Author: காயத்ரி பாலசுப்ரமணியன்

  • வார ராசி பலன் (அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை)

     

    காயத்ரி பாலசுப்பிரமணியன்

    மேஷம்: சரளமான பண வரவால் பணியில் உள்ளவர்களின்  மனதில் சந்தோஷம் தங்கும். பெண்கள் நம்பிக்கையுடன் தங்கள் பணிகளில் ஈடுபட்டால் எதிலும் வெற்றி பெறலாம். மாணவர்கள்  படிப்போடு, தங்கள் ஆக்கப்பூர்வமான  எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுத்தால், உயர்வு நிச்சயம்! பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, உடன் இருப்பவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அதிலும்  ஒரு எல்லைக் கோடு இருப்பது அவசியம். பொறுப்பான பதவியில் உள்ளவர்கள், , உடனிருப்பவர்களிடம், வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். வியாபாரிகள் எடுக்கும் முயற்சிகளுக்கேற்ப,  பழைய கடன்கள்வசூலாகும். . கலைஞர்களுக்கு விரும்பிய வீடு, வாகனம் ஆகிய்வற்றை வாங்கும் யோகம் உண்டாகும். .

    ரிஷபம்: இந்த வாரம், பெண்கள் சகோதர, சகோதரிகள் மூலமாக நன்மைகளைப் பெறுவார்கள். பெற்றோர்கள் காட்டும் பரிவும், அன்பும்,  மாணவர்களின் தோற்றத்தில், புதிய  பொலிவை உண்டாக்கும். கிடைக்கும் புத்திசாலிகளின் நட்பைத் தக்க வைத்துக் கொண்டால், பொது வாழ்வில் உள்ளவர்களின் வாழ்வு சிறப்பாக இருக்கும். சரளமான பணவரவால், கலைஞர்களின்  கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். வியாபாரிகள் திட்டமிட்டு வேலை செய்தால், ஏற்றுமதி – இறக்குமதி வியாபாரங்கள் வேண்டிய லாபத்தைக் கொடுக்கும். மாணவர்கள் வீண் செலவுகளைத் தவிர்த்தால்,  சேமிப்பு என்பது எளிதாகும். பணியில் உள்ளவர்களுக்கு,  வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
    சுய தொழில் புரிபவர்கள் தங்கள் வரவுக்குள் செலவை அடக்குதலே புத்திசாலித்தனம்.
     
    மிதுனம்: மாணவர்களுக்கு நல்லவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கப் பெறும் . பங்குச் சந்தையில் பெரிய அளவில் ஆதாயத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்கும் பலன் சொற்பமே. பிள்ளைகளின் போக்கில் ஏற்படும் மாறுதல்களால் உறவுகளின் நடுவில் சிறு சச்சரவு தோன்றி மறையும். வியாபார விருத்திக்காக எதிர்பார்த்திருந்த சலுகைகளை கிடைப்பதால், வியாபாரிகள் உற்சாகத்துடன் திகழ்வர்.பெண்கள் தங்கள் மனதுக்குகந்த துறையில் அதிக ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் செயலாற்றுவர். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்பை மற்றவர் ஊதி பெரிதாக்க இடம் கொடுக்காதீர்கள். சமாதானமாய்ப் போவது அனைவருக்கும் இதமாகத் திகழும். கலைஞர்கள் தன் பணியில் கவனமாக இருந்தால், அதிக லாபம் பெறலாம்.

    கடகம்: வியாபாரிகள் புதிய திட்டங்களை செயல்படுத்துதல், விரிவாக்கம் ஆகியவற்றை மனம் விரும்பியவாறு செய்து முடிப்பர். வெளிநாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களின் கனவு நிறைவேறும். வேலைப்பளு இருந்தாலும், பெண்கள் சத்தான உணவை உண்டு வந்தால், அயர்ச்சியும், ஆயாசமும் தலை காட்டாது. சக மாணவர்களோடு ஏற்படும் மனத்தாங்கலை மனம் விட்டுப் பேசித் தீர்த்துக் கொள்வதன் மூலம் நட்பில் விரிசல் விழாமல் பார்த்துக் கொள்ளலாம். வேலைக்கு செல்பவர் தெளிவான மனதுடன் பணியில் ஈடுபடுவது நல்லது. விட்டுக் கொடுத்தால் வெற்றி கிடைக்கும் என்பதை உணர்ந்த கலைஞர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்.

