்குப் போகும் போதெல்லாம் அவரும்என்னுடனேயே நடந்து வருவார். அவர் எங்கள் ஊர் என்பது தெரியும். அவரின் சிறப்புகளைப் பற்றி அறியாத பருவம்.

    நாள்தோறும் அவர் கல்லூரியில் உள்ள சன்மார்க்க சபைக்கு வருவார். அவ்வாறு வரும்போது ஒரு நாள் எங்களுக்கு முதலாம் ஆண்டில் நம்பியகப்பொருள் இலக்கணத்தை பேராசிரியர் தா. மணி ஐயா அவர்கள் நடத்திக் கொண்டிருந்தார். நாங்கள் அனைவரும் பாடத்தைக் கவனித்துக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் என்னுடன் நடந்துவரும் பெரியவர் திடீரென வகுப்பறைக்குள் நுழைந்தார். எனது ஆசிரியர் மணி ஐயா அவரைக் கண்டவுடன் பணிவாக வணக்கம் ஐயா என்று மரியாதையுடன் கூறிவிட்டுத் தான் எடுக்கும் பாடம் குறித்து அவரிடம் கூறினார்.

    கருப்பொருள் குறித்த பாடம்தான் பேராசிரியர் மணி ஐயா  நடத்திக்கொண்டிருந்தார். அதனைக் கேட்ட மூதறிஞர் பாலை நிலத்திற்குரிய கருப்பொருள் குறித்த நூற்பாவைச் சிறிதுநேரம் எடுத்துரைத்து அதற்கு விளக்கம் கூறிவிட்டு அதிலிருந்து வினாக்களைக் கேட்டார். அவர்கேட்ட வினாக்களுக்கு விடைகளை எங்கள் வகுப்பிலிருந்தோர் கூறினோம். அப்போது மூதறிஞர் நூற்பாவைக் கூறுமாறு வினவ, நானும் என் நண்பர்கள் சிலரும் தெரிந்தவரை கூறினோம். அதனைக் கேட்டபின்னர் மூதறிஞர் எங்களைப் பாராட்டிவிட்டு வகுப்பறையை விட்டுச்சென்றுவிட்டார். அவர் சென்றபின்னர் அவர் யார் என்று எங்கள் பேராசிரியரிடம்கேட்டோம். அதற்கு அவர் ‘‘இவர்தான் மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார் என்ற தமிழறிஞர்’’ என்று எங்களுக்குக் கூறினார்.

    அதன்பின்னர் சன்மார்க்கச் சபைக் கட்டிடத்தில் மூதறிஞர் எங்களுக்குச் சிறப்பானதோர் உரையை வழங்கினார். அவரது உரையைக் கேட்ட எனக்கு அவர் மீதுபற்றுதல் ஏற்பட்டது. பலமுறை மூதறிஞர் உரையைக் கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதனை எனது வாழ்நாளில் கிட்டிய பேறாகக் கருதுகிறேன். அவர் எழுதிய நூல்களைப்பற்றித் தெரிந்துகொண்டு அவற்றை எடுத்துப் படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

    ஆனால் எனக்கு நூல்கள் கிட்டவில்லை. எனது ஆவல் நான் பி.லிட் மூன்றாம் ஆண்டு பயின்று கொண்டிருந்தபோதுதான் நிறைவேறியது. ஆம் மூதறிஞர் எழுதிய ‘‘தமிழ்க்காதல்’’ என்ற நூலைக் கற்கின்ற வாய்ப்பு அப்போது எனக்குக் கிட்டியது. என்னுடைய ஆசிரியப் பெருந்தகை சதாசிவம் அவர்கள் தன்னிடமிருந்த அந்நூலை எனக்குக் கொடுத்துப் படிக்குமாறு தந்தார். அந்நூலைப் படிக்கப் படிக்க என்னுள் மூதறிஞரைப்பற்றிய எண்ணம் மேலோங்கி எழுந்தது. அவரது மேதைமைத் தன்மை என்னுள் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய அறிஞரின் வீட்டருகில் வாழ்ந்துகொண்டு அவரைப் பற்றி ஒன்றும் அறியாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தப்பட்டேன்.

    எங்கள் ஊர்ப் பெரியவர்களிடம் அவரைப் பற்றி கேட்டபோது அவர்கள்அவரைப் பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளைக் கூறினார்கள். எங்கள் ஊரில் வாழ்ந்துமறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி சுவாமிநாதன் செட்டியார் அவர்களும் மறைந்த எனது பேராசிரியர் பழ. சிதம்பரம் ஐயா அவர்களும் மூதறிஞரைப் பற்றி பல செய்திகளைக் கூறினர்.

    இளம் வயதில் தாய்தந்தையை இழந்து பர்மாவில் உள்ள வட்டிக்கடைக்குப் பெட்டியடிப் பையனாகச் சேர்ந்து அக்கடையின் முதலாளி யாராவது வந்து கேட்டால் தான் இல்லையென்று கூறுமாறு பொய் சொல்லச் சொன்னபோது மூதறிஞர்  மறுத்து விட்டதாகவும், அதனால் கோபமுற்ற முதலாளி அவரை மீண்டும் ஊருக்கேஅனுப்பிவிட்டதாகவும் கூறி எந்தச் சூழலிலும் பொய்சொல்லாமல் வாழ்ந்த அவரதுநேர்மையை எங்கள் ஊர்ப் பெரியவர்களின் வாயிலாக அறிந்தபோது என்னுள் அவர் இமயமலைபோல் உயர்ந்து நின்றார்.

    மூதறிஞரை வீட்டிலேயே சந்தித்து அவரோடு உரையாட வேண்டும் என்று என்னுள் விருப்பம் எழுந்தது. அந்த நாளுக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன் என்பதை விடத் தவம் கிடந்தேன் என்று சொல்லலாம். பல பணிகளின் காரணமாக மூதறிஞர் பல ஊர்களுக்கும் சென்று கொண்டிருந்தார். மூதறிஞரை எவ்வாறேனும் தனித்துச் சந்தித்துவிட வேண்டும் என்ற எனது எண்ணம் மேலும் மேலும் வளர்ந்துகொண்டே இருந்தது. பி.லிட். மூன்றாம் ஆண்டுத் தேர்வும் வர, தேர்வெழுதிக் கொண்டிருந்தோம்.

    கடைசிநாள் தேர்வு நடந்த பொழுது ஓர் அதிர்ச்சியான தகவல் எங்களை வந்தடைந்தது. தேர்வறையில் கண்காணிப்புப் பணியில் இருந்த பேராசிரியர் அங்குவந்த மற்றொரு பேராசிரியரிடம் மூதறிஞர்  இறந்துவிட்டதாகத் தகவலைக் கூறினார்.  அதைக் கேட்ட எனக்குப் பேரதிர்ச்சி.  இது உண்மையானதா என்று அறிய என் மனம் பரபரத்தது. தேர்வினை முடித்தபின்னர் விரைந்து சென்று எனதுபேராசிரியரிடம் கேட்க அவர் கூறிய தகவல் என்னுள்ளத்தைப் பிளந்தது.

    ‘‘தண்டாமரையின் உடன் பிறந்து தண்டே நுகரா மண்டூகம்’’ போன்று இருந்துவிட்டோமே! என்று என்னுள்ளம் வேதனையில் துடித்தது. நானும் எனது வகுப்புத் தோழர்  பிரான்மலை கணபதி  அவர்களும் என்  ஊர்க்கார்கள் சிலருடன் மூதறிஞரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காகக் காரைக்குடிக்குச் சென்றோம். யாரைப் பார்த்து உரையாட வேண்டும் என்று  எண்ணியிருந்தேனோஅங்கு அந்தப் பெருந்தகை இறைவனடி சேர்ந்திருந்தார்.

    எனக்குச் சொல்லொணாத வேதனை ஏற்பட்டது. மூதறிஞர் அவர்களுக்கு மனமுருக எனது அஞ்சலியைச் செலுத்திவிட்டு அவரது  இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு எனது நண்பருடன் திரும்பினேன். எனது ஊரில் அனைவரும் அவரைக்குறித்த பல்வேறு தகவல்களைக் கூறி  அவரை  நினைவு கூர்ந்தனர்.

    முன்பெல்லாம் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளைஎழுதுவதற்கு விளம்பரம் வந்தால் அதில் கல்வித் தகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் பி.லிட்.,  நீங்கலாக என்று குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழ் படித்தால் அரசுத்தேர்வுகளை எழுத முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதை அறிந்த மூதறிஞர் தனது முயற்சியால் அதனைப் போக்கி பி.லிட். பட்டம் பயில்வோரும் தேர்வெழுதும் நிலையைக் கொண்டுவந்தார்.  இது பலரது வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கொணர்ந்தது. எங்கள் கல்லூரியில் உள்ள சன்மார்க்க சபையில் நடைபெற்ற மூதறிஞரின் அஞ்சலிக் கூட்டத்தில் கலந்து கொண்ட எங்கள் ஊர்க்காரர்களும் பலஊர்களிலும் இருந்து வந்த தமிழறிஞர்களும் மூதறிஞரின் சாதனைகளை நினைவுகூர்ந்தனர்.  அப்போதுதான் அவரது பெருமைகள் பல தெரியவந்தன.

    தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர் மூதறிஞர். அதோடு மட்டுமல்லாது மூதறிஞர்  எழுதிவைத்த உயிலில் தனதுசொத்தில் ஒரு பங்கினை எங்கள் ஊர்  ஏழை எளியவருக்கு உதவி செய்வதற்கு எழுதி வைத்துள்ளதை அறிந்து உள்ளம் நெகிழ்ந்தேன். கிடைப்பதை எல்லாம் சுருட்டிக்கொண்டு போகும் இன்றய உலகில் இத்தகைய மாமனிதர்  வாழ்ந்திருக்கின்றாரே என்று எண்ணி வியந்தேன். பண்டித ஜவகர்லால் நேரு இந்தியத் திருநாட்டிற்காகத் தாம்வசித்த வீட்டைக் கொடுத்ததைப் போன்று மூதறிஞர் தாம் நேர்மையாக உழைத்துச்சேர்த்த செல்வத்தைத் தாம் பிறந்த ஊருக்கென்று எழுதி வைத்தார்.

    மூதறிஞரின் இத்தகைய செயல் காலம் உள்ளளவும் சிவபுரிக்காரர்களின் உள்ளத்தில் நின்று நிலைத்திருக்கும். அவர்  பெயரால் இன்றும் பல நலத்திட்டஉதவிகள் மூதறிஞரின் பிறந்த நாளில் அவரது குடும்பத்தாரால் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.  இந்த நூற்றாண்டு விழாவில் அவரது நினைவுகள் பலசுழன்று சுழன்று என்னுள் எழுந்த வண்ணமாகவே உள்ளன. அவர்  எங்களுக்கு ஒரு நூற்பாவைக் கூறி விளக்கமளித்த பாங்கு இன்றும் மறக்க முடியாத நிகழ்வாகவேஉள்ளது.

    மூதறிஞரிடம் பாடம் கேட்ட அந்த ஒருசில மணித்துளிகள் வாழ்நாளில் மறக்கமுடியாதவையாகும்.  மூதறிஞர்  செம்மலார் பிறந்த ஊரில் நானும் பிறந்தேன் என்று கூறிக் கொள்வதில் பெருமையடைகிறேன். சிவபுரி பெற்றெடுத்த சிவநேயச் செல்வராக மூதறிஞர் விளங்கினார். கணேசர்  செந்தமிழ்க் கல்லூரியை வளர்த்தெடுத்து அதன் மூலம் என்னைப் போன்ற பலருக்கும் கல்விக் கண்ணைத்திறந்து வைத்த அந்த மாமேதையின் பெயரை மேலைச்சிவபுரி மட்டுமல்ல தமிழ்கூறும் நல்லுலகமும் என்றும் கூறிக் கொண்டே இருக்கும். அதில் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருக்கும்.

    ***

    முனைவர்  சி.சேதுராமன்
    தமிழாய்வுத்துறைத் தலைவர்
    மாட்சி தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி) புதுக்கோட்டை.

    மின்னஞ்சல்: malar.sethu@gmail.com

     

     

    Share
  • என்று காண்​போம் இனி?!

    தமிழண்ணலுக்கு இரங்கற்பா

    மு​னைவர் சி.​சேதுராமன் தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
    Malar.sethu@gmail.com

    நல்​லோரும் வல்​லோரும் நயமாகப் பாராட்ட
    நலமாய் தமிழ்வளர்த்த நாயக​னே – எல்​லோரும்
    பார்க்க ஏங்க விட்டாய்  உம்​மை
    என்று காண்​போம் இனி?

    ​நெற்குப்​பை ​பெற்​றெடுத்த பூங்குன்​றே எம்​மைச்
    ​சொற்குப்​பை ஆக்கிவிட்டுச் ​சொர்க்கம் ஏகிவிட்டாய்
    நன்றாய்த் தமிழ்வளர்த்த அண்ண​லே உம்​மை
    என்று காண்​போம் இனி?

    ​மே​லைச் சிவபுரியில் ​மேன்​மைமிகு கல்வியி​னை
    ​மேன்​​மை யுறச்​செய் தா​யே – ​மே​லை
    நா​டெங் கும்தமிழ்ச் ​சே​​யைக் காத்தஉ​மை
    என்று காண்​போம் இனி?

    தாலாட்டுத் தந்தாய் காதல் வாழ்வும்
    தந்தாய் நன்னூல் உ​ரைத​னை​யே -​ பாராட்டத்
    தந்து தண்டி யு​ரையும் தந்தஉ​​மை
    என்று காண்​போம் இனி?

     

     

    Share
  • காள​மேகப் புலவர்

    — மு​னைவர் சி.​சேதுராமன்.

    ஒவ்​வொரு காலத்திலும் ​புலவர்கள் பலர் ​தோன்றி தமிழன்​னைக்குக் காலத்தால் அழியாத பல காவியங்களைச் செய்து அணி ​செய்தனர். அவர்கள் ஆக்கியளித்துள்ள இலக்கியங்கள் உலகை வியக்க வைக்கும் அறிவுக் களஞ்சியங்களாகத் திகழ்கின்றன.

    தமிழன்​னைக்குப் ​பெரு​மை ​சேர்த்த புலவர் ​பெருமக்களில் ஒருவர்தான் காளமேகப் புலவர் ஆவார். கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த காள​மேகப் புலவர் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்று அ​னைவராலும் புகழப்பெற்றார்.

    நினைத்தவுடன் எதைப் பற்றியும் கவிதை பாடுவதில் வல்லவர்களே ஆசுகவி என்று அழைக்கப்படுவார்கள். ஆசு கவிகளிலே​யே காளமேகப் புலவர் தன்னிகரற்ற பேராற்றல் படைத்தவராக விளங்கினார்.

    காளமேகப்புலவர் பாண்டி நாட்டில் நூற்​றெட்டுத் திருப்பதிகளுள் ஒன்றான திருமோகூர் என்னும் திருத்தலத்திலே கோயில் பணியாளராக இருந்த அந்தணர் ஒருவருக்கு மகனாகப் பிறந்தார் என்றும், காளமேகம் என்பது அவரது இயற்பெயரே என்றும் அறிஞர்கள் சிலர் கூறுகின்றார்கள். ஆனால் வரதன் என்பதே அவரது இயற்பெயர் என்றும் ​வேறு சில அறிஞர்கள் எடுத்துரைப்பது ​நோக்கத்தக்கது.
    இதற்கு ஆதாரமாக,

    “வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
    வீசுகவி காள மேகமே – பூசுரா
    விண்தின்ற ​வெவ்வழலில் வேவுதே பாவியேன்
    மண்தின்ற பாணமென்ற வாய்”

    என்ற அதிமதுரகவியின் பாட​லைச் சான்றாகக் கூறுகின்றனர். எனவே வரதன் என்பதே காள​மேகப் புலவரின் இயற்பெயர் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றது.

    மோகனாங்கியின் மீது காதல்:
    இளமைப்பருவத்தில் ஸ்ரீரங்கம் திருமால் கோயிலிலே வரதன் கோயிற் பணியாளாக வேலைபார்த்துக் கொண்டிருந்தார். திருவரங்கத்திற்கு அருகில் திருவானைக்கா என்ற சிவத்தலம் உள்ளது. அத்தலத்தில் நடனக்கலை மூலம் இறைப்பணி செய்யும் தேவரடியார்கள் இருந்தார்கள். அத்​தேவரடியார்களில் ஒருத்தியான மோகனாங்கி மிகவும் அழகானவள். அவளுக்கும் வரதனுக்கும் காதல் மலர்ந்தது.

    வைணவரான வரதனும், ​சைவ மதத்​தைச் ​சேர்ந்த ​மோகனாங்கியும் அன்பால் கட்டுண்டு பழகி வந்தார்கள். ஒருநாள் ​மோகனாங்கி ​வெட்கம் அ​டையும்படியான ஒரு நிகழ்ச்சி ந​டை​பெற்றது.

    அது மார்கழி மாதம். திருவா​னைக்காவில் உள்ள சம்பு​கேசுவரர் ​கோயில் சன்னதியில் ​மோகனாங்கி திரு​வெம்பா​வை பாடும் மு​றை ​அன்று வந்தது. ​மோகனாங்கி தன் ​தோழிகளுடன் சன்னதியில் நின்று திரு​வெம்பா​வையில் வரும்,

    “உன்​கையில் பிள்​ளை உனக்​கே அ​டைக்கலம் என்று
    அங்கப் பழஞ்​சொல் புதுக்கு​மெம் அச்சத்தால்
    எங்கள் ​பெருமான்! உனக்​கொன்று உ​ரைப்​போம் ​கேள்;
    எம்​கொங்​கை நின்னன்பர் ​அல்லாதார்​தோள் ​சேரற்க!
    எம்​கை உனக்கல்லாது எப்பணியும் ​செய்யற்க!
    கங்குல் பகல் எம்கண் மற்​றொன்றும் காணற்க!
    இங்குஇப்பரி​சே! எமக்கு எங்​கோன் நல்குதி​யேல்
    எங்​கெழில் என்ஞாயிறு எமக்​கே​​லேஓர் எம்பாவாய்!”

    என்ற பாட​லை மனமுருகப் பாடினாள். அந்தப் பாட​லைக் ​கேட்டதும் அவளுடன் இருந்த ​தோழிகள் பலரும் வாய்விட்டுச் சிரித்தனர்.

    தான் ​வைணவரான வரத​னைக் காதலிப்பதா​லே​யே தம் ​தோழிகள் தன்​னை ஏளனம் ​செய்து சிரிக்கின்றனர் என்று புரிந்து ​கொண்ட ​மோகனாங்கி ​மிகுந்த ​வேத​னைக்கு உள்ளானாள். ​“உம்மு​டைய ​கைகள் உனக்​கேயன்றி ​வேறு எவர்க்கும் எந்தப் பணி​யையும் ​செய்யாது இருக்குமாறும், இரவும் பகலும் எம்மு​டைய கண்கள் உன்​னையன்றி ​வேறு எந்தப் ​பொரு​ளையும் காணாது இருக்குமாறும், இ​றைவ​னே அருள்புரிவாயாக! இவ்வாறு சிவ​பெருமானிடம் ​வேண்டுகின்ற ​மோகனாங்கி திருமா​லை வணங்கும் ​வைணவரான வரதனிடம் ​தொடர் ​கொண்டுள்ளா​ளே என்ப​தை நி​னைத்​தே ​தோழிகள் சிரித்தனர். அத​னைப் புரிந்து ​கொண்டு மன ​வேத​னைப்பட்ட ​மோகனாங்கி சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.

    வைணவர் ​சைவரானார்:
    அன்றிரவு வரதன், ​மோகனாங்கியின் இல்லத்திற்குச் ​சென்றார். அவரது வர​வைக் கண்டதும் ​மோகனாங்கி கதவி​னை அ​டைத்துத் தாழிட்டாள். வரதன் கத​வைத் திறக்குமாறு ​கெஞ்சிக் கூத்தாடினார். ​​நெடு​நேரம் ​வேண்டியும் அவள் கத​வைத் திறக்கவி​லை. இதனால் வரதன் மிகுந்த மன உ​ளைச்சலுக்கு ஆளானார்.

    வரதன் வீட்டிற்கு ​வெளியிலிருந்தவா​றே, “​மோகனாங்கி! நீ கத​வைத் திறக்கவில்​லை என்றால் நான் என் உயி​ரை விட்டுவிடு​வேன்” என்று கூறிய​தைக் ​கேட்ட ​மோகனாங்கி, எங்​கே வரதன் இறந்து விடுவா​ரோ என்றஞ்சிக் கத​வைத் திறந்தாள்.

    கத​வைத் திறந்தவள் வரத​னை உள்​ளே விடவில்​லை. அவள் வரத​னைப் பார்த்து, “நான் உமக்கு ​வேண்டு​மென்றால் நீர் ​சைவராக மாற​வேண்டும். நீர் உட​னே ​சென்று சிவதீட்​சை ​பெற்றுக் ​கொண்டு வருக! இல்​லை​யெனில் என்​னை மறந்துவிடுக!” என்று கூறிவிட்டுக் கத​வைப் படீ​ரென்று சாத்திக் ​கொண்டாள்.

    இத​னைக் ​கேட்ட வரதன் சற்​றே நி​லை கு​லைந்து ​போனார். தன் காதலுக்கு மதம் தடையாக இருப்பதை உணர்ந்த வரதன், ​மோகனாங்கியின் மீது ​கொண்ட அன்பினால், “​மோகனாங்கி நீ என்மீது ​கொண்ளுள்ள அன்புதான் எனக்கு முக்கியம். நான் உட​னே ​சென்று சிவதீட்​சை ​பெற்றுக் ​கொண்டு ​சைவனாக மாறி வருகி​றேன்” என்று கூறிவிட்டுச் ​சென்றார்.

    அவளிடம் கூறியவா​றே சிவதீட்​சை ​பெற்று ​வைணவராக இருந்த வரதன் ​​சைவராக மாறினார். அ​தோடு மட்டுமல்லாது திருவரங்கக் ​கோயில் பணியிலிருந்து நின்றுவிட்டார். திருவா​னைக்கா சம்பு​கேசுவரர் ​கோயிலில் (பரிசாரகர்) ச​மையற்காரராகப் பணியில் சேர்ந்தார். ​வரதன் சைவராக மாறியதால் ​மோகனாங்கியுடனான காதல் ​கைகூடியது. ​ ​மேலும் வரதன் திருவானைக்காவில் சிவனோடு வீற்றிருக்கும் தேவி அகிலாண்​டேஸ்வரி​யை நாள்​தோறும் வரதன் வழிபட்டு வந்தார். தேவியின்மீது தீராத அன்புகொண்ட அடியாராக வரதன் வாழ்ந்தார்.

    வரதன் காள​மேகமானார்:
    இங்ஙனம் வரதன் ​கோயிலில் பணியாற்றி வரும்​போது ஒரு நாளிரவு அவர் பணி​செய்த க​ளைப்பின் காரணமாகச் ​சோர்வினால் ​கோவில் மண்டபத்தி​லே​யே அயர்ந்து உறங்கிவிட்டார்.

    அப்​போது அக்​கோயிலில் எழுந்தருளியிருக்கும் அகிலாண்​டேஸ்வரி அசதியால் வாய் திறந்து உறங்கும் வரதன் முன் வந்து, கல்விக்குரிய பீஜாட்சரத்​தை அவரது நாவில் எழுதி, ‘இன்றுமுதல் உனக்குக் காள​மேகம் எனப் ​பெயர் விளங்குவதாக!’ என்று அருள் புரிந்து ம​றைந்தாள்.

    மண்டபத்தில் வரதானாகப் படுத்திருந்தவர் கனவு கண்ட​தைப் ​போன்று விழித்ததும் காள​மேகமாக எழுந்து நின்றார். கடல்ம​டை திறந்தாற்​போல் அவர் வாயிலிருந்து கவி ​வெள்ளம் பாய்​தோடி வந்தது.

    தமக்கு அருள்புரிந்தது ​தேவி அகிலாண்ட ஈஸ்வரி​யே என்ப​தை உணர்ந்து களிப்​பெய்தி கூத்தாடினார். அன்​னையின் அரு​ளை எண்ணி எண்ணி வியந்து வாயாரத் துதித்து, ‘திருவா​னைக்கா உலா” என்ற சிற்றிலக்கியத்​தைப் பாடினார். அதன் அரு​மை ​பெரு​மைக​ளை உணர்ந்த பலரும் கரிய ​மேகம் ம​​ழை​யைப் ​பொழி​வை​தைப் ​போன்று கவி ம​ழை ​பொழிவதால் “காள​மேக​மே” என்று வரத​னைப் ​போற்றி வாழ்த்தினர். அன்றிலிருந்து வரதன் காள​மேகப் புலவரானார்.

    இது குறித்து ​வே​றொரு வரலாறானது, “அக்காலத்தில் சம்பு​கேசுரத்தில் ஒரு ​வேதியன் அகிலாண்ட ஈச்வரி​யை வித்​தையின் ​பொருட்டு உபாசித்து வந்தனன். ஒரு நாள் ​மோகனாங்கி​யை ​நோக்கி அர்த்தசாம பூ​சையின் குடமு​றை கழிந்தவுடன் தம்​மை உடன​ழைத்துப் ​போகக் கூறித் தாம் ஒரு மண்டபத்தில் உறங்கினர். தாசி, அர்த்தசாமத்தில் குடமு​றை கழிந்ததும் ​வேதிய​ரைக் காணாது தனித்து வீடு ​சேர்ந்தனள். ​கோயில் தாணிகர் முதலி​யோர் திருக்​கோயில் தாளிட்டு வீடு ​சேர்ந்தனர்.

    பரிசாரகர் விழித்துக் ​கோயில் திருக்காப்பிட்டிருப்பதறிந்து மீண்டும் மண்டபத்தின் ஒரு புறத்திலுறங்கினர். முதலில் வித்​தை விரும்பி உபாசிப்பவனுக்கு அநுக்கிரகிக்க அம்​மை எழுந்தருளி அவன்முன் தரிசனந் தந்து வா​யைத் திறக்க என, உபாசகன் தாமதித்து அருவருத்த​மையால் மீண்டு மண்டபத்திலுறங்கும் பரசாரகரிடத்திற் ​சென்று வாய்திறக்கக் கட்ட​ளையிட்டனர். பரிசாரகர் ஆகூழால் வாய் திறந்தனர். அம்​மை வி​தைக்குரிய பீஜாட்சரத்​தை அவன் வாயிற் பதித்து இன்று முதலுனக்குக் காள​மேக​மெனப் ​பெயருண்டாக என ம​றைந்தனர்.

    காள​மேகர் கனாக் கண்டவர் ​போல் விழித்து எதிரில் யா​ரையும் காணாது தரிசனந் தந்தவள் உலக ராணியாகிய அகிலாண்ட ஈச்வரி​யென்றறிந்து வாயாரத் துதித்துத் திருவா​னைக்காவுலாப் பாடி மகிழ்ந்து அதுமுதல் பலதலங்களுக்குஞ் ​சென்று தரிசித்துப் பல தனிப்பாடல்க​ளைப் பாடினர்” (அபிதானசிந்தாமணி – ப.,510) என்று அபிதான சிந்தாமணியில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

    காள​மேகப் புலவரின் தலப் பயணம்:
    காள​மேகப் புலவர் பல திருத்தலங்களுக்கும் ​சென்று இ​றைவ​ன்மீது தனிப்பாடல்கள் பல பாடி வழிபட்டார். திருவாரூர் ​சென்று தியா​கேச​ரை வழிபட்ட​போது அங்கிருந்தவர்கள் காள​மேகப் புலவரின் புல​மை​யைப் பரி​சோதிக்க விரும்பினர்.

    காள​மேகப் புலவரிடம் இ​றைவனான தியாகராசருக்கு அணிவித்திருந்த ​வைரப் பதக்கம் அறுந்து விழவும், பின் அப்பதக்கம் ​பொருந்தவும் பாடுமாறு கூறினார்கள். இதற்குக் காள​மேகப் புலவர் உடன்பட்டு,

    “அன்னவயல் சூழ்ந்திருக்கும் ஆரூரா ​நெஞ்சத்தில்
    இன்னம் வயிர மிருப்பதா – முன்ன​மொரு
    ​தொண்டன் மக​னைக்​கொன்றுஞ் ​சோழன்மக​னைக்​
    கொன்றுஞ்
    சண்டன் மக​னைக் ​கொன்றுந் தான்.”

    எனப் பாடி அப்பதக்கத்​தை அறுத்து கீ​ழே விழ ​வைத்து மீண்டும் அப்பதக்கம் ​பொருந்தப் பாடினார். இத​னைக் கண்ட அ​னைவரும் விப்பில் ஆழ்ந்தனர்.

    தாம் நி​னைத்த ​போதும், பிறர் விரும்பும்​​போதும் கவி பாடக்கூடிய ஆற்ற​​லைக் காள​மேகப் புலவர் ​​பெற்றிருந்த​தை அறிந்தவர்கள் அவ​ரை, “ஆசுகவியால் அகில உலகமும் புகழ் வீசும் கவி காள​மேகம்” என்று புகழ்ந்து ​போற்றினர்.

    மேலும் காள​மேகப் புலவர் தம்​மை மதிக்காது நடந்து ​கொண்ட சம்பந்தாண்டான் என்பவன் மீது வ​சை பாடினார். காள​மேகப் புலவர் வ​சைபாடுவதில் வல்லவராக இருந்ததால் அவ​ரை, “வ​சைபாட வல்லான் காள​மேகம்” என்று அவ​ரைப் புகழ்ந்தனர்.

    தனக்கு வந்திருந்த ​நோய் தீர ​வேண்டும் என்பதற்காக ​வைத்தீசுவரன் ​கோவில் மண்​ணை உண்டார். உட​னே காள​மேகப் புலவரின் ​நோய் முற்றிலும் குணம​டைந்தது. இத​னைக் கண்டுணர்ந்த அவர்,

    “மண்டலத்தி னாளும் வயித்தியராய்த் தாமிருந்தும்
    கண்டவி​னை தீர்க்கின்றார் கண்டீ​ரோ – ​தொண்டர்
    விருந்​தைப் பார்த்துண்டருளும் ​வேளூ​ரென் னாதர்
    மருந்​தைப் பார்த்தாற்சுத்த மண்”

    என்ற பாட​லைப் பாடி இ​றைவ​னை வணங்கி வழிபட்டார்.

    பல தலங்களுக்கும் ​சென்று அங்குள்ள இ​றைவ​னைப் புகழ்ந்தும் இழிப்ப​தைப் ​போன்று ம​றைமுகமாகப் புகழ்ந்தும்​ ​சொல்நயமும் ​பொருள் நயமும் மிக்க பல பாடல்க​ளைக் காள​மேகப் புலவர் பாடினார். தமக்கு ஆதரவு நல்கியவர்க​ளைப் புகழ்ந்தும் அவமதித்தவர்க​ளை வ​சைபாடி இகழ்ந்தும் அவர் பல தனிப்பாடல்க​ளையும் பாடினார். இதனால் இன்றளவும் ‘வ​சைபாடக் காள​மேகம்’ ​என்ற ​பெயர் இலக்கிய வரலாற்றில் நின்று நி​லைத்துவிட்டது.

    திரும​லைராயன் அ​வைக்குச் ​செல்லுதல்:
    காள​மேகப் புலவ​ரை விரும்பி அவருடன் வாழ்ந்து வாழ்ந்த தாசி ​மோகனாங்கி தனக்கு அணிகலனில் (ந​கையில்) பதிப்பதற்காக திரும​லைராயன் பட்டினத்து முத்து ​வேண்டு​மென்று அவ​ரைக் ​கேட்டாள். என​வே காள​மேகப் புலவர் திரும​லைராயன் பட்டினத்திற்குப் புறப்பட்டார்.

    தஞ்​சை மாவட்டத்துக் கடற்க​ரை நகரமான நாகபட்டினத்துக்கு அருகில் உள்ளது திரும​லைராயன் பட்டினம். அத​னை விஜயநகரப் ​பேரரசிற்கு உட்பட்ட மன்னன் திரும​லைராயன் என்ற சிற்றரசன் ஆட்சிபுரிந்து வந்தான். இவனது காலம் கி.பி.1455 – 1468 என்று கூறுவர். இது​வே காள​மேகப் புலவர் வாழ்ந்த காலமாகும்.

    திரும​லைராயனின் அரச​வையில் 64 புலவர்கள் இருந்தனர். அவர்க​ளைத் தண்டி​கைப் புலவர்கள் என்று அ​ழைப்பர். சிவி​கை, பல்லக்கு, கழுத்தில் அணியும் ஒருவ​கை அணி என்று தண்டி​கை என்பதற்குப் பல ​பொரு​ளைக் கூறுவர். திரும​லைராயன் அப்புலவர்கள் அமர்ந்து ​செல்வதற்குப் பல்லக்குகள் அளித்துச் சிறப்புச் ​செய்திருந்ததால் அவர்க​ளை மக்கள் தண்டி​கைப் புலவர்கள் என்று அ​ழைத்தனர்.

    இவர்களின் த​லைவராக அதிமதுரகவிராயர் என்பர் திகழ்ந்தார். இப்புலவர் திரும​லைராயனிடம் ​பெரும் ​செல்வாக்கப் ​பெற்றவராகவும் அகந்​தை நி​றைந்தவராகவும் விளங்கினார். ​மேலும் அரச​வையில் மற்ற புலவர்கள் இடம்​பெறாத வ​கையில் வஞ்சகமாக அவர்க​ளைத் தடுக்கும் ​செயல்களிலும் அவர் ஈடுபட்டு வந்தார். இத​னையும் ​கேள்வியுற்ற காள​மேகப் புலவர் அவரது ​செருக்​கை அடக்க ​வேண்டும் என்று கருதி திரும​லைராயன் பட்டினத்திற்கு வந்து ​சேர்ந்தார்.

    அதிமதுரகவியும் தண்டி​கைப் புலவர்களும் தத்தமக்குரிய பல்லக்குகளில் அமர்ந்து வீதி வழி​யே அரச​வை​யை ​நோக்கி வந்து ​கொண்டிருந்தார்கள். அப்​போது தண்டி​கைப் புலவர்கள், “அதிமதுர கவியார் வாழ்க!” என்று தங்கள் த​லைவ​ரைப் ​போற்றி முழக்கமிட்டுக் ​கொண்டு வந்தார்கள்.

    அங்கு குழுமியிருந்த மக்கள் அ​னைவரும் எழுந்து நின்று அதிமதுரகவியாருக்கு வணக்கம் ​தெரிவித்தார்கள். அத​னை​யெல்லாம் பார்த்துக் ​கொண்டு ஒரு க​​டையின் முன்பல​கையில் காள​மேகப் புலவர் அமர்ந்திருந்தார். க​டையருகில் நின்றவர்கள் அதிமதுரகவிக்கு அடக்கத்துடன் எழுந்து நின்று வணக்கம் ​தெரிவித்தனர். இத​னை வியப்புடன் காள​மேகப் புலவர் பார்த்துக் ​கொண்டு அமர்ந்திருந்தார்.

    இத​னைப் பல்லக்கில் ​சென்று ​கொண்டிருந்த அதிமதுரகவி கவனித்துவிட்டார். தன்​னை மதிக்காது தனக்கு வணக்கமும் ​சொல்லாது அமர்ந்திருந்த காள​மேகப்புலவரின் ​செயல் அவருக்குச் சினத்​தை வரவ​ழைத்தது. தன் பல்லக்கு முன்​னே தடி​யோடு ​சென்று ​கொண்டிருந்த கட்டியங்கார​ன் காள​மேகத்திடம் ​சென்று தடியால் தட்டி எழுந்து நின்று வணக்கம் கூறுமாறு கூறிய​தையும் அதற்கு எந்தப் பதிலும் கூறாமல் காள​மேகப் புலவர் கட்டியங்கா​​​னைப் பார்த்து,

    “அதிமதுர​​ மென்​றே யகில மறியத்
    துதிமதுரமா ​யெடுத்துச் ​சொல்லும் – புது​மை​யென்ன
    காட்டுச் சரக்கு லகிற் காரமில்லாச் சரக்குக்
    கூட்டுச் சரக்குத​னைக் கூறு”

    என்று பழித்துப் பாடினார். அத​னைக் ​கேட்ட அதிமதுர கவி தனது தூதன் ஒருவ​னை காள​மேகத்திடம் ​சென்று ​அவர் யார் என்ப​தை அறிந்து வருமாறு கூறி அனுப்பினார். அவனும் ​சென்று காள​மேகப் புலவரிடம், “நீர் யார்?” என்று ​கேட்க அதற்குக் காள​மேகப் புலவர்,

    “தூ​தைந்து நாழி​கையிலாறு நாழி​கைதனிற்
    ​சொற் சந்தமா​லை ​சொல்லத்
    துகளிலாவந் தாதி​யேழு நாழி​கைதனிற்
    ​றொ​கைபட விரித்து​ரைக்கப்
    பாதஞ்​செய் மடல் ​கோ​வை பத்து நாழி​கைதனிற்
    பரணி​யொரு நாண் முழுது​மே
    பாரகாவிய​மெலா ​மோரிரு தினத்தி​லே
    பகரக் ​கொடிக் கட்டி​னேன்
    சீதஞ்​செயுந் திங்கண் மரபினானீடு
    புகழ் ​செய்ய திரும​​லைராயன்முன்
    சீறுமாறாக​வே தாறுமாறுகள் ​சொல்
    திருட்டுக் கவிப் புலவ​ரைக்
    காதங்கறுத்துச் ​செருப்பிட்டடித்துக் கதுப்பிற்
    பு​டைத்து ​வெற்றிக்
    கல்ல​ணையி​னொடு ​கொடிய கடிவாளமீட்​டேறு
    கவி காள​மேக நா​னே”

    என்று கவி பாடி அனுப்பினார்.