    சிம்மம்: குழந்தைகளுக்கு கண் சம்பந்தமான நோய்கள் தோன்றி மறையும். எனவே பெற்றோர்கள் பிள்ளையின் ஆரோக்கியத்தில் கவனமாய் இருப்பது அவசியம். பணம் மற்றும் செலவு சம்பந்தமான விஷயங்களில் சற்று சிக்கனமாய் இருந்தால், பெண்கள் கடன் தொல்லைகள் கட்டுக்குள் வைக்கலாம். மாணவர்கள் தாழ்வு மனப் பான்மையை தூர எறிந்துவிட்டு, துணிவுடன் செயல்பட்டால்,உங்கள் திறமைகளை பிறர் உணர்வார்கள். பங்குத்துறையில் உள்ளவர்கள் அளவான முதலீடு என்பதில் உறுதியாக இருப்பது நலம். இந்த வாரம் வெளியூர்ப் பயணங்களால் செலவுகள் கூடினாலும், நீங்கள் நினைத்த காரியத்தை திறம்பட முடித்து விடுவீர்கள்.

    கன்னி: பெண்களுக்கு மனதில் இருந்த கவலை நீங்குவதுடன் உறவுகளும் ஆதரவாய் இருப்பார்கள். காலத்தின் மதிப்புணர்ந்து செயல்பட்டால், மாணவர்களுக்கு நல்ல பலன் கிட்டும். மனைகள் வாங்குதல், விற்றல் ஆகியவற்றில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிட்டும்வரை அவசரப்பட வேண்டாம். முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர்கள், எச்சரிக்கையுடன் செயல்பட்டால், வரவிருக்கும் பிரச்சனைகளைத் தவிர்த்து விடுவதோடு நல்ல பெயரும் பெறலாம். கவனக் குறைவாகச் செயல்படும் பிள்ளைகளை இதமாகக் கண்டிப்பதே நல்லது. புதிய இடங்களுக்குச் செல்பவர்கள் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்தால், பயணங்கள் இனிமையாக அமையும்.

    துலாம்: சரக்கு வினியோகம் செய்பவர்கள் வெறும் வாய் வார்த்தையை நம்பி பொருள் கொடுப்பதைக் குறைத்துக் கொண்டால் நஷ்டம் இராது. வெளி ஊர்களில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பெண்கள் விலை உயர்ந்த மின்பொருள்களின் பழுதை நீக்குவதற்காக அதிக பணம், நேரம் இரண்டையும் செலவு செய்யும் சூழலுக்குத் தள்ளப்படுவார்கள். பணியில் இருப்பவர்கள் உடற்பயிற்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து வர, ஆரோக்கியம் உங்களின் பணிக்கு ஆதரவாக அமையும். வியாபாரிகளுக்கு வெளியூர்ப் பயணம் மூலம் அதிக லாபம், புதிய ஒப்பந்தம் ஆகிய இரண்டையும் பெறுவர். முக்கியமான செயல்களை விரைந்து முடிக்க, நட்பும், உறவும் கை கொடுப்பார்கள்.

    விருச்சிகம்: தொல்லைத் தந்து கொண்டிருந்த கடன்கள் படிப்படியாகக் குறைவதால், பெண்கள் புது தெம்புடன் வலம் வருவார்கள். வியாபாரிகளும், வேலைக்குச் செல்பவர்களும் தங்கள் வருமான வரி கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்வது நல்லது.அலுவலகத்தில் நிலவும் உட்பூசல்களில் தலையிடாதீர்கள். கணினித் துறையில் உள்ளவர்கள் நிறுவன வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதால் புதிய சலுகைகளைப் பெறுவார்கள். உயர்பதவி வகிப்பவர்கள் நிர்வாக விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். யாரையும் குற்றம் சாட்டிப் பேசாமலிருந்தால், கலைஞர்களின் குடும்பத்திலும், தொழிலிலும் குழப்பம் இராது.

    தனுசு: மாணவர்கள் பேச்சில் கவனம் செலுத்தவதைக் காட்டிலும், தங்கள் செயலில் கவனம் செலுத்தினால், பாராட்டு பல வந்து சேரும். வியாபாரிகள் புதியவர்களிடம் பெரிய பொறுப்புகளை ஒப்படைக்கும் முன் தகுந்த ஆலோசனை செய்வது அவசியம். சுய தொழிலில் இருப்பவர்கள் நிலையான வரவிற்கான வழி வகைகளை உறுதி செய்துகொள்வார்கள். பெண்கள் வேலைப்பளு ஆரோக்கியத்தோடு மோதாமல் இருக்க, சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். விலை உயர்ந்த சாதனங்களைக் கையாளும் போது கவனமாக இருந்தால், பணியாளர்களுக்கு மன உளைச்சலும், வீண் செலவுகளும் வராமலிருக்கும்.

    மகரம்: மாணவர்கள் அறிவுப்பூர்வமான கருத்துக்களை பயன்படுத்தி நல்ல பெயரைத் தட்டிக்கொண்டு செல்வர். பெண்கள் தங்கள் குடும்ப ஒற்றுமையை பிறர் குலைக்க இடம் கொடுக்க வேண்டாம். முதியவர்கள் எலும்புகளின் பலம் குறையாமல் பார்த்துக் கொண்டால், வேலைகளை சோர்வின்றி செய்யலாம். வியாபாரிகள் புது திட்டங்களில் உள்ள நிறை குறைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்பட்டால், அதிக லாபம் கிட்டும். இந்த வாரம் தந்தை வழி உறவுகள் சற்றே அதிருப்தியை காட்டுவார்கள். கலைஞர்கள் அடுத்தவரின் விஷயங்களில் தலையிடாமல் இருந்தாலே , பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

    கும்பம்: வியாபாரிகள் தேவைக்கு ஏற்றவாறு சரக்குகளை கொள்முதல் செய்தால், எதுவும் தேங்காமல் விற்றுவிடும். பெண்கள் வீடு பராமரிப்பிற்கென்று அதிக பணம் எடுத்து வைக்க வேண்டியிருக்கும்.  மாணவர்கள் சிறிய தவறுகளையும் உடனுக்குடன் சரிசெய்தால், படிப்பிற்கு எந்த பாதிப்பும் நேராது.  பொது வாழ்வில் உள்ளவர்கள் ஏட்டிக்குப் போட்டியான வாக்கு வாதங்களைத் தவிர்த்து, உறுதியான செயல்பாட்டை கடைபிடியுங்கள்.நல்ல பெயர் நிலைத்திருக்கும். மறைமுகப் போட்டிகளால், புதுமையான எண்ணங்களை நடை முறைப் படுத்துவதில் சில தடுமாற்றம் ஏற்பட்டாலும், தங்கள் திறமையால்,கலைஞர்கள் நினைத்த காரியத்தை முடித்து விடுவார்கள்.

    மீனம்: மாணவர்கள் பிறரை வெல்ல குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம்.பெண்கள் மனதில் பட்ட கருத்தை சொல்லும் முன் அக்கம் பக்கம் பார்த்து பக்குவமாகப் பேசுதல் அவசியம். பணியில் இருப்போர்கள் சில சில்லறைப் பிரசசனைகளை சமாளிப்பதோடு சில சமயம் உழைப்பிற்குரிய பாராட்டை கேட்டுப் பெற வேண்டியிருக்கும்.  வியாபாரிகள் வங்கிகள் தரும் அறிக்கைகளை பத்திரமாக வைத்தால், அபராதத்தைத் தவிர்க்க முடியும். கலைஞர்கள் தேவையற்ற செலவுகளைச் சுருக்கினால், பொருளாதாரம் கையைக் கடிக்காது. பொது வாழ்வில் இருப்போர்கள் பொறுப்புணர்ந்து செயல்படுபவரிடம் பணிகளைக் கொடுத்தால் வெற்றி உங்களுக்கே!  

    Share
  • நவராத்திரி நவிலும் தத்துவம்!