    அதிமதுரம் கடுஞ்சினம் ​கொண்டார் அந்தக் க​டையின் முன்பாக​வே காள​மேகப் புலவ​ரை அவமானப்படுத்த எண்ணி அரண்ம​னைப் பணியாளன் ஒருவ​னை அ​​ழைத்து, “கால் வராகனுக்கு ​மேகமும் பசுவும் இரத்தினமும் வாங்கி வா!” காள​மேகம் இருந்த க​டைக்கு அனுப்பி ​வைத்தார்.

    பணியாளன் க​டைக்காரரிடம் ​சென்று, “ஒரு வராகனுக்கு ​மேகமும் பசுவும் இரத்தினமும் ​கொடு!’ என்று காசி​னை நீட்டினான். க​டைக்காரனுக்கு ஒன்றும் புரியவில்​லை. அவர் திருதிரு என்று விழித்தார். இத​னைப் பார்த்த காள​மேகம் சிரித்தார்.

    காள​மேகம் சிரிப்ப​தைப் பார்த்த க​டைக்காரன் அவ​ரைப் பார்த்து, “இவர் என்ன ​கேட்கிறார்? நீர் ஏன் சிரிக்கிறீர்?” என்று எரிச்சலுடன் ​கேட்டார்.

    அத​னைக் ​கேட்ட காள​மேகப் புலவர், “ஐயா அவர் ​கேட்பது காராமணி. வராக​னை வாங்கிக் ​கொண்டு ​பொரு​ளைக் ​கொடுத்தனுப்புங்கள்” என்று கூறினார். க​டைக்காரர் ​பொரு​ளைக் ​கொடுத்து அரசப் பணியாள​னை அனுப்பிவிட்டு பணியாளன் கூறியதற்குரிய விளக்கத்​தைக் கூறுமாறு காள​மேகத்திடம் ​கேட்டார்.

    அதற்குக் காள​மேகப் புலவர், “ஐயா ​மேகம் என்றால் கார்; பசு என்றால் ஆ; இரத்தினம் என்றால் மணி இம்மூன்​றையும் ​சேர்த்துப் பாருங்கள் காராமணி என்பது வரும்” என்றார்.

    க​டைக்காரர் காள​மேகப் புலவருக்கு நன்றி​யைக் கூறிவிட்டு, ஐயா க​டைக்கு வந்து ​பொருள் ​கேட்டவன் அதிமதுர கவியாரின் ஆள் என்பது எனக்குத் ​தெரியும். எங்​கே அவர் ​கேட்கும் ​​பொரு​ளைப் புரிந்து ​கொண்டு தரமுடியாமல் கவிராயரின் கடுங்​கோபத்திற்கு ஆளாக ​நேரிடு​மோ என்று பயந்​தேன். நல்ல​வே​ளை காப்பாற்றினீர்கள்!” என்று நன்றி​யோடு காள​மேகப் புலவ​ரை வணங்கினார்.

    அதிமதுரகவியின் ​செயல் காள​மேகப் புலவருக்கு வருத்தத்​தை ஏற்படுத்தியது. அதிமதுர கவியார் தம் புல​மையால் எளி​மையான மக்க​ளையும் அதிகம் கற்காதவ​ரையும் மனம் ​போன ​போக்கில் மட்டம் தட்டி தற்​பெரு​மை ​கொள்கிறார் என்ப​தை அறிந்து ​கொண்ட காள​மேகம் அரச​வைக்​கே ​சென்று அவரது அகந்​தை​யை அடக்க ​வேண்டும் என்று கருதினார்.

    அ​தே​நேரத்தில் அதிமதுரகவியார் தன்​னை மதிக்காத காள​மேகப் புலவ​ரை மன்னனால்தான் அடக்க ​வேண்டும் என்று கருதி, மன்னனிடம் கூறி காவலர்க​ளை அனுப்பி காள​மேகப் புலவ​ரை அரச​வைக்கு வரவ​ழைத்தார்.

    புல​மைப் ​போட்டி:
    அதிமதுரகவியால் அரச​வைக்கு வரவ​ழைக்கப்பட்ட காள​மேகப் புலவருக்கு அ​வையிலிருந்த புலவர்கள் சிறிதுகூட இடம்​கொடுக்கவில்​லை. அ​னைவரும் ​நெருக்கியடித்துக் ​கொண்டு இருந்தனர். காள​மேகப் புலவர் புலவர்களின் எண்ணத்​தை உணர்ந்து ​கொண்டார்.

    அரசனைக் கண்டதும் அவனை வாழ்த்தினார். ஆனால் அவனோ புலவரை மதிக்காமல், இருக்கையும் கொடுக்காமல் ஏளனம் செய்தான். புலவர் புன்மூறுவல் செய்தார். அதிமதுரக்கவிராயரின் சூழ்ச்சிக்கு அரசன் அடிமையாகிவிட்டான் என்பதை உணர்ந்தார். கண்களை மூடி, கலைமகளைத் தியானித்தார். தனக்கொரு இருக்கை தருமாறு வேண்டினார். கலைவாணியின் அருளால் அரசனின் சிங்காசனம் அகன்று பெரிதாகியது. இன்னுமொருவர் இருப்பதற்கான இடம் உருவாகியது. புலவர் அதில் சென்று அரசனின் பக்கத்தில் அமர்ந்தார். புலவரின் ஆற்றல்கண்டு அரசனும் அ​மைச்சர்களும் வியந்தார்கள். தண்டிகைப் புலவர்கள் பயந்தார்கள். காளமேகப் புலவர், கலைவாணியின் அருளைப்போற்றி ,

    “வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
    வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை
    அரியா சனத்தில் அரசரோ டென்னைச்
    சரியாசனம் வைத்த தாய்”

    என்று மனமுருக சரஸ்வதி மா​லை​யை 30 ​வெண்பாக்களால் பாடினார். அப்​போது அங்கிருந்த புலவர்க​ளைப் பார்த்துக் காள​மேகப் புலவர், “நீங்கள் யார்?” என்று ​கேட்டார். அத​னைக் ​கேட்டு சிரித்த புலவர்கள், “நாங்கள் கவிராஜர்கள்” என்று கூறினர்.

    அத​னைக் ​கேட்ட காள​மேகப் புலவர் நீங்கள் கவிராஜரா என்று வினவி,

    “வா​லெங்​கே நீண்ட வயி​றெங்​கே முன்னிரண்டு
    கா​லெங்​கே யுட்குழிந்த கண்​ணெங்​கே-சாலப்
    புவிராயர் ​போற்றும் புலவீர்காணீவிர்
    கவிராய ​ரென்றிருந்தக் கால்”

    என்று பழித்துப் பாடினார்.

    தங்க​ளைக் குரங்​கென்று பழித்த காள​மேகத்​தைப் பார்த்துக் கடுங்​கோபமுற்ற அதிமதுரகவியார், “எங்க​ளைக் கவி(குரங்கு) என்று கூறும் நீர்யார்?” என்று ​கேட்க, அதற்கு அவர், “யாம் கவி காள​மேகம்” என்று கூறினார். அதற்கு அதிமதுரகவி, “நீர் காள​மேகம் என்றீ​ரே ​மேகம் ​ம​ழை (கவிம​ழை) பொழியு​மோ?” என்று ​கேட்டார். காள​மேகப் புலவ​ரோ அதற்கு,

    “கழியுந் தியகடலுப்​பென்று நன்னூற்
    கடலின் ​மொண்டு
    வழியும்​பொதிய வ​ரையினிற் கால் ​
    வைத்து வான் கவி​தை
    ​மொழியும் புலவர் மனத்​தே
    யிடித்து முழங்கி மின்னப்
    ​பொழியும் படிக்குக் கவி காள​மேகம் புறப்பட்ட​தே”

    என்று பாடினார். அத​னைக் ​கேட்ட அதிமதுரகவியார் ​காள​மேகம் தன்​னை ​மென்​மேலும் அவமதித்ததால் வெகுண்டு,

    “மூச்சிவிடும் முன்​னே முந்நூறும் நானூறும்
    ஆச்சுது என்றால் ஆயிரம்பாட்டு ஆகா​தோ?​​ பேச்சென்ன?
    ​வெள்​ளைக் கவிகாள​ மேக​மே! நின்னு​டைய
    கள்ளக் கவிக் க​டை​யைக் கட்டு”

    என்று பாடினார்.
    காள​மேகப் புலவரா க​டை​யைக் கட்டுபவர்? அவர் தம் கவி​தையாற்ற​லைக் காட்டுவதற்கு மனந் துணிந்தார். அதிமதுரகவியா​ரைப் பார்த்து,

    “இம்​மென்னும் முன்​னே ​யெழுநூறு ​மெண்ணூறும்
    அம்​மென்றா லாயிரம் பாட்டாகாதா சும்மா
    இருந்தா லிருப்​பே ​னெழுந்​தே​னே யாயிற்
    ​பெருங்காள ​மேகம் பிளாய்”

    என்று பாடினார்.

    இவ்வாறு பாடிய கா​ள​மேகப் புலவ​ரைப் பார்த்து, அதிமதுரகவியார், “நீர் என்ன பாடுவீர்?” எனக் ​கேட்டார். அதற்குக் காள​மேகப் புலவர், “நான் யமகண்டம் பாடு​வேன்” என்று கூறினார். அதிமதுரகவியாருக்கு எமகண்டம் என்பது புரியாதிருந்தது. அதனால் தன்னு​டைய வாதத்​தை அத்துடன் நிறுத்திக்​கொண்டார்.

    புலவர்களின் வினாவும் காள​மேகத்தின் வி​டையும்:
    அதன் பின்னர் அங்கிருந்த புலவர்கள் திரும​லைராயன் வா​ளைப் பற்றிப் பாடுக என்றவுடன்,

    “​செற்றல​ரை ​வென்ற திரும​​​லைராயன் கரத்தில்
    ​வெற்றிபுரியும் வா​ளே வீரவாள் – மற்​றைய வாள்
    ​போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்
    ஆவா ளிவாளவா ளாம்”

    என்று பாடி மன்ன​னை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். திரும​லைராயனது வீரத்​தைப் பற்றிப் பாடுமாறு புலவர்கள் கூற​வே,

    “வீம​னென வலிமிகுந்த திரும​லைராயன்
    கீர்த்தி ​வெள்ளம் ​பொங்கத்
    தாம​ரையி னய​னோடிச் சத்திய ​லோகம்
    புகுந்தான் சங்கபாணி
    பூமி​தொட்டு வானமட்டும் வளர்ந்து நின்றான்
    சிவன் கயி​லைப் ​பொருப்பி​லேறிச்
    ​சோம​னையுந் த​லைக்கணிந்து வடவ​ரைத்
    தண்டாலாழஞ் ​சோதித்தா​னே”

    என்று பாடினார். இவ்வாறு புலவர்கள் பலரும் பலவாறு வினாக்க​ளைத் ​​தொடுத்தனர். அப்​போது அங்கிருந்த திரும​லைராயன் மன்னன், “எம் அ​வையில் கங்​கைக் குடத்திலடங்கப் பாடுக” என்றான். அது​கேட்ட காள​மேகப் புலவர்,

    “விண்ணுக் கடங்காமல் ​வெற்புக் கடங்காமல்
    மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – ​பெண்​ணை
    இடத்தி​லே ​வைத்த வி​றைவர் சடாம
    குடத்தி​லே கங்​கையடங் கும்

    என்று பாடினார்.

    தண்டி​கைப் புலவர்களில் ஒருவர் திரும​லைராய மன்ன​னைப் புகழ்ந்து பாடுக என்றவுடன்,

    “இந்திரன் க​லையா ​யென்மருங் கிருந்தானக்
    கினியுதிரம் விட்டகலான்
    யம​னெ​னைக் கருதா னா​னெனக் கருதி நிருதிவந் ​
    தென்​னை​யென் ​செய்வான்
    அந்தமரம் வருண னிருகண் விட்டகலான்
    அகத்தினின் மக்களும் யானும்
    அநிலம தாகுமமுதி​னைக் ​கொள்​வோம் யா​ரெதி​
    ரெமக்களா ருலகிற்
    சந்தத மிந்த வரி​சை​யைப் ​பெற்றுத் தித்திர
    ராஜ​னை வணங்கித்
    த​லை​செயு​மெம்​மை நி​லை ​செய்சற் கீர்த்திச்
    சாளுவ ​கோப்​பையா னுதவும்
    மந்தரப் புயத்தான் றிரும​​லைராயன்
    மகிழ்​வொடு வி​லையிலா வன்​னோன்
    வாக்கினாற் கு​பேரனாக்கினா னவ​னே மாசிலீ
    சானனபூ பதி​யே”

    என்று பாடி அ​னைவ​ரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

    மேலும் அங்கிருந்த மற்​றொரு தண்டி​கைப் புலவர் அரசனது குதி​​ரை​யைப் பற்றிப் பாடுமாறு கூறியவுடன்,

    “​கோக்குதி​ரை நின்குதி​ரை ​​கோவல் மதுரா ​வொன்னார்
    மாக்குதி​ரை ​​யெல்லாம் ம​னைக் குதி​ரை-தூக்குதி​ரைத்
    தூங்கக்க​ரைக் குதி​ரைச் ​சொக்கன் குதி​ரைசது
    ரங்கக் குதி​ரைக​ளே யாம்”.

    என்று காள​மேகம் பாடிட​வே அரசனும், அதிமதுரகவியும் ​சேர்ந்து ​கொண்டு காள​மேகப் புலவரிடம் திருஆரூரில் அதிமதுரக்கவிராயருடன் வந்து ​கோயிலில் ஒரு பாடல் பாடினால்தான் நீர் ஆசுகவி என்ப​தை ஏற்​போம் எனக் கூறினான். காள​மேகப் புலவர் அத​னை ஏற்று திருஆரூர்க் ​கோயிலுக்கு அதிமதுரக்கவிராயருடன் ​சென்று,

    “​சே​லையு​டை யழகா ​தேவாகண் டார்களு
    நீர்மா​ யழகா மணிமார்பா-​வே​லை
    அடங்கார் புர​மெரித்த யாரூரா வீதி
    விடங்கா பிரியா வி​டை”

    என்று பாடி அ​னைவ​ரையும் ​வெற்றி ​கொண்டார்.

    இருப்பினும் அவரது ​வெற்றி​யை அரசனும் தண்டி​கைப் புலவர்களும் ஒப்புக் ​கொள்ளவில்​லை. வெற்றிபெற்ற காளமேகப்புலவரை அரசன் எள்ளளவும் பாராட்டாமல் அவமதித்தான். தனது அரசவைப் புலவர்களைத் தோற்கடித்து அவமானப்படுத்தி விட்டதாக அவன் கருதினான். அரசனின் போக்கு காளமேகப் புலவருக்கு மிகுந்த வேதனையையும், கடுஞ்சினத்​தையும் கொடுத்தது. தன் ​வெற்றி​யை ஏற்றுக் ​கொள்ளாமல் தன்​​னை அவமதித்த மன்ன​னுக்கும் புலவர்களுக்கும் பாடம் கற்பிக்க ​வேண்டும் என்று நி​னைத்தார் காள​மேகப் புலவர். அவரின் ​கோபம்

    “கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்
    காளைகளாய் நின்று கதறுமூர் – நாளையே
    விண்மாரி யற்று வெளுத்து மிகக் கறுத்து
    மண்மாரி பெய்கவிந்த வான்.

    என்ற வசைக் கவியாக வெளிப்பட்டது. திருமலைராயன் பட்டினம் அழிந்து போகட்டும் என்று வசைபாடினார்.

    கொலைகாரர்கள் இருக்கின்ற இந்த ஊர், கோள் மூட்டல், வஞ்சகம் செய்தல் என்பவற்றைக் கற்றிருக்கும் இந்த ஊர், கட்டுப்பாடற்ற காளைமாடுகளைப்போல கதறித்திரிவோரைக் கொண்ட இந்த ஊர், நாளை முதல் மழைபெய்யாமல் வறண்டு போகட்டும். மண்ணே மழையாகப் பெய்யட்டும் என்று சாபமிட்டுப் பாடினார். அத்துடன் அவரது கோபம் தணியவில்லை. மேலும்,

    “செய்யாத செய்த திருமலைராயன்வரையில்
    அய்யா வரனே அரைநொடியில் – வெய்யதழற்
    கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற் தீயோர்
    மண்மாரி யாலழிய வாட்டு”

    என்று பாடினார்.

    என் அப்பனே சிவபெருமானே! நெருப்பாகவிருக்கும் உனது நெற்றிக்கண்ணினால் மன்மதனைச் சுட்டெரித்ததுபோல, செய்யத் தகாததையெல்லாம் எனக்குச் செய்த இந்தத் திருமலைராயனின் ஆட்சி எல்லைக்குள் வாழ்கின்ற தீயவர்கள் அரை நொடியில் அழிந்துபோகும் வண்ணம் மண் ம​ழை பொழிந்து அவர்களை வாட்டி வதைப்பாயாக! என்று சிவனை வேண்டிப் பாடிவிட்டுத் திரும​லைராயன் பட்டினத்​தைத் திரும்பிப் பாராது ​சென்றார்.

    இரட்​டைப் புலவர்களின் பாட​லை முடித்தது:
    திரும​லைராயன் பட்டினத்திலிருந்து கிளம்பிய காள​மேகப் புலவர் திருச்​செங்காடு, காஞ்சிபுரம், திரு​வொறிறியூர், திருக்கச்ச​பேசம், சிதம்பரம், திருக்கழுக்குன்றம், திருமுட்டம், திருஆலங்குடி, ​வைத்தீஸ்வரன் ​கோவில், திருவண்ணாம​லை, மது​ரை, திருவி​டை மருதூர், திருத்துருத்தி, திருக்குடந்​தை, திருக்கண்ணபுரம், ​தெண்டி நள்ளாறு, நா​கைப்பட்டினம் என்று பலதலங்களுக்கும் ​சென்று பல பாடல்க​ளைப் பாடி திருவாரூர் வந்த​டைந்தார்.

    அப்​போது திருவாரூரில் ​கோயி மதிற்சுவரில்,

    “நாண் என்றால் நஞ்சிருக்கும்;நற்சாபம் கற்சாபம்;
    பாணந்தான் மண்தின்ற பாண​மே – “

    என்ற இரண்டு அடிக​ளோடு அந்தப் பாடல் முடிக்கப் ​பெறாமல் இருந்த​தைக் கண்டார். அத​னைக் கண்டவுடன் காள​மேகப் புலவரின் மனதில் பாடல் ஊற்​றெடுத்தது. உட​னே அவர் முற்றுப் ​பெறாமலிருந்த அப்பாட​லை,

    “…………தாணு​வே!
    சீர்ஆரூர் ​மேவும் சிவ​னே! நீஎப்படி​யோ
    ​நேரார் புர​மெரித்த ​நேர்!”

    என்று அந்த ​வெண்பா​வை முடித்து மதிற்சுவரில் எழுதிவிட்டுப் புறப்பட்டார்.

    காலமாகிய காள​மேகப் புலவர்:
    காள​மேகப் புலவரின் சாபத்தின்படி திருமலைராயன் பட்டினம் சிலகாலத்தில் அழிந்தொழிந்தது. அப்​போதுதான் அவரது தமிழின் வலிமை தமிழ் உலகத்திற்குத் தெரிந்தது. தமது சிறுமதியின் நிலைமையைத் தண்டிகைப் புலவர்கூட்டம் உணர்ந்து வருந்தியது. அதிமதுரக்கவிராயர் தமது முதுமைக் காலத்தில் தாம் ​செய்த தவறுகளுக்காக மிகவும் வருந்தினார்.

    காளமேகப்புலவரைக் கண்டு அவரிடம் தாம் தவறாக நடந்து ​கொண்ட​மைக்குக் கழுவாய் ​தேட விரும்பினார். அவ்வாறு அவர் காள​மேகப் புலவ​ரை எதிர்பார்த்திருக்கும்​போது ஒருநாள் திருவாரூருக்கு காள​மேகப் புலவர் வந்திருப்பதை அறிந்து அவ​ரைக் காண்பாதற்குத் தேடிச் சென்றார். ஆனால் அதிமதுரகவியார் வருவதற்கு முன்​பே காள​மேகப் புலவர் அங்கிருந்து சென்றுவிட்டார். அத​னை அறிந்த அதிமதுரகவிராயர் மிகுந்த கவலையடைந்தார். காள​மேகப் புலவ​ரைப் பார்க்க முடியாம​லே​யே தம் ஊருக்கு அதிமதுரகவிராயர் ​திரும்பிச் சென்றார்.

    அவர் ​சென்ற சிலநாட்களில் காளமேகப்புலவர் திருவாரூருக்கு வந்தார். திருவாரூருக்கு வந்தவர் அங்​கே​யே முதுமையால் இவ்வுலக வாழ்​வை நீத்தார். காள​மேகப் புலவர் இறந்த செய்தியை அறிந்த அதிமதுரகவிராயர் உற்ற நண்பர் ஒருவரை இழந்ததுபோல் மிகவும் துன்பமடைந்தார். தன் மனத்துயரை,

    “வாசவயல் நந்தி வரதா திசையனைத்தும்
    வீசுகவி காள மேகமே – பூசுரா
    விண்தின்ற ​வெவ்வழலில் வேவுதே பாவியேன்
    மண்தின்ற பாணமென்ற வாய்.”

    என்று பாடலாகப் பாடி வெளிப்படுத்தினார்.

    அப்​போது திருவாரூருக்கு வந்திருந்த இரட்​டைப் புலவர்கள் தாங்கள் எழுதிச் ​சென்ற ​வெண்பா முடிக்கப் ​பெற்றிருந்த​தைப் பார்த்து இப்பாட​லைப் முடித்தவர் காள​மேகப் புலவராகத்தான் இருக்க ​வேண்டும் என்று அறிந்து அவ​ரைப் பார்க்க நி​னைத்தனர். அவர் இறந்துவிட்டார் என்ப​தை அறிந்து சுடுகாட்டிற்குச் ​சென்ற அவர்கள் சி​தையில் காள​மேகப் புலவரின் உடல் ​வெந்து ​போவ​தைக் கண்டு கண்ணீர்விட்டுக் கலங்கியழுதனர். பின்னர் ​கையற்ற நி​லையில்,

    “ஆசுகவியால் அகில உல​கெங்கும்
    வீசுபுகழ்க் காள ​மேக​மே – பூசுரா
    விண்​கொண்ட ​செந்தணலாய் ​வேகின்ற ​தை​யை​யோ
    மண்தின்ற பாண​​மென்ற வாய்”

    என்று பாடி இரங்கினர். இப்பாட​லை அதிமதுரகவிராயர் பாடியது என்று கூறுவர். இதற்கு முன்னுள்ள பாட​லே அதிமதுரகவிராயர் பாடியது என்றும் அ​தே​போன்ற​மைப்பில் இரட்​டையர்கள் அங்கு வந்த​போது பாடினர் என்றும் கூறுவர்.

    தமது புல​மையால் பார்புகழ விளங்கிய காள​மேகப் புலவர் தமிழிலக்கிய உலகில் ஒளிவீசும் விண்மீனாக விளங்கிக் ​கொண்டிருக்கின்றார். அவர் திருவா​னைக்கா உலா, சரசுவதி மா​லை, சித்திர மடல், பரப்பிரம்ம விளக்கம், பல தனிப்பாடல்கள் ஆகிய​வை காள​மேகப் புலவரின் ப​டைப்புகளாகும்.

    மக்கள் பலர் தன்னைச் சூழ்ந்துவர, தலைவன் உலா வருவதை வருணித்துக் கூறுவதாக அமைந்தது திருவானைக்கவுலா என்ற நூல். சித்திரமடல் என்பது காதல் தோல்வியடைந்த ஒருவர் தன்னை வருத்திக்கொள்வதான பொருளமைந்த நூலாகும்.

    இ​வை அ​னைத்தும் காள​மேகப் புலவரின் புல​மைத்திறத்​தை பூவுலகில் எடுத்து​ரைத்துக் ​​கொண்​டே இருக்கும். காலங்கள் கடந்தாலும் காள​மேகப் புலவரின் பாடல்கள் கற்றவர்களின் மனதில் களிப்​பை ஏற்படுத்திக் ​கொண்​டே இருக்கும்.

    ___________________________________________________________
    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
    E.mail: Malar.sethu@gmail.com

    Share
  • யோகக் க​லை​யை வளர்த்​தெடுத்த பதஞ்சலிமுனிவர்

    மு​னைவர் சி.​ சேதுராமன்.

    Patanjaliயோகக் க​லை​​யை வளர்த்​தெடுத்தவர்களுள் பதஞ்சலி முனிவர் குறிப்பிடத்தக்கவராக விளங்குகிறார். மக்களி​டை​யே அவர் குறித்து பல்​வேறு புராணக் கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பதஞ்சலி முனிவரின் காலம் தொன்மையானது. இவர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாகவும் கூறுவர். இவ​ரைப் பற்றிய புராணக் க​தை​யொன்று மக்களி​டை​யே வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றது.

    பதஞ்சலி முனிவ​ரைப் புராணங்கள் திருமாலின் படுக்​கையாக விளங்கும் ஆதி ​சேஷனின் அவதாரம் என்று குறிப்பிடுகின்றன. திருமால் மண்ணுலகில் அவதாரங்கள் செய்ய வந்தபோது இவர் முனிவராக அவதாரம் செய்வதாகவும் கூறுகின்றனர்.

    பதஞ்சலி முனிவரின் வரலாறு:
    பாற்கடலில் பரந்தாமன் பள்ளி​கொண்டிருந்த​போது அவர் சிவ​பெருமானின் நடனத்தைத் தன் மனக் கண்களால் கண்டு மகிழ்ந்து ​கொண்டிருந்தார். திருமாலின் மகிழ்ச்சியால் அவரின் உடல் எ​டை திடீ​ரென்று அதிகரித்தது. இத​னை உணர்ந்து வியந்த ஆதி​சேடன் இதற்கான காரணம் என்ன என்று திருமாலிடம் ​கேட்டார்.

    ஆதி​சேடனின் வினாவி​னைக் ​கேட்ட திருமால் அ​னைத்திற்கும் மூலாதாரமாக விளங்கக் கூடிய சிவ​பெருமானின் ஆனந்தமயமான நடனக் காட்சி​யை உள்ளத்தில் கண்ட​தையும் அதன் அரு​மை ​பெரு​மை​யையும் விளக்கமாக எடுத்துக் கூறி அதனால்தான் தான் மகிழ்ந்ததாகவும் அதன் காரணமாத் தன் உடல் எ​டை அதிகரித்ததாகவும் கூறியருளினார்.

    திருமாலின் கூற்​றைக் ​கேட்ட ஆதி​சேடன் மனக்கண்ணில் கண்டு மகிழ்ந்த​தே ​பெருங்களிப்​பைத் தருமானால் இ​றைவனின் திருநடனத்​தை ​நேரில் கண்டு வணங்கினால் எத்த​கைய பரவச நி​லை ஏற்படும் என்று உணர்ந்து தானும் இ​றைவனின் ஆனந்த நடனத்​தைக் கண்டு வணங்க ​வேண்டும் என்று தனது விருப்பத்​தைத் திருமாலிடம் எடுத்து​ரைத்தார்.

    திருமாலும் தாம் கண்டு அனுபவித்து மகிழ்ந்த காட்சி​யை ஆதி​சேடனும் கண்டு மகிழ ​வேண்டும் என்று எண்ணி அவ​ரைச் சிதம்பரத்திற்குச் ​சென்று இறைவ​னைக் கண்டு வணங்கி வருமாறு கூறுகின்றார்.

    இ​றைவ​னது ஆனந்த நடனத்​தைக் கண்டு வணங்க விருப்பமுற்ற ஆதிசேஷன் தான் ஒரு முனிவரின் மகனாகப் பிறப்பதற்குத் திருவுளம் ​கொண்டார். அதன்படி ஆதி​சேடன் பிரம்மாவின் கண்ணிலிருந்து ​தோன்றியவரும் சப்தரிஷி மண்டலத்தில் முதலாவதாகத் திகழ்பவருமாகிய அத்திரி முனிவருக்கும் மும்மூர்த்திகளையும் குழந்​தைகளாக்கிய அனுசூயா​தேவிக்கும் மகனாகப் பிறந்தார். அதிலும் இவர் மனிதத் த​லையும் பாம்பின் உடலும் ​கொண்டவராகப் பிறந்தார் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    பதஞ்சலி – ​பெயர்க்காரணம்:
    தானும் நடன தரிசனம் காண எண்ணித் தவம் புரிந்தார் ஆதிசேஷன்.அவரைச் சோதிக்கத் திருவுள்ளம் கொண்டார் சிவபிரான். பிரம்மதேவனின் வடிவம் கொண்டு ஆதிசேஷன் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் ? எனக் கேட்டார். அவரைப் பிரம்மதேவன் என எண்ணிய ஆதிசேஷன் உம்மால் ஆக வேண்டியது ஒன்றும் இல்லை எனக்கூறித் தவத்தில் கருத்தைச் செலுத்தினார். மகிழ்வடைந்த சிவபிரான் பின் தரிசனம் தந்தார். அவ​ரைக் கண்டு வணங்கிய ஆதி​சேடன் தான் தங்களது ஆனந்தத் தாண்டவ நடனத்​தைக் காண ​வேண்டும். இது​வே யான் ​வேண்டும் வரம் என்றார். அத​னைக் ​கேட்ட சிவ​பெருமான், “ஆதி​சேட​னே! நீ அத்திரி முனிவருக்கும் அனுசூயைக்கும் குழந்தையாய்ப் பிறந்து வளர்ந்து, சிதம்பரம் அடைவாயாக. அங்கே என் நடனக் காட்சி​யைக் காண்பதற்குத் தவம் ​செய்து ​கொண்டிருக்கும் வியாக்கிரபாத முனிவருடன் சேர்ந்து இருந்தால் அங்கே யாம் எம் நடன தரிசனம் தருகின்றோம்“ என்று இறைவன் அருள் செய்து மறைந்தார்.

    அதன்படி ஆதி​சேடன் அத்திரி, அனுசுயா​தேவி இருவருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது பிறப்பு பற்றி ​வே​றொரு க​தையும் வழங்கப்படுவது சிந்த​னைக்குரியது. சிவ​பெருமானின் வரம் காரணமாக ஆதிசேடன் ஒரு நாள் சிவ​பெருமா​னைத் தியானித்துக் ​கொண்டு இ​றைவனிடம் கையேந்திக் ​கொண்டிருந்த அனுசூயையின் கைகளில் விழுந்தார். அத​னைக் கண்ட அனுசுயா​தேவி ஆதி​சேட​னைச் சாதராணப் பாம்​பென்று எண்ணித் தனது கையை உதறிவிட ஆதி​சேடன் அனுசுயா​தேவியின் பாதத்தில் விழுந்தார். இங்ஙனம் பாதத்தில் விழுந்ததாலும், இ​றைவ​னை வணங்கிக்(அஞ்சலித்த) ​கொண்டிருந்த ​கைகளில் விழுந்ததாலும் பதஞ்சலி எனக் காரணப் பெயர் பெற்றார் என்ற க​தையும் வழங்கப்பட்டு வருகிறது.

    அவ்வாறு விழுந்த ஆதி​சேட​​னைப் பின்னர் அனுசுயா​தேவி தமது குழந்​தையாக வளர்த்து வந்தார். பதஞ்சலி முனிவர் வளர்ந்தவுடன் இ​றைவனின் திருநடனத்தைக் காண்பதற்காகச் சிதம்பரம் ​நோக்கிச் ​சென்றார். அங்கு வியாக்கிரபாதருடன் ​சேர்ந்து சிவ​பெருமானின் திருநடனத்​தைக் கண்டு மகிழ்ந்தார்.

    இப்பதஞ்சலி முனிவர், திருமூலர் உள்ளிட்ட எண்மருக்கு ​யோகக் க​லையி​னை நந்தி​தேவர் அருளிச் ​செய்ததாகவும் அவர்களிருவரும் நந்தியிடம் இருந்து கற்ற க​லை​யை மற்றவர்களுக்குக் கற்றுக் ​கொடுத்ததாகவும் கூறுகின்றனர். திருமூலர் இத​னை,

    “நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம்
    நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
    மறு தொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர்
    என்றிவர் என்னோடு எண்மருமாம்!”
    என்று திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

    நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பாஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். ஆனாலும் இவற்​றை எல்லாம் எழுதியது ஒருவரே என்பது அறிஞர் பலரின் முடிந்த முடிவாகும்.

    பதஞ்சலி முனிவர் ஆதி​சேடன் அவதாரமாகத் தோன்றியவர். அதனால் பதஞ்சலி முனிவரின் விஷமூச்சுக்காற்றுப் பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் மாணவர்களுக்கு ​நேரி​டையாக அல்லாது அசரீரியாகவே க​லைக​ளைக் கற்றுக் ​கொடுத்து வந்தார். மாணவர்களால் அவ​ரைப் பார்க்க முடியாது.

    இந்நி​லையில் பதஞ்சலி முனிவருக்குத் திடீ​ரென்று ஓரா​சை மனதினுள் எழுந்தது. தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய வியாகரண சூத்திரம் என்னும் நூலைத் தம்முடைய மாணவர்களுக்குத் தாமே நேரி​டையாக இருந்து கற்றுக் ​கொடுக்க வேண்டும் என்ப​தே அவ்வா​சையாகும்.

    அவரது எண்ணப்படி ​பெரிய தி​ரை​யொன்​றைத் தமக்கும் மாணவர்களுக்கும் இ​டையில் ​தொங்கவிடுமாறு கூறினார். தி​ரை​யைத் தூக்கி யாரும் தன்​னைப் பார்க்கக் கூடாது என்று மாணவர்களுக்குக் கட்ட​ளையிட்டார். அவரது ஏற்பாட்டின்படி பாடம் ​வெகு சு​வையாகச் ​சென்று ​கொண்டிருந்தது. பலநாள்கள் மாணவர்கள் பாடங்​கேட்டனர்.

    இவ்வாறு இருக்​கும்​போது ஒருநாள் அம்மாணவர்களுள் ​கெளடபாதர் என்பவ​ரை மட்டும் பணி காரணமாக ​வெளியில் அனுப்பிய பதஞ்சலி முனிவர் மற்ற மாணவர்களுக்குப் பாடஞ் ​சொல்லலானார். மாணவர்கள் தம்​மை மறந்து பாடங்​கேட்டனர். அப்​போது அவர்கள் இத்த​கைய ஆசிரிய​ரைத் தாம் ​நேரி​டையாகக் காணாது இருக்கின்​றோ​மே மனத்தில் வருத்தம் எழத் தி​ரை​யை விலக்கி அ​னைவரும் அவ​ரைப் பார்க்க முடிவு ​செய்து அங்ஙன​மே தி​ரை விலக்கிப் பார்த்தனர்.

    அப்​போது பதஞ்சலி முனிவரின் பார்​வையும் கடும் விஷமும் பட்டு அவர்கள் அ​னைவரும் எரிந்து சாம்பலாகிவிட்டனர். ஆசிரியர் கூறிய அ​னைத்துப் பணிகளையும் முடித்து அங்கு வந்த கௌடபாதர் அங்கு நிகழ்ந்த​தை எண்ணி வருந்தினார். பின்னர் பதஞ்சலி அவ​ரைத் ​தேற்றி அவருக்குத் தாம் கற்ற க​லைகள் அ​னைத்​தையும் கற்றுக் ​கொடுத்தார்.

    கௌடபாதரும் தனது ஆசிரியரிடமிருந்து அனைத்துக் க​லைக​ளையும் கற்றுத் ​தேர்ந்தார். பதஞ்சலி முனிவர் அதன் பின்னர் யோக சூத்திரத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தில் கனலை எழுப்பி யோகம்புரிந்தார். அப்​போது அவரது ஆழ்மனதில் தனது ஆதி​சேட அவதாரத்தின் மகிழ்ச்சியான காட்சி​யைக் கண்டு ​மெய்விதிர்விதிர்த்தார். சிவ​பெருமா​னைத் தியானித்து தில்​லைச் சிதம்பரத்தி​லே​யே இ​றைவனுடன் இரண்டறக் கலந்து சமாதிநி​லை அ​டைந்தார். இவர் பாணினி சூத்திரத்திற்கு விளக்கவுரை (பாஷ்யம்) எழுதினார். பதஞ்சலி யோக சூத்திரம் என்னும் நூல் இவர் பெயரால் விளங்குகின்றது.

    புஷ்ய மித்திரர் இவருடைய சம காலத்தவராகக் கருதப்படுகின்றார். புஷ்ய மித்திரரின் காலம் கி.மு.3-ம் நூற்றாண்டு என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அதனால் பதஞ்சலி முனிவரின் காலமும் கி.மு.3-ஆம் நூற்றாண்டு என்று கூறுவர். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாயும், பதஞ்சலி முனிவர் சமஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம் தான் திருமூலரின் “திருமந்திரம்” என்று சொல்வோரும் உண்டு. ஆனால் இதற்கு அடிப்ப​டையான சான்றுகள் ஏதும் இல்​லை என்பது ​நோக்கத்தக்கது. இ​வை எல்லாமே யூகங்களின் அடிப்ப​டையில் அ​மைந்த​வை என்பது ஆய்வாளர்களின் முடிவாகும்.

    திருமூலர் திருமந்திரம் என்பது ​யோக​நெறிக​ளைக் குறிப்பிடுகின்றது. திருமூலர் திருமந்திரம் தனித்த​தொரு ​யோக நூலாகத் திகழ்கின்றது. பதஞ்சலி முனிவரின் ​யோகசூத்திரம் ​யோகத்​தை விளக்கும் ​யோகநூலாக விளங்குகின்றது. இருவரும் தனித்தனி​யே நூல்க​ளை இயற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. பதஞ்சலி முனிவரின் ​யோகசூத்திரத்​தைப் பார்த்​தே திருமந்திரத்​தை திருமூலர் எழுதினார் என்பது சற்றும் ​பொருந்தாத் தன்​மையு​டைய கூற்றாகும்.

    பதஞ்சலி முனிவரும், திருமூலரும் கூறிய ​யோக ​நெறிகள் அவரவர் ​பெயர்களி​லே​யே கூறப்பட்டு வருகின்றன. ​எது எவ்வாறிருப்பினும் பதஞ்சலி முனிவரும் திருமூலரும் உலகிற்கு ​யோக​நெறிக​ளை வழங்கிய பிதாமகர்களாக மூலவர்களாக விளங்குகின்றனர். இவர்களது ​யோக​நெறிகள் உலக மக்க​ளை உய்விக்க வந்த வாழ்க்​கை ​நெறிகளாக விளங்குகின்றன.

    ____________________________________________________________________________________

    மு​னைவர் சி.​ சேதுராமன்
    தமிழாய்வுத் து​றைத்த​லைவர்
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை
    Malar.sethu@gmail.com

    Share
  • யோக நெறிகளின் பிதாமகர் திருமூலர்

    — முனைவர் சி.சேதுராமன்.

    Thirumoolar_Nayanarயோக நெறிகளில் மிகச் சிறந்தவராக விளங்குபவர் திருமூலர் ஆவார். அவரே யோகநெறிகளின் தந்தையாக விளங்குகின்றார். யோகநெறிகளைத் தான் மட்டுமே பயன்படுத்திப் பயன் பெறாது அனைவருக்கும் அந்நெறியைப் போதித்து அதன் வளர்ச்சிக்கு வித்திட்டவராகத் திருமூலர் திகழ்கின்றார். இவர் எழுதிய திருமந்திரம் வாழ்க்கை நெறிகளை எடுத்துரைக்கும் பெருமை மிகுந்த யோக நூலாகத் திகழ்கின்றது.

    திருமந்திரம் பத்தாம்திருமுறையாகும். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. யோகிகள் பல்லாண்டுகாலம் உயிர் வாழ்ந்திருப்பார் என்று கூறுவர். திருமூலர் ஒரு யோகியாவார். உடல் வேறு, உயிர்வேறு. இவையிரண்டும் ஒன்று சேர்ந்து இருந்தால் தான் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப்பொருட்களையும் அடைய முடியும் என்ற உயர் யோக நெறியைத் திருமூலர் நமக்குக் கூறுகின்றார். திருமந்திரம் ஒன்பது பகுதிகளாக உள்ளது. ஒவ்வொரு பகுதியும் ஒரு தந்திரம் எனப் பெயர் பெறும்.

    கூடுவிட்டுக் கூடுபாய்தல்:
    தன் உடலை விட்டுவிட்டு வேறொரு உடலில் புகுவதையே கூடுவிட்டுக் கூடு பாய்தல் என்று சித்தர்கள் மொழிவர். இதனைப் பரகாயப் பிரவேசம் என்று குறிப்பிடுவர். பர – வேறு, காயம் – உடல், பிரவேசம் – புகுதல். இதன் பொருள் கூடு விட்டுக் கூடு பாய்தல் என்பதாகும். அதாவது ஓர் உயிர் தான் குடியிருக்கும் உடலை விட்டுநீங்கி, மற்றோர் உடம்பினுள் நுழைந்து, அவ்வுடம்பிற்கு ஏற்றவாறு செயல் படுதல். விக்கிரமாதித்தன், ஆதிசங்கரர், அருணகிரிநாதர் ஆகியோர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததாக வரலாறுகள் தெளிவுறுத்துகின்றன. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய திருமூலரும் மூலன் என்பவனின் உடம்பில் புகுந்து ஆகமப்பொருளைக் கூறியுள்ளார். உயிர் வேறு, உடல் வேறு என்ற தத்துவத்திற்குக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தை ஓர்உதாரணமாக விளங்குகிறது.

    திருமூலரின் வரலாறு:
    நந்தியெம்பெருமான் மாணாக்கரில் பதஞ்சலியும், வியாக்கிரமரும் கயிலையினின்றும் தென்னாடு வந்து தில்லையம்பலத்தில் சிவபெருமானுடைய நடன தரிசனம் காண்பதற்காக வந்த காலத்து, திருமூலநாயனாரும் தம்முடைய சொந்த உடம்புடன் (அஃதாவது மூலனுடைய சரீரத்தில் புகுவதற்கு முந்தி) அவர்களுடன் கூடவே வந்து, நடனக் காட்சியைக் கண்டு களித்துப் பின் கயிலைக்கு ஏகி, அங்குத் தவத்தினில் இருந்தார் என்பதை,

    “செப்பும் சிவாகமம் என்னுமப் போர்பெற்று
    அப்படி நல்கும் அருணந்தி தாள்பெற்றுத்
    தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
    ஒப்பில் எழுகோடி யுகமிருந் தேனே.”
    “இருந்தேனிக் காயத்தில் எண்ணிலி கோடி
    இருந்தேன் இராப்பகல் அற்ற விடத்தே
    இருந்தேன் இமயவர் ஏத்தும் பதத்தே
    இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.”
    என்ற தமிழ் மூவாயிரச் செய்யுட்களால் அறியலாம்.

    “இமயவர் ஏத்தும் பதத்தே” என்றதாலும், “என் நந்தி இணையடிக் கீழே” என்றதாலும். நாயனார் தில்லைக்கூத்தைக் கண்டு களித்தபின் கயிலை சென்று தவம் இயற்றினார் என்பது தெளிவாகின்றது.

    திருமூலர் பதஞ்சலி வியாக்கிரமருடன் தென்னாடு போந்தது முதல் தடவையாகும். அப்போது அவருக்குத்திருமூலர் என்ற பெயர் கிடையாது. இரண்டாவது முறையாக அவர் கயிலையினின்றும் பொதியையை நோக்கிவரும்போது, சோழநாட்டுச் சாத்தனூரில் பசுக்கள் மேய்க்கும் மூலன் இறந்து கிடக்கக் கண்டு, தம் உடலை ஓர்அரசமரப் பொந்தில் வைத்துவிட்டு, தம் உயிரை மூலன் உடம்புக்குள் புகுத்தி மூலனாக எழுந்த பின்னர் அப்பெயர் ஏற்பட்டது ஆகும். யோகநெறியை நந்திதேவரிடமிருந்து கற்ற திருமூலர் சிவ யோகியாகவே முதலில் அறியப்படுகிறார்.

    மூலன் உடலில் புகுந்தது: 
    கயிலாய மலையில் நந்தி தேவரின் உபதேசத்தைப் பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அட்டமா சித்திகளையும் கைவரப் பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கையிலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும்பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.

    செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.

    பின்னர் திருவாவடுதுறையை அடைந்தார். அங்கு இறைவனை வணங்கினார். அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன், அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன.

    அப்போது அதன் வழியாகச் சென்ற சிவயோகியார் அதனைக் கண்டார், பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.

    மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிறார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகிக் கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார்.

    அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிரூபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

    சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்றிருந்து, நன்னெறிகளை விளக்கும்‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார்.

    தாம் வீடுபேறு அடைவதற்கு முன்னர் “திருமந்திரத்தைத்” தம்முடைய ஏழு சீடர்களுக்கும் கற்பித்து, உலகில் பல மடங்களை ஏற்பாடு செய்து பதி, பசு, பாச இலக்கணங்களைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்குமாறு செய்து, திருமந்திரம் எழுதப்பட்ட ஒரு சுவடியைத் திருவாடுதுறைத் திருக்கோயிலின் முன்னர் இருக்கும் பலிபீடத்தின் கீழ்ச் சேமித்து வைத்த பின்னரே இறைவனோடு கலந்தார்.

    திருமூலருக்கு ஏழு சீடர்கள் உண்டு என்பதும், அவர் ஏழு மடங்களை நிறுவினார் என்பதும்,

    “மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
    இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
    கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
    இந்த எழுவரும் என்வழி யாமே.”
    “வந்த மடமேழு மன்னும்சன் மார்க்கம்
    முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை.”
    என்ற திருமந்திரச் செய்யுட்களால் அறியலாம்.

    திருமூலரது நூலுக்குத் தமிழ் மூவாயிரம் என்ற பெயரே முதலில் இருந்தது, அந்த நூலில் மனித உடலுக்குத் தேவையான எல்லாவற்றையும் விளக்கியுள்ளார். அதனால் பின்னர் அந்த நூல் “திருமூலர் திருமந்திரம்” என்றுவழங்கப்பட்டது.

    திருமந்திரத்தை 3000 பாடல்களாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார். இவற்றை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார். இவர் சுந்தரநாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலாமன்றில் பதஞ்சலி வியாக்கிரமர்களுடன் சிவபெருமானின் தனிக்கூத்து கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும்.

    திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள சிறப்புப் பாயிரத்தில்

    “மந்திரங் கொண்டு வழிபடு வோர்க்குச்
    சுந்தர நாதன் சொல்லிய மந்திரம்
    நந்திஎந் நாதன் நாவார ஓதினன்
    பைந்தொடி மேனிப் பயனது தானே.”
    “வந்தமட மேழு மன்னுஞ்சன் மார்க்கத்தின்
    முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை
    தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
    சுந்தரன் ஆகமச் சொன்மொழிந் தானே.”
    என்று குறிப்பிடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

    இச்செய்யுள் சுந்தரநாதருடன் ஒருங்கு கற்ற ஒருவரால் பாடப்பெற்றது. இவருக்கு நாதன் என்ற பட்டம் நந்தியெம் பெருமானால் கொடுக்கப்பட்டது. இதனை,

    “நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றொம்.”
    என்ற தமிழ் மூவாயிரச் செய்யுள் விளக்குகிறது.
    திருமூலர் மூலனின் உடலில் புகுந்ததை,
    “அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப்
    புகலிடத்தெம் மெய்யைப் போகவிட் டானைப்
    பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
    இகலிடத் தேயிரு ணீங்கிநின் றேனே.” (141)
    என்று திருமந்திரத்தில் விளக்கியுள்ளார்.

    மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாரா?
    திருமூலர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயிரோடு இருந்தாரா? என்று பலருக்கும் ஐயம் எழும். அவர்களது ஐயத்தைப் போக்குகின்ற வகையில்,

    “வளியினை வாங்கி வயத்தி லடக்கில்
    பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
    தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
    வளியினும் வெட்டு வளியனு மாமே.”(551)
    “நீல நிறனுடை நேரிழை யாளொடும்
    சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
    ஞால மறிய நரைதிரை மாறிடும்
    பாலனு மாவர் பராநந்தி யாணையே.”(718)
    என்றும்,

    “எங்கே இருக்கினும் பூரி இடத்திலே
    அங்கே அதுசெய்யில் ஆக்கைக்கு அழிவில்லை.”(552)
    “அண்டம் சுருங்கில் ஆக்கைக்கு அழிவில்லை.”(715)
    “நாட்ட மிரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
    வாட்டமு மில்லை மனைக்கும் அழிவில்லை.”(584)
    “ஈராறு கால்கொண்டு எழுந்த புரவியைப்
    பேராமற் கட்டிப் பெரிதுண வல்லிரேல்
    நீரா யிரமும் நிலமா யிரத்தாண்டும்
    பேராது காயம் பிரான்நந்தி ஆணையே.”(702)
    என்றும்,

    “காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
    கூற்றை யுதைக்கும் குறியது வாமே.”(553)
    மூல நாடி மூக்கட் டலக்குச்சியுள்
    நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காண்
    மேலை வாயில் வெளியுறக் கண்டபின்
    காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே.”(602)
    என்றும்,

    “உடம்பா ரழியில் உயிரார் அழிவர்
    திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
    உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
    உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.”(704)
    என்றும் திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அமைந்துள்ளன.

    இப்பாடல்களில் திருமூலர் தம் அனுபவத்தைக் கூறியுள்ளார். “தாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்”என்பது ஆன்றோர் கொள்கையாதலால், உலகத்தார் அறிந்து வாழ்வாங்கு வாழ்வதற்காக நீண்ட நாள் வாழ்கின்ற நெறிகளைத் திருமூலர் தம் நூலின்கண் தெளிவுறுத்தியுள்ளார்.

    திருமூலர் வைத்தியம், யோகம், ஞானம் என்ற முப்பெருந் துறைகளைப் பாடியுள்ளார். நந்தி அருளாலே மூலனை நாடினோம் (திருமந்திரம்-169) என்ற பாடல் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம். இவர் மூலனின் உடலில் இருந்தமையால் திருமூலர் எனப் பெயர் பெற்றார் என்பர். இவருக்குச் சுந்தரர் என்ற பெயரும் இருந்துள்ளது. இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாக அறுபத்து மூவர் பட்டியலிலும் சேர்த்து பெருமைப்படுத்திக் கூறியுள்ளார்.

    அகத்தியர், 12 காண்டத்தில்
    1.திருமூலர் காவியம் (கிரந்தம்) – 8000
    2. திருமூலர் சிற்ப நூல் – 1000
    3. திருமூலர் சோதிடம் – 300
    4. திருமூலர் மாந்திரிகம் – 600
    5. திருமூலர் சல்லியம் – 1000
    6. திருமூலர் வைத்திய காவியம் – 1000
    7. திருமூலர் வைத்திய கருக்கிடை – 600
    8. திருமூலர் வைத்திய சுருக்கம் – 200
    9. திருமூலர் சூக்கும ஞானம் – 100
    10. திருமூலர் பெருங்காவியம் – 1500
    11. திருமூலர் தீட்சை விதி – 100
    12. திருமூலர் கோர்வை விதி – 16
    13. திருமூலர் தீட்சை விதி – 8
    14. திருமூலர் தீட்சை விதி – 18
    15. திருமூலர் யோக ஞானம் – 16
    16. திருமூலர் விதி நூல் – 24
    17. திருமூலர் ஆறாதாரம் – 64
    18. திருமூலர் பச்சை நூல் – 24
    19. திருமூலர் பெருநூல் – 3000
    20.திருமூலர் ஞானோபதேசம் 30
    21.திருமூலர் நடுவணை ஞானம் 30
    22.திருமூலர் ஞானக் குறி 30
    23.திருமூலர் சோடச ஞானம் 16
    24.திருமூலர் ஞானம் 11
    25.திருமூலர் குளிகை 11
    26.திருமூலர் பூஜாவிதி 41
    27.திருமூலர் வியாதிக் கூறு 100
    28. திருமூலர் முப்பு சூத்திரம் 100…
    என்ற நூல்களும் இவரால் இயற்றப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை ஆய்விற்குரியது. ஆனாலும் திருமந்திரமே திருமூலரின் ஒப்பற்ற நூலாக அனைவராலும் போற்றப்படுகின்றது.

    திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். திருமூலர் இறுதியாக தில்லை சிதம்பரத்தில் ஜீவ சமாதி எய்தினார், பின்னர் வந்த பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார்.

    திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாகக் கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். திருமந்திரத்தில் உடலோம்பு நெறிகளாகப் பல்வேறு யோகநெறிகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

    ராஜயோகம், ஹடயோகம், மந்திர யோகம், சந்திர யோகம், ஆசனங்கள், அட்டாங்க யோகம், பரியங்க யோகம் போன்ற யோகநெறிகள் திருமூலரால் தெளிவுறுத்தப்பட்டுள்ளன. எளிமையாக யோகநெறிகளைத் திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ளமை சிறப்பிற்குரியது. முதன் முதலில் யோகநெறிகளை அனைவருக்கும் ஏற்ற வகையில் இயம்பிய பெருமை திருமூலரையே சாரும் எனலாம். அதனால்தான் திருமூலரை யோகநெறிகளின் பிதாமகர் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இவருக்குப் பின்னர் பலர் யோகநெறிகளை எடுத்துரைத்திருந்தாலும் அனைத்திற்கும் மூலமாக அமைந்திருப்பது திருமூலர் குறிப்பிடும் யோகநெறிகளேயாகும் என்பது வெள்ளிடை மலையாகும்.


    முனைவர் சி.சேதுராமன் தமிழாய்வுத் துறைத்தலைவர்,
    மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
    Malar.sethu@gmail.com

    Share
  • உணவுண்ணும் மு​றையும் உடல் நலமும்

    — மு​னைவர் சி.​சேதுராமன்.

    இ​றைவன் அளித்த இந்த அற்புதமான உட​லைக் காத்துப் ​பேணுவது நம்மிடம் தானுள்ளது. இள​மை​யைப் பாழாக்கிக் ​கொடிய ​நோய்க​ளைப் ​பெற்று அற்ப ஆயுளில் இறந்து ​போவது அறிவீனம். உடலுக்கு ஊறு ​நேர்விக்காத உண​வை உண்டால் ​நோய் என்பது நம்​மை அணுகாது.

    அவசரகதியில் இயங்கும் இன்​றைய உலகில் கி​டைத்த உண​வை உண்டு ​நோ​யை நா​மே வலிய வரவ​ழைத்துக் ​கொள்கின்​றோம். உணவிற்கும் உடல் நலத்திற்கும் மனதிற்கும் ​நெருங்கிய ​தொடர்பு உள்ளது. நல்ல உணவாக இருந்தாலும் அத​னை உண்ணுகின்ற மு​றைப்படி உண்ண ​வேண்டும். இல்​லை​யென்றால் அது உடலுக்கு தீங்கு வி​ளைவிக்கும். அவரவர் உடலின் தன்​மைக்கு ஏற்ப ஏற்ற உண​வை உண்ணுதல் ​வேண்டும்.

    சிலர் உண்ணும்​போது சலசல​வென்று ​பேசிக் ​கொண்​டே உண்பார்கள். இன்னும் சிலர் நின்று ​கொண்டும் அங்குமிங்கும் அ​லைந்து ​கொண்டும் உண்பார்கள். அ​​மைதியாக அமர்ந்து உண​வைத் தந்த இ​றைவனுக்கு நன்றி​யைத் ​தெரிவித்துக் ​கொண்டு விரும்பி உண்ண ​வேண்டும். அவ்வாறு உண்ணும் உண​வே உடலுக்கு நலத்​தைச் ​சேர்க்கும். அ​தைவிடுத்து ஏ​னோதா​னே என்று உண்ணும் உணவு உடலுக்கு நலத்​தைத் தருவ​தைவிட ​கேட்​டை​யே வி​ளைவிக்கும். இத​னை உணர்ந்து அ​னைவரும் உண்ணுதல் ​வேண்டும்.

    அதிலும் சிலர் தமக்குப் பிடித்த உணவாக அ​மைந்துவிட்டால் அத​னை அதிகமாக உண்பர். அவ்வாறு எந்த உண​வையும் அளவுக்கு அதிகமாக உண்ணுதல் கூடாது. அவ்வாறு உண்டால் அவ்வுண​வே நஞ்சாக மாறிவிடும். வள்ளுவப் ​பெருந்த​கை உண​வை உண்ணும் மு​றையி​னையும் உடல் நலத்​தைப் ​பேணும் முறையி​னையும் திருக்குறளில் ​தெளிவுற எடுத்து​ரைத்துள்ளார்.

    உணவு உண்ணும் மு​றை:
    உணவி​னை நாம் மு​றையாக உண்ணல் ​வேண்டும். மனம் ​போன ​போக்கில் உண்ணுதல் கூடாது. சிலர் நி​னைத்த​ போ​தெல்லாம் நி​னைத்த​தை உண்டு ​கொண்​டே இருப்பர். இது உடலில் ​சேர்ந்து ​நோய்க்கு இடங்​கொடுக்கும். சரி எத்த​னை மு​றை ​வேண்டு​மென்றாலும் உண்ணலாமா? என்றால் மூன்று மு​றை மட்டும் உண்ணலாம் என்று ​பொதுவாகக் கூறுவர். அதாவது கா​லை, நண்பகல், மா​லை என்று மூன்று ​வே​ளை உணவு உண்டு வர​வேண்டும் என்ற ​பொருள்படக் கூறுவார்கள்.

    ஆனால் “முப்​போது உண்பான் ​ரோகி” என்று பழம்பாடல் ஒன்று கூறுகிறது. தினம் மூன்று ​வே​ளை உண்டு வருபவன் வாழ்நாள் முழுவதும் ​நோயாளியாகத்தான் இருப்பான் என்று அந்தப் பாடல் ​தெளிவுறுத்துகின்றது.

    முதலில் உண்ட உணவு ​​செறிமானம் ஆகி நன்கு பசி எடுத்த பின்னர்தான் அடுத்த ​​வே​ளைக்குரிய உண​வை உண்ண ​வேண்டும். அவ்வாறு உண்பதால் ​நோய் என்பது நம்​மை அணுகாது. நம் உடலுக்கு மருந்து என்பது ​தே​வைப்படாது.

    இத்த​கைய உணவு உண்ணும் மு​றையி​னை,
    “மருந்​தென ​வேண்டாவாம் யாக்​கைக்கு அருந்தியது
    அற்றது ​போற்றி உணின்”
    என்று குறிப்பிடுகிறார்.

    முன் உண்ட உணவு நன்கு ​செறிமானம் ஆகிவிட்ட பிறகு, நன்கு பசி எடுத்த பின்புதான் அடுத்த ​வே​ளைக்கு உரிய உண​வை உண்ண ​வேண்டும். இவ்விதம் உண்டு வருவதால் ​நோய் ஏற்படாது. ​நோயின்றி இருந்தால் நமக்கு மருந்​தே ​தே​வை இல்​லை என்கிறார் வள்ளுவர்.

    கிராமப்புறங்களில் கூலி ​வே​லை ​​செய்பவர்கள், ம​லைகளுக்குச் ​சென்று விறகு ​கொண்டு வந்து பி​ழைப்பவர்கள், விடிந்ததும் ​போனால் ​பொழுது ​சென்ற பிறகு வீடு திரும்புவர்கள். நல்ல உடற்கட்டுடன் மட்டுமன்றி நீண்ட நாள் வாழ்வதற்குக் காரணம் அவர்கள் இரு ​வே​ளை உணவு மட்டு​மே உண்டு வருவதுதான், காலையில் எ​தையாவது சாப்பிட்டுவிட்டுப் பின்னர் மா​லையில் சூரியன் ம​றையும்​போதுதான் எ​தையாவது சாப்பிட முடிகிறது.

    அவர்களுக்குச் சாப்பிட வழியில்​லை. என​வே இந்த இரு​வே​ளை என்ற மு​றை இயற்​கையாக​வே அ​மைந்து விட்டது. என​வே அவர்களால் நீண்ட காலம் வாழ முடிகிறது. எண்பது வய​தைத் தாண்டியவர்களும் ​நோய் ​நொ​டியின்றிக் கண்பார்​​வை பழுதுபடாத வண்ணம் நீண்ட நாள் வாழ்கிறார்கள். எந்தவிதமான நாகரிக ​நோய்களும் அவர்க​ளை அண்டுவதில்​லை. காரணம் அவர்கள் பசி​யை நன்கு உணர்ந்து அனுபவித்து அதன் பின்ன​ரே உண்ணுகிறார்கள்; அவர்களால் உண்ணவும் முடிகிறது என்ப​தே சரியானதாகும்.

    வே​ளைக்கு ​வே​ளை மணி​யைப் பார்த்தவர்களாய், வயிறு பசிக்கிற​தோ இல்​லை​யோ குறிப்பிட்ட ​நேரத்தில் கண்டிப்பாகச் சாப்பிட்டுத் தீர ​வேண்டும் என்ற எண்ணமுடன் சாப்பிட்டு வருபவர்களுக்கு ​நோயானது ​பெரிதும் துன்பத்​தைக் ​கொடுக்கும். இவர்கள் அ​னைவரும் பசி​யை அறியாது உண்பார்கள். அதிகப்படியாக – அதாவது அளவுக்கு மீறி உண்ணுதல் என்பது இழிவாகும் என்ப​தை உணர்ந்து, மிதமாக உண்பவர்களிடம் இன்பம் நி​லைத்து நிற்பது​போல், அளவு மிகுந்து உண்ப​தே இன்பம் என்று நி​னைப்பவர்களிடம் தீராத ​நோய்க​ளே நி​லைத்து நிற்கும் என்ப​தை,
    “இழிவறிந்து உண்பான்கண் இன்பம்​போல் நிற்கும்
    கழி​பேர் இ​ரையான்கண் ​நோய்”
    என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    வயிறு பு​டைக்க உண்ணுதல் இழி​வைத் தரும். அதாவது ​கொடிய துன்பத்​தைத் தரும் என்று உணர்ந்து உண்பவனிடம் ​நோய் தங்க​வே தங்காது. இங்ஙனம் ​நோய் தங்காதவனிடம்தான் இன்பம் நி​லைத்து நிற்கும். மிகுதியாக உண்பவனிடம் ​நோய் நி​லைத்து நிற்கும். அவனால் மகிழ்வாக வாழ்க்​கை​யை நடத்த முடியாது. எப்​போதும் ​நோய் என்ற துன்பத்திற்கு ஆளாகி​யே மடிவர் என்ப​தை​யே இக்குறள் எடுத்தியம்புகிறது. அளவுக்கு அதிகமாக உண்ணாமல் ​தே​வையான அளவு அறிந்து உண்ணுதல் ​வேண்டும் என்று உண்ணுகின்ற மு​றை​மையி​னை, அளவி​னை இக்குறளில் வள்ளுவர் ​தெளிவுறுத்துகிறார்.

    அளவுடன் உண்ணுதல் ​வேண்டும்:
    கடும் உடலு​ழைப்பு இல்லாதவர்கள் மூன்று ​வே​ளை உண்டாலும் அளவறிந்து உண்ணுதல் ​வேண்டும். தன் ​தே​வைக்கு ​மேல் உண்பவர்கள்தான் இன்று அவதியுற்று மருத்துவ​ரை அடிக்கடி நாடுகின்றனர். ​மேலும் மருத்துவர்களிடம் ​பெரும்பணத்​தைக் ​கொடுத்துப் பயனின்றி வி​ரைவில் இவ்வுல​கை விட்​டே ​சென்றுவிடுகிறார்கள்.

    ஒவ்​வொருவருக்கும் ஒருவிதமான அளவு என்பது எல்லாவற்றிலும் உண்டு. அவ்வளவானது உணவிலும் உண்டு. அள​வறிந்து உண்டு வாழ்பவன் வாழ்க்​கை மகிழ்ச்சியாக இருக்கும். வள்ளுவர் இத​னை,
    “அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
    ​பெற்றான் ​​நெடிதுய்க்கு மாறு”
    என்று குறிப்பிடுகின்றார்.

    அளவறிந்து உண்பவ​னை ​நோய் நாடாது. அதனால் அவனது ​பொருள் வி​ரையமாகாது. அவன் வாழுகின்ற வாழ்க்​கை​யே ​அர்த்தமுள்ளதாக விளங்கும். உடல் நலத்​தோடு இருந்தால் மட்டு​மே ஒருவன் மற்றவர்களுக்கு உதவ முடியும். இல்​லை​யெனில் அவன் பிறருக்குச் சு​மையாக இருக்க ​நேரிடும். அதனால் நீண்ட நாள்கள் ​நோயின்றி வாழலாம் என்று இக்குறள் வழி வள்ளுவர் ​தெளிவுறுத்தியிருப்பது ​நோக்கத்தக்கது.

    பசித்துப் புசித்தல்:
    பசித்தால் மட்டு​மே நாம் எத​னையும் உண்ண ​வேண்டும். கி​டைக்கிற​தே என்று எத​னையும் பசி எடுக்காமல் இருக்கும்​போது உண்ணுதல் கூடாது. நாம் உண்ணும் உணவிலும் நமக்கு நன்​மை ​செய்வன தீ​மை ​செய்வன என்னும் பிரிவுகள் உண்டு. நமக்குப் பிடித்தமான உண​வாக இருந்தாலும் அத​னை அதிகமாக உண்ணுதல் கூடாது. அ​தே ​நேரத்தில் கு​றைவாகவும் உண்ணக் கூடாது. எந்த ஒன்​றையும் அள​வோடு உண்ணுதல் ​வேண்டும். அளவுக்கு மீறி உண்டால் அவ்வுண​வே நஞ்சாக மாறி ​நோயி​னை ஏற்படுத்தும். இத்த​கைய உண்ணும் ​நெறிமு​றை​யை,
    “அற்றது அறிந்து க​டைப்பிடித்து மாறல்ல
    துய்க்கத் துவரப் பசித்து”
    என்று எடுத்து​ரைக்கின்றார்.

    நாம் முன்னர் உண்ட உணவு நன்கு ​செறிமானம் ஆன​தை அறிந்து நன்கு பசித்த பிறகு நம் உடலுக்கு துன்பம் தருகின்ற உணவுக​ளைத் தவிர்த்து நன்​மை தருகின்ற உணவுக​ளை அள​வோடு உண்ணுதல் ​வேண்டும் என்று இக்குறட்பாவில் வள்ளுவர் பசித்துப் புசித்தல் ​வேண்டும் என்ற உணவு உண்ணும் ​கோட்பாட்​டை விளக்கியிருக்கிறார்.

    இயற்​கையுடன் இ​​யைந்த உணவு:
    நாம் உண்ணும் உணவானது இயற்​கையுடன் இ​யைந்த உணவாக இருத்தல் ​வேண்டும். அ​தென்ன இயற்​கையுடன் இ​யைந்த உணவு? அதிகக் கார​மோ, உப்புச் சு​வை​யோயின்றி கு​றைந்த அளவு உப்பி​னைக் ​கொண்டதாகவும் எண்​ணெய் அதிக அளவில் ​சேர்க்கப்படாமலும் இருக்க ​வேண்டும். நல்ல பழங்கள், பால், கீரைகள் இ​வையும் இயற்​கை​யோடு இ​யைந்த உணவுகளாகும். இவ்வுணவுகள் கிளர்ச்சி​யை ஏற்படுத்தாது. இ​வை சத்துவ குணம் நி​றைந்த உணவுகளாகும். இத்த​கைய உணவு வ​கைக​ளே நம்​மை அ​மைதியான வாழ்க்​கை​யை வாழச் ​செய்யும்.

    கூடுதலான வாச​னைப் ​பொருட்கள் மட்டுமின்றி அதிகப்படியான புளிப்பு, காரம் ​போன்ற​வைக​ளை இட்டுத் தயாரிக்கப்படும் உணவு வ​கைகள் ஆரவாரமான தன்​மை​யைத் தரும். இவ்வ​கையான உணவுகளுக்கு ராஜஸ குணத்​தை ஏற்படுத்தும் தன்​மைகள் அதிகம். அ​தே ​போன்று அளவுக்கு மீறி உணவி​னை உண்டால் மந்தமான நி​லை ஏற்படும். இம்மந்தமான நி​லைக்கு தாமச குணம் என்று ​பெயர்.

    இயற்​கை​யோடு இ​யைந்த உணவாக இருந்தாலும் கூட நாம் அள​வோடுதான் உண்ண ​வேண்டும். அள​வோடு மாறுபாடில்லாத உண​வை உண்டால்தான் நாம் உணவு உண்டதன் பய​னை முழு​மையாகப் ​பெற முடியும். வயிறு நி​றைய உண்டு திணறிக் ​கொண்டிருப்பதில் எந்தவிதமான நன்​மையும் ஏற்படாது. மாறுபாடு இல்லாத இயற்​கை​யோடு இ​யைந்த உணவி​னை உண்ண ​வேண்டும் என்ப​தை,
    “மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
    ஊறுபாடு இல்​லை உயிர்க்கு”
    என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    வள்ளுவர் மாறுபாடு இல்லாத உண்டி என்று குறிப்பிடுவது நமது உடலுக்கு ஏற்ற உண​வேயாகும். பீட்ஸா, டின்களில் அ​டைக்கப்பட்ட உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, வி​ரைந்து தயாரிக்கப்படும் உணவு, நூடுல்ஸ் உள்ளிட்ட ​வெளிநாட்டு உணவு வ​கைகள் நமக்கு, நாம் வாழும் சூழலுக்குப் ​பொருந்தாத மாறுபட்ட உணவு வ​கைகளாகும். இத்த​கைய உணவு வ​கைக​ளை உண்ணுதல் கூடாது.

    அவ்வாறு உண்டால் உயிருக்கு ஊறு ​நேரும். இயற்​கையான நம் உடலுக்கு ஏற்ற உணவி​னை உண்டால் நமக்கு எந்தவிதமான ​நோயும் ஏற்படாது. உயிருக்கு ஊறு ​நேராது. இத​னை அறிந்து நம்மு​டைய மரபு சார்ந்த உணவு வ​கைக​ளுக்கு முக்கியத்துவம் ​கொடுத்து, அத​னை நாம் உண்ண ​வேண்டும்.

    தே​வையறிந்து உண்ணுதல்:
    ஒருவருக்கு எப்​போது உண்ண ​வேண்டும் என்பது அவருக்​கே ​​தெரியும். அவர் தனது உடற்​தே​வைக்​கேற்ப அள​வோடு உண்ணுதல் ​வேண்டும். நமக்கு ​வேண்டியவர்கள் ​கொடுக்கிறார்கள், தட்டமுடியாது என்​றெல்லாம் கூறிக்​கொண்டு நம் உடலுக்கு ஒவ்வாத​தை உண்ணக் கூடாது. பசித்த பின்னர் நமக்குத் ​தே​வையான அளவுடன் உண்ணுதல் ​வேண்டும். சிலர் மற்றவர்கள் மனம் ​நோகக் கூடாது என்பதற்காக அவர்கள் ​கொடுக்கும் உண​வைத் தங்களுக்குப் பசியில்​லை என்றாலும்கூட உண்பார்கள். இத​னைத் தவிர்த்தல் ​வேண்டும். அவ்வாறு தவிர்க்காவிட்டால் ​நோய்க்கு ஆளாக ​நேரிடும்.

    இன்னும் சிலர் இன்று ஒருநாள்தா​னே! ஒரு நாள் உண்டால் ஒன்றும் ஆகிவிடாது என்று கூறி உண்ணுமாறு கூறுவார்கள். ஒரு நாள் சாப்பிட்டால் மறுநாள் ஒவ்வாத உணவால் ஒவ்வா​மை ​நோய் ஏற்பட்டு துன்புற ​நேரிடும். அதனால் பசித்தீயின் அள​வையும் உடலின் ​தே​வை​யையும் அறிந்து உண்ணுதல் ​வேண்டும் என்ப​தை,
    “தீயளவு அன்றித் ​தெரியான் ​பெரிது உண்ணின்
    ​நோயளவு இன்றிப் படும்”
    என்று குறிப்பிடுகின்றார்.

    பசித்தீயின் அள​வை அறிந்து உண்ணுதல் ​வேண்டும். அவ்வாறு உண்ணும் அ​ள​வை அறியாமல் மிகுதியாக உணவி​னை உண்பவன் கணக்கில்லாத ​நோயால் துன்புறுவான் என்பது உண்​மை. அளவறிந்து உண்ணல் ​வேண்டும். எ​தையும் கி​டைக்கிற​தே என்பதற்காக உண்ணுதல் கூடாது. சிலர் பசிக்காக அல்லாது ருசிக்காக​வே அளவுக்கு அதிகமாக உண்பர்.

    இவ்வாறு அளவு ​தெரியாமல் உண்டுவிட்டுப் பின்னர் ​வாந்தி எடுப்பர். வயிற்று ​நோயால் துன்பப்படுவர். அவ்வாறில்லாமல் தங்களின் பசித்​தே​வை அறிந்து உணவி​னை உண்ணுதல் ​வேண்டும்.