     

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மனிதன் வாழ்வில் பாடுபடுவது நல்ல நிலைமையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே! ஆற்றிவு பெற்று உயர்வுள்ளவனாய் விளங்கும் அவன் உலகில் தனித்து வாழ முடியாது. மற்ற உயிரினங்களைப்பேணி பாதுகாப்பதோடு,  அவனுக்கு பல வளங்களை அள்ளித்தரும் இயற்கையை பாழாக்காமல், சுற்றுப்புற சூழலோடு இணைந்து வாழ வேண்டும் என்பதையும்,  ஆறறிவு உடைய  அவன்   ஆன்மீகப் படிகளில் ஏறி இறைவனை அடைய வேண்டும் என்ற  இரண்டையும் படிப் படியாய் நமக்கு விளக்குவது நவராத்திரியில் வைக்கப்படும் கொலு பொம்மைகள்.
    முதல் படியில் நாம் வைப்பது  ஓரறிவு கொண்டபுல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள். .இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கும்,  மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை கொண்ட, கரையான், எறும்பு போன்ற பொம்மைகளும், நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட தும்பி, வண்டு பொம்மைகளும், ஐந்தாவது படியில் ஐந்தறிவு உடைய விலங்குகள், பறவைகள், பொம்மைகளும் இடம் பெற்றிருக்கும். இந்த ஐந்து படியில் உள்ள  மிருகங்கள், பறவைகள், பூச்சிகள் யாவும் மனிதனின் உணவுச் சங்கிலியில்   பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த சங்கிலி அறுபடாமல் மனிதன் பார்த்துக் கொண்டால்தான் அவன் உணவு, உடை, இருப்பிடம் எதிலும் சிக்கல் ஏதுமில்லாமல் இருக்கும். ஆனால் இந்த சங்கிலி சிதைக்கப்பட்டு விட்டது என்பதை   இயற்கை நமக்கு,  அவ்வப்போது, கன மழை,  பஞ்சம், கடும் வெய்யில், பனிப்பாறை உருகுதல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் மூலமாக நமக்கு எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டே இருக்கிறது!  ஆனால் மனிதன்தான் விழித்துகொள்வதில்லை. மனிதன் விழித்துக் கொண்டு , அவன் வாழ்வின் அடிப்படை ஆதாரமாக விளங்கும் இயற்கையை மனிதன் போற்றிக்காக்க வேண்டும் என்பதைத்தான் முதல் ஐந்து படிகளும் உணர்த்துகின்றன.
     ஆறாவது படியில் ஆறறிவு படைத்த  மனிதர்களின் பொம்மைகள் இருக்கும். மனிதன் படைக்கப்பட்டது இறையருளைப்பெற்று உய்ய வேண்டும் என்பதற்காகவே. இதற்கு அவனுக்கு வழிகாட்டியாய் விளங்குவது புராணங்கள் மற்றும் இதிகாசங்கள். அதனால்தான் ஏழாவது படியில் மனிதனுக்கு வழி காட்டியாக விளங்கும் மகான்கள், சித்தர்கள், முனிவர்கள் ஆகியோரின் பொம்மைகள் இடம் பெற்றிருக்கும். எட்டாவது படியில்  தேவர்கள் மற்றும் இறைவனின் பல்வேறு அவதார உருவங்களும், ஒன்பதாவது படியில்  நவராத்திரி நாயகிகளாய் விளங்கும்  துர்க்கை,  லட்சுமி,  சரஸ்வதி, ஆகியோருடன் பொம்மைகளும் இருக்கும்.
    ஆறாவது படியில் இருக்கும் மனிதன் ,  மன உறுதியுடன், ஒழுக்கமாகவும் இருந்து, ஏழு மற்றும்  எட்டாம் படிகள் காட்டும் வழியைப் பிடித்துக் கொண்டு விட்டால், ஒன்பது படியான இறைஅருளை எட்டிவிடலாம்! அதனால்தான் நவ ராத்திரி என்று ஒன்பது நாள் கொண்டாட்டம்.!  நவம் என்றால் ஒன்பது என்று நம்  எல்லோருக்கும் தெரியும்.   ஆனால் நவம் என்றால், கேண்மை, சினேகம், கார்காலம்,  புதுமை, பூமி என்று பல அர்த்தங்களை தமிழ்மொழி அகராதி நமக்குத் தருகிறது.  கேண்மை என்றால் உறவு,மனிதன் தன் உறவுகளையும், சினேகம் காட்டும் நட்பையும் அழைத்து பெருமைப்படுத்த இந்தப் பண்டிகையை  ஒரு நிலைக்களனாய்  உருவாக்கி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.  அத்துடன் கொலு கொண்டாடும் காலம் மழைக்காலமாகிய கார்காலம்.  புதுமை. என்றால் அற்புதம். பூமியில் மானிடராய் பிறந்த நமக்கு , நல்லபடியாக செல்லும் ஒவ்வொரு நாளும் புதுமைதான், பரம்பொருள்  நமக்கு அளிக்கும் அருட்கொடைதான்! அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒன்பது நாளும் சக்தியை விதவிதமாக ஆராதிப்போம். அன்னையவள் அருளைப் பெறுவோம்! 