    வள்ளுவர் கூறும் உணவு உண்ணும் மு​றையானது வாழ்க்​கை​யை இனி​மையாக வாழ்வதற்குரிய ​நெறிமு​றையாகும். உணவி​னை வீணாக்காது நமது உடலின் ​தே​வையறிந்தும், நன்கு பசித்த பின்னரும் அள​வோடு உண்டு வளமாக வாழ்​வோம். உணவி​னை உண்ணும் மு​றையி​னை அறிந்து உடல் ​பேணு​வோம். அது​வே இன்பமான வாழ்வாகும்.

    _________________________________________________________________________

    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத்து​றைத் த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),
    புதுக்​கோட்​டை-1
    Malar.sethu@gmail.com

    Share
  • வியப்பில் ஆழ்த்தும் குறள் அமைப்பு

    மு​னைவர் சி.​சேதுராமன்.

    பல்லாண்டு காலங்கள் ஆனாலும் பல நூல்கள் நீடித்து வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதற்குக் காரணம் அந்நூலின் அமைப்பு, அழகு, எளிமை ஆகியவையே என்று கூறலாம். ஒரு நூலின் அமைப்பே அந்நூலைக் காலங்கடந்தும் மக்களின் மனதில் கொண்டு சேர்த்து நிலையாக நிறுத்துகிறது. அவை என்றும் இறவாப் புகழ் கொண்ட நூல்களாக விளங்குகின்றன. இறவாப் புகழடைந்த நூல்களுள் கட்டமைப்பில் திருக்குறள் சிறந்து விளங்குகின்றது.

    ஒவ்வொரு திருக்குறளும் படிக்கின்ற ஒவ்வொருவருக்கும் ஒரு புதிய விளக்கத்தைத் தருவனவாக உள்ளது. அதிலும் சில திருக்குறள்களின் பொருள் அக்குறள்களிலேயே அமைந்திருப்பது வியப்பிலும் வியப்பாகும்.

    திருக்குறள் எளிமையாக, அதிலும் குறிப்பாக கற்பார் மனங்கொளத்தக்க வகையில் பொருள் புலப்படும் வண்ணம் அமைந்திலங்குகின்றது.

    குறளின் அமைப்பு:
    குறள்கள் முதலடியில் நான்கு சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீர்ளையும் கொண்டு அமைந்துள்ளன. இவை குறளுக்குப் புதியதொரு பொருள் விளக்கத்தையே அளிக்கின்றன. திருக்குறளின் முதற்குறளாக அமைந்துள்ள,
    “அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு”
    எனும் கடவுள் வாழ்த்துத் திருக்குறள் எளிமையாகப் பொருள் புரியும் வகையில் அமைந்துள்ளது.

    இக்குறளின் அமைப்பைச் சற்று மாற்றியமைத்தால் பொருள் எளிதில் புலப்படும்.
    “எழுத்தெல்லாம் அகர முதல.
    உலகு ஆதிபகவன் முதற்றே”
    இவ்வாறு மாற்றியமைத்துப் பாருங்கள். குறளின் பொருள் எளிதில் விளங்கும். எழுத்துக்கள் அகரத்தை முதலாகக் கொண்டு விளங்குகின்றன. உலகம் ஆதிபகவனாகிய இறைவனை முதலாகக் கொண்டு இயங்குகின்றன என்று குறளே எளிதில் நமக்குப் பொருளை உணர்த்துவது சிறப்பிற்குரியதாகும்.

    அடிமாற்றப் பொருள் தருவன:
    “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்”
    இத்திருக்குறளை,
    “நிலைமிசை நீடுவாழ்வார்
    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்”
    என்று கீழடி மேலடியாகக் கொண்டு படித்தாலும் பொருள் மாறாது கற்பார்க்குப் பொருள் தெளிவாகின்றது.

    இதனைப் போன்றே,
    “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
    திண்ணி யராகப் பெறின்”
    எனும் குறளை,
    “எண்ணியர் திண்ணியராகப் பெறின்; எண்ணிய எண்ணியாங்கு எய்துப.”
    என்று அடிகளை மாற்யினால் குறளின் பொருள் நன்கு விளக்கம் பெறுகிறது.

    மேலும்,
    “ஊழையும் உட்பக்கம் காண்பர் உழைவின்றித்
    தாளாது உஞற்று பவர்”
    என்ற குறளை,
    “உழைவின்றித் தாளாது உஞற்றுபவர் ஊழையும் உட்பக்கம் காண்பர்” என்று அடிகளைச் சற்று மாற்றினால் எளிதில் பொருள் விளக்கம் பெறுகின்றது.

    காலம் அறிதல் அதிகாரத்தில் இடம்பெறும்,
    ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
    கருதி இடத்தாற் செயின்”
    எனும் குறளின் அடிகளை,
    “காலம் கருதி இடத்தாற் செயின்; ஞாலம் கருதினும் கைகூடும்”
    என்று மாற்றினால் குறளின் உட்பொருள் எளிதில் நமக்கு விளங்குகின்றது.

    “காலங் கருதி இருப்பர் கலங்காது
    ஞாலங் கருது பவர்”
    எனும் குறளை,
    “ஞாலங் கருதுபவர் கலங்காது காலங்கருதி இருப்பர்” என்று சொற்களைச் சிறிது மாற்றி அடிகளையும் மாற்றினால் எளிதான பொருள் நம் நெஞ்சில் நிறைகின்றது.

    சொற்களை முன்னும் பின்னும் மாற்றுதல்:
    அடிகளை மட்டுமல்லாது குறளில் உள்ள சொற்களை முன்பின்னாகவும் மேலது கீழாகவும் மாற்றினால் புதிய புதிய பொருளைத் தருவதாகச் சில குறட்பாக்கள் அமைந்துள்ளன, இதற்குச் சான்றாக,
    “கற்க கசடற கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக”
    என்ற குறட்பா அமைந்துள்ளது.
    இக்குறளானது,
    1. கற்க
    2. கற்க கற்க
    3. கசடறக் கற்க
    4. கற்பவை கற்க
    5. கற்றபின் கற்க
    6. நிற்க கற்க
    7. அதற்குத் தகக் கற்க.
    என்று கற்க என்னும் சொலலை மட்டும் குறளின் ஒவ்வொரு சொல்லுடன் முன்பின்னாக ஒட்டினால் பலவிதமான புதிய பொருளை நமக்கு அவை தருகின்றன. இக்குறட்பா ஏழுவிதமான கருத்துக்களை நமக்குத் தருகின்றது. இவ்வேழும் ஐ.நா. சபையின் கல்வி பற்றி சாசனத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    பொன்மொழி போல் விளங்கும் குறள் வரிகள்:
    வள்ளுவரின் குறள் வரிகள் பல பொன்மொழிபோன்று அமைந்து இன்பம் பயக்கின்றன. அவை பின்வருமாறு:
    1. கற்க கசடற
    2. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்
    3. உள்ளம் உடைமை உடைமை
    4. எண்ணிய எண்ணியாங்கு எய்துப.
    5. கற்றிலனாயினும் கேட்க
    6. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    7. அன்றறிவாம் என்னாது அறம் செய்க
    8. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்
    9. தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்
    10. ஊழையும் உட்பக்கம் காண்பர்
    11. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
    12. உள்ளற்க உள்ளம் சிறுகுப
    13. எனைத்தானும் நல்லவை கேட்க
    14. சொல்லுக சொல்லிற் பயனுடைய
    15. எண்ணித் துணிக கருமம்
    16. எல்லார்க்கும் நன்றாம் பணிதல்
    17. செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்
    18. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்
    19. யாகாவாராயினும் நா காக்க
    20. அடக்கம் அமரருள் உய்க்கும்
    21. காக்க பொருளாக அடக்கத்தை
    22. நன்றி மறப்பது நன்றன்று
    23. மறவர்க மாசற்றார் கேண்மை
    24. அன்பின் வழியது உயிர்நிலை
    25. பெண்ணின் பெருந்தக்க யாவுள
    26. செயற்கரிய செய்வார் பெரியர்
    27. நீரின்றி அமையாது உலகு
    28. முயற்சி திருவினையாக்கும்
    29. உடையர் எனப்படுவது ஊக்கம்
    30. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்
    31. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
    32. உள்ளத் தனையது உயர்வு
    33. ஞாலம் கருதினும் கைகூடும்
    34. ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்
    35. நல்லினத்தின் ஊங்கு துணையில்லை
    36. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்
    37. அறிவு அற்றம் காக்கும் கருவி
    38. அறிவுடையார் ஆவதறிவார்
    39. அறிவுடையார் எல்லாம் உடையார்
    40. கேடில் விழுச்செல்வம் கல்வி
    41. கண்ணுடையர் என்பவர் கற்றோர்
    42. கற்றனைத் தூறும் அறிவு
    43. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்
    44. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
    45. பெருக்கத்து வேண்டும் பணிதல்
    46. நலன் வேண்டின் நாணுடைமை வேண்டும்
    47. அற்றால் அளவறிந்து உண்க
    48. மிகினும் குறையினும் நோய் செய்யும்
    49. உண்ணற்க கள்ளை
    50. நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை
    51. மருவுக மாசற்றார் கேண்மை
    52. முகம் நக நட்பது நட்பன்று
    53. நகுதற் பொருட்டன்று நட்டல்
    54. நாடென்ப நாடா வளத்தன
    55. இடுக்கண் வருங்கால் நகுக
    56. இடுக்கண் களைவதாம் நட்பு
    57. பற்றுக பற்றற்றான் பற்றினை
    இவையும் இவை போன்ற பிற வரிகளும் ஒரு வரியிலமைந்த பொன்மொழிகளாக அமைந்துள்ளன. இவ்வரிகள் வள்ளுவர் உரைத்த திருக்குறளின் பிழிவாக அமைந்து இன்பம் பயக்கின்றன.

    இங்ஙனம் குறளின் அமைப்பானது வியப்புறும் வகையில் அமைந்து புதுப்புதுப் பொருள் விளக்கங்களைத் தருகின்றன. குறளின் ஒவ்வொரு வரியும் ஒரு புதுவிதமான உள்ளார்ந்த பொருளைத் தந்து கற்பார்க்கு வியப்பையும் இன்பத்தையும் அளிக்கின்றன.

    முனைவர் சி.சேதுராமன்,
    தமிழாய்வுத்துறைத் தலைவர்,
    மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),
    புதுக்கோட்டை-1
    E-mail: sethuramansingaram@yahoo.com

    Share
  • மொழிப்பாடம் கற்பித்தலில் புதுமைப்போக்குகள்

    –மு​னைவர் சி.​சேதுராமன்.

    கற்றல் என்பது கற்பித்தலின் மூலமே நிறைவு பெறுகிறது. பள்ளிக் கல்வியில் சிறப்பிடம் பெற வேண்டிய பாடங்களுள் ஒன்று மொழிப்பாடம். மொழித் திறனைப் பெறுபவர் நடைமுறை வாழ்க்கையுடன் பொருந்தி வாழும் வல்லமையைப் பெறுவர். அம்மொழித் திறனை மாணவர்கள் பெறுவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் மொழியாசிரியர்கள். ஆனால் மொழியாசிரியர்கள் என்றாலே பிறதுறை அறிவும் பயன்பாடும் அற்றவர்கள் என்ற எண்ணம் பரவலாக நிலவி வருகிறது. நவீன தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள, தொலைத் தொடர்புச் சாதனங்களின் ஆட்சிக்காலமான, அந்நிய மொழி மோகம் நிறைந்த இன்றைய சூழலில் மொழிப்பாடம் கற்பித்தல் என்பது மொழியாசிரியர்களை எதிர் நோக்கியுள்ள பெரிய சவாலாகும். இக்காலக் கட்டத்தில் மொழிப்பாடம் கற்பிக்க வேண்டிய முறைமைகளையும் மொழிப்பாடம் கற்பிப்பதில் உள்ள குறைபாடுகளையும் தொடர்ந்து ஆராய வேண்டியது தேவையாகிறது.

    நாப்பழக்கமே செந்தமிழ்:
    பொதுவாக இந்நூற்றாண்டைத் தொலைத் தொடர்பு யுகம் என்றழைக்கலாம். மாணவர்கள் சிலர் கணினியில் மூழ்கிப் போவதைப் போலவே தொலைக்காட்சியிலும் மூழ்கிப் போய் விடுகின்றனர். தொலைக்காட்சியின் உச்சரிப்புப் பிழைகள் மாணவர்களிடமும் பதிந்து விடுகின்றன, முக்கியமாக மாணவர்கள் விரும்பிப் பார்க்கும் சன் மியூசிக், ஜாக்பாட் (ஜாக்பாட்டில் கேள்வி என்பது பல ஆண்டுகளாக, கேல்வி என்றே உச்சரிக்கப்பட்டதைத் தமிழ் அறிந்தவர்கள் அறிவர்) முதலிய நிகழ்ச்சிகளில் ல, ள, ழ, ந, ன, ண, ர, ற ஆகிய எழுத்துகள் ஒலி வேறுபாடுகள் இன்றியோ அல்லது தவறாகவோதாம் பெரும்பாலும் ஒலிக்கப்படுகின்றன. புதிதாகப் படித்து முடித்து வரும் தமிழாசிரியர்களில் சிலரும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் மொழியின் தனிச்சிறப்பே சிறப்பு ழகரம். இவ்வொலி இன்று தன் சீரிழந்து நிற்கிறது.

    “நுனிநா அணரி அண்ணம் வருட
    ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும்” (தொல்.எழுத்து: 95)

    நுனி நாக்கு மேல்நோக்கி வளைந்து அண்ணத்தைத் தடவ ழகரம் பிறக்கிறது.

    “நாவிளிம்பு வீங்கி யண்பல் முதனுற
    ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
    லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்” (தொல்.எழுத்து: 96)

    நாக்கு மேல்வாய்ப் பல்லின் அடியில் அண்ணத்தைத் தொட்ட அளவில் லகரமும், அண்ணத்தை வருட ளகரமும் பிறக்கிறது.இவ் இலக்கணங்களை மனத்தில் நிறுத்திக் கொண்டு இவ்வொலிகளை உச்சரித்துப் பழகுதல் வேண்டும். மாணவரோ பிறரோ யாராகவிருப்பினும் செய்தித் தாளைப் படித்து அதனை ஒலிப்பேழையில் பதிவு செய்து, மீண்டும் மீண்டும் போட்டுக் கேட்கும்போது தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியும். இப்பயிற்சியின் மூலம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பதை உணர முடியும். இதற்காகவே

    “ஓடுற நரியில ஒரு நரி கிழநரி
    கிழநரி தலையில
    ஒரு முடி நரைமுடி.
    உருளுது பெறழுது தத்தளிக்குது தாளம் போடுது”

    என்னும், இது போன்ற நா நெகிழ் பயிற்சிகள் நம் முன்னோர்களால் முற்காலத்தில் கொடுக்கப்பட்டன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

    எழுத்தறியத் தீரும் இழிதகைமை:
    எண்களின் கூட்டு கணிதம் என்றும் எழுத்துக்களின் கூட்டு இலக்கணம் என்றும் கூறுவர். பண்டைய முறையில் உயிர் எழுத்துக்களையும் மெய்யெழுத்துக்களையும் ஒலிக்கக் கற்பிக்கும்போது இரண்டு இரண்டு எழுத்துக்களாகச் சேர்த்துக் கூறுவர். (விதி விலக்கு ஐ, ஒள.

    அஆ   இஈ   உஊ   எஏ   ஒஓ
    க்ங்   ச்ஞ்   ட்ண்   த்ந்   ப்ம்   ய்ர்   ல்வ்   ழ்ள்   ற்ன்

    இவ்விணை எழுத்துகளை இன எழுத்துகள் என்பர். இவற்றுள் மெய்யெழுத்துக்களை ஒலிக்கப் பயிற்சி கொடுக்கும் போது இம்முறையில் எழுதியே பயிற்றுவித்தல் அவசியமாகும். மேலும் ண, ன, ந ஆகிய மூன்று எழுத்துகளையும் முறையே டண்ணகரம், தந்நகரம், றன்னகரம் என்றே கூறச் செய்தல் வேண்டும். இம்முறையில் பயிற்றுவித்தலால் ண் என்னும் எழுத்துதான் டகரத்தின் முன் வரும், ‘ந்’ என்னும் எழுத்தின் பின் ‘த’ தான் வரும் ‘ன்’ என்னும் எழுத்தின் பின் ‘ற்’ தான் வரும் என்பதையும் புரிந்து கொள்ளவும் நினைவில் நிறுத்தவும் மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். மேலும் கற்பிக்க வேண்டிய முறையும் இதுவே. ஆனால் மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்கள் கூட மூன்று சுழி ண் இரண்டு சுழி ன் என்றுதான் கூறுகின்றனர். மாணவர்களின் இந்நிலைக்கு அவர்களுக்கு முறையாகக் கற்பிக்காமையே காரணம் எனலாம். “எழுத்தறியும் தீரும் இழிதகைமை” என்பார் சிவஞான முனிவர். எனவே மொழிப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் எழுத்துகளையும் அவற்றை ஒலிக்கும் முறைகளையும் அவற்றுக்கு வழங்கும் பெயர்களையும் அறிந்து முறையாகப் பயிற்றுவித்தால் மாணவர்களின் இவ் இழித் தகைமை நீங்கும். மொழிப்புலமை ஓங்கும்.

    இலக்கணமும் இன்சுவையே:
    ஆங்கில வழியில் பயில்வதே இன்றைய நாகரிகமாக உள்ளது.தமிழ்ப் பாடத்தை ஆர்வமின்றிப் பயில்வதும் அதிலும் இலக்கணப் பாடத்தைப் புறக்கணிக்கும் சூழலும் உருவாகி வருகிறது. கருத்தைப் பிறருக்கு எடுத்துச் சொல்வது பேச்சும் எழுத்தும். மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை புரிவது இலக்கணமே. இலக்கணம் கற்பிக்கும் போது பழைய மரபுகளை மீறாமல் புதிய உத்திகளைப் பயன் படுத்தி ஆர்வத்தைத் தூண்டுவது கற்பித்தலில் தலையாய ஒன்றாகும்.

    “மனத்தி னெண்ணி மாசறத் தெளிந்து
    இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்” (தொல்.பொருள்: 656)

    என்பது தொல்காப்பியம். இலக்கண விதிகளை இலக்கிய வழிகளில் மட்டுமல்லாமல் உலகியல் வழிகளிலும் பொருத்திக் காட்டுதல் வேண்டும் என்பதையே ஆசிரியர்தொல்காப்பியர் “இனத்திற் சேர்த்தி” என்னும் தொடரால் உணர்த்துகிறார். கற்பித்தல் நிலையில் இலக்கணம் கற்பிக்க கரும்பலகையை மிகுதியும் பயன்படுத்துதல் வேண்டும். ஒப்புமைக் கூறுகளைக் கரும்பலகையில் எழுதிக் காட்டுதலும் ஐயப் பகுதிகளைத் தடை விடைகளைக் காட்டி தெளிவித்தலும் வேண்டும்.

    இலக்கணப் பாடத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் முக்கிய இடத்தைப் பெறுவது இலக்கணக் குறிப்பு, பகுபத உறுப்பிலக்கணம், புணர்ச்சி இலக்கணம் ஆகிய மூன்றும். பிற்காலத்தில் எந்நிலையிலும் இவ்விலக்கணங்கள் மாணவர்களுக்குப் பயன்படாது போயினும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுத் தரும் பகுதிகள் இவை. இப்பகுதியைக் கற்பிக்கும் ஆசிரியர் மூன்று அல்லது நான்கு மாணவர்களை ஒரே நேரத்தில் அழைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு சொற்களைக் கொடுத்து, கரும்பலகையில் இலக்கணக் குறிப்பையும் உறுப்பிலக்கணத்தையும் எழுதச் சொல்லுதல் வேண்டும். உறுப்பிலக்கணம், இலக்கணக் குறிப்பு இரண்டையும் ஒரே நேரத்தில் எழுதச் சொல்லும் போது மாணவர்கள் இரண்டு இலக்கணங்களையும் ஒரே நேரத்தில் பயிற்சி பெறுவதுடன் பகுபத உறுப்பிலக்கணம் இலக்கணக் குறிப்பின் அடிப்படையிலேயே அமையும் என்பதையும் மாணவர்கள் அறிவர். இலக்கணக் குறிப்பு தொழில் பெயராகவிருப்பின் விகுதி, தல், அல், அம், ஐ, கை இவற்றுள் ஒன்றாக இருக்க வேண்டும், வியங்கோள் வினை முற்றாக இருப்பின் க, இய, இயர் என்னும் மூன்றில் ஒன்றாக அதன் விகுதி அமைதல் வேண்டும் முதலியவற்றை அறிந்து சொற்களைப் பகுப்பர். எனவே உறுப்பிலக்கணம் எழுதும்போது அதன் இலக்கணக் குறிப்பையும் எழுதச் சொல்லுதல் இன்றியமையாதது. சொற்களைப் பிரிக்கவும் சேர்க்கவும் பழகிக் கொண்டால் உயர்நிலை வகுப்புகளில் இலக்கிய வாசிப்பும் எளிதாக இருக்கும்.

    இலக்கணக் குறிப்பைப் பயிற்றுவிக்கும் போது மாணவர்களுக்கு அனுபவம் மிக்க பொருள்களின் அடிப்படையில் எடுத்துக்காட்டுகள் அமைந்திடின் ஆர்வம் மிகுவதுடன் மனத்தில் நிறுத்துவது எளிதாகிறது. சான்றாக உருவகத்தை விளக்க “என் மன வானில் சிறகை விரிக்கும் வண்ணப் பறவைகளே” (திரைப்பாடல்) முதலிய பாடல்களை மூலம் விளக்கலாம். “புதிய வானம் புதிய பூமி” என்பதில் வானம் X பூமி என்று வருவது முரண் தொடை என்றும் “ஓ ப்ரியா! ப்ரியா!” என்னும் பாடலில் ப்ரியாவை அழைப்பது விளி வேற்றுமை என்றும் “மலை மலை மலை மலே மலே” இப்பாடலில் இப்படி அடுக்கி வருவதுதான் அடுக்குத்தொடர் என்றும்,

    “சலசல சலசல இரட்டைக் கிளவி
    தகதக தகதகஇரட்டைக் கிளவி
    உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
    பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால்
    பொருளும் இல்லை
    இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ”

    இப்பாடல் வழி இரட்டைக்கிளவியின் விளக்கமும் தரலாம். ஆசிரியர் மனத்தின் எண்ணி மாசறத் தெளிந்து இவ்வுத்திகளைப் பயன் படுத்தி மாணவர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தால் இலக்கணப் பாடமும் இனிமையான அனுபவமாக அமையும். ஆனால் இம்முறையில் பயிற்றுவிக்கும் போது ஆசிரியருக்குத் தெளிவு இருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு ஐயங்கள் எழாவண்ணம் பயிற்றுவிக்க இயலும். அதே சமயம் ஊடகங்களின் மொழிகளை உள்வாங்கிக் கற்பிக்கும் போது மிகுந்த கவனத்துடன் இருத்தல் வேண்டும். ஊடகங்களுக்குரிய பண்பாட்டு நெறிகள் வகுப்பறைக்குள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

    இலக்கணப் பாடம் பயிற்றுதல் என்பது மொழியின் பயன்பாட்டை உணர்த்துவது என்பதாகும். நவீன காலத்துக்கும் முற்பட்ட காலத்தில் அமைந்த பயிற்றல் முறையினைச் சமூகச்சூழலும், வாழ்வியல் பாங்கும் முற்றிலும் மாறியுள்ள இக்காலத்தும் பின்பற்றுவதும் தமிழாசிரியர்கள் தங்களைக் காலத்திற்கு ஏற்ப தகவு அமைத்துக் கொள்ளாததையே காட்டும். எனவே சூழலுக்கு ஏற்ப மாறி மொழி வளம் பேணுதல் வேண்டும்.

    செவியுணவே சுவையுணவு:
    அறிவுக்கு விளக்கம் கொடுக்க வந்த திருவள்ளுவர் “தான் பிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவு” (குறள்-424) என்கிறார். ஆன்ற பெருமையைத் தரும் செவிக்கு உணவாகிய, கேள்விச் செல்வத்தைப் பெற மாணவர்கள் பெரிதும் விரும்ப வேண்டும். செவி வாயாக நெஞ்சு களனாகக் கேட்டு, கேட்டவற்றை விடாது உள்ளத்து அமைத்தல் வேண்டும். காட்சி வழிக் கற்றலுக்கு அடுத்த நிலையில் அதிகப்பலன் தருவது கேட்டல் வழிக் கற்றலில்தான். காட்சி, கேள்வி வழியில் 50 விழுக்காடு கற்றல்நடைபெறுகிறது என்றால் அதில் 11 விழுக்காடு கேட்டல் வழியில் நடை பெறுகிறது. (ஆய்வுத்தகவல்: உயர்நிலைத்தமிழ் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள். ப.17) கல்வியாளர்களில் பெரும்பாலோர் விரிவுரை முறையையே சிறந்தது என்கின்றனர். இக்கேட்டலில் மானவர்கள் திறன் பெற்றுள்ளனரா என்பதை அறிய மேல்நிலை வகுப்புகளில் ‘கேட்டல் பேசுதல் திறனறி தேர்வு’ (Testing off Oral – Aural skills) நடத்தப்படுகிறது. இத்தேர்விற்கு ஆசிரியர் ஏதேனும் ஒரு பகுதியைப் படித்துக்காட்டி படித்தவற்றுள் சில வினாக்களை எழுப்பிச் சோதித்தல் வேண்டும். சிலர் பொதிகைத் தமிழ்க் கையேட்டில் உள்ளவற்றைப் படித்துக் காட்டுவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது மாணவர்களிடம் சலிப்பை ஏற்படுத்தி கேட்டல் திறனைக் குன்றச் செய்கிறது.

    மாற்றாகச் சான்றோர்களின் அல்லது தலைவர்களின் (சுதந்திர தின உரை, குடியரசு நாள் உரை, சமயச் சொற்பொழிவுகள்) வானொலி தொலைக்காட்சி உரைகளை ஒலிப்பேழையில் பதிவு செய்து ஒலிபரப்பி அவற்றில் வினாக்கள் கேட்கும் போது மாணவர்கள் புதிய அனுபவத்தால் ஆர்வத்துடன் விடை இறுப்பதுடன் கேட்டல் அனுபவமும் சுவையானதாக மாறுகிறது. அத்துடன் ஆசிரியர் நமக்காக அருமுயற்சிகள் எடுக்கிறார் என்று ஆசிரியர் மீது நன் மதிப்பும் ஏற்படுகிறது. “கல்வி என்பது எழுத்தறிவை மட்டுமே கொடுக்கக் கூடியதாக இருக்கக் கூடாது. அது மனிதனைச் சிந்திக்க வைக்கக் கூடியதாகவும் புரிந்து கொள்ள வைப்பதாகவும் பொறுமையை வளர்ப்பதாகவும் இருத்தல் வேண்டும்.” என்னும் அறிஞர் இராதா கிருட்டிணன் அவர்களின் கருத்துக்கு அரண் செய்வதாக அமையும்.

    இயக்குநர் ஆசிரியர்:
    முத்தமிழில் வைப்பு முறையால் கடைநிலைப் பட்டாலும் தொல்காப்பியரால் முதல் நிலையில் வைத்து எண்ணப் பெறுவது நாடக வழக்கு (தொல்.பொருள்: 56). இயற்றமிழ் கட்புலனுக்கும் இசைத்தமிழ் செவிப்புலனுக்கும் இன்பத்தை நல்குகின்றன. நாடகத்தமிழ் ஒன்றே கட்புலனுக்கும் செவிப்புலனுக்கும் ஒரு சேர இன்பத்தை நல்குகிறது. பள்ளிப்பாடத் திட்டத்தில் இளநிலை வகுப்பு முதல் உயர்நிலை வகுப்பு வரை எல்லா வகுப்புகளிலும் உரைநடைப் பகுதியில் நாடகம் ஒன்று அமைந்திருக்கும். இந்நாடகத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் நாடகத்தில் எத்தனை கதை மாந்தர்கள் உள்ளனரோ அத்தனை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொருவருக்கும் அவரவர்க்குரிய பாத்திரத்தை ஒப்படைத்து அவர்களை வகுப்பில் முன்பக்கம் பிற மாணவர்கள் பார்க்குமாறு நிற்க வைத்தல் வேண்டும். அவர்கள் படிக்க வேண்டிய பகுதியை ஒரு முறை படித்துப் பார்த்துக் கொள்ளச் சொல்ல வேண்டும். மாணவர்கள் படிக்கும் போது குரல் மாற்றம், குரல் ஏற்றத்தாழ்வு, இடத்திற்கேற்ப சைகளை முதலியவற்றைச் செய்யுமாறு உற்சாகப் படுத்துதல் வேண்டும். அனைத்து மாணவர்களும் பங்கு பெறும் வகையில் நாடகம் பலமுறை நடத்தப் பெறுதல் வேண்டும். இம்முறையில் படிக்கும்(நடிக்கும்) மாணவர்கள் தாங்கள் நடிக்கும் கதை மாந்தராகவே மாறி விடுகின்றனர். அப்பாத்திரத்தின் பண்புகளையும் தம் பண்பாக மாற்றிக் கொள்கின்றனர். நாடகப் பாடம் நடத்தும் ஆசிரியர் ஓர் இயக்குநர் போலிருந்து கற்பிக்கும் போது மட்டுமே நாடகப்பாடம் செறிவுடையதாக அமையும்.(க. அறிவுடைநம்பி, தமிழ்வழி கற்றல் கற்பித்தல் புதிய உத்திகள்- ப:242) மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து எக்குழு நன்கு நடித்துக் காட்டுகிறது? என்று போட்டியும் வைக்கலாம். நன்கு நடித்தவர்களுக்கு சிறு சிறு பரிசுகள் அல்லது தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் கொடுத்து ஊக்குவிக்கலாம்.ஆனால் இம்முறைப் பயிற்றுவித்தலில் காலச்செலவு அதிகம். ஆசிரியரின் பணிச்சுமையும் கூடுதலாகிறது. இதனால் இவ்வாறு செய்யாமல் ஒரு சிலர் நாடகச் சுருக்கத்தைக் கூறி பாடத்தை முடித்து விடுகின்றனர். ஆனால் பாடம் பல ஆண்டுகட்குப் பின்னும் மாணவர் நெஞ்சில் மறவாமல் இருக்கும்.

    எதிர்காலப் புலன் வேண்டும்:
    “ஏடன்று கல்வி சிலர் எழுதும் பேசும்
    இயலன்று கல்வி; பலர்க் கெட்டா தென்னும்
    வீடன்று கல்வி; ஒரு தேர்வு தந்த
    விளைவன்று கல்வி; அது வளர்ச்சி வாயில்”
    (குலோத்துங்கன் கவிதைகள்: ப. 202)
    என்பது வா.செ.குழந்தைசாமியின் கல்விக் கொள்கை.

    நாளும் வளர்ந்து கொண்டிருக்கும் இத்தலைமுறை மாணவர்களின் எண்ணக்கரு உருவாக்கத்திலும் ஆளுமை வளர்ச்சியிலும் சமூகச் சூழலை விளங்கிக் கொள்வதிலும் மொழிப்பாடம் மிக முக்கியமான இடத்தைப் பெறுகிறது. தொழில்மயம், நவீனமயம், உலகாயதமயம் போன்ற காரணிகளால் இன்றைய தலைமுறையினர் அறிவில் மூத்த தலைமுறையினர் என்றெண்ணும் அளவில் வியத்தகு முன்னேற்றம் அடைந்துள்ளனர். இன்றைய மாணவர்கள் மிகக் கவனமாகக் கையாள வேண்டிய கூரிய ஆயுதம் போன்றவர்கள். இவர்களுக்குப் புகட்டப்படுகின்ற கல்வி பதம் பார்த்து, பகுத்தறி சிந்தனையுடன் கற்கின்ற நிலையில் அமைய வேண்டும். 2001 ஆம் ஆண்டில் உறுதி செய்யப் பெற்ற தேசிய கல்வித் திட்டத்தின் படி அமைந்த 1986 ஆம் ஆண்டின் கல்விக் கொள்கை.
    1. இந்திய ஒருமைப்பாட்டு உணர்வு
    2. இந்திய அரசியல் சட்டத்தின்கீழ் கடமை ஆற்றல்
    3. சமூகத் தடைகளை அகற்றுதல்
    4. பொதுச் சொத்துகளைப் பாதுகாத்தல்
    5. ஆண் பெண் நிகர்மை
    6. நிகர்மை, சகோரத்துவம், குடியாட்சி
    7. இந்திய பொதுப் பண்பாட்டு மரபு
    8. சுற்றுச் சூழல் பாதுகாப்பு உணர்வு
    9. சிறுகுடும்ப கொள்கைப் பதிவு
    10.அறிவியல் மனப்பான்மை.
    ஆகிய பத்து அழுத்தமான பொருண்மைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறது. (உயர்நிலைத் தமிழ் கற்பித்தலில் புதிய அணுகு முறைகள். ப.10) ஆனால் இளநிலை பாடத்திட்டத்தில் சூழ்ச்சியையும் வஞ்சகத்தையும் கற்றுக் கொடுக்கின்ற பாங்கில் பாடங்கள் அமைந்துள்ளன. (சொர்க்கத்தில் நரி, நான்காம் வகுப்பு தமிழ்ப் பாடநூல்) பழைய பாடத்திட்டத்தில் காகத்தை ஏமாற்றிய நரி; புதிய பாடத்திட்டத்தில் ஓநாயை ஏமாற்றுகிறது. பழைய மொந்தையில் புதிய கள். காகத்தை ஏமாற்றிய நரி நாம் ஒருவரை ஏமாற்றினால் நம்மை ஒருவர் ஏமாற்றுவார் என்ற அறத்தைப் புகன்றது. புதிய நரி தன்னலத்திற்காக ஓநாயை ஏமாற்றுகிறது. மேல்நிலை வகுப்புகளில் வீரச்சுவை கலிங்கத்துப் பரணி (மேல்நிலை முதலாமாண்டு) முதலிய பாடங்கள் வீரம் என்னும் பெயரில் வன்முறையைத் தூண்டுவனவாக உள்ளன. இவை போன்ற பாடங்களைக் கற்ற பின்பு அவற்றின்படி ஒழுக வேண்டிய மாணவர்களின் மனங்களில் வன்முறை எண்ணங்கள் துளிர் விடும் என்பதும் கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டிய ஒன்று. காலச்சூழலுக்கு ஏற்ப அமையாத பாடத்திட்டங்களும் கற்றல் கற்பித்தலில் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இந்நிலையை,

    “உங்கள் புத்தகங்கள்
    கண்களைத் திறப்பதில்லை
    ஊற்றுக் கண்களைத் தூர்த்து விடுகின்றன”

    என்று வெகு நேர்த்தியாகக் கண்டிப்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். பாடத்திட்டம் காலத்திற்கேற்ப மாணவர்களை வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செலுத்தும் எதிர்காலப் புலனுடன் அமைதல் வேண்டும். அதற்காகப் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளைப் பாடத்திட்டக் குழுவினர்க்குத் தொடர்ந்து அனுப்புதல் வேண்டும்.

    இறுவாய்:
    “மாறாத பொருளெதுவும்
    வளர்வதில்லை
    வையத்தின் விதியிதற்கு
    மாற்றமில்லை” (வா.செ.குழந்தைசாமி)
    என்பார் அறிவியல் அறிஞர் கவிஞர் குலோத்துங்கன். மாறி வரும் சூழலுக்கு ஏற்ப கல்வியில் மாற்றம் ஏற்பட வேண்டும்.இலக்கியங்கள் நற்பண்புகளையும், மனித நேயத்தையும் வளர்ப்பனவாய் அமைதல் வேண்டும். இலக்கணம் வளர்ந்து வரும் சமுதாயத்தின் பயன்பாட்டுக்கு ஏற்ற வழி எளிமைப் படுத்தப்பட வேண்டும்.

    அனைத்துக்கும் மேலாகத் தமிழாசிரியர்கள் மொழிப்பாடம் கற்றுக் கொடுக்க என்றோ படித்தது போதும் என்னும் தம் நிலையில் இருந்து மாற வேண்டும். காலச்சூழலுக்கு ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய நவீனப் போக்குகளை அறிந்து கொள்ளல் வேண்டும். நவீன எழுத்தாளர்களை ஓரளவேனும் அறிந்து கொள்ள வேண்டும். பிற மொழி இலக்கிய அறிவுடன் விளங்க வேண்டும். முக்கியமாக சற்றேனும் ஆங்கில இலக்கிய அறிவும் அவர்களுக்கு இருத்தல் அவசியமாகிறது. குறைந்த அளவு, பல்துறை சார்ந்த நுட்பங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமுடையவர்களாக இருத்தல் வேண்டும். தாம் பல் துறை வல்லாண்மையுடனும் பயிற்றுவித்தலில் புதுமைப் போக்கையும் ஆசிரியர்கள் கையாண்டால் மொழிப்பாடம் கற்பித்தல் உன்னத நிலையை அடையும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ் வகுப்புகளை வெற்றுக் கட்டிடங்கள் மட்டும் கேட்கும் நிலை உருவாவது திண்ணம்.

    ______________________________________________
    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
    Malar.sethu@gmail.com

    Share
  • உம் வழியில் பயணிக்கும்…….!

    abdul k
    (முன்னாள் கு​டியரசுத் த​லைவருக்கு இரங்கற் பா)
    மு​னைவர் சி.​சேதுராமன் தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.
    sethuramansingaram@yhoo.com

    அன்பான அருளான பண்பான
    பாரதத்தின் த​லைமக​னே!
    பிறப்​பைச் சரித்திரமாக்கிய
    இந்தியாவின் பிரபஞ்ச​மே!
    எம்மில் கலந்து எம் கண்ணில் கலந்து
    உள்ளில் கலந்து எம் ஊனில் கலந்து
    விண்ணில் கலந்தாய் இன்று….!

    மண்ணில் பிறந்தாய்!
    மனிதரி​லே உயர்வானாய்!
    விண்ணில் விதி பறக்க
    விதி உன்​னை அ​​ழைத்தது​வோ…?
    எண்ணத்தில் கருவானாய்!
    இ​ளைஞர்களின் எண்ணத்தில் கருவானாய்…!
    ஏ​ழையரின் ஏந்தலானாய்!
    கண்களி​லே நீர் வழிய
    எம்​மைக் கலங்கடித்து விட்டா​யே!
    ஏவுக​ணை நீ ஏவிப் பாரில்
    பாரதத்​தை உயர்த்திவிட்டாய்!
    பாரதத்தின் த​லைமக​னே!
    தமிழ்த்தாயின் திருமக​னே!
    நீர் வி​தைத்த எண்ணங்கள்
    நிதமும் எம்​மை வழி நடத்தும்
    நீர்நி​னைத்த எண்ணங்கள்
    நிச்சயம் நி​றை​வேறும்!
    பார் புகழப் பாரத​மோ – என்றும்
    உம் வழியில் பயணிக்கும்…..!

    Share
  • வள்ளுவர் கூறும் ​நேர ​மேலாண்​மை

    மு​னைவர் சி.​சேதுராமன்.

     

    வள்ளுவர் கூறும் ​நேர ​மேலாண்​மை
    (Time Management)

     

     

    காலம், ​பொழுது என்று ​நேரத்​தைக் குறிப்பிடுவர். ​நேரம், காலம், ​பொழுது எல்லாம் ஒரு​பொருட் பன்​மொழிகளாகும். சிலருக்கு ​நேரம் ​போதவில்​லை என்பர்; சில​ரோ ​பொழு​தே ​போகவில்​லை என்று கூறுவர். காலத்​தை மு​றையாக ஆளக் கற்றுக் ​கொண்டால் நாம் உயர்நி​லை​யை அ​டையலாம். கால ஆளு​மை என்பது நம்மில் பலருக்கும் இயலாத ஒன்றாக உள்ளது, இன்னும் கூறப்​போனால் காலத்​தை ஆளு​மை ​செய்ய அவர்களுக்குத் ​தெரியவில்​லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.

    காலத்​தை ஆளக் கற்றுக் ​கொண்டவன் ​வெற்றிக​ளைக் குவிக்கிறான். காலத்​தைப் ​போக்கி வாழ்க்​கை​யை ​வெறு​மையாக்கிக் ​கொண்டவர் பலர். அவர்கள் காலத்​தை வி​ரையமாக்கியதால் ​வெறு​மையாகிப் ​போனவர்கள். அன்றிலிருந்து இன்றுவ​ரை காலத்​தைப் ​போற்றிப் பாதுகாக்க ​வேண்டும் என்று நம் முன்​னோர்கள் கூறிப்​போந்துள்ளனர். இலக்கியங்களிலும் கால ​மேலாண்​மை என்பது பரவலாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழர்களின் ​பெரு​மை​யைப் ப​றைசாற்றும் திரும​றை நூலாக விளங்கும் திருக்குறள் கால ​மேலாண்​மை​யைக் குறித்து மிகத் ​தெளிவாக எடுத்து​ரைக்கின்றது.

    திருக்குறளில் ​பொருட்பாலில் அரசியலில் அரசனுக்கு இருக்க ​வேண்டிய​வை குறித்து வள்ளுவர் குறிப்பிடும்​போது காலம் அறிதல் என்ப​தையும் மன்னர் அறிந்து ​செயற்படுதல் ​வேண்டும். காலத்​தை ஆளும் திறன் மன்னர்களுக்கு இருத்தல் ​வேண்டும். அப்​போதுதான் மன்னர்கள் நாட்​டை நன்கு திறம்பட ஆள முடியும் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

    காலம் அறிதல்:
    காலம் அறிதல் என்ற அதிகாரத்தி​னை விளக்கும் பரி​மேலழகர், “வலியான் மிகுதியுடையனாய்ப் பகைமேல் சேறலுற்ற அரசன், அச்செலவிற்கு ஏற்ற காலத்தினை அறிதல், அதிகார முறைமையும் இதனானே விளங்கும்” என்று உ​ரை வகுக்கின்றார். இத​னை​யே அதன் பின்னர் வந்த அ​னைத்து  உ​ரையாசிரியர்களும் வழி​​மொழிந்துள்ளனர்.

    வள்ளுவர் மன்னர்களுக்கு மட்டும் கால ஆளு​மை​யைப் பற்றிக் கூறியிருக்க மாட்டார்.   ஏ​னெனில் இது  அ​னைவருக்கும் வாழ்விய​லை எடுத்து​ரைக்கும் நூலாக விளங்குகின்றது. கால ஆளு​மை என்பது சிறப்பாக அரசனுக்குப் ​பொருந்துவதாக இருந்தாலும் இன்று வாழும் சாதரணக் குடிமகனுக்கும் ​பொருந்தும். அரசன் முதல் க​டைநி​லையில் உள்ள மனிதர் வ​ரை இந்​நேர ஆளு​மை என்பத​னை அறிந்திருத்தல் ​வேண்டும்.

    காலத்​தை நிர்வகிப்பது என்பது அ​னைவருக்கும் ​கைவந்துவிடாது. அத​னை ஒரு சிலர் தான் நன்கு பின்பற்றுவர். மனிதனுக்குத் ​தெரியாமல் மனிதனிடம் இருக்கும் ​பொக்கிஷம் தான் காலமாகும். இத​னை அறியாது மனிதன் காலத்​தை வீணாக்கிக் ​கொண்டிருக்கிறான். காலம் மனிதனிடத்தில் எந்தவிதமான  ஓ​சையுமின்றி ​பெரிய மாற்றத்​தைச் ​செய்து வருகிறது. இத​னை அ​னைவரும் அறிவர். காலம் வய​தைக் காட்டி வாழ்நா​ளைக் கு​றைக்கிறது.

    காலம் என்பது இருபுறமும் கூர்​மை ​கொண்ட கத்தி ​போன்றது என​வே காலத்​தைச் சரிவரப் பயன்படுத்தாவிட்டால் அக்கால​மே நம்மு​டைய முதல் ப​கைவனாக மாறி விடுகிறது. அ​னைவரும் அறிந்து ​கொண்ட பல ​செயல்க​ளைவிடக் காலவிரயம்   ​என்பது மிகவும் ​மோசமானது என்ப​தை அ​னைவரும் உணர்தல் ​வேண்டும்.

    ஒருவன் இழந்துவிட்ட எ​தையும் ​பெறமுடியும் ஆனால் கடந்த காலத்​தை மீண்டும் ​பெறமுடியாது. நாம் இழந்த பல வாய்ப்புகளுக்குக் காரணம் நம்​மைவிட்டுக் கடந்து ​போன காலம்தான் என்ப​தை நாம் சிந்தித்துப் பார்த்தால் புரியும். நாம் ஒரு நாளில் எத்த​னை மு​றை ​நேரதின்​மை​யைக் காரணம் காட்டுகி​றோம் என்பது ஒவ்​வொருவரும் நி​னைத்துப் பார்க்க ​வேண்டிய ஒன்றாகும். சரியான ​நேரத்திற்கு வந்துவிடு என்பது வீடுகளிலும் கல்வி நி​லையங்களிலும் அலுவலகங்களிலும் அடிக்கடி ​சொல்லப்படுகின்ற, அ​னைவ​ரையும் எச்சரிக்கின்ற வார்த்​தைகளாகும். காலங்கடந்து ​போனால் பிரச்ச​னைகளும் ​தே​வையற்ற இ​டையூறுகளும் ஏற்படும். காலதாமதமாக வரும் ​பேருந்திற்காக யாரும் காத்திருப்பதில்​லை. காலதாமதமாக வரும் நாளிதழுக்கு ஒரு​போதும் மதிப்பு கி​டையாது. அ​னைத்து இடங்களிலும்  அ​னைவராலும் காலந்தவறா​மை​யே எதிர்பார்க்கப்படுகிறது.

    ​கையில் இருக்கும் தங்க நாணயத்​தைப் ​போன்று ஒவ்​வொரு விநாடி ​நேரத்திற்கும் மதிப்பு உண்டு. காலத்​தை நாம் எவ்வாறு தங்கமாக, ​வைரமாக, ​வைடூரியமாக மாற்றப் ​போகி​றோம் என்பதில்தான் நம் வாழ்வின் ​வெற்றியின் இரகசியம் அடங்கி இருக்கிறது.

    நாம் ​சேமிக்கும் ஒவ்​வொரு விநாடியும் நம் வாழ்க்​கையின் ஒவ்​வொரு ​வெற்றிப் படிக்கட்டுக்களாகும். நமது ​நேரத்​தை நம்வசப்படுத்தினால் முன்​னேற்றம் என்பது உறுதியாகிவிடும். காலமறிதல் அதிகாரத்திற்கு விளக்கம் கூறவந்த மணக்குடவர், “காலம் அறிதலாவது வினை செய்தற்கு ஆம்காலம் அறிதல். வலியறிந்தாலும் வினை செய்யும் காலமும் அறிந்து செய்ய வேண்டுதலின், அதன்பின் இது கூறப்பட்டது” என்று குறிப்பிடுகின்றார். காலம் அறிதல் என்பது நாட்​டை ஆளும் அரசனுக்கு மட்டுமல்லாது அ​னைவருக்கும் ​உரிய ஒன்றாகும்.

    காலம் அறிந்து ​செயல்படுதல்:
    நாட்​டை ஆளும் மன்னன் காலம் அறிந்து ​செயல்பட ​வேண்டும். அவ்வாறு ​செயல்படவில்​லை எனில் அழிவு ​நேரும். எந்தச் ​செய​லை எந்தக் காலத்தில் ​செய்ய ​வேண்டு​மோ அந்தக் காலத்தி​லே​யே ​செய்தல் ​வேண்டும். அ​தைவிடுத்துக் காலமல்லாத காலத்தில் ​செய்தால் அதனால் இன்ன​லே ​நேரும். வலி​மையாக இருப்பினும் காலமறிந்து ​செயல்படாது ​போனால் ​தோல்வி​யே ஏற்படும். இத​னை,

    “பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
    வேந்தர்க்கு வேண்டும் பொழுது” (481)

    “பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்
    தீராமை யார்க்குங் கயிறு” (482)

    காகம் தன்னினும் வலிய கோட்டானை அதற்குக் கண்தெரியாத பகல் வேளையில் வென்று விடும். அது போலப் பகைவரைப் போரில் வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கேற்ற காலம் வேண்டும். காலத்தொடு பொருந்த அரசன் வினைசெய்தொழுகுதல்; நிலையில்லாத செல்வத்தைத் தன்னிடத்தினின்று நீங்காவண்ணங் கட்டிவைக்கும் கயிறாம். காலத்​தை அறிந்து நடந்து ​கொள்ளாததால்தான் ​நெப்​போலியன், ஹிட்லர் இருவரும் அழி​வைத் ​தேடிக் ​கொண்டனர். ரஷ்யா மீது காலமல்லாக் காலத்தில்   ப​டை​யெடுத்துச் ​சென்று இருவரும் தங்களுக்குத் தாங்க​ளே அழி​வைத் ​தேடிக் ​கொண்டனர். காலத்தின் அரு​மை​யை இக்குறட்பாக்கள் நமக்குத் ​தெளிவுறுத்துவது ​நோக்கத்தக்கதாகும்.

    நேர ஆளு​மை:
    காலத்​தை அறிந்து ஒரு ​செய​லைச் ​செய்தால் அது எளிதில் முடியும். காலம் அறிந்து ​​செயல்படும் எவருக்கும் ​செய்ய முடியாத ​செயல் என்று எதுவும் இல்​லை. அவர்கள் மிகவும் சரியாகச் ​செய்து எந்தச் ​செய​லையும் ​தெளிவாக முடித்துவிடுவர். ​நேர ஆளு​மை​யைப் பற்றி,

    “அருவினை யென்ப வுளவோ கருவியாற்
    கால மறிந்து செயின்”(483)

    என்று வள்ளுவர் குறிப்பிடுவது உன்னற்பாலதாகும். இக்குறட்பாவிற்கு உ​ரை​யெழுதிய பாவாணர், “சிறந்த கருவியொடு தகுந்த காலமறிந்து செய்வாராயின்; அரசர்க்கு முடித்தற்கரிய வினைகளென்று சொல்லப்படுவன உளவோ? இல்லை” என்று விளக்கிச் ​செல்கின்றார். இன்றுள்ள நி​லையில் அ​னைவரும் உணர்ந்து ​செயல்படுத்த ​வேண்டிய வாழ்க்​கை ​நெறியாக இந்​நேர ஆளு​மை​யை இக்குறளில் வள்ளுவர் கூறியிருப்பது மிகவும் ​பொருத்தமான ஒன்றாகும்.

    உல​கையும் ​வெல்லலாம்:
    காலத்​தை ஆளு​மை ​செய்து தக்க இடம்பார்த்து எந்தச் ​செய​லையும் ​செய்தல் ​வேண்டும். அவ்வாறு ​செய்வார் உலகத்​தை​யே ​வென்றுவிடலாம். காலமும் இடமும் சரியாக அ​மைந்து விட்டால் ​வெற்றி என்பது எளிதில் கி​டைக்கும். இத​னை​யே,

    “ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்
    கருதி யிடத்தாற் செயின்”(484)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ஒருவன் தகுந்த கால மறிந்து ஒரு ​செய​லை இடத்தொடு பொருந்தச் செய்தால் அவன் உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதினாலும் கைகூடும். ​நேர ஆளு​மையின் முக்கியத்துவத்​தை இத்திருக்குறள் நமக்குத் ​தெளிவுறுத்துகிறது.

    காத்திருத்தல்:
    வாய்ப்புகளுக்காக நாம் காத்திருத்தல் ​வேண்டும். மண்ணில் விழுந்து மண்மூடிக் கிடக்கும் வி​தையானது எவ்வாறு ம​ழைத்துளிக்காகக் காத்திருக்கிற​தோ அ​தைப் ​போன்று நல்ல வாய்ப்புகள் எப்​போது வரும் என்று ஒருவன் காத்திருத்தல் ​வேண்டும். வாய்ப்புகள் வந்தவுடன் அத​னைப் பயன்படுத்திக் ​கொள்ளுதல் ​வேண்டும். உல​கை ​​வெற்றி ​கொள்ள ​வேண்டும் என்று நி​னைப்பவர் தகுந்த காலத்திற்காகக் காத்திருப்பர். காத்திருக்கி​றோ​மே என்று அவர் கலங்கமாட்டார். ​பொறு​மையாக ஒருவர் காத்திருந்து ​செயல்பட​வேண்டும். இத​னை,

    “காலங் கருதி யிருப்பர் கலங்காது
    ஞாலங் கருது பவர்”(485)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். காலத்​தை ஆளுவதற்கு காத்திருப்பும் ​தே​வை என்பது இக்குறள் எடுத்து​ரைக்கும் ​நேர ஆளு​மை குறித்த கருத்தாகும்.

    இத்திருக்குறளுக்கு உ​ரை எழுதும் பாவாணர், “உலகம் முழுவதையுங் கைப்பற்றக் கருதும் அரசர்; மனக்கலக்கமின்றி; தமக்கு வலிமிக்கிருப்பினும் தம் வினைக்கேற்ற காலத்தையே சிறப்பாகக் கருதி, அது வருமட்டும் அமைதியாகவும் பொறுமையுடனும் காத்திருப்பர்.

    ‘கலங்காது’ என்பது வலிமிகுதியையும் அதனால் ஏற்படும் நம்பிக்கையையும் உணர்த்தும். நட்பாக்கல், பகையாக்கல், பிரித்தல், கூட்டல், மேற் செல்லல், இருத்தல் என்னும் அரசர் அறுவகைச் செயல்களுள், இருத்தல் என்பது மேற்செல்லலின் மறுதலை, ‘காலஞ்செய்வது ஞாலஞ் செய்யாது’, என்பராதலின், ‘காலங் கருதியிருப்பர் ‘என்றார்” என்று உ​ரை வகுக்கின்றார்.

    தெளிந்த அறிவுடைய அரசர் தம் பகைவர் அவர் பகைமையைக் காட்டின வுடனேயே அவரறிய வெளிப்படையாகச் சினங்கொள்ளார்; அவரை வெல்லு தற்கேற்ற காலம் வரும் வரை தம் சினத்தை உள்ளே அடக்கி வைப்பர் என்பத​னை,

    “பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
    துள்வேர்ப்ப ரொள்ளி யவர்.”(487)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். இங்கு அரசருக்கு மட்டு​மே ​நேர ஆளு​மை குறித்து வள்ளுவர் குறிப்பிடுகின்றார் என்று எடுத்துக் ​கொள்ளக் கூடாது. வள்ளுவர் குறிப்பிடும் ​நேர ஆளு​மை குறித்த இக்கருத்து மாந்தர் யாவருக்கும் ​பொருந்தும் ஒன்றாகும். இது அரசர்க்குரிய கருத்து என்று புறந்தள்ளிவிடுதல் கூடாது. ஏ​னெனில் மக்களாட்சி மு​றை ​செயற்படுத்தப்படும்   இந்நாளில் அ​னைவருக்கும் வள்ளுவர் கூறும் இக்கருத்துப் ​பொருந்தும்.

    எந்த ​​​நேரத்திலும் நாம் ​பொறு​மை இழக்கக் கூடாது. நமக்கான ​நேரம் வரும் வ​ரை நாம் ​பொறு​மையுடன் காத்திருத்தல் ​வேண்டும். ​கொக்கு எவ்வாறு காத்திருந்து தனக்கான மீன் வரும்​போது அத​னைக் ​கொத்தித் தின்று தனது பசி​யைப் ​போக்கிக் ​கொள்கிற​தோ அ​தைப் ​போன்று நாம் தகுந்த காலம் வரும்வ​ரை காத்திருந்து ​செயலாற்ற ​வேண்டும். இத​னை,

    “கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த விடத்து”(490)

    என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். ​நேரத்தின் அரு​மை அறிந்து அ​னைவரும் அத​னைத் திட்டமிட்டு ஆளக் கற்றுக் ​கொள்ள ​வேண்டும். இந்​நேர ஆளு​மை​யை​யே வள்ளுவர் காலம் அறிதல் என்று குறிப்பிடுகின்றார். ​நேரம் ​பொன்​போன்றது எனபர்; ஆனால் அது உயிர் ​போன்றது.

    தவறவிட்ட காலமும் தவறிய உயிரும் மீளப் ​பெற முடியாது. இத​னை உணர்ந்​தே வள்ளுவர் காலம் அறிதல் என்று அந்த அதிகாரத்திற்குப் ​பெயரிட்டுள்ளார். காலத்​தை அறிந்தால் மட்டு​மே ​செயற்படுத்தி வாழ்வில் அத​னைப் பயன்படுத்திக் ​கொள்ள இயலும். ​நேரத்​தைச் சரியாகப் பயன்படுத்தினால் மட்டு​மே வாழ்வில் உயர முடியும். வள்ளுவர் கூறுகின்ற மு​றையில் ​நேரத்​தை ஆளக் கற்றுக் ​கொண்டு வாழ்வில் வளம் ​பெறு​வோம்.

     

     

    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத்து​றைத் த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி(தன்னாட்சி),
    புதுக்​கோட்​டை-1
    E-mail: Malar.sethu@gmail.com

     

    Share
  • தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்

    மு​னைவர் சி.​சேதுராமன்.

    தொல்காப்பியம் காலப் பழமையும் கருத்தின் கனிவும் சாலச்சிறந்தது. தமிழரின் கலைக்களஞ்சிமாகத் திகழ்வது. தொல்காப்பியம் பரந்துபட்ட ஓர் இலக்கணக்கடல். விரிந்த நூலாயினும் செறிந்த கருத்துகளைத் தன்னகத்தே கொண்டது. தமிழகத்தின் பண்டைக்கால வரலாற்றைச் சான்றுகளுடன் அறிய உதவும் பேரேடு இது எனக் கூறலாம். ஒரு மொழியில்முதலில் தோன்றியது இலக்கியம் அதனை அடியொற்றி அமைவது இலக்கணம்.

    ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்’ என்ற பவணந்தியாரின் கூற்று இதனைப் புலப்படுத்தும். தொல்காப்பியர் ஒரு பெரும் இலக்கண நூலை இயற்றி விதிகள் வகுக்க வேண்டுமெனின் தமிழ்கூறு நல்லுலகத்தில் அதற்குமுன்னரே எண்ணற்ற தமிழ் நூல்கள் இருந்திருக்க வேண்டும். அன்றியும் அவ்விலக்கியங்கட்குப் பலர் இலக்கண நூல்கள்எழுதியிருந்தனர் என்பதைத் தொல்காப்பியர் என்ப, ​மொழிப, என்மனார், புலவர் என்பன போன்ற ​சொற்களால் சுட்டுவதுகொண்டு அறியலாம். எல்லாவற்றிற்கும் மேலாகப் பாயிரம் எழுதிய பனம்பாரனாரே.

    “முந்து நூல்கண்டு மறைப்பட எண்ணிப்
    புலந்தொகுத்தோன்”
    என்று கூறிவிட்டதால் இது ஐயத்திற்கிடமின்றித் தெளிவாதலறியலாம். தொல்காப்பியர் மரபியலில் உயிர் மரபுக​ளைப் பற்றித் ​தெளிவாக அறிவியல் அறிஞர்களும் வியக்கும் வண்ணம் பல ​செய்திக​ளை எடுத்து​ரைத்துள்ளார்.

    மரபு – விளக்கம்:
    த​லைமு​றை த​லைமு​றையாக (பரம்ப​ரை பரம்ப​ரையாக) வழி வழியாக வரும் மு​றை​மை பற்றிக் கூறும் பகுதி​யை எடுத்து​ரைப்ப​தே மரபியலாகும். உயர்ந்​தோர் கூறும் வழக்கால் மரபு ​தோன்றுகிறது. உயர்ந்தவர்க​ளே வழக்கத்​தை உருவாக்குகின்றனர். அத​னைச் ​செயற்படுத்துகின்றனர். அதனால்தான் ​தொல்காப்பியர்

    “வழக்​கெனப் படுவது உயர்ந்​தோர் ​மேற்​றே
    நிகழ்ச்சி அவர் கட்டுஆகலான”(592)
    என்று குறிப்பிடுகின்றார்.

    மரபியல்:
    ஒல்காப் புகழ்பெற்ற தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணத்தினை அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல்,பொருளியல், மரபியல் என ஒன்பது இயல்களாகப் பகுத்துள்ளார். ஒன்பது இயல்களுள் ஒன்றான மரபியல் உணர்த்தும் செய்திகள் தொகுத்துத்தரப்பட்டுள்ளன.

    மரபு என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஆன்றோர் வழங்கிய சொற்களை அவர்கள் வழங்கிய முறைப்படியே கூறுவது ஆகும். இத்தகையமரபினைப் பற்றி கிளவியாக்கத்தில் கூறப்பட்டுள்ளது. யானை மேய்ப்பவனை பாகன் என்றும், ஆடு மேய்ப்பவனை இடையன் என்றும் கூறுவதேமரபு ஆகும். இவற்றை மாற்றிக் கூறினால் அது மரபு வழுவாகக் கருதப்படுகிறது.

    செய்யுளிலும் செய்யுளுக்கு உறுப்பாகக் கூறப்பட்டவற்றுள்ளும் (​செய்யுளுக்கு யாப்பியல் வ​கையால் அ​மைந்த உறுப்புகள் இருபத்தாறு. அம்​மை, அழகு, என வரும் எட்டும் ​சேர்த்து ​செய்யுளுக்கும் ​செய்யுள் ​தொகுதிகளுக்கும் உறுப்பாகும்) ஒரு வகை மரபுஇவ்வியலில் கூறப்பட்டுள்ளது. ​மேலும் செய்யுள் வழக்கிற்குப் பொதுவாகிய வேறு சில மரபுகளும் மரபியலில் கூறப்பட்டுள்ளன. உயர்திணை, அஃறிணை என்னும் இருவகைத் திணைகளைச் சார்ந்த பொருள்களின் இளமை, ஆண்மை, பெண்மை ஆகியவை பற்றிய மரபும், அஃறிணைப்பொருள்களாகிய புல், மரம் ஆகியவை பற்றிய மரபும் கூறப்பட்டுள்ளன.

    மரபியல் சூத்திரங்களை இளம்பூரணர் 112 ஆகவும், பேராசிரியர் 110 ஆகவும் மேற்கொண்டுள்ளனர். மக்கள் தாமேஆறறிவுயிரே (1532) எனத் தொடங்கும் நூற்பாவையடுத்து ஒருசார் விலங்கும் உளவெளன மொழிப என்ற நூற்பா இளம்பூரணர் உரையில் காணப்படுகிறது. இந்நூற்பாவுடன் ஒத்த கருத்துடைய நூற்பா போராசிரியர் உரையில் காணப்படவில்லை.

    நூற்பாவின் அடிகளைப் பிரித்தும் சேர்த்தும் பொருள் கொள்வதனால் எண்ணிக்கையில் வேறுபாடு காணப்படுகிறதே ஒழியப் புது நூற்பாக்கள் உரைகளில் கிடையாது. உலகில் உள்ள உயிர்க​ளின் மரபுக​ளை அறுவ​கை உயிர்ப்பாகுபாடுகளில் உள்ளடக்கித் ​தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். தாவர இனம், விலங்கினம், மக்கள் இனம் உள்ளிட்டவற்றிற்குரிய மரபுக​ளையும் ​தொல்காப்பியர் மரபியலில் ​தெளிவுறுத்தியுள்ளார்.

    அறுவகை உயிர்ப்பாகுபாடு:
    தொல்காப்பியர் இளமைப் பெயரில் உயிர்பாகுபாடுப் பற்றி கூறுகையில், ஓரறிவுயிர் என்னும் உயிர்ப் பாகுபாடுஅதிகாரப்பட்டமையால் அதனொடு பொருந்த உலகத்துப் பல்லுயிர்களையும் ​ அறுவகையாக 8 நூற்பாக்களில் வகைப்படுத்திக்கூறியுள்ளார்.

    மரபியலில் மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளால் பற்றப்படும் ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஒலிஆகிய புலன்களுடன் மன உணர்வினையும் சேர்த்து, உயிரினங்களைத் தொல்காப்பியனார் ஆறுவகையினாற் பிரித்துள்ளார்.

    அறுவ​கை உயிர்க​ளைத் ​தொல்காப்பியர்,

    “ஒன்ற றிவதுவே உற்ற றிவதுவே,
    இரண்டறிவதுவே அதனொடு நாவே
    மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே
    நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே
    ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே
    ஆறறிவதுவே அவற்றொடு மனனே!
    நேரிதின் உயர்ந்தோர் நெறிப்படுத்தினரே”
    என்று கூறியுள்ளார்.

    உடம்பால் மட்டும் அறிவன ஓரறிவு உயிர்கள் ஆகும். உடம்பாலும் நாவாலும் அறிவன இரண்டு அறிவு உயிர்கள் ஆகும். உடம்பு, நா, மூக்கு மூன்றாலும் அறிவன மூ அறிவு உயிர்கள் ஆகும். உடம்பு, நா, மூக்கு, கண் இ​வை நான்காலும் அறிவன நாலறிவு உயிர்கள் ஆகும். உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காது இ​வை ஐந்தால் அறிவன ஐந்தறிவு உயிர்கள் ஆகும். இவ்​வைந்​தோடு மனத்தாலும் அறியும் அறிவு​டையன ஆறறிவு உயிர்கள் ஆகும் என்று ​தெளிவாக அறிந்​தோர் ​நெறிமு​றையாக உணர்த்தியுள்ளனர் என்று ​தொல்காப்பியர் ​மொழிகின்றார்.

    உணர்வுகள் படிப்படியே தோன்றும் வளர்ச்சி நிலை​க​ளை அடிப்ப​டையாக ​வைத்துக் ​கொண்டு உயிர்களை இவ்வாறு ஆறு பிரிவுகளாகத் தொல்காப்பியர் பகுத்துள்ளார். இம்மரபியலில் உயர்தி​ணைச் சாதிகள் நான்கனைப் பற்றியும் உத்திமுதலியன பற்றியும் கூறப்பட்டுள்ளன. இவ்வியலில் தொல்காப்பியனார் சில பெயர்களுக்கு மட்டும் மரபு வரையறைகூறியுள்ளார். தொல்காப்பியர் சுருக்கமாக வரையறுத்துக் கூறுவதற்குத் தகுந்தவாறு அமைந்த பெயர் மரபுகளை மட்டும்எடுத்துக்கூறி. விரிந்த நிலையில் வரும் மரபுடையவற்றைப் பொது விதிகளால் கொள்ள வைத்தார் என்பது தெரிகிறது.

    தாவர மரபு:
    இறைவன் படைப்பின் விந்தையைச் சிந்திந்தால் சிந்தனைக்கோர் அளவில்லை. ஓரறிவு உடைய மரஞ்செடி கொடிகள் முதல் ஆறறிவுபடைத்த மனிதன் வரை தொல்காப்பியத் திருநூலில் உலாவரக் காண்கிறோம். ஏன்? தேவர்களும், அசுரர்களும், இயக்கர்களும், கந்தர்வர்களுங்கூட இந்நூலில் இடம் பிடித்துள்ளனர். தேவர்களினும் மனிதனும் உயர்ந்த நிலையில் ஒளிர்வதாக ஆன்மிகச் செல்வர்கள் இயம்புவர். காரணம்தேவர்கள் நல்வினைப் பயன்களை மட்டுமே துய்ப்பவர். அழியா நிதியாகிய வீடுபேறு மனிதப் பிறவி ஒன்றால் மட்டுமே அடையமுடியும். இருவினை அகற்றி, மும்மலமறுத்து, நாற்பேறும் பெற்றுய்ய இடம் தருவது மானிடப்பிறவியே. தொடு உணர்ச்சி ஒன்றே கொண்ட இயற்கையின்இரகசியமாகத் தாவரங்கள் திகழ்கின்றன.

    ஓரறிவு உயிர்:
    உடம்பால் மட்டும் அறிவன ஓர் அறிவு உயிர்கள். புல், மரம், ​செடி, ​கொடிகள், தாவர இனங்கள் அ​னைத்தும் இதில் அடங்கும். இத​னைத் ​தொல்காப்பியர்,

    “புல்லும்மரனும் ஓர் அறிவின​வே
    பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே” (1527)
    என்று குறிப்பிடுகின்றார்.

    புல்லும் மரமும்:
    புல் என்றவுடன் அறுகம்புல், கோரைப்புல் என்பன நம் மனக் கண்ணில் தோன்றும். தென்னையோ, பனையோ மரம் என்று மயங்குவோம். தொல்காப்பியர் கருத்துப்படி தென்னை, பனை, பாக்கு, மூங்கில், வாழை, போல்வன மரங்கள் ஆகா. அவை புல் இன வகையைச்சேர்ந்தனவே, புல்லுக்கும், மரத்திற்கும் வேற்றுமையை புலப்படுத்தும் தொல்காப்பியனார் கருத்துகளை சிந்திக்க வேண்டாமா?

    “புறக் காழனவே புல்லெனப் படுமே
    அகக் காழனவே மரமெனப் படுமே”

    என்பவை தொல்காப்பியர் நூற்பாக்கள், உள்ளே வைரம்பாய்ந்த உள்வயிர்ப்புடையவற்றையே மரம் எனக் கருதுகிறார் ஒல்காப்புமை தொல்காப்பியனார். புல்லின் தன்மையும்சற்றே விரிவாக இயம்பியுள்ளார் தொல்காப்பியனார்.

    “தோடே மடலே ஓலை என்றா
    ஏடே இதலே பாளை என்றா
    ஈர்க்கு குலையே நேர்ந்தன பிறவும்
    புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்”

    தோடு, மடல், ஓ​லை, ஏடு, இதழ், பாளை, ஈர்க்கு, குலைகளை உடையவை புல் இனத்தில் பாற்படும். இதனால் வாழை, தென்னை, ஈச்சை, பனைமரங்கள் மட்டுமின்றி தாமரை, கழுநீர் போன்ற நீர்வாழ் தாவரங்களும் புல் இன வகையைச் சாரும் என உணரலாம். புறவயிர்ப்பும், உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒரு சாரன. இவ்வகைப்பட்ட உறுப்பு பெயருடையதாகி இவையும் புல்லெனப்படும்எனப்பகர்ந்து வாழை, ஈந்து, தாமரை, கழுநீர் என்பனவற்றை எடுத்துக்காட்டாக இயம்புகிறார் இளம்பூரணர்.

    மரத்தின் உறுப்புகளைத் தொல்காப்பியர் நூலின் வழிக் காண்பதும் சாலச் சிறந்தது. ​தொல்காப்பியர்,

    “இலையே முறிவே தளிரே தோடே
    சினையே குழையே பூவே அரும்பே
    நனையே உள்ளுறுத் தனையவை யெல்லாம்
    மரனொடு வரூ உம் கிளவி என்ப.”

    மரவ​கை உறுப்புகளாகக் குறிப்பிடுகிறார். இ​லை, முறி, தளிர், ​கோடு, சி​னை, கு​ழை, பூ, அரும்பு, ந​னை இ​வை ​போன்றன மரங்களின் உறுப்புகளாகும்.

    புல்லுக்கும் மரத்திற்கும் ​பொதுவாக உள்ள உறுப்புக​ளை,

    “காயே பழமே தோலே செதிளே
    வீழோ டென்றாங் கவையும் அன்ன”

    என்று ​தொல்காப்பியர் எடுத்து​ரைக்கின்றார். காய், பழம், ​தோல், ​செதில், விழுது ​போன்ற​வை புல்லுக்கும், மரத்திற்கும் ​பொதுவான​வையாகும்.
    இதற்கு உரையாசிரியர் தரும் சில விளக்கங்களை ஈண்டு நம் சிந்தனைக்கு கொணர்வது மிகப் ​பொருத்தமு​டையதாக இருக்கும்.

    புறவயிர்ப்பும், உள்வயிர்ப்பும் இல்லாதனவற்றுள் ஒரு சாரன இவ்வுறுப்புப் பெயர் உடையதாகி மரமெனப்படும் என்று கூறி முருக்குதணக்கு என்பனவற்றை உதாரணங் காட்டுகிறார். தாழை பூ உடைத்தாகலானும், கோடுடைத் தாகலானும், புறவயிர்ப்பின்மையானும்மரமெனப்படுமாயினும் புல் என்றல் பெரும்பான்மை என்று கூறுவதும் நம் சிந்தனைக்குரியது.

    “புறக்காழன எனவே அவ்வழி வெளிறென்பது அறியப்படும். அவை பனையும், தெங்கும், கமுகும் முதலாயின புல் எனப்படும். இங்ஙனம்வரையறை கூறிப்பயந்த தென்னை? புறத்தும், அகத்தும் கொடி முதலாயின காழ்ப்பின்றியும், அதில் மரம் போல்வன இடையிடை பொய்பட்டும்புல்லும் மரமும் வருவன உள” என்று பேராசிரியர் பகர்கின்றார்.

    திணைப் பாகுபாட்டில் தாவரங்கள்:
    தொல்காப்பியர் நிலம் வகுத்த பாங்கே (முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தல், பாலை) தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவாழ்வைக் காட்டுகிறது. மரம், செடி, கொடிகளால் திணைப்பெயர் வகுத்த ஆசிரியர் கருப்பொருளில் உணவு (உணா) மரம் போல்வனவற்றையும்இயம்புகிறார் பூ முதலியவற்றையு சிந்திக்கச் செய்கிறார்.

    “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
    செய்த யாழின் பகுதியோடு தொகை இ
    அவ்வகைப் பிறவும் கருயெவன மொழிப”

    புறத்திணையில்,
    “வெட்சி தானே குறஞ்சியது புறனே
    காஞ்சி தானே பெருந்திணைப் புறனே”

    “வாகை தானே பாலையது புறனே
    காஞ்சி தானே பெருந்திணைப் புறனே”

    வெட்சி, தும்மை, வாகை, காஞ்சி போன்ற மலர்களின் சிறப்பினைச் சிந்தனையில் தேக்குகிறார். இவை மட்டுமா?

    போரிடை மலர்கள்:
    மன்னர்கள் அடையாளம் கருதித் தம்முள் அறம் நிறை அரும்போர் புரிந்த வரலாற்றை இன்றைய அறிவியல் உலக அழிவுப் போரோடுஒப்பிட்டால் நெஞ்சங்குமுறும்,

    “வேந்திடை உறுபகை தெரிதல் வேண்டி
    ஏந்துபுகழ்ப் போந்தை வேம்பே ஆரென வரூஉம்
    மாபெரும் தானையர் மலைந்த பூவும்”

    என்ற நூற்பாவின் தொடரால் போந்தை, வேம்பு, ஆத்தி மலர்களின் அரும்புகழையும், அவற்றைப் புனையும் வேந்தரையும் புனைவதற்கான காரணத்தையும் இயம்புவது நம் சிந்தனைக்கு உரியது.

    ஓரறிவு உயிர்க்கு மனம் உண்டா?
    ஒன்று முதல் ஐந்து ஈறாகிய பொறியுணர்வு மனமின்றியும் பிறப்பனபோல வேறு கூறியது என்னை யெனின் ஓரறி உயிர்க்கு மனம்இன்மையின் அங்ஙனம் கூறுனார் என்பார் போராசிரியர். இக்கருத்து அறிவியறிஞர்கள் மேலும் சிந்திக்க இடம் கொடுக்கிறது. ஊனமும், செவிடும், குருடும் என அவயவத்தான் குறைவுபட்டாரை குறைந்த வகை அறிந்து அவ்வப்பிறப்பினுள் சேர்த்துக் கொள்க என்ற போராசிரியர் உரைஆய்வுக்கு உரியது.

    அறிவியல் அறிஞர் J.C போஸ் போன்றவர்கள் ஆய்வும், சித்தர்கள் சிந்தனையும், தொட்டால் சிணுங்கி போன்ற தாவரங்களின்செயல்பாடும் சிந்தித்தால் ஒரறிவு உயிர்க்கும் மனம் உண்டென உறுதியாக நம்பலாம். தொல்காப்பியர் ஆறாம் உயிரே பிறவும் உளவே அக்கிளைப்பிறப்பே” என்ற நூற்பா வழங்கியுள்ளது ஒன்று முதல் ஐயறிவு உடைய உயிர்களுக்கு மனம் இல்ல என்று உறுதிப்படுத்துவதாகத்தோன்றலாம்.

    மனம் இருப்பது வேறு, மனம் செயல்படுவது வேறு. சிந்திக்கும் மனப்பாங்கு, நல்லது கெட்டது ஆயும் திறன், எதிர்கால விளைவை அறியும்பாங்கு மனிதர்க்கு உரியது என்று மட்டுமே கொள்ளல் தரும். ஆறாம் அறிவாகிய மன அறிவு படைத்த நாம் சிந்தித்துத் தெளிந்து உண்மைப்பொருளை உள்ளத்தால் பற்றிப்பிடித்து அதனில் கரைந்தது போதலே வாழ்வின் முழுப்பயன் என்று உணர்தல் ​வேண்டும். தொல்காப்பியத்துள்கோட்டுப் பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ நான்கும் இடம் பெற்றுள்ளன.

    செயற்கை வாழ்வில் முற்றும் திழைத்து இயற்கையை வேர் அறுக்க முயலும் இக்காலத்தில் தொல்காப்பிய முனிவர் வாழ்ந்தபழங்காலத்தில் மக்கள் யாவரும் இயற்கை வாழ்வில் ஒன்றி நுண்மாண்நுழைபுலமும், சிந்தனைச் செல்வமும், சீரிய வாழ்வும் கொண்டுசிறப்புற்று விளங்கினர் என்றால் மிகையாகாது.

    சொல் வேறு, செயல் வேறாய் வாழும் நாம் எல்லா உயிர்க்கும் பசிப்பிணியும், உடற்பணியும் உளப்பிணியும் தீர்த்து ஆன்ம தாகத்தைத்தணிக்கும் மரம், செடி, கொடி, வகைகளைப் போற்றிப் காப்பது நமது கட​மையாகும்.

    ஊர்வன, பூச்சியினங்கள்:
    “நந்தும் முரளும் ஈர்அறிவின​வே
    பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே”(1528)

    என்று ​தொல்காப்பியர் ஈரறிவு உயிர்க​ளைப் பற்றி குறிப்பிடுகிறார். இ​வை ஊர்வனவாகும். நத்​தைடூ முரள் என்ற மீன் வ​கை, சிப்பி, கடல்வாழ் உயிரினங்களில் சில இரண்டறிவு உயிரினங்களாகும். இ​வை கடலில் ஊர்ந்து வாழ்வன.

    மூவறிவு ​கொண்ட​வை:
    மூவறிவு ​கொண்ட உயிரினங்க​ளை,

    “சிதலும் எறும்பும் மூவறிவின​வே
    பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே” (1529)

    என்று ​தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். க​றையான், எறும்பு இ​வை ​போன்ற இனங்கள் தொடு உணர்ச்சி, நா உணர்ச்சி, மூக்குணர்ச்சி மூன்றும் கொண்டன.

    நாலறிவு ​கொண்ட​வை:
    “வண்டும் தும்பியும் நான்கறிவின​வே
    பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே”(1530)

    என்று நாலறிவு உயிர்க​ளைப் பற்றித் ​தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். வண்டு, தும்பி, இவற்றின் இனங்கள், ​தொடு உணர்வு, நா உணர்வு, மூக்குணர்வு, இவற்றொடு கட்புலன் உணர்வும் பெற்றுத் திகழ்வன.

    ஐந்தறிவு ​கொண்ட​வை:
    விலங்கினங்கள் அ​னைத்தும், மனிதர்களில் விலங்குளாய் இருப்​போரும் மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐந்தறிவு உ​டைய உயிர்களாவர். இத​னை,

    “மாவும் மாக்களும் ஐயறிவின​வே
    பிறவும் உள​வே அக்கி​ளைப் பிறப்​பே” (1531)

    என்று ​தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

    மக்களினம்:
    “மக்கள் தாமே ஆறறிவினவே” என்று அறுதியிட்டுப் பேசும் தொல்காப்பியனார் “பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே “எனத் தேவர், அசுரர், இயக்கர் முதலான பிறவிகளையும் தழுவிக்கொள்கிறார்.

    இவர்கள் மட்டுமோ ஆறறிவு படைத்தவர்கள். மனிதனின் ஆணவத்திற்கு முற்றுப் புள்ளி ​வைக்கிறார் தொல்காப்பியனார் “ஒரு சார்விலங்கும் உளவென மொழிப,” கிளியும், குரங்கும் யானையுங் கூட ஆறறிவு கொண்டவை” என்கிறார் உரையாசிரியர். இந்தியத் திருநாட்டின்அறிவியல் அறிஞர் நோபல் பரிசு பெற்ற பெருந்தகை ​ஜெகதீஸ்சந்திர​போஸ் இத்தகு ஒரறிவு படைத்த உயிர்களை ஆராய்ந்து அவற்றின்பெருமையை உலகிற்கு உணர்த்தியவர், இசை கேட்டு உருகும் தன்மையும் கொண்டவை தாவரங்கள் என்று இன்றைய அறிவியல் உலகம்ஏற்றுக்கொண்டுள்ளது.

    தொல்காப்பியர் குறிப்பிடும் உயிர் மரபுகள் குறித்த ​செய்திகள் இன்றுள்ள அறிவியல் அறிஞர்க​ளும் வியப்புறு வண்ணம் அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கதாகும். ​தொல்காப்பியரின் மரபியல் உயிர்களின் பரிணாம வளர்ச்சி​யை எடுத்து​ரைக்கும் இயலாகவும் அ​மைந்துள்ளது. பல்லுயிரின வளர்ச்சி​யையும் அவற்​றை அழிக்காது பாதுகாக்கும் சமுதாயப் ​பொறுப்புணர்​வையும் ​தொல்காப்பியர் மரபியல் வழி நமக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    மு​னைவர் சி.​சேதுராமன்,
    தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி (தன்.,), புதுக்​கோட்​டை.
    E.mail: Malar.sethu@gmail.com

     

    Share
  • தொல்காப்பியத்தில் பாடாண்திணை

    — முனைவர்  சி.சேதுராமன்.

    தொல்காப்பியம் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் இலக்கண நூலாகத் திகழ்ந்தது என்று இறையனார் களவியல் என்னும் அக இலக்கண நூல் குறிப்பிடுகிறது. மக்களின் பழக்க வழக்கங்களையும் மொழியின் சொல்லையும் சொற்றொடர்களையும் வழங்கி வந்த முறைகளையும் நன்கு ஆராய்ந்து முடிவு, தெளிவு ஆகியவை வழுவாதவாறு அமைத்துக் காக்கின்ற இலக்கணமாகத் தொல்காப்பியம் ஆக்கப்பட்டுள்ளது என்பது நோக்கத்தக்கது.

    தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அகத்திணை, புறத்திணை என்ற இயல்கள் முதலில் இடம்பெற்றுள்ளன. அவற்றையடுத்துக் களவு, கற்பு என்ற இயல்களும் பொருளியல் என்பது ஐந்தாவது இயலாகவும் அமைந்துள்ளது. யாப்பிலக்கணத்தையும் அணியிலக்கணத்தையும் பொருள் இலக்கணத்தொடு சேர்க்காமல் பிற இலக்கணத்தை; தனித்தனியாகக் கூறுவர். ஆனால் தொல்காப்பியர் யாப்பிலக்கணத்தைச் செய்யுளியல் என்றும் அணி இலக்கணத்தை உவமயியல் என்றும் கூறியுள்ளார். ஆறாவதாக மெய்ப்பாட்டியலும் ஏழாவதாக உவமவியலும் எட்டாவதாகச் செய்யுளியலும் ஒன்பதாவதாக மரபியலும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அமைந்துள்ளன.

    அகத்திணை – புறத்திணை
    தமிழ் மக்கள் வாழ்க்கையில் ஒழுக்கம் வலியுறுத்தப்படுகிறது. அவ்வொழுக்கம் தொடர்புடைய மனைவி, மக்கள் உற்றார், உறவினரோடு ஏற்படுவது அகவொழுக்கம். மன்னன், அயலார், பொதுமக்கள் என்பவரோடு ஏற்படுவது புறவொழுக்கம் எனப்படுகிறது. திணை என்பது ஒழுக்கம் என்பதால் அகவொழுக்கம் அகத்திணையிலும் புறவொழுக்கம் புறத்திணையிலும் கூறப்பட்டன.

    புறவொழுக்கத்தைக் கூறும் புறத்திணையியலில் முதலாவதாகக் கூறப்படும் வெட்சி என்னும் ஒழுக்கம், அறவழியில் நடக்கும் மன்னன் ஒருவன்தான் படையெடுத்துச் செல்லும் செய்தியைத் தன் பகைவனுக்கு முன்னரே அறிவிப்பதாகும். திடீரென்று படையெடுத்துப் போனால் பகைவர் நாட்டிலுள்ள பெண்டிரும், பிணியுடையோரும், சிறுவரும் பிறரும் அஞ்சி அல்லலுற்று அலமருதல் வேண்டத் தகுந்ததில்லை என்ற அறவுணர்வுதான். பகைவர் எனினும் அவரிடம் அறவுணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை உணர்த்துவதே வெட்சி ஒழுக்கமாகும். இத்தகைய அடிப்படை உணர்வுதான் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    புறத்திணை இயலில் இரண்டாவதாகச் சொல்லப்படுவது வஞ்சித்திணை. வஞ்ச நெஞ்சப் பகைவனின் நாட்டின் மேல் படையெடுத்துச் செல்வதே அது. மூன்றாவது உழிஞைத் திணை. பகை நாட்டிலுள்ள அரணை வளைத்துக் கைப்பற்றிக் கொள்வது. நான்காவது தும்பைத் திணை. போர்க்களத்தில் இருபடையும் பொருது வெற்றி தோல்வி அடைவது. ஐந்தாவது வாகைத் திணை. வெற்றிக் கொண்டாட்டம் நடத்துவது. ஆறாவது காஞ்சித்திணை. நிலையாமை பற்றி எண்ணிச் செயற்படுவது. ஏழாவது பாடாண்திணை. இஃது முன்னோர் கூறிய குறிப்பில் பரவலும் புகழ்தலும் செய்வது ஆகும்.

    பாடாண்திணை
    பாடாண் என்பது புலவரது பாடுதல் வினையாகிய தொழிலையோ அவர்களாற் புகழ்ந்து பாடப்பெறும் ஆண்மகனையோ குறிப்பதன்று. புலவர்களாற் பாடப்பெறும் புகழினை விரும்பிய தலைவர்கள் தம்முடைய அறிவு, திரு, ஆற்றல், ஈகை முதலிய பெருமிதப் பண்புகளை ஆளுதற் தன்மையாகிய ஒழுகலாற்றைக் குறித்து வழங்குவதே பாடாண் என்னும் சொல்லாகும். புலவராற் பாடப் பெறும் தலைமக்களது ஒழுகலாறாகிய பண்புடைமையினைப் பாடாண் எனும் சொல் உணர்த்திற்று என்பது நச்சினார்க்கினியர் கருத்தாகும்.

    பாடாண்திணை தனக்கென ஒரு தனிநிலை பெறாது பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு அவ்வவற்றில் புகழுக்கு ஏற்ற ஒவ்வொன்றின் பகுதியே பாடாணாக அமையும். அகத்திணை, புறத்திணை இரண்டும் மக்களின் ஒழுக்கம் பற்றிக் கூறுவனவாகும். ஆதலால் பாடாண் திணையும் மக்களுக்கு உரியதாகவே ஆதல் வேண்டும். இது கருதியே பாடாண் பாடல்கள் எல்லாம் மக்களில் தக்காரின் புகழாகவே வரும் என்று கூறினர்.

    பாடாண் திணையும் கைக்கிளையும்:
    பாடாண் திணைப் பகுதி கைக்கிளையென்னும் அகத்திணைக்குப் புறனாகும். இது எட்டு வகையுடையதாகும் என்பதை,
    ‘‘பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே
    நாடுங்காலை நாலிரண்டுடைத்தே’’(தொல்.புறத்.,20)
    என்ற நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

    கைக்கிளையில் காதற் சிறப்பு ஒருவருக்கே ஆகிவரும். அதுபோலப் பாடாண்திணையிலும் சிறப்பானது தகுதியுடைய ஒருவருக்கே உரித்ததாக வரும். கைக்கிளையில் காதற்கூற்று, பாராட்டும் தலைவனிடத்ததாகும். பாடாண்திணையில் புகழும் கூற்று புகழ்வோனிடத்திலேயே அமையும். கைக்கிளையில் இழுக்கு நீக்கித் தருக்கியலே சொல்லி இன்புறுதல் உரிது. பாடாணில் பழி தழுவாத புகழ்ச்சி ஒன்றே பயின்று வரும். கைக்கிளைக்கும் பாடாணுக்கும் நிலமும் பொழுதும் வரையறையில்லை. ஒருதலையாய் வெளிப்படையாக அமையுமதனால் படாண்திணை கைக்கிளைக்குப் புறனாக அமைந்தது.

    ஒரு நிலத்திற்கு உரியதாக அன்றி ஒருதலைக் காமமாகி வருவது கைக்கிளை என்னும் அகத்திணையாகும். அதுபோன்று ஒரு பாலுக்கு உரித்ததன்றி ஒருவரை ஒருவர் ஏதேனும் ஒரு பயன் கருதிய வழிப் பாடப்பெறுவது பாடாண்திணையாகும். இயற்பெயர் கூறப்படுதலும் கழிபேரிரக்கமல்லாது வெளிப்படையாக வருவதுமாகிய பண்பு இவ்விரண்டிற்கும் பொருந்தும். பாட்டுடைத் தலைவன் வணங்கிப் பாடும் புகழ்ச்சியும் வேண்டப் பாடும் புலவர்கள் பரிசிற்பொருளை வேண்டும் முறையில் அமைந்தது பாடாண்திணை ஆதலால் இஃது ஒருதலைக் காமமாகிய கைக்கிளை என்ற அகத்திணைக்குப் புறனாயிற்று.

    இல்லற வாழ்வில் ஒத்த அன்புடைய ஒருவனும் ஒருத்தியும் மேற்கொள்ளுதற்குரிய அன்புரிமைச் செயல்களாகிய அகவொழுக்கங்களும், அரசியல் வாழ்விலே போர் வீரர்கள் மேற்கொள்ளுதற்குரிய வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்றும் அறுவகைப் புறத்திணை ஒழுகலாறுகளும் ஆகிய இவ்வொழுக்கங்களை நிலைக்களமாகக் கொண்டே ஒருவர் ஒருவரைப் பாடுதல் இயலும். வெட்சி முதலிய அறுவகை ஒழுகலாறுகளும் அவற்றிற்குக் காரணமாகிய உள்ளத்துணர்வுகளும் பாட்டுடைத் தலைவர்பால் நிகழ்வனவாகும்.

    பாடாண் திணையில் பாடுதல்வினை புலவர்பாலும், அவ்வினைக்குக் காணமாகிய பண்பும் செயலும் பாட்டுடைத் தலைவர்பாலும் நிகழ்வன. வெட்சி முதலிய ஆறு திணைகளும் தலைமக்களுக்குரிய பண்புகளையும் செயல்களையும் நிலைக்களங்களாகக் கொண்டு தோன்றுந் தனிநிலைத் திணைகளாகும். பாடாண் திணையோ தலைமக்கள்பால் நிகழும் மேற்குறித்த திணை நிகழ்ச்சிகளைத் தனக்கு நிலைக்களங்களாகக் கொண்டு தோன்றும் சார்புநிலைத் திணையாகும்.

    தலைமக்களுக்குரிய கல்வி, தறுகண், இசைமை, கொடையெனச் சொல்லப்பட்ட பெருமிதப் பண்புகளாய்ப் புலவராற் பாடுதற்கு அமைந்த மாந்தரது ஒழுகலாறு பாடாண் திணையாகும் எனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். பாடாண் அல்லாத வெட்சி முதலிய பிற திணைகளும் புலவராற் பாடப்படுவனவே எனினும் புலவராற் பாடப்பெறுதல் வேண்டும் என்னும் உள்ளக் குறிப்புப் பாட்டுடைத் தலைவர்பால் தோன்றாத நிலையில் அவர்பால் தன்னியல்பில் நிகழும் போர்ச்செயல் முதலியவற்றைப் புலப்படுத்துந் திறத்தால் அவை வெட்சி முதலிய தனிநிலைத் திணைகளாகும் எனவும் அச் செயல்களைக் கருவாகக் கொண்டு புலவர்கள் பாடும்போது அங்ஙனம் தாம் பாடப்பெறுதலால் உளவாகும் புகழை விரும்புங் கருத்துடன் பாட்டுடைத் தலைவர்பால் தோன்றும் உயர்ந்த உள்ளக் குறிப்புப் பாடாண் என்னும் சார்புநிலைத் திணையாகும் எனவும் பகுத்துணர்தல் வேண்டும்.

    புலமையுடையோர் பலரும் தமது உரையினாலும், பாட்டினாலும் உயர்வாகப் புகழும் வண்ணம் ஆற்றல் மிக்க போர்த்துறையிலும் அன்பின் மிக்க இல்வாழ்க்கையிலும் புகழுடன் வாழும் நன்மக்களது பண்பின் ஆளுதற் தன்மையே தொல்காப்பியர் கூறிய பாடாண் திணை எனில் மிகவும் பொருத்தமுடையதாகும்.

    வெட்சிப் பாடாண் – வெட்சியடியாகப் பிறப்பது
    ‘‘ஒன்னர் முன்னிலை முருக்கிப் பின்னின்று
    நிரையொடு வரூஉம் என்ஐக்கு
    உழையோர் தன்னினும் பெருஞ்சாயலரே’’(புறம்.,262)
    பகைவருடைய தூசிப் படையை முறியடித்துப் பெயர்ந்து போகும் தன் படைக்குப் பின்னே நின்று ஆநிரையோடு வருகிறான் என் தலைவன். அவனுக்கு அருகேயிருந்து உடன் வரும் வீரர்கள் அவனைக் காட்டிலும் பெரிய பொலிவு உடையவராய் உள்ளனர் என்று கூறித் தலைவனையும் வெட்சியடியாகப் புகழப்படுவதால் இது வெட்சிப் பாடாண்திணை ஆயிற்று எனலாம்.

    இவ்வாறே உழிஞைப் பாடாண் உழிஞையடியாகப் பிறப்பது:
    ‘‘ஒருவீர் தோற்பினும் தோற்பது உம்குடியே
    இருவீர் வேறல் இயற்கையும் அன்றே, அதனால்
    குடிப்பொருள் அன்று நும்செய்கை’’ (புறம்.,45)
    என்று நலங்கிள்ளி முற்றுகையிட்டிருந்தான். நெடுங்கிள்ளி கோட்டையை அடைத்திருந்தான். எனவே இது உழிஞையாயிற்று. கோவூர்க்கிழார், ‘‘உம்முள் ஒருவர் தோற்பினும் தோற்பது உம்குடியே! இருவரும் வெல்லுதல் இயற்கையும் அன்று; ஆதலால் நும் செய்கை உம் குடிக்குத் தக்க ஒரு செயல் அன்று’’ என்று குடியைப் புகழ்வதால் இது உழிஞைப் பாடாண்திணையாகும். இவ்வாறே பிற திணைகளை நிலைக்களனாகக் கொண்டு பாடாண்திணை வரும்.

    அமரர் கண் முடியும் அறுவகை
    பாடாண்திணையின் பகுதியாகத் தொல்காப்பியர்,
    ‘‘அமரர்கண் முடியும் அறுவகையானும்
    புரைதீர் காமம் புல்லிய வகையினும்
    ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப’’
    எனறு குறிப்பிடுகின்றார்.

    இதற்கு இளம்பூரணர், ‘‘அமரர் கண் முடியும் கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல் என்பனவற்றினும், குற்றம் தீர்ந்த காமத்தைப் பொருந்திய வகையினும், அவையிற்றின் ஒரு கூற்றின் பாகுபாடு பாடாண் திணையாதற்குப் பொருந்தும் என்பர் புலவர்’’ என்று உரைகூறுகிறார். ஆனால் நச்சினார்க்கினியர், அறுவகை என்பதற்கு, முனிவர், பார்ப்பார், ஆநிலை, மழை, முடிவேந்தர், உலகு என ஆறு என்று குறிப்பிடுகின்றார். இருவரும் ஒரே வகையைக் குறிப்பிடாது மாறுபட்டுக் குறிப்பிடுகின்றனர்.

    இளம்பூரணர் வணக்க வகைகளைக்(கொடிநிலை உள்ளிட்டவை வணக்க வகைகள்) கூறுகிறார். ஆனால் நச்சினார்க்கினியர் வணங்கப்படும் பொருள்களைக் (செயற்கையான தேவர்கள், முனிவர்கள், பார்ப்பார் உள்ளிட்டவை வணங்கப்படும் பொருள்கள்) குறிப்பிடுகின்றார். இந்நூற்பாவிற்கு உரை எழுதிய நாவலர் அவர்கள்,

    ‘‘தொல்காப்பியர் தாம் கருதிய ‘ஆறுவகை’’யினைத் தம் நூலில் எங்கு, எவ்வாறு காட்டியுள்ளார் என்பதை இரண்டு உரைகாரர்களுமே விளக்கினார் இல்லை. தாம் கூறக் கருதிய தொகைப் பொருள் இவையெனத் தாமே வகைசுட்டி விளக்காமல் கூறுபவரல்லர் தொல்காப்பியர்….தொல்காப்பியர் தொகை சொன்னால் வகை கூறியுமிருப்பர். வகை கூறாமல் தொகை மட்டும் கூறுவது அவர் இயல்பு அன்று. அவ்வாறு இல்லாதிருந்தால் தொல்காப்பியம் இன்றுவரை நின்றிராது. தொல்காப்பியர் முன்னர் திணை ஒவ்வொன்றிலும் பெயர் சுட்டிக் கூறியுள்ளார். அவையே வகையாம். வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி என்பன வகையாம். இந்த வகை அறுதானே, இந்த வகைக்குத்தாம் தொல்காப்பியர் தொகை கூறுகிறார். அந்தத் தொகையே அறுவகை எனப்படுகிறது” என்று குறிப்பிட்டு,

    தொல்காப்பியர் குறிப்பிடும் அமரர் என்பதற்கு,‘‘அமர் என்பது போர். அமரர் என்பது போர் செய்யும் வீரரைக் குறிக்கும். வெட்சி, ஆநிரை கொள்ளும் போர். வஞ்சி, படையெடுத்துச் செல்லும் போர், உழிஞை, அரணை வளைத்துச் செய்யும் போர். தும்பை தன் வலிமையையே தன் துணையாகக் கொண்டு செய்யும் போர். வாகை போரில் வெற்றி கொள்ளுதல். காஞ்சி, போரில் இழந்த இழப்பைக் கண்டு நிலையாமையை எண்ணுதல் இவையாவும் போர் பற்றியன. பாடாண் என்பது அப்போர் பற்றிய போர் வீரரது வீரம் குறித்து அவர்பாற் சென்று முடியும் புகழ்ச்சி. பாடாண் முன்பு குறித்த ஆறின் அடியாக வரும் என்பதைத் தொல்காப்பியர் குறிப்பிடுவதேயாகும்’’ என்று குறிப்பிடுகின்றார். நாவலர் குறிப்பிடும் இதுவே பொருத்தமான உரையாக அமைந்திலங்குகின்றது.

    வழக்கில் திணைப் பகுதிகள் பாடாணாய்ப் பயிலுமிடத்து அதனதன் கூறுபட நின்று வாழ்த்துதலும், புகழ்தலும் சொல்லுமிடத்தும் பண்டைச் சான்றோர் கூறியுள்ள இயற்பாக்களே அன்றி இசைவகை வண்ணக் கூறுகளும் விலக்கப்படாது என்று தொலகாப்பியர் குறிப்பிடுகிறார்.

    காமப்பகுதி:
    பாடாண் திணையில் காமப்பகுதி கடவுளோடும் மக்களிடத்தும் நீக்கார் என்று கூறுவர். (காமப் பகுதி கடவுளும் வரையார் ஏனோர் மருங்கினும் என்மனார் புலவர்) இது இயற்பெயருடனும் வரலாம் என்று குறிப்பிடுவர். இக்காமப்பகுதி மக்களுக்கேயன்றி கடவுளோடு கடவுள் காதல் கொண்ட பாடாணுக்கும்(‘அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்’-கம்ப.மிதிலை.,35 இராமன்-சீதை காதல்) கடவுள் மனிதரோடு காதல் கொண்ட பாடாணுக்கும்(‘ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின், மடவரல் வள்ளியொடு நகை யமர்ந்தன்றே’திருமுருகு.,100-102 முருகன்-வள்ளி காதல்)வரும். இவ்விரு முறையும் புலனெறி வழக்கில் வருதல் உண்டு. அதற்கு விலக்கில்லை.

    இக்காமப்பகுதி குழவிப் பருவத்தும் உரியதாகும்.(குழவி மருங்கினும் கிழவதாகும்)இதுவே பிள்ளைத் தமிழ் இலக்கிய வகைக்கு அடிப்படையாயிற்று என்பது நோக்கத்தக்கது. கடவுள்-கடவுளோடும், கடவுள் மானுடரோடும் கொள்ளும் காமப் பகுதியோடு காதற்பருவம் பெறாத சிறாரிடத்திலும் தூய காமப் பகுதி உரியதாகும்.

    பேதைப் பருவமுடைய சிறாரிடத்துக் காதற் செவ்வி கருத முடியாது. காம உணர்வு குழவிக்கில்லை. எனினும் அக்குழவியிடத்தில் தூய காதல் கொள்வாருடைய அன்பின் தன்மை பற்றிய பாடாண் அக்குழவியின் மேல் சார்த்தி வருவதே இங்கு கூறப்படுவதாகும். ஊரின் காமப் பகுதி நிகழ்தலும் உரித்து என்று கூறுவர். இதற்கு தலைமக்களின் ஊர்ச்சிறப்பும் உயர்குடிப் பிறப்பும் பாராட்டுதற்குரியனவாகும். அப்பாராட்டுப் புலனெறி வழக்கொடு பொருந்தும் என்பர். இதனைத் தொல்காப்பியர்,
    ‘‘ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப
    வழக்கொடு சிவணிய வகைமையான’’ (புறத்.,30)
    என்று குறிப்பிடுகிறார். இது உலா இலக்கிய வகைத் தோற்றத்தைக் குறிப்பிடுகிறது. இவை அனைத்தும் வழக்கில் பொருந்தி வரும்.

    கடவுள் வாழ்த்தோடு வருவன:
    திணைகள் யாவும் மக்களின் ஒழுக்கம் குறித்தே வருமாயினும், பாடாண்திணை வகையில் ஒருசில தலைமக்களின் பாராட்டுடனும் வரும். ஆனால் குறிப்பிடப்படும் சில, கடவுள் வாழ்த்தொடு பொருந்தியே வரும். அவை கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற மூன்றும் ஆகும்.(‘‘கொடிநிலை, கந்தழி, வள்ளி என்ற; வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே-)

    கொடிநிலை என்பது கொடியெடுத்துப் படைக்கு முன்னர் செல்லுதல். இது வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும். இதற்கு,
    ‘‘புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப்
    போகுங் காலை
    கொள்ளும் கொடியெடுத்துக் கொன்றவையும்
    கொடுமர முன்செல்லும் போலும்’’ (சிலப்.,வேட்டுவ வரி, 13.பா)
    என வரும் சிலப்பதிகாரப் பகுதியை எடுத்துக்காட்டாகக் கூறலாம். இதில் நிரை கருதிப் போதல் வெட்சி. அதற்குக் கொடியெடுத்து முன் செல்லல் கொடிநிலை. கொற்றவை பரவல் கடவுள் வாழ்த்து ஆகும்.

    கந்தழி என்பது மாற்றாரது அரணை அழித்த வெற்றியைக் குறிக்கும். இக்கந்தழி என்பதை காந்தள் என்று பொருள் கொண்டு காந்தள் மலரைச் சூடிக் கொண்டு ஆடும் ஆட்டத்திற்குக் காந்தள் என்று பெயர் வந்தது. வேலைக் கையிலேந்திய வேலன் முருகனைத் துதித்து வெறியாடுவது காந்தள் எனப்டும் காந்தள் வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு வரும் என்று அறிஞர் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. வள்ளி என்பது வள்ளல் தன்மையைக் குறிக்கும். வள்ளி என்பதனைப் பெண்கள் ஆடும் வள்ளிக் கூத்து என்றும் குறிப்பிடுவர். வள்ளி ஒரு கொடிக்குப் பெயர். ஆதலால் கூத்தைக் குறிக்க வாடாவள்ளி என்று கூறப்பட்டது. ‘‘கொடி வாடும்’’; ‘‘கூத்து வாடாது’’. எனவே வாடாவள்ளி என இது கூறப்பட்டது. வள்ளி வெட்சிப் பாடாணாய்க் கடவுள் வாழ்த்தொடு வரும்.

    இளம்பூரணர் கந்தழி என்பதற்கு விளக்கம் கூறாமல்,
    ‘‘அன்றெறிந்தானும் இவனால் அரண்வலித்து’’
    என்ற வெண்பாமாலைப் பாட்டை உதாரணமாகக் காட்டி அமைவர;. அப்பாட்டு உழிஞை வகையாகும். நச்சினார்க்கினயர் கந்தழி என்பதற்கு, ‘‘ஒரு பற்றுக் கோடின்றி அருவாகித்தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள்’’ என்று பொருள்கூறுவர். தொல்காப்பியரால் கொடிநிலையும் வள்ளியும் வெட்சித் திணையில் விளக்கப்பட்டன. அவற்றைப் போலவே காந்தள் என்பதும் வெட்சித் திணையில் வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தள்’’ என விளக்கப்பட்டது. கந்தழி என்பது எங்கும் விளக்கப்படவில்லை. காந்தள் முருகக் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வந்ததாகும். முதலன மூன்றும் என்பன கொடிநிலை, காந்தள், வள்ளி என்பனவேயாகும் இவற்றால் கந்தழி கொள்ளத் தகுந்ததில்லை. காந்தள் என்பதே கொள்ளத் தகுந்தது; பொருத்தமானதும் ஆகும்.

    கந்தழி என்பதற்கு, நாவலர் பாரதியார், ‘‘காந்தள் என்பது ஏடு பெயர்த்து எழுதுவோரால் பொருட் பொருத்தம் கருதாமல் கந்தழி என எழுதப்பட்டது போலும். அவ்வாறு வந்த கந்தழியை உரையாசிரியர்கள் இருவரும் அப்படியே ஏற்றுத் தம்முள் மாறுபட்டு உரை கண்டனர் எனத் தெரிகிறது. இதனாலும் கந்தழி துறையாகாமல் காந்தள் வலியுறுவது காண்க’’ என்று குறிப்பிடுவது பொருந்துவதாக உள்ளது.

    கொற்றவள்ளை:
    மன்னனின் புகழினை விளக்கமாகக் கூறியும் பகைவர் அழிவுக்கு இரங்கியும் பாடும்பாடல் கொற்ற வள்ளை எனப்படும். இதுவும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும். இதற்கு, ‘‘கொற்றம் என்பது வெற்றி. வள்ளை என்பது உலக்கைப்பாட்டு. பெண்டிர் தம் அரசனின் வெற்றிக்கு மகிழ்ந்து உலக்கைக் குற்றோடு ஒத்துப்பாடும் பாட்டு கொற்றவள்ளை எனப்படும். கொற்றவள்ளை வஞ்சி வகையைச் சேர்ந்தது. இது கடவுள் வாழ்த்தொடு பொருந்தியும், கடவுள் வாழ்த்தின்றி தலைமக்கள் புகழ் மட்டும் சுட்டியும் வரும்’’ என்றும் பொருள் கூறுவர்.

    பாடாண் திணையின் துறைகள்:
    பாடாண் திணை 10 துறைகளைக் கொண்டது. அவையாவன,

    1. கொடுப்போர் ஏத்தல்: கொடைகொடுக்கும் வள்ளல்களைப் புகழ்தல், கொடார்ப்பழித்தல்: பெருஞ்செல்வராயிருந்தும் வழங்காதவரைப் பழித்தல், அதாவது ஈயார் பழியாம்; ஈவோர் புகழாம். எனவே அதுவும் பாடாண்திணையாயிற்று.
    2. இயன்மொழி வாழ்த்து-நெருங்கிப் பொருந்திப் புகழ்வது இயன்மொழி ஒருவனிடம் உள்ள சால்பை உரைப்பது இயன்மொழியாகும்.
    3. வாயில்நிலை: சேய்மையினின்று வந்த வருத்தம் தீர வாயில் காவலனிடம் கூறுதல்.
    4. கண்படைநிலை: பரிசில் பெறுவோர் உறங்கக் கருதிக் கூறுவது. இதனை, ‘‘பரிசில் மாக்களும் துயில்கமா சிறிதே’’ என்ற தொடராலேயே பொருள் விளங்கக் காணலாம்.
    5. வேள்வி நிலை: கபிலை நிறமுள்ள பசுவைக் கருதிய வேள்வி. பசுவின் நெய்யால் வேள்வி செய்வதுண்டு. ஏனெனில் பசுக்களை வேள்வித் தீயிலிட்டுக் கொன்று அவற்றின் ஊனை உண்பது தமிழர் முறையில்லை. இதனை,
    ‘‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர் செகுத்து உண்ணாமை நன்று’’(குறள்259)
    என்ற திருக்குறள் விளக்குவது நோக்கத்தக்கது. நெய் முதலிய பொருள்களை வேள்வித்தீயில் இட்டு ஆயிரம் வேள்விகள் செய்து முழப்பதைக் காட்டிலும் ஒரு விலங்கின் உயிரைக் கொன்று அதன் ஊனை உண்ணாதிருப்பது நல்லது என்பது நம்முன்னோரின் உயர்ந்த கொள்கையாகும். அதனால் பசுக்களின் நெய்யைக் கொண்டு வேள்வி நிகழ்த்துதலையே தொல்காப்பியர் இதில் குறிப்பிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    6.விளக்குநிலை: வேலும் கோலும் குறித்த விளக்கு நிலை. அதாவது இருள்நீக்கி ஒளி உதவும் விளக்குப் போன்று தீது நீக்கி நன்மை பயப்பது வேலும் கோலுமாகும். வேல் காவலுக்கும், கோல் முறை செய்தலுக்குமாக வந்த ஆகுபெயர்கள். (‘‘செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது, பிறிது தெறல் அறியார் நின்நிழல் வாழ்வோர்…அறம்துஞ்சும் செங்கோல்-முறைசெய்யும் கோலைக் காட்டும். ஏமக்காப்பு-காவல் செய்யும் வேலைக் காட்டும்’’…புறம்.,20)
    7. வாயுறைவாழ்த்து: வாய்மை, தீமையிலாத சொலல். அத்தீமையில்லாதவை உறைந்த வாழ்த்தே வாயுறை வாழ்த்தாகும். வாய்-வாய்மொழி. உறை-மருந்து. வாயுறை என்பது சொல் மருந்து எனப் பண்புத்தொகையாகும். வாய்க்கண் தோன்றிய மருந்து என வேற்றுமைத் தொகையுமாம் என்பர் நச்சினார்க்கினியர். வாய்மொழியாகிய மருந்தைக் கொண்டு தீமை நீக்குவது என்பது கருத்து.
    8. செவியுறை வாழ்த்து: செவியில் அறிவுறுத்தல் செவியுறை வாழத்தாகும். இதனை செவியறிவுறூஉம் எனவும் கூறுவர். ‘‘செவியுறை -செவிமருந்து அடங்கி வாழ்வார்க்குப் புகழாதல் வாழ்த்தின் பாற்பட்டது’’ என்பர் நச்சினார்க்கினியர். செவிமருந்தினால் நலம் பயக்கச் செய்வது கருத்து.
    9. புறநிலை வாழ்த்து: வழிபடும் தெய்வம் உன்னைப் புறங்காப்ப பழியில்லாத இல்லறச் செல்வத்தோடு புதல்வர்ச் செல்வமும் பெற்று வழிவழி சிறந்து வாழ்வீராக என்பது புறநிலை வாழ்த்தாகும்.
    10. கைக்கிளை: ஒருதலைக் காதலாகும். இதற்கு நாவலர் அவர்கள், ‘‘பாடாண் துறைகள் அடுத்த சூத்திரத்தில் கூறப்படுவதாலும் தொல்காப்பியர் கையாளும் முறையாலும் இங்கு கூறுபவை பாடாண் திணையின் சிறப்பு வகைகளாம்; துறைகளாகா. இன்னும் ‘‘நாடுங்காலை நாலிரண்டு உடைத்தே’’ என முன்னே எண் கொடுத்துத் தெளிவாக்கியுள்ளார் தொல்காப்பியர். இத்தொகு நிலையைத் ‘‘தொக்க நான்கு’’ எனப் பிறவற்றிலிருந்து பிரித்து வேறு கூறியுள்ளார். எனவே இங்கு கூறப்பட்டவை பாடாண் திணையின் சிறப்பு வகைகளே என்று கொள்ளவேண்டும்’’ என்று குறிப்பிடுகிறார்.

    பாடாண் திணையின் பிற துறைகள்:
    பாடாண் திணையின் துறைகளாகத் தொல்காப்பியர் மேலும் பத்துத் துறைகளைக் குறிப்பிடுகிறார். அவை பின்வருமாறு:

    1. துயில் எடை நிலை: துயில் எழுப்பும் நிலை. துயிலும் அரசர்க்குக் குற்றமற்ற அவர் நல்ல புகழைக் கருதிப் புகழ்வோர் எடுத்துரைப்பது. இது நாளடைவில் பள்ளிஎழுச்சி என்ற சிற்றிலக்கிய வகைக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    2. ஆற்றுப்படை: ஆற்றுப்படுத்தல் – வழிகாட்டல். கூத்தர், பாணர், பொருநர், விறலி என்னும் நால்வகை இரவலரும் தனித்தனியாகப்ப் பரிசில் பெற்று மீளும்போது, இரவலன் ஒருவன் பரிசில் பெற விரும்பி வள்ளலைத் தேடிச் செல்லும் அவனுக்கு வழியிடையில் இடைப்படத் தோன்றி, பெற்றுவரும் மிக்க பரிசில் வளத்தை அவனுக்குத் தெரிவித்து அவனும் அவ்வள்ளல்பால் சென்று பரிசில் பெறச்சொல்லும் துறையாகும். (கூத்தர்-ஆடல் செய்வோர், பாணர்- இசைபாடுவோர், பொருநர்- நாடகத்தில் குறித்த ஒருவனைப் போல நடிப்பவர், (பொருந்-ஒப்பு), விறலி-இசைக்கேற்ப ஆடுபவள் விறல் என்பது உள்ளுணர்வை மெய்ப்படக் காட்டும் திறம். அத்திறமை உடையவர; விறலியர;). இத்துறை ஆற்றுப்படை என்ற இலக்கியத்திற்கு வழிகோலியது.
    3. பெருமங்கலம்: பிறந்தநாள் விழா. மன்னனுக்கோ, தலைவனுக்கோ சிறந்த நாள் என்பது அவன் பிறந்த நாள் ஆகும். அதில் அவன் சினம் அகற்றி விழாக் கொண்டாட வேண்டும். அன்று பகைவரையும், தவறு செய்தோரையும் சினத்தல் கூடாது. சிறைவீடு செய்தல், கொடை வழங்குதல் வேண்டும். இது ஒரு துறையாகும்.
    4. மண்ணு மங்கலம்: மண்ணுதல்-நீராடுதல், மங்கலம்- விழாக் கொண்டாடுதல். சிறந்த புகழுடைய முடிசூட்டு விழாவின்போது நடக்கும் நீராட்டுவிழா.
    5. குடைநிழல் மரபு: உலகியல் ஒழுக்கத்தை உயர்த்தும் வேந்தனது குடைநிழல் முறை கூறல்.
    6. வாள்மங்கலம்: பகைவரை வெற்றி கொள்ளக் கருதி வேலை, வாளை நீராட்டும் மங்கல விழாவாளும் வேலும் மன்னர்கள் ஒன்றெனக் கருதுவர்.
    7. எயில் அழித்த மண்ணுமங்கலம்: நிலைத்த மதிலை அழித்தபின் நீராடும் மற விழா. பகைவர் மதிலின் குடுமியைக் கைக்கொண்ட பின் பெருமிதம் கொண்டாடும் நீர்விழா உழிஞைத்திணயில் ஒரு துறை. அது மதிலை அழியாது கைப்பற்றிய விழா. இங்கு பாடாண்திணையில் வரும் இத்துறை மதிலை அழித்துவிட்டுக் களியாட்டம் நடத்துவது. கைக்கொண்டது அங்கு. அழித்தது இங்கு. விழாவெல்லாம் நீராடியே தொடங்குவது மரபு. இதனை,
    ‘‘கடுந்தேர்க் குழித்த ​ஞெள்ளல் ஆங்கண்
    ​ வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்ழப்
    பாழ்செய்தனை, அவர் நனந்தலை நல்எயில்’’(புறம்.,15)
    என்ற பாடல் விளக்குகின்றது. பகைவரது பரந்த இடத்தையுடைய நல்ல மதிலை அழித்து, விரைந்ததேர் குழிசெய்த வீதியில் வெளியவாயையுடைய கழுதையாகிய புல்லிய இனத்தைப் பூட்டி உழுது பாழ் செய்தாய் என்று இப்பாடலில் மதில் அசெய்து கூற்படுவது நோக்கத்தக்து.
    8. அரசனது முன்வாயிலில் வந்து பரிசில் கேட்கும் நிலை. இதற்கு,
    ‘‘வான்தோய் நீள்குடை வயமான் சென்னி!
    சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
    ஆசாகென்னும் பூசல்போல
    வல்லே களைமதியத்தை உள்ளிய
    விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை
    பொறிப்புணர் உடம்பில் தோன்றி என்
    அறிவுகெட நின்ற நல்கூர்மையே’’(புறம்.,266)
    என்ற பாடல் சான்றாக அமைகின்றது. சென்னியே சான்றோர; கூடியிருந்த அவையில் வந்து நேர;ந்த ஒருவன், யான் உற்ற துன்பத்திற்கு நீர் துணையாய் இருந்து எனக்குப் பற்றுக் கோடாக வேண்டும் என்ற ஆரவார வேண்டுகோளைக் கேட்ட சான்றோர் அவன் துன்பத்தை விரைவில் தீர்த்தனர். அதுபோல என் வறுமையை நீ விரைவில் தீர்ப்பாயாக. என்னைக் கருதி வந்த விருந்தினரைக் கண்டு விருந்தளிக்க முடியாமல் ஒளிந்து கொள்ளும் திருந்தா நிலையுடையது என் இல்வாழ்க்கை. என் உடம்பில் தோன்றி என் அறிவு கெடும்படி நின்ற என் வறுமையை விரைவில் தீர்ப்பாயாக என்றார் புலவர். இதில் முன்வாயில் நின்று பரிசில் கேட்ட நிலை கூறப்படுவது நோக்கத்தக்கது.
    9. இருவகை விடை: 1. புரிசில் பெற்ற பின்னும் ஈந்தோனைப் புகழ்ந்து தானே விடை கேட்டல், 2. ஈந்தோன் விடை கொடுத்தல். இவை உலக வழக்கில் பயின்று வரும் இருவகை விடையாகும்.
    10. காலத்தை எண்ணிக் கூறும் வாழ்த்து: நாள் நிமித்தம், புள்நிமித்தம், பிற நிமித்தங்களால் தலைவனுக்கு நேரும் தீமைக்கு அச்சமும் நன்மைக்கு உவகையும் கொண்டு குறைவில்லாமல் ஆராய்ந்து ஏற்புடைய காலத்தை எண்ணிக் கூறும் வாழ்த்து.
    ‘‘காலனும் காலம் பார்க்கும்…………
    ………………………………………
    அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்
    எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்
    களிறு மேற்கொள்ளவும் காழக நீப்பவும்’’(புறம்.,41)
    யமனும் உயிர்க்கொள்ளக் காலம் பார்க்கும். அஞ்சத் தகுவனாகிய பறவைகள் குரலிசைப்பவும், பல் நிலத்திலே வீழவும், எண்ணெயைத் தலையிலே தேய்க்கவும், பன்றி மேல் ஏறவும், ஆடையைக் களையவும் ஆகிய செயல்களால் நாள், புள் நிமித்தங்களும் பிறவும் இப்பாடலில் வந்தன. இவற்றால் தலைவனுக்கு நேரும் தீமைக்கு அச்சப்படுதல் இயல்பு. அதனால் அதனை அறிந்து வாழ்த்தினைக் கூறுகின்ற முறைமை இப்பாடலில் அமைந்துள்ளது நோக்கத்தக்கது.

    உலகியலில் வரும் ஒழுக்க நடத்தைகளில் கருத்துக் கொண்டு மூன்று காலமும் தழுவிப் பாடாண் துறைகள் வரும். இங்கு கூறப்பட்ட துறைகள் பலதிறப்பட்ட புறத்திணைகளுக்கு உரியன. எனினும் தலைவன் புகழ், வாழ்த்துக்களாய் வருதலால் பாடாண் துறைகளாய் முடிகின்றன.

    பாடாண்திணையில் வாழ்த்தல், புகழ்தல், முன்னோர் கூறிய குறிப்பு ஆகிய மூன்றிடத்திலும் இயற்பாக்களோடும், இசைப்பா, வண்ணக் கூறுகளும் வந்து வழங்கும். தூய காதல் பகுதியாகிய ஏழாவதும் எட்டாவதும் கடவுளோடு கடவுள், கடவுளோடு மனிதர் குழவிக் கைக்கிளை ஆகிய முறைகளில் வருவதுண்டு. பாடாணில் ஊர்சிறப்பும், உயர்குடிப் பிறப்பும் கூறுத் உண்டு. அப்போது உண்மைப் பெயர் சொல்லிப் பாடுவதுண்டு. அகத்திணையிற்றான் உண்மைப் பெயர் சுட்டக் கூடாது. பாடாண்திணையில் கடவுள் வாழ்த்தோடு பொருந்தி வருவது கொடிநிலை, காந்தள், வள்ளி என்பன. கொற்றவள்ளை என்பதும் கடவுள் வாழ்த்தோடு பொருந்தியும் கடவுள் வாழ்த்தின்றியும் வரும். பாடாண் திணை சிறப்பு வகையில் எட்டாகத் தொல்காப்பியரால் மொழியப்பட்டுள்ளன. பாடாண் துறைகளாகப் பத்துவகைகளையும் தொல்காப்பியர் மொழிந்துள்ளார்.

     

    முனைவர் சி.சேதுராமன்
    தமிழாய்வுத் துறைத்தலைவர்
    மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி(தன்.)
    புதுக்கோட்டை-1
    மின்னஞ்சல்: Malar.sethu@gmail.com

     

     

    Share
  • கி.வா.ஜ.வின் ‘வாழும் தமிழ்’ ​சொல்லதிகார ஆராய்ச்சி”

    — மு​னைவர் சி.​சேதுராமன்.

    தமிழ்த்தாத்தா உ.வே. சா. வின் கூடவே இருந்து தொண்டாற்றியவர்தான் வாகீச கலாநிதி கி.வா.ஜகந்நாதன். உ.வே.சா மற்றும் கி.வா.ஜ. இருவரின் பணிகளாலும் முயற்சியாலும்தான் தமிழன்னை புதுப் பொலிவு பெற்றாள்.

    கிருஷ்ணராயபுரத்தில் வாசுதேவ ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் 1906 -ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி கி.வா.ஜ. பிறந்தார். தன் இறுதி மூச்சு உள்ளவரை சொற்பொழிவு செய்து, கேட்போர் மனம் மகிழச்செய்த கி.வா.ஜ., பிறந்தவுடன் அழவே இல்லையாம். எல்லோரும் கவலை அடைந்து மருத்துவம் செய்து குழந்தையை அழ வைத்தார்களாம். அழாமல் பிறந்த அவர், பின்னாளில் எத்தனையோ பேர்களின் கண்ணீரைத் துடைத்துள்ளார்.

    கி.வா.ஜ. குடும்பம் பிறகு சேலம் மாவட்டத்தில் உள்ள மோகனூருக்குக் குடிபெயர்ந்தது. இவர், அங்குள்ள திண்ணைப் பள்ளியில் ​தொடக்கக் கல்வி பயின்றார். மோகனூரில் சிறு குன்று ஒன்று இருக்கிறது. அதற்குக் “காந்தமலை” என்று பெயர். அக்குன்றில் முருகப்பெருமான், தண்டாயுதபாணி திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அம்முருகப் பெருமானிடத்தில் சிறுவயது முதலே இவருக்கு ஈடுபாடு உண்டு. இவர் அப்பெருமான் மேல் பல பாடல்கள் புனைந்துள்ளார். இரவு, பகல் பாராது எப்போதும் அந்த முருகப்பெருமான் அருகிலேயே இருப்பார்.

    தன் மேற்படிப்பைத் தொடர கி.வா.ஜ. மீண்டும் கிருஷ்ணராயபுரம் வந்தார். கணிதமும், இயற்பியலும் அவருக்கு மிகவும் பிடித்தமான பாடங்கள். தமிழ்ப் பற்றும் தமிழறிவும் அவருக்குப் பிறப்பிலேயே இருந்தன. சிறுவயது முதல் காந்தியடிகளிடம் பற்றும் மதிப்பும் இருந்த காரணத்தால் அவர் எப்போதும் கதராடையையே அணிய ஆரம்பித்தார்.

    கவிதை இலக்கணம் முழுவதுமாகத் தெரிவதற்கு முன்பே கவிதையின் ஓசையை உணர்ந்து பாடும் ஆற்றல், பன்னிரண்டாவது வயதிலேயே கி.வா.ஜ. வுக்கு ஏற்பட்டுவிட்டது. கி.வா.ஜ.வின் கன்னி முயற்சியில் உருவானதுதான் நடராஜரைப் பற்றி அவர் எழுதிய, “போற்றிப்பத்து” என்னும் பதிகம். பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடும் ஆற்றல் பெற்றவர் கி.வா.ஜ. “ஜோதி” என்ற புனைப்பெயரில் அவ்வப்போது கவிமழை பொழிந்தவர். பழமையின் இலக்கண மரபுகளில் ஊறித் திளைத்தவராக இருந்தும், அந்தப் பழமையின் வளத்தையே உரமாக்கிப் புதிய எளிய இனிய உருவங்களில் கவிதைகளைப் பொழிந்திருக்கிறார்.

    1925ஆம் ஆண்டு சேந்தமங்கலம் சென்றார். அங்கே ஐராவத உடையார் என்ற ஜமீன்தார் இருந்தார். அவரது தெய்வ பக்தியும் அறிவாற்றலும் கி.வா.ஜ.வைக் கவர்ந்ததால் அவருடைய நண்பரானார். உடையார் ஒரு தெய்வீக ஆஸ்ரமத்தை அங்கே அமைத்திருந்தார். அந்த ஆஸ்ரமத்திலேயே கி.வா.ஜ. தங்கினார். சேந்தமங்கலத்தில் அவதூத மகான் ஒருவர் இருந்தார். அவரிடம் பக்தி கொண்டு அவரை வணங்குவார். அம்மகானது சீடர் துரியானந்த சுவாமிகளிடம் கி.வா.ஜ. நட்புக் கொண்டிருந்தார்.

    கி.வா.ஜ. சேந்தமங்கலம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சிறிது காலம் குமாஸ்தாவாகப் பணியாற்றினார். அப்போது அவ்வூரில் இருந்த கிறிஸ்தவ சமயப் போதகர் திரோவர் துரை என்னும் ஆங்கிலேயருக்குத் தமிழ் கற்பித்தார். அப்போதும் முருகப்பெருமான் நினைவாகவே இருந்து, பாடல்கள் புனைவார். சேந்தமங்கலத்தில் இருந்த காசி சுவாமிகள் மூலம் உ.வே.சாமிநாதய்யரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்.

    1927-ஆம் ஆண்டு உ.வே.சா. சிதம்பரத்தில் மீனாட்சிக் கல்லூரியில் முதல்வராக இருந்தார். அதனால் அவர் சிதம்பரத்தில் வசித்து வந்தார். உ.வே.சா.விடம் முறையாகத் தமிழ் படிக்க வேண்டும் என்ற பேரவா நாளுக்கு நாள் கி.வா.ஜ.வுக்கு வளர்ந்து கொண்டே வந்தது. அவரது வேட்கையை நன்கு உணர்ந்திருந்த ஐராவத உடையார் 1927-ஆம் ஆண்டு தைப் பூசத்துக்காக வடலூர் புறப்பட்டபோது கி.வா.ஜ.வையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். சிதம்பரத்தில் உ.வே.சா.வைக் கண்டு அவரிடம் கி.வா.ஜ.வை ஒப்படைத்தார். அன்று முதல் உ.வே.சா. அமரர் ஆகும் வரை அவரது நிழல் போலவே இருந்தார்.

    உ.வே.சா. ஒரு நிகழ்ச்சியைக் கூறினால், கி.வா.ஜ. அதை எழுத்தில் வடிப்பார். அதில் உ.வே.சா. சில திருத்தங்களைச் செய்வார். அத்திருத்தங்களுடன் கட்டுரையை மிகவும் செம்மையாகவும் சுவையாகவும் எழுதிப் பத்திரிகை அலுவலகத்துக்கு அனுப்பிவைப்பார் கி.வா.ஜ. உ.வே.சா.வின் பெரும்பாலான உரைநடை நூல்கள் எல்லாம் அவ்வாறு உருவானவையே.

    கி.வா.ஜ., உ.வே.சா.விடம் தமிழை முறையாகக் கற்றுத் தமிழ் வித்துவான் தேர்வு எழுதி மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுத் திருப்பனந்தாள் மடத்தின் ஆயிரம் ரூபாய் பரிசையும் பெற்றார். உ.வே.சா.வின் ஏடு தேடும் பணியிலும், வெளியூர்ப் பயணங்களின் போதும் கி.வா.ஜ. உடன் இருப்பார்.

    1932-ஆம் ஆண்டு உ.வே.சா.வின் உதவியால், கலைமகள் பத்திரிகையின் துணையாசிரியர் ஆனார். பிறகு ஆசிரியரானார். கவியரசர் பாரதியாரைப் பற்றிப் பற்பல கட்டுரைகளை எழுதி, “கலைமகள்” இதழில் வெளியிட்டார். அரிய தமிழ் இலக்கியச் செல்வங்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க உதவினார். படிப்படியாகக் “கலைமகள்” இதழை வளர்த்து அதை ஒரு தரமான நிலைக்கு உயர்த்தினார் என்றால் அதற்கு அடிப்படையான காரணம் கி.வா.ஜ.வின் கடுமையான உழைப்பும், ஊழியர்களிடம் அவர் காட்டிய மனிதநேயமு​மே கராமாகும்.

    கி.வா.ஜ. சிறந்த சிறுகதை ஆசிரியராகவும் விளங்கினார். தமிழக அரசும், தமிழ் வளர்ச்சிக் கழகமும் அவருடைய சிறுகதைத் திறனைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளன. அவருடைய உள்ளத்தில் ஊடுருவி நிற்கும் பக்தி உணர்வு அவருடைய சிறுகதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுத்தோன்றும். 1932-ஆம் ஆண்டு அலமேலு என்பவரை மணந்து ​கொண்டார்.

    கி.வா.ஜ.வின் முதல் நூல் காந்தமலை முருகன்மேல் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். கலைமகள் ஆசிரியர் பணியுடன் தன் ஆசிரியர் உ.வே.சா.வின் ஆய்வுப்பணி, பதிப்பு, எழுத்துப் பணிகளுக்கும் வழக்கம் போலவே உதவி செய்து வந்தார்.

    வாகீசகலாநிதி, திருமுருகாற்றுப்படை அரசு, தமிழ்க்கவி பூஷணம், உபன்யாசகேசரி, செந்தமிழ்ச்செல்வர், தமிழ்ப் பெரும்புலவர், திருநெறித்தவமணி, ஆகிய பட்டங்களைப் பல்வேறு அமைப்புகளும் சமயங்களும் இவருக்கு வழங்கி சிறப்பித்துள்ளன.

    கி.வா.ஜ., உ.வே.சா.வின் மறைவுக்குப் பிறகும் சோர்வில்லாமல் தமிழ்த் தொண்டு செய்து வந்தார். கி.வா.ஜ. சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். உ.வே.சா.வின் பிற்காலச் சரித்திரத்தை எழுதிப் பூர்த்தி செய்தார். கோபம் என்பதே வராத குணக்குன்று கி.வா.ஜ. தமிழ் தொடர்பாக யார் எப்போது, எவ்விதமான சந்தேகம் கேட்டாலும் அலுத்துக் கொள்ளாமலும் சலித்துக் கொள்ளாமலும் அவர்களின் ஐயங்களைத் தீர்ப்பார்.

    கி.வா.ஜ. சிறந்த உரையாசிரியராகவும், சீரிய திறனாய்வாளராகவும் விளங்கினார். ஆய்வுப் பணியை மேற்கொண்டிருந்த காலத்தில் அவர் உருவாக்கிய “தமிழ்க் காப்பியங்கள்” என்னும் நூலும், சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் “கல்கி” நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவாக அவர் ஆற்றிய “தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலும் அவருடைய ஆய்வுத் திறனுக்குக் கட்டியம் கூறுவனவாகும்.

    பொதுவாக, எழுத்தில் வல்லவர்கள் பேச்சில் வல்லவர்களாக இருப்பதில்லை; அதேபோல், பேச்சில் வல்லவர்கள் எழுத்தில் வல்லவர்களாக இருப்பதில்லை. கி.வா.ஜ.வோ எழுத்து, பேச்சு ஆகிய இரண்டிலும் வல்லவராகத் திகழ்ந்தார். எப்போதும் படித்துக் கொண்டும், எழுதிக்கொண்டும் இருப்பார். தமிழகம் மட்டுமன்றி கடல் கடந்தும் இவரது புகழ் பரவியது. நகைச்சுவையாகவும், சிலேடையாகவும் பேசுவதில் வல்லவர். இவ்வுலகில் இருந்து மறைவதற்குச் சில நாள்களுக்கு முன்புவரை, மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொல்லியதைப் பொருட்படுத்தாமல் பெரியபுராணத்துக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார்.

    மிக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தும் மிக அரிய தமிழ்ப் பணிகள் செய்தும், ஓய்வு என்பதையே அறியாத சான்றோராகிய வாகீச கலாநிதி கி.வா.ஜ. 1988-ஆம் ஆண்டு நவம்பர் 4-ஆம் தேதி நிரந்தரமாக ஓய்வு எடுத்துக்கொண்டார்.

    கி.வா.ஜ.வின் வாழும் தமிழ்:
    தினமணியில் கி.வா.ஜ. ​தொடர்ந்து ​தொல்காப்பியம் ​சொல்லதிகாரம் குறித்து எழுதிய கட்டு​ரைகளின் ​தொகுப்​பாக இந்நூல் விளங்குகின்றது. ​தொல்காப்பியம் அன்றும் இன்றும் வாழுந் தமி​ழைப் பற்றிக் கூறுவதால் இந்நூலுக்கு வாழும் தமிழ் என்று ​பெயர் ​வைத்ததாக கி.வா.ஜ. குறிப்பிடுகிறார்.

    இந்நூலில் கி.வா.ஜ. அவர்கள் முழு​மையாகத் ​தொல்காப்பியச் ​சொல்லதிகாரத்திற்கு உ​ரைவகுக்கவில்​லை. சிற்சில இலக்கணச் ​செய்திக​ளை​யே இதில் விளக்கிச் ​செல்கின்றார். ​பெரும்பான்​மையும் ​சேனாவ​ரையர் உ​ரை​யையும் சில இடங்களில் நச்சினார்க்கினியர் உ​ரை​யையும் கி.வா.ஜ. ​அவர்கள் விரிவாக விளக்கிச் ​சென்றுள்ள​மை குறிப்பிடத்தக்கது. இந்நூலில் 32 கட்டு​ரைகள் இடம்​பெற்றுள்ளன. இதில் கிளவியாக்கத்தில் இடம்​பெற்றுள்ள 19 நூற்பாக்களுக்கு விரிவாக கி.வா.ஜ. அவர்கள் விளக்கவு​ரை எழுதியுள்ளார்.

    பெயரியல் பற்றி 10 கட்டு​ரைகளிலும், ​​வேற்று​மை குறித்து 2 கட்டு​ரைகளிலும், விளிமரபு குறித்தும் இ​டைச்​​சொல், உரிச்​சொல் பற்றி ஒவ்​வொரு கட்டு​ரையிலும், எச்சவியலில் இடம்​பெறும் ​சொல் குறித்த சில நூற்பாக்களுக்கும் இந்நூலில் சு​வைபட கி.வா.ஜ. அவர்கள் விளக்கம் கூறுகிறார். இறுதியாக இடம்​பெறும் 32-ஆவது கட்டு​ரையான உள்ளு​றை என்பதில் தாம் வாழும் தமிழ் நூலில் எடுத்துக் கூறியுள்ள ​தொல்காப்பிய நூற்பாக்களின் ​தொகுப்​பை கி.வா.ஜ. ​மொழிந்துள்ளார்.

    வாழும் தமிழ் என்று ​பெயர் ​வைத்த​மைக்கான காரணம்

    தாம் ​தொல்காப்பியச் ​சொல்லதிகார ஆராய்ச்சி குறித்த இந்நூலிற்கு “வாழும் தமிழ்” என்று ​பெயர் ​வைத்த​மைக்கான காரணத்​தை, “வாழ்க்​கையின் நி​லை​யை ​மொழி காட்டுகிறது; அதன் சிறந்த பகுதிக​ளை இலக்கியம் காட்டுகிறது. இந்த இரண்டின் இயல்புக​ளையும் இலக்கணம் வகுத்துக் காட்டுகிறது. ஆக​வே ​தொல்காப்பியம் என்னும் இலக்கணம், அன்றும் இன்றும் வாழுந் தமி​ழைப் பற்றிச் ​சொல்கிறது; இலக்கியத்திலும் உலகியலிலும் வாழும் தமி​ழைப் பற்றிப் ​பேசுகிறது. இந்தக் கருத்துட​னே, ‘வாழும் தமிழ்’ என்ற ​பெய​ரை இந்தப் புத்தகத்திற்கு ​வைத்​தேன்”(ப., iv) என்று கி.வா.ஜ. குறிப்பிடுகின்றார்.

    மேலும் கி.வா.ஜ. இந்நூலில் பழந்தமிழர்களின் வாழ்க்​கை​யை எடுத்து​ரைக்கின்றார். இத​னை, “​தொல்காப்பியத்தின் விளக்கம் அன்று இது; அதில் கூறப்​பெறும் இலக்கணச் ​செய்திக​ளை மு​றையாகத் ​தொகுத்துத் தருவதும் அன்று; ​தொல்காப்பியச் ​சொல்லதிகாரத்தில் உள்ள ​செய்திகளாகிய சிறு பு​ழைகளினூ​டே பரந்து, விரிந்த பண்​டைத் தமிழர் வாழ்க்​கை​யைப் பார்க்க முயலும் முயற்சி” (ப., iv) என்று கி.வா.ஜ. குறிப்பிடுவது ​நோக்கத்தக்கது.

    கி.வா.ஜ. வாழ்க்​கை​யோடு இ​ணைத்து ​சொல்லதிகாரத்தில் இடம்​பெற்றுள்ள நூற்பாக்களுக்கு விளக்கம் தருகின்றார். இவ்விளக்கமானது எளி​மையானதாகவும், தனித்தன்​மையு​டையதாகவும் அ​மைந்துள்ளது. ​பழந்தமிழர் வாழ்க்​கை​யில் பயன்படுத்தப்பட்டு வரும் ​சொல்​வழக்​கை ​வைத்தும் இன்று அச்​சொல் எப்​பொருளில் மக்களி​டை​யே வழங்கப்பட்டு வருகின்றது என்ப​தையும் கி.வா.ஜ. உதாரணத்துடன் இந்நூலில் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    வழக்குச்​சொற்க​ளைப் பயன்படுத்தி விளக்கம் கூறுதல்:
    கி.வா.ஜ. அவர்கள் ​நூற்பாக்களுக்கு விளக்கம் கூறும்​போது ந​டைமு​றையில் வழக்கில் மக்கள் வழங்கும் வழக்குச் ​சொற்க​ளைப் பயன்படுத்தி எளி​​மையாக விளக்கம் கூறுவது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ​சொல்லதிகாரத்தின் முதல் நூற்பாவான,

    “உயர்தி​ணை என்மனார் மக்கட் சுட்​டே;
    அஃறி​ணை என்மனார் அவரல பிற​வே;
    ஆயிருதி​​ணையின் இ​சைக்குமன ​சொல்​லே”

    என்பதற்கு மிக எளி​மையாக தமிழில் எழுதப் படிக்கத் ​தெரிந்​​தோரும் புரிந்து ​கொள்ளும் வண்ணம் கி.வா.ஜ. அவர்கள் விளக்குகின்றார்.

    வழக்கில் வாயுள்ள பிராணி, வாயில்லாப் பிராணி என்று நாம் ​பேசுவது வழக்கம். உயர்தி​ணை என்ப​தை வாயுள்ள பிராணி என்றும் அஃறி​ணை என்ப​தை வாயில்லாப் பிராணி என்றும் கி.வா.ஜ. குறிப்பிடுகின்றார்(ப.,3). உணர்ச்சி​யைச் ​சொல்லும் ஆற்றல் ​பெற்ற மனிதன் அது ​பெறாத பிற என்ற இரண்டு வ​கைகள் அ​மைந்துள்ளன. உத்தி​யோகஸ்தர்-உத்தி​யோகஸ்தர் அல்லாதார் ​கெஜட்டில் வரு​வோர்-அல்லாதார் என்று வழக்கத்தில் வழங்குவர். அ​தைப்​போன்​றே மனித சாதி​யை உயர்தி​ணை​யென்று பிரித்தபிறகு மற்றவற்​றை இழிந்த தி​ணை​யென்று ​சொல்லாமல் அல்லாத தி​ணை என்று பிரித்தனர்; அல்லாத தி​ணை என்றாலும் அல்தி​ணை என்றாலும் ஒன்றுதான். என்று எடுத்து​ரைத்து உலகத்தில் மக்கள் என்று சுட்டப்படும் ​பொருள்க​ளை உயர்தி​ணை என்று வகுத்து​ரைப்பர் மக்கள் அல்லாத பிற ​பொருள்க​ளை அஃறி​ணை என்று ​சொல்லுவார்கள் ​சொற்களும் அந்த இரண்டு தி​ணைகளாக வழங்கும் என்று எளிய விளக்கம் தருகின்றார்.

    பொரு​ளைக் குறிக்கும் ​சொல்​லை பெயர் என்றும் ஆற்ற​லின் உருவத்​தைக் குறிக்கும் ​சொல்​லை வி​னை என்றும் கி.வா.ஜ. குறிப்பிடுகிறார். ​மேலும் ​பொரு​ளை சிவம் என்றும் ஆற்ற​லை சக்தி என்றும் தமிழர்களின் வாழ்க்​கை ​நெறி சார்ந்து ​சொல் என்பதற்கு கி.வா.ஜ. விளக்கம் கூறுகின்றார்.

    பழ​மொழிக​ளைக் கூறி விளக்குதல்:
    முன்​னோர்களின் அனுபவ ​மொழிக​ளே பழ​மொழிகளாகும். இப்பழ​மொழிகள் வாழ்க்​கை​யை விளக்கும் பண்பாட்டுப் ​பெட்டகங்களாகும். பால் என்பது குறித்து விளக்கவரும் கி.வா.ஜ. அவர்கள் பல உதாரணங்க​ளைக் கூறி அத​னை எளி​மையாக விளக்குகிறார். அ​னைத்தும் ஒன்றாக இருந்தாலும் அ​வை ஒவ்​வொன்றும் ஒவ்​வொரு விதத்தில் ​வேறுபட்டு நிற்கின்றது. உயர்தி​ணையில் பால் என்பது ஒன்றாக இருப்பினும் அ​வை ஆண், ​​பெண், பலர் என்றும் அஃறி​ணையில் ஒன்று பல என்றும் நம் முன்​னோர்களால் பகுக்கப்பட்டிருப்பது ​நோக்கத்தக்கது.

    இத​னை கி.வா.ஜ.அவர்கள் “தாயும் பிள்​ளையும் ஒன்றானாலும் வாயும் வயிறும் ​வே​றேதான்” (ப.,9) என்ற பழ​மொழி​யைக் குறிப்பிட்டு விளக்கம் தருகின்றார். மனிதன் சமுதாய உணர்ச்சி​யோடு ஒன்றுபட்டு வாழ்ந்தாலும் இயற்​கையில் உடம்பும் உயிரும் உள்ளமும் தனித்தனி மனித​னை ஆக்குகின்றன. தனிமனிதன் ​தோன்றுகிறான் அவன் தன் முயற்சியினால் மற்றவர்க​ளோடு ஒன்றுபட்டு சமுதாய உணர்ச்சி ​பெறுகிறான் என்று கி.வா.ஜ. ​தெளிவுறுத்தி,

    “ஆடூஉ அறி​சொல் மகடூஉ அறி​சொல்
    பல்​லோர் அறியும் ​சொல்​லொடு சிவணி
    அம்முப்பாற்​சொல் உயர்தி​ணை யவ்​வே
    ஒன்றறி ​சொல்​லே பலவறி ​சொல்​​லென்று
    ஆயிருபாற் ​சொல் அஃறி​ணையவ்​வே”

    என்ற ​தொல்காப்பிய நூற்பாவிற்கு விளக்கம் தருகின்றார்.

    ஆண், ​பெண் தவிர்ந்த மூன்றாவது பாலினமாக விளங்கும் திருநங்​கை பற்றிய பால்பகுப்​பை தமிழர்தம் வாழ்க்​கை ​நெறி சார்ந்து கி.வா.ஜ.அவர்கள் விளக்குகின்றார். அவர், “தமிழ் உயி​ரோடு வளர்ந்த ​மொழி. வாழ்க்​கை​யை ஒட்டி வந்த ​மொழி. அதன் இலக்கணமும் ​நெட்டுருப்​போட்டுத் த​லைவலி​யை உண்டாக்கிக் ​கொள்ள வந்ததன்று. ….ஆக​வே வாழ்க்​கையில் அலியின் நி​லை எவ்வாறு அ​மைந்திருக்கிறது?… யாராவது தம்​மை அலி என்று ​சொல்லிக் ​கொள்ள விரும்புவது உண்டா?

    ப​டைப்பி​லே ஆண், ​​பெண் என்ற பிரிவி​லே ​சேராவிட்டாலும் ​செயற்​கையினால் தா​மே விரும்பி எந்தக் கூட்டத்தி​லே அவர்கள் ​சேருகிறார்க​ளோ அந்தக் கூட்டத்திற்குரிய பாலில் ​சேர்த்து வழங்குவ​தே சரி என்று ​சொன்னார். ஆக​வே ​பேடி வந்தாள், ​பேடி வந்தான் என்று ​சொல்லும்​போது அந்தப் ​பேடியின் வாழ்க்​கை கூட நமக்குத் ​தெரிந்து ​போகிறது. மகளி​ரோடு ​சேர்ந்து வாழ்கிறதும் ஆடவ​ரோடு ​சேர்ந்து பழகுகிறதும் ​சொல்லி​லே​யே ​தொனிக்கின்றன” (பக்.,13-14) என்று ​தெளிவுறுத்துகின்றார்.

    கடவுள் தத்துவத்துடன் இ​ணைத்துப் ​பொருள் கூறுதல்:
    தெய்வம் பற்றிய தமிழர்களின் பால்பகுப்​பை, “​தெய்வத்துக்குச் சாதி, தி​ணை, பால் என்ற பிரிவு இல்லாவிட்டாலும் மனிதன் தன் மனத்துள் தியாணிப்பதற்கும் உரு அ​மைத்து வழிபடுவதற்கும் சில சம்பிரதாயம் ​வேண்டும். தனக்குத் ​தெரிந்த உருவத்​தை எண்ணுவதுதான் மனிதன் இயல்பு. ஆக​வே ​தெய்வத்​தைச் சிந்த​னைக்குக் ​கொண்டுவந்து உரு அ​மைக்கும்​போதும் ​பேச்சுக்குக் ​கொண்டு வந்து உ​ரையாடும்​போதும் தான் அறிந்த தி​ணையுள்ளும் பாலுள்ளும் ​வைத்து வழங்கினான்; ​தேவன் வந்தான், ​தேவி வந்தாள் என்று ​பேசினான்”(ப.,15) என்று வாழ்க்​கை​யோடு இ​ணைத்து கி.வா.ஜ.விளக்குகின்றார்.
    கடவுள் தி​ணை, பால் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டவர். அதனால் கடவு​ளை இதற்குள் அடக்க இயலாது. ​சொல்லில் வழங்கும்​போதுதான் ​தெய்வத்திற்கு தி​​ணை, பால் வகுக்க இயலும். ​​பேடி முதலிய ​சொற்க​ளைப் பற்றி விளக்க வந்த ​தொல்காப்பியர்,

    “​பெண்​மை சுட்டிய உயர்தி​ணை மருங்கின்
    ஆண்​மை திரிந்த ​பெயர்நி​லைக் கிளவியும்
    ​தெய்வம் சுட்டிய ​பெயர்நி​லைக் கிளவியும்
    இவ்​வென அறியும் அந்தம் தமக்கு இல​வே
    உயர்தி​ணை மருங்கின் பால்பிரிந்து இ​சைக்கும்” (487)
    என்று குறிப்பிடுகிறார்.
    ​​
    மேலும்,
    “ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலாற்கு ஆயிரம்
    திருநாமம் பாடி நாம் ​தெள்​​ளேணம் ​கொட்டா​மோ”

    என்று மாணிக்கவாசகப் ​பெருமானின் திருவாசக அடிக​ளை எடுத்துக் கூறி, ஆயிரம் திருநாமம் ​சொல்லிக் ​கொட்டும்​போ​தே இ​றைவன் ஒரு நாமமும் இல்லாதவன் என்ற உண்​மை உள்ளத்தின் அடித் தட்டி​லே ஒலித்துக் ​கொண்​டே இருக்கிறது. அது​போலத்தான் ​தெய்வத்​தை ஆணாகவும் ​பெண்ணாகவும் பால் வகுத்துத் தமிழில் ​பேசும்​போ​தே அத்​தெய்வம் இப்பிரிவுகளுக்​கெல்லாம் அப்பாற்பட்டது என்ற உணர்ச்சி தமிழரிடம் இருந்தது. அப்படி இருந்த​தென்ப​தை​யே ​தொல்காப்பியர்”​பெண்​மை சுட்டிய உயர்தி​ணை மருங்கின்” என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார் என்று கி.வா.ஜ. விளக்கம் தருகிறார்.

    தொல்காப்பியரின் இந்நூற்பாவிற்கு கி.வா.ஜ., “அலிக​ளையும் ​தெய்வத்​தையும் வந்தான் ​போனான், வந்தாள் ​போனாள் என்று ​சொல்வ​தைக் ​கொண்டு இப்படிப் ​பேசும் தமிழனுக்கு அலியின் லட்சணம் ​தெரியவில்​லை என்று நி​னைக்கா​தே. ​பைத்தியக்காரத் தமிழன் ​தெய்வத்​தையும் தன்​னைப் ​போல ​வேட்டியும் புட​வையும் கட்டுவது என்று நி​னைத்துவிட்டா​னென்னு பரிகாசம் ​செய்யா​தே அந்தப் பாற்பிரி​வைக் குறிக்கும் குறியீடுகள் அவர்களுக்கு உரிய​வை அல்ல; கடன் வாங்கிக் ​கொண்ட​வை என்று அவர் இதன் மூலம் ​சொல்லாமற் ​சொல்லவில்​லையா? கடவுள் இந்த அவதாரம் எடுத்ததனால் இதுதான் அவர் திருவுருவம் என்று மயங்கா​தே.

    நம்​மைப் ​போலப் ​பெண்டு பிள்​ளைகளுடன் வாழ்பவ​ரென்று ஏமாந்து ​போகா​தே. ​​எல்லாம் ​வேஷம்; நமக்காக, நாம் உய்வதற்காக, கடன் வாங்கிக் ​கொண்ட​வை என்று சமயக் குரவர்கள் ​சொல்வது ​போல இருக்கிறதல்லவா இது? ஆம் ஒன்று ​சொல்​லைப் பற்றிய தத்துவம்; மற்​றொன்று ​பொரு​ளைப் பற்றிய தத்துவம். ​சொல்லின்றிப் ​பொருள் இல்​லை; ​பொருளின்றிச் ​சொல் இல்​லை.”(பக்.,15-16) இ​றைத் தத்துவத்​தை எடுத்துக்கூறி விளக்கிச் ​செல்கின்றார். இது, “சிவம் இன்றி சக்தி இல்​லை; சக்தி இன்றி சிவம் இல்​லை” என்ற சிவத்தத்துவத்​தை விளக்குவதாக அ​மைந்துள்ளது ​நோக்கத்தக்கது.

    நிகழ்ச்சிக​ளைக் கூறி விளக்குதல்:
    ஒரு நூற்பாவிற்கு விளக்கம் கூறும்​போது க​தை​போன்று ஒரு சிறு நிகழ்ச்சி​யைக் கூறி அதன் வழி நூற்பாவிற்கு விளக்கும் கூறும் மு​றை​யையும் கி.வா.ஜ. இந்நூலில் ​கையாண்டுள்ளார். அச்சிறு நிகழ்ச்சி சு​வையாகவும் அவர் காலத்திய ​சொல்லாடல்க​ளை அறியத்தகுவனவாகவும் அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கது.
    சுருங்கச் ​சொல்லி விளங்க ​வைக்கும் தன்​மையும் நிகழ்ச்சிக​ளைக் கூறி நூற்பாக்க​ளை விளக்கும் மு​றையில் அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கது. ​தொல்காப்பியர் கூறும்,

    “​செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல்”(496)
    ​செப்​பே வழீஇயினும் வ​ரைநி​லை இன்​றே
    அப்​பொருள் புணர்ந்த கிளவியான”(498)

    என்ற ​செப்பு, வினா குறித்த நூற்பாக்களுக்கு கி.வா.ஜ. பின்வரும் க​தை​போன்ற நிகழ்ச்சிக​ளை எடுத்துக்கூறி விளக்கத் தருகின்றார்.

    “ஒரு ​வேளாளன் நிலத்​தை உழுது ​​கொண்டிருக்கிறான். அந்த நிலம் ஒரு ​பெருவழியின் அருகில் இருக்கிறது. யா​ரோ பிரயாணி கடம்பூர் என்ற ஊருக்குப் ​போய்க் ​கொண்டிருக்கிறான். தான் ​போகிற ஊருக்கு அதுதான் சரியான வழியா என்று உறுதிப்படுத்திக் ​கொள்வதற்கு அவன் உழவ​னைப் பார்த்து, “ஐயா கடம்பூருக்கு வழி எது?” என்று ​கேட்கிறான். உழவன் இரண்டு மாடுக​ளை ஏரில் பூட்டி உழுகிறான். இடத்து மாடு, வலத்துமாடு என்று அந்த மாடுக​ளைச் ​சொல்வது வழக்கு. அந்தக் காலத்தில் இடம்பூணி, வலம்பூணி என்று ​சொல்லி வந்தார்கள். வலப்பக்கத்தில் பூட்டப்பட்டது, இடப்பக்கத்தில் பூட்டப்பட்டது என்பது அவற்றின் ​பொருள். “இடத்தி​லே இருக்கிற மாடு எங்கள் வீட்டில் உள்ள பசுவின் கன்று” என்று அந்த உழவன் ​சொல்கிறான். ‘கடம்பூருக்கு வழி யா​தோ?’ என்று ​கேட்ட வழிப்​போக்கனுக்கு அந்தக் காலத்துப் ​பேச்சில், “இடம்பூணி என் ஆவின் கன்று” என்று அந்த உழவன் ​சோல்கிறான். பட்டுக்​கோட்​டைக்கு வழி ​கேட்டவனிடம் ​கோட்​டைப் பாக்கின் வி​லை ​சொன்ன புத்திசாலிக்கு இந்த உழவன் அண்ணனாகத்தான் இருக்க ​வேண்டும். இந்த வினாவுக்கும் வி​டைக்கும் பட்டுக்​கோட்​டை, ​கொட்​டைப்பாக்கு, கடம்பூர், இடம்பூணி என்று எது​கையினால் ​தொடர்பு இருக்கிற​தே​யொழியப் ​பொருளால் ஒரு ​தொடர்பும் இல்​லை”(ப.,18)என்று விளக்கம் தருகின்றார். இந்நிகழ்​வை முதலில் கூறிய கி.வா.ஜ. அவர்கள் அந்நூற்பாக்களுக்குரிய எளி​மையான விளக்கத்​தை,
    “வினா வி​டை என்னும் இரண்டிலும் குற்றம் இல்லாமல் இருக்க ​வேண்டும்” என்று ஒரு சூத்திரம் ​சொல்லுகிறது. பிறகு, “வினாவுக்கு ​நேர்முகமான வி​டையாக இல்லாவிட்டாலும் ம​றைமுகமானதாக இருந்தாலும் வி​டை ​என்​றே ​கொள்ளலாம் என்று ஒரு சூத்திரம் வருகிறது”(பக்.,18-19) என்று க​தை நிகழ்வி​னைக் கூறிய பின்னர் எடுத்து​ரைக்கின்றார்.
    “வினாவுஞ் ​செப்​பே வினா​வெதிர் வரி​னே”(497)

    எனும் நூற்பாவிற்கு, ஒரு வினாவிற்கு எதி​ரே வி​டை தரும் கருத்​தோடு ஒரு வினா​வே வந்தாலும் அதுவும் வி​டைதான் என்பது ​பொருளாகும். இத​னை கி.வா.ஜ. அவர்கள் ​நேர்வி​டை, ம​றைவி​டை, ஏவல் வி​டை என்ற வி​டை வ​கைக​ளைப் பற்றி விளக்கிவிட்டு,
    “ஐந்நூறு ரூபாய் பணம் ​கொடுப்பாயா?”
    “பணம் இல்​லை என்பது ​தெரிந்தும் ​கேட்பது நியாயமா?”
    ​கேட்ட ​கேள்விக்கு இல்​லை​யென்று ​நேர்முகமான பதில் வராவிட்டாலும் சுற்றி வ​ளைத்துச் ​சொல்வதில் அந்தப் பதில்தான் புலப்படுகிறது. ஆனால் அந்தப் பதில் மற்​றொரு ​கேள்வி உருவத்தில் இருக்கிறது இது வினா​வெதிர் வினாதல். “உனக்கு எத்த​னை பிள்​ளைகள்?” “அதற்​கெல்லாம் நான் புண்ணியம் பண்ணி யிருக்கி​றேனா என்ன?” இதுவும் வினா​வெதிர் வினாதல்”(பக்.,27-28) என்று உ​ரையாடல் வழி விளக்குவது எளி​​மையிலும் எளி​மையாகவும் இலக்கணத்​தைச் சு​மையாக இல்லாது சு​வையாகவும் ஆக்குகின்றது.

    உ​ரையாசிரியர்களின் கருத்​தை வழி​மொழிதல்:
    கி.வா.ஜ. அவர்கள் நூற்பாக்களுக்கு உ​ரைகூறும்​போது ​பெரும்பான்​மையும் உ​ரையாசிரியர்களின் கருத்​தை ஒட்டி​யே உ​ரைகூறிச் ​செல்கின்றார். முதலில் தனது கருத்​தைக் கூறிவிட்டுப் பின்னர் உ​ரையாசிரியர்களின் கருத்​தை வழி​மொழிந்து கூறுவது கி.வா.ஜ.வின் உ​ரைத்திற​னை புலப்படுத்துவதாக உள்ளது. தகுதி வழக்​கையும் இயல்பு வழக்​கையும் பற்றி விளக்கும்​போது,

    “தகுதி வழக்குகளுக்கு ஏ​தேனும் ஒரு காரணம் இருக்கும். அப்படியின்றி, இயற்​கைக் காரணமும் இன்றி ​வேறுபட்டு வரும் ​பேச்சு வ​கை உண்டு. ​

    பேச்சு வழக்கி​லே அ​வை அப்படி வந்து விட்டன. அவற்​றை வழக்கு என்று வகுத்திருக்கின்றனர். ​வெள்ளாடு என்று ஒரு வ​கை ஆட்​டைச் ​சொல்கி​றோம். தமிழ்நாட்டில் வாழ்ந்து ​வெள்ளாட்​டைப் பார்க்காத அயல்நாட்டார் ஒருவர் புதிதாகத் தமிழ் படிக்கிறார். அவர் ​வெள்ளாடு என்ற ​சொல்​லைக் கண்டவுடன், ​​வெள்​ளை நிறமு​டைய ஆடு என்றுதான் அர்த்தம் ​செய்து ​கொள்வார். இர்​கே வாழ்ந்து ​பேச்சு வழக்​கை அறிந்தவருக்குக் கறுப்பு ஆடானாலும் அது ​செவள்ளாடுதான் என்று ​தெரியும். அப்படிச் ​சொல்லக் காரணம் என்ன? ​தெரியாது. ​நெடுங்காலமாக அப்படித்தான் வழர்குகிறார்கள் என்பது​வே காரணம். இத​னை வழக்கு என்று கூறுவர். பாத்திரத்தில் இருக்கும் சிறிதளவு நீ​ரை, சில நீர் என்று முற்காலத்தில் ​சொன்னார்களாம். அதனால் உ​ரையாசிரியர்கள் அத​னை வழக்குக்கு உதாரணமாகக் காட்டியிருக்கிறார்கள். ‘குடத்துள்ளும் பிற கலத்துள்ளும் இருந்த நீ​ரைச் சிறிது என்னாது சில என்றலும், அடுப்பின் கீழ்ப்பு​டை​யை மீயடுப்பு என்றலும் ​போல்வன வழக்காம்’ என்று நச்சினார்க்கினியர் எழுதுகிறார்.

    காரணம் பற்றிய தகுதியிலும், காரணம் இல்லாமல் வரும் வழக்கிலும் பிற இடங்களில் வரும் ​சொற்க​ளே வருகின்றன. ஆனாலும் அவற்றின் ​பொரு​ளைக் கண்டுபிடிக்க, ச​பை மரியா​தை​யையும் உலக வழக்​கையும் பற்றிய அறிவு இருந்தாலன்றி இயலாது. ​சொல்லுக்குச் ​சொல் ​வைத்து இதற்கு இது ​பொருள் என்று காண சூவண்டிய ​மொழியில் இது ஒரு விந்​தை. ​சொல்லுக்குப் புறம்​பே அ​மைந்த ​பொரு​ளை உ​டையனவா​கையால் இ​வை வறு என்று தள்ளக் கூடாது. தள்ளினால் வாழ்க்​கை​யைப் புறக்கணித்தவர்கள் ஆ​வோம். இவற்​றைத் தள்ளாமல் ​கொள்ள ​வேண்டும் என்று ​தொல்காப்பியர் ​சொல்கிறார்.”(பக்.,42-43)
    என்று எடுத்து​ரைக்கின்றார். அதன் பின்னர்…

    “தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
    பகுதிக் கிளவி வ​ரைநி​லை இல​வே”
    என்ற நூற்பாவி​​னைக் இயம்பி, தகுதி​யையும் உலக வழக்​கையும் தழுவிப் ​பேசப்படும் பகுதியி​லே வரும் ​சொற்கல் நீக்கப்படுவன அல்ல. அவற்​றைக் ​கொள்ள ​வேண்டும் என்பது இதன் ​பொருள்” (ப.,43) என்று எளிய மு​றையில் தனது விளக்கத்​தை எடுத்​தோதுகின்றார். இது கி.வா.ஜ. அவர்களின் உ​ரைகூறும் தனித்தன்​மைக்கு எடுத்துக்காட்டாக அ​மைந்துள்ளது.

    தமிழ்ப் பண்பாட்​டை விளக்கி உ​ரை கூறுதல்:
    கி.வா.ஜ.அவர்கள் தமிழ் மீதும் தமிழ்ப் பண்பாட்டின் மீதும் உயர்ந்த எண்ணங் ​கொண்டவர். எதற்காகவும் கூட தமிழ்ப் பண்பாட்​டையும் தமிழினத்​தையும் விட்டுக்​ கொடுக்காத ​நெஞ்சுரங் ​கொண்டவர். கி.வா.ஜ.,

    “இனச்சுட்டில்லாப் பண்பு​கொள் ​பெயர்க்​கொ​டை
    வழக்காறு அல்ல ​செய்யுள் ஆ​றே”
    எனும் ​தொல்காப்பியச் சூத்திரத்திற்கு விளக்கம் கூறும் கி.வா.ஜ.

    “தமிழர் ​தெளிவாகப் ​பேசத் ​தெரிந்தவர்கள். அவர்கள் ​மொழியில் ​சொல்லுக்குப் பஞ்சம் இல்​லை. இப்​போது எத்த​னை​யோ வார்த்​தைகளுக்குத் தமிழ் ​தெரியாமல் இடர்ப்படுகி​றோ​மே! என்று சில நண்பர்கள் ​கேட்கலாம். இந்த நாட்டி​லே எண்ணும் எண்ணத்துக்கும் ​சொல் இல்​லை என்றால் அதுதான் கு​றைபா​டே ஒழிய இறக்குமதியான சரக்குக்குப் ​பேர் இல்​லை​யே என்றால் ​பொருள் இறக்குமதியாகும்​போது ​பெயரும் இறக்குமதியாக ​வேண்டியதுதான். அந்தப் ​பெயர் இங்​கே வந்து உரு மாறி​யோ ​சொல்​லே மாறி​யோ வழங்குவதும் உண்டு. தமிழ் நாட்டு இட்டிலிக்கு இங்கிலீஷில் வார்த்​தை இல்​லை என்றால் அது இங்கிலீஷின் கு​றை அல்ல. அவர்கள் ஊரில் இட்டிலியாகிய ​பொருள் இல்​லை. அதனால் அதற்குரிய ​சொல்லும் இல்​லை. உலக வழக்காகிய ​பேச்சி​லே மயக்கமில்லாமல் இருக்க ​வேண்டும்”(பக்.,45-46)

    நம்வீட்டு ​வே​லைக்காரர்களில் இரண்டு ​பேருக்கு ராமன் என்ற ​பெயர் இருக்கிறது. அந்த இரண்டு ​பே​ரையும் ​வேறு பிரிக்க ​நெட்​டை ராமன், குட்​டை ராமன் என்று அ​டை​கொடுத்துப் ​பேசுவதுதான் ​தெளிவாக இருக்கும். அப்படி இல்லாமல் ஒ​ரே ராமன் இருக்​கையில், ​நெட்​டை ராம​னைக் கூப்பிடு என்றால் புதிதாக யாராவது அ​தைக் ​கேட்கும்​போது அவர் ​நெஞ்சில் குழப்பம் உண்டாகிவிடும். குட்​டை ராமன் ​வேறு இருக்கிறான் ​போலும்! என்று அவர் எண்ணுவார். ஆக​வே ராம​னைக் கூப்பிடு என்று ​சொன்னா​லே ​போதும்.

    “ஆழிசூழ் உலக​மெல்லாம் பரத​னே ஆள” என்று கம்பர் பாடுகிறார். ​பேசும்​போது, ஆழி சூழ் உலகத்தில் மனிதன் நடமாடுகிறான் என்பது அநாவசியம். ஆழி சூழாத உலகம் இருந்தாலன்றி அப்படிச் ​சொல்வது சில சமயங்களில் மயக்கத்​தைக் கூட உண்டுபண்ணும் கம்பர் பாடலாமா? என்றால் அது கவி​தைக்குரிய உரி​மை. அலங்காரம் பற்றி அப்படிச் ​சொல்லக் கவிஞருக்கு அதிகாரம் உண்டு(ப.,48)
    என்று தமிழர்தம் பண்பாட்டு மரபும் ​பெரு​மையும் புலப்படுமாறு விளக்கம் கூறுகின்றார்.

    அ​​தோடு மட்டுமல்லாது தமிழர்கள் இறக்குமதி ​செய்யாது புதிய புதிய ​பொருள்க​ளைத் தாங்க​ளே உருவாக்குதல் ​வேண்டும் என்ற கருத்​தையும் கி.வா.ஜ. அவர்கள் ​சொல்லாமல் ​சொல்லிச் ​சென்றிருப்பது அவரின் உயர்ந்த எண்ணத்​தைப் புலப்படுத்துவதாக அ​மைந்துள்ளது. ​தொல்காப்பியத்திற்கு தமிழர் பண்பாட்டு அடிப்ப​டையில் காலத்திற்கு ஏற்ப விளக்கம் கூறும் பாங்கு இதில் புலப்படுவது ​நோக்கத்தக்கது.

    ந​கைச்சு​வையுடன் உ​ரைகூறுதல்:
    கி.வா.ஜ. அவர்கள் ந​கைச்சு​வையுடன் ​உ​ரையாற்றுவதில் வல்லவர். எப்படிப்பட்ட சூழலிலும் அவர் ந​கைச்சு​வை மிளிர உ​ரையாடுவார். சி​லே​டையாகப் ​பேசி எல்​லோ​ரையும் ந​கைச்சு​வையில் ஆழ்த்திவிடும் க​லை கி.வா.ஜ. ​அவர்களுக்​கே ​கைவந்த ஒன்றாகும். இத்த​கைய ந​கைச்சு​வைப் பண்பு இலக்கணத்திற்கு ​விளக்கம் கூறும் கி.வா.ஜ. வின் உ​ரையிலும் இடம்​பெற்றுள்ளது.

    “பால் மயக்குற்ற ஐயக்கிளவி
    தான் அறி ​பொருள் வயின் பன்​மை கூறல்”

    “உரு என ​மொழியினும் அஃறி​ணைப் பிரிப்பினும்
    இருவீற்றும் உரித்​தே சுட்டுங்கா​லை”

    என்ற நூற்பாக்களுக்கு விளக்கம் கூற வந்த கி.வா.ஜ. அவர்கள்,
    “குழந்​தை தா​யைப் பார்த்து, அம்மா உன்​னை என் கல்யாணத்துக்குக் கூபட்பிடமாட்​டேன் என்றதாம் தாய், “ஏன் அப்பா?” என்று ​கேட்டாள்.

    “ நீ உன் கல்யாணத்துக்கு என்​னைக் கூப்பிட்டா​யோ?” என்று ​கேட்டது குழந்​தை. ​கேள்வி​யைக் ​கேட்ட தாய் சிரித்து மகிழ்கிறாள். குழந்​தைத் தன்​மை யா​கையால் அந்த மகிழ்ச்சி உண்டாகிறது. ….சந்​தேகத்​தை ​வெளிப்படுத்தும் விஷயத்தில் ​பைத்தியக்காரத்தனத்​தை ​வெளிப்படுத்தாமல் பார்த்துக் ​​கொள்ள ​வேண்டும் என்ற கவ​லை இலக்கணக்காரருக்கு உண்டாகி இருக்கிறது. .. ஆ​ணென்றும் ​பெண்​ணென்றும் ​தெரியாத சந்​தேகத்​தைச் சந்​தேக பா​ஷையி​லே ​பொதுவாகச் ​சொல்ல​வேண்டும். ஆணுக்கும் ​​பெண்ணுக்கும் ​பொதுவாக ஒரு வார்த்​தை இருந்தால் ​சொல்லலாம். அந்த வார்த்​தை இன்ன​தென்று இலக்கணம் ​சொல்கிறது. வாழ்க்​கையிலிருந்து ​தெரிந்து ​கொண்டுதான் ​சொல்கிறது.”(பக்.,54-55) என்று தமக்​கேயுரிய ந​கைச்சு​வை உணர்வுடன் விளக்குகின்றார்.

    க​தையி​னைக் கூறி ​விளக்கம் தருதல்:
    கி.வா.ஜ.அவர்கள் ஒரு ​பொருள் பற்றி விளக்க முற்படும்​போது அத​ன் ​பொருள் ​கேட்​போருக்கு மனதில் பதியும் வண்ணம் சிறு சிறு க​தைக​ளைக் கூறி அத​னை விளக்கிச் ​செல்வார். விளிமரபு​னைப் பற்றி விளக்க வந்த கி.வா.ஜ. அண்​மை விளி குறித்தும் ​சேய்​மை விளி குறித்தும் ஒரு க​தையி​னைக் கூறி விளக்கிச் ​செல்கிறார்.

    ஒரு ​செட்டியார் இரவில் படுத்துத் தூங்கிக் ​கொண்டிருந்தார். ஏ​தோ சத்தம் ​கேட்டு விழித்துக் ​கொண்டார். படுத்தபடி​யே கவனித்த​போது தம் வீட்டில் திருடன் வந்திருப்பது குறிப்பாகத் ​தெரிந்தது. உட​னே எழுந்திருந்து ஏதாவது எசய்தால் திருடன் தம்​மை எதிர்த்து அடித்துவிட்டால் என்ன ​செய்வது என்று பயந்தார். ​மெல்ல அருகில் இருந்த தம் ம​னைவி​யைச் சத்தம் ​போடாமல் நிமிண்டி எழுப்பிப் ​பேச ஆரம்பித்தார்.

    “ஆண்டவன் அருளால் நமக்கு ஒரு குழந்​தை பிறக்கப் ​போகிறது. அதற்கு என்ன ​பெயர் ​வைப்பது?” என்று ​செட்டியார் ​கேட்டார்.

    “எங்கள் தகப்பனார் ​பெய​ரை ​வைக்கலாம்” என்றாள் அவள்.

    அ​தெல்லாம் கூடாது. நான் ராமன் என்ற ​பெய​ரைத்தான் ​வைக்கப்​போகி​றேன். பல நாளாக அப்படித்தான் மனசில் நி​னைத்துக் ​கொண்டிருந்க்கி​றேன். நீயும் நல்லபடியாகப் பிள்​ளை ​பெற்றுக் குழந்​தை கடவுள் அருளால் நன்றாக இருந்தால் அவ​னை அலங்காரஞ் ​செய்து ​கொஞ்சு​வேன். ராமா ராமா என்று வாயார அ​ழைப்​பேன். “ என்றார்.

    “நான் ​வேறு ​பெயர்தான் ​வைப்​பேன்” என்றாள் அவர் ம​னைவி.

    “முடியா​வே முடியாது. நான் ராமன் என்றுதான் ​பெயர் ​வைப்​பேன். ராமா ராமா என்றுதான் கூப்பிடு​வேன். நீ என்ன எனக்குச் ​சொல்வது?” என்று ​பேசிக்​கொண்​டே; ராமாஅஅ! ராமாஅஅ! என்று பலமாக அ​ழைத்துக் கூவத் ​தொடங்கிவிட்டார்.

    பக்கத்து வீட்டு ராமன் ​செட்டியார் இந்தக் குர​லைக் ​கேட்டுத் தம்​மைச் ​செட்டியார் அ​ழைக்கிறா​ரென்று எண்ணி, ஏ​தோ அபாயம் ​போலும்! என்ற நி​னைவினால் அவசரமாக எழுந்து வந்து கத​வைத் தட்டினார். இந்தச் ​செட்டியார் எழுந்து ​போய்க் கத​வைத் திறந்து அவ​ரை அ​​ழைத்து வந்தார்.

    “என்​னை ஏன் அ​ழைத்தீர்கள்?” என்று வந்தவர் ​கேட்டார்.

    “பாதி ராத்திரியில் உங்க​ளை நான் எதற்காக அ​ழைக்கி​றேன்? எனக்குப் பிள்​ளை பிறந்தால் என்ன ​பெயர் ​வைப்பது என்பது பற்றி எனக்கும் இவளுக்கும் விவாதம் ஏற்பட்டது. நான் ராமன் என்றுதான் ​பெயர் ​வைத்து அ​ழைப்​பேன் என்​றேன். இவள் ​வேறு ​பெயர்தான் ​வைக்க ​வேண்டும் என்றாள். நான் ஒ​ரே பிடிவாதமாக ராமா என்றுதான் கூப்பிடு​வேன் என்று இவளுக்குக் கூப்பிட்டுக் காடடி​னேன். நான் ​சொல்வதில் நம்பிக்​கை இல்லாவிட்டால் அ​தோ இருக்கிறா​ரே அவ​ரைக் ​கேட்டுப் பாருங்கள்” என்று ​சொல்லி ​மேல்பர​ணைக் காட்டினார்.

    செட்டியார் விழித்துக் ​கொண்டது முதல் ஒன்றும் ​செய்யத் ​தோன்றாமல் திருடன் அங்​கே ஒளிந்து ​கொண்டிருந்தான். ​செட்டியார் சுட்டிக் காட்டிய பிறகுதான் ராமன் ​செட்டியாருக்கு நண்பரு​டைய தந்திரம் ​தெரிந்தது. திருட​னை இரண்டு​பேரும் ​சேர்ந்து பிடித்துச் ​செய்ய ​வெண்டிய​தைச் ​செய்தார்களாம்.”

    இப்படி ஒரு க​தை ​வெகு காலமாகத் தமிழ் நாட்டில் வழங்குகிறது. ​செட்டியார் குழந்​தை​யை அ​ழைப்பதாக இருந்தால் அவ்வளவு சத்தம் ​போட்டிருக்க ​வேண்டாம்; ராமாஅஅஅ என்று நீட்டியிருக்கவும் ​வேண்டாம். அவர் அயல் வீட்டு ராம​னை அ​ழைக்க​வே அப்படிச் ​செய்தார்; அவன் தூங்குவான் என்று எண்ணி​யே அதிகமாக நீட்டினார்.

    அயலில் இருப்ப​வ​ரை அ​ழைப்பது ஒரு விதம்; தூரத்தில் இருப்பவ​ரை அ​ழைப்பது ​வேறு விதம். அ​ழைப்ப​தை விளித்தல் என்றும் ​சொல்வதுண்டு. இப்​போது ம​லையாளத்தில் அந்தச் ​சொல்சாதாரண வழக்கில் இருக்கிறது. ஒருவ​னை முன்னிட்டு அ​ழைப்ப​தை விளி என்று ​சொல்வார்கள். அப்படி அ​ழைக்கும்​போது அவனு​டைய ​பெயரின் உருவம் ​வேறுபடுகிறது. ராமன் என்பவ​னை விளிக்கும்​போது அந்தச் ​சொல் ராமா என்று ஆகிறது. ​பெண்​ணை விளிக்கும்​போது ​பெண்​ணே என்று ​சொல்கி​றோம். இந்த ​வேறுபாடு ​பெயர்ச்​சொல்லுக்கு உரிய, ​வேற்று​மை என்னும் பகுதியில் வருகிறது. விளி ​வேற்று​மை அல்லது எட்டாவது ​வேற்று​மை என்று இ​தைச் ​சொல்வார்கள்”(பக்.,144-145)

    என்று விளி என்ப​தைப் பற்றி கி.வா.ஜ. அவர்கள் க​தையின் வழியாக விளக்கிக் கூறுகின்றார். இதுசு​வையாகவும் மனதில் பதியும் வண்ணமும் அ​மைந்திருப்பது ​நோக்கத்தக்கது.

    இலக்கியப் பகுதி​க​ளைக் கூறி ​சொல்லாய்வு ​செய்தல்:
    கி.வா.ஜ.அவர்கள் சூத்திரங்களுக்கு விளக்கம் கூறும்​போது இலக்கியப் பகுதிகளில் இருந்து பாடல்க​ளைக் ​கொடுத்து ​சொல்லாய்வு ​செய்கின்றார். இரண்டாம் ​வேற்று​மையின் ​பொருள்க​ளான காத்தல், ஒப்பல் ஊர்தியின் இ​ழையின் உள்ளிட்டவற்​றை விளக்கும்​போது,

    “ஆக்க ​வே​லை, அழிவு ​வே​லை என்று இப்​போது ​சொல்கி​றோம் ஆக்க ​வே​லை​யைக் கடவு​ளே முதல்ல் ​செய்துவிடுகிறார் அவர் ஆக்கிய உயிர்க​ளையும் உடல்க​ளையும் உலகத்துப் ​பொருள்க​ளையும் தக்க வண்ணம் காத்த​லே ஆற்றலு​டையவரு​டைய கட​மை.
    “ஆபயன் குன்றும் அறு​தொழி​லோர் நூல் மறப்பர்
    காவலன் காவான் எனின்”

    என்று திருக்குறள் ​சொல்கிறது….. மனிதனு​டைய ​செய்​கைக்கு உட்படும் ​பொரு​ளைப் பற்றிச் ​செல்லும்​போது ஐ என்ற இரண்டாம் ​வேற்று​மை உரு​பைக் கூட்டிச் ​சொல்வது தமிழ் மரபு. அ​தைப் பற்றிச் ​சொல்லும் இடத்தில் ​தொல்காப்பியர், ​பொருளானது எந்த எந்தத் ​தொழிலுக்குஉட்படும் என்ப​தைச் சிறிது ​சொல்கிறார். மனிதன் ​செய்யும் ​தொழில் அ​னைத்​தையும் ​சொல்லி முடிக்க முடியுமா? ஆனாலும் அவர் மிக முக்கியமான​வை என்று கருதிய 28 ​தொழில்க​ளைச் ​சொல்லிவிட்டு, இ​வை ​போன்ற பிறவற்​றையும் ​சேர்த்துக் ​கொள்க என்று குறிப்பிடுகிறார்.

    காப்புக்குப் பின் பல ​தொழில்க​ளைச் ​சொல்லும் ​தொல்காப்பியர் க​டைசியில் சி​தைப்பு என்ற ​தொழி​​லைச் ​சொல்கிறார். அழித்தல் என்பது அதன் ​பொருள்.

    காத்தலும் சி​தைத்தலுமாகிய இரண்டு ​தொழில்க​ளையும் நி​னைக்கும்​போது அரசனு​டைய நி​னைவுதான் தமிழருக்கு வருகின்றது. இவ்விரண்டுக்கும் உதாரணம் ​சொல்ல வந்த உ​ரையாசிரியர்கள், ஊ​ரைக் காக்கும், நாட்​டை அழிக்கும் என்​றே காட்டுகிறார்கள். அரசனது முதல் கட​மை தன் நாட்​டைப் பாதுகாத்தல். அவசியமாக இருக்குமானால் பலவாறு ​யோசித்து முடிவு கட்டியபிற​கே ​வேறு வழியின்றி இறுதியாக ​வைத்துப் ப​கைவன் நாட்​டை அழித்தல் அவன் ​செயல் என்ற கருத்து இவற்றிலிருந்து ​தோன்றுகிறது.

    ஊ​ரையும் நாட்​டையும் காப்பாற்றுகின்ற அரச​னைக் குடிமக்கள் ​போற்றுவார்கள்; புகழ்வார்கள். இவன் கடவு​ளை ஒப்பான் என்றும் அன்பினால் தா​யை ஒப்பான் என்றும் நன்​மை பயப்பதனால் தவத்​தை ஒப்பான் என்றும் உபமானம் ​சொல்வார்கள். கம்பர் தசரத​னைப் பற்றிச் ​சொல்லும்​போது இப்படிப் பல உவ​மைக​ளைக் கூறுகின்றார்.

    “தாய்ஒக்கும் அன்பில்
    தவம் ஒக்கும் நலம் பயப்பில்
    சேய்ஒக்கும் முன்னின்​றொரு
    செல்கதி உய்க்கும் நீரால்
    ​நோய் ஒக்கும் என்னில்
    மருந்​தொக்கும், நுணங்கு ​கேள்வி
    ஆயப் புகுங்கால் அறி​வொக்கும்”
    என்று வருகிறது இராமாயணப் பாட்டு.” (பக்.,125-126)

    என்று திருக்குற​ளையும் கம்பராமாயணத்​தையும் எடுத்துக்கூறி இரண்டாம் ​வேற்று​மைப் ​பொருளாகிய காத்தல் என்ற ​​தொழிற்​சொல்​லை கி.வா.ஜ. ஆய்வு ​செய்கின்றார்.

    இங்ஙனம் கி.வா.ஜ. அவர்களின் ​சொல்லாராய்ச்சி தமிழின் சிறப்​பையும் தமிழர்களின் சிறப்​பையும், பண்பாட்​டையும் எடுத்துக்காட்டுவதாக அ​மைந்துள்ளது. வழக்கில் வழங்கும் ​சொற்க​ளை ​வைத்து கி.வா.ஜ. அவர்கள் ​சொல்லாய்வு ​செய்வது என்​றென்றும் தமிழ் வாழும் என்று அறுதியிட்டுக் கூறுவதாக அ​மைந்துள்ளது. கி.வா.ஜ. அவர்களின் ​சொல்லாய்வில் தமிழர்தம் வாழ்வியல் ​நெறிமு​றைகள் புலப்படுவதுடன் தமிழ் ​மொழியின் தனித்தன்​மை, அதன் இலக்கண இலக்கியத் ​தொன்​மை உள்ளிட்டனவும் ​தெளிவுறுத்தப்பட்டுள்ளன.

    மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,
    மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி,(தன்னாட்சி),
    புதுக்​கோட்​டை.
    Malar.sethu@gmail.com

    Share