    படத்துக்கு நன்றி.

    http://en.wikipedia.org/wiki/File:Navratri_Golu.jpg

    Share
  • வார ராசி பலன் 14.10.12 முதல் 20.10.12 வரை:

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: மாணவர்கள் மன தைரியம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் சமாளிக்கும் ஆற்றல் கிட்டும். பணியில் இருப்பவர்கள் உடன் பணி புரிபவர்களுடன் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பற்றிய அலசலைத் தவிர்ப்பது. சிறந்தது. பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறாமைக்காரர்களின் திட்டத்தை முறியடிக்கும் வகையில் உங்கள் ஆதரவைப் பலப்படுத்தினால் வெற்றி உறுதி. கலைஞர்களுக்குத் தட்டிச் சென்ற வாய்ப்புகள் திறமையின் அடிப்படையில் மீண்டும் உங்கள் வசமாகும். இந்த வாரம் பெண்களின் நிதி நிலையில் சிறிது அதிருப்தி இருந்தாலும், குடும்பச்செலவுகள் தடையின்றி நடக்கும்.

    ரிஷபம்: உறவினர்களுக்கு பணஉதவி செய்கையில் சற்று எச்சரிக்கையோடு இருந்தால், உறவுகள் எப்போதும் இணக்கமாக இருக்கும். சுய தொழில் புரிபவர்களின் புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பிருந்தாலும், லாபம் கையில் கிட்டும் வரை பொறுமை அவசியம். இந்த வாரம் உடன் பிறப்புகளுக்காக அதிக நேரமும், பணமும் செலவு செய்யும் சூழல் நிலவும். பணியில் இருக்கும் பெண்கள் எல்லா விஷ்யங்களிலும் கவனத்துடன் செயல்பட்டால், பிரச்னைகள், அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ளலாம். மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் பொழுது, தகுந்த பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்தல் அவசியம்.

    மிதுனம்: பொறுப்பான பதவி வகிப்பவர்கள் ரகசியமாய் வைக்க வேண்டிய செய்திகளை ரகசியமாகவே வைத்தால், நிம்மதியாய் உலா வரலாம். முதியவர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் தேவையான ஓய்வை அளித்தால் புத்துணர்வுடன் பணிகளில் ஈடுபட இயலும். பெண்கள் அறிமுகமில்லாத இடங்களில் இயன்ற வரை சொந்த விஷயங்களைப் பிறரிடம் பரிமாறிக்கொள்வதைத் தவிர்த்து விடவும். இந்த வாரம் சில சமயம் சரக்குகள் வரும் வரை வியாபாரிகள் சிறிது பதற்றத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் நிறை குறைகளை அறிந்து கொண்டால் அவர்களை நல்வழிப்படுத்துவது எளிதாகும்.

    கடகம்: சொந்த மனை வாங்க எடுக்கும் முயற்சிக்குத் தேவையான பணமும், ஊக்கமும் சேரும். பெண்கள் ஆரோக்கியம், உணவு இரண்டிலும் தனிக் கவனம் செலுத்தி வந்தால், அயர்வின்றி வேலைகளை முடிக்க முடியும். பணியில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கேற்ற இலாக்காவில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்கள், பண விஷயங்களில் எதையும் ஒரு முறைக்குப் பல முறை யோசித்துச் செய்வதே நல்லது. வேலைகளை முடிக்க முடியும். இந்த வாரம் வியாபாரிகள் எதிர்ப்புகளைச் சமாளித்து முன்னேறுவார்கள். மாணவர்கள் தேவையில்லாமல் அதிக நேரம் கண் விழித்தலைத் தவிர்த்தால், உடல் நலம் குன்றாமலிருக்கும்.

    சிம்மம்: பொது வாழ்வில் இருப்பவர்கள் பிறருக்கு வாக்குக் கொடுக்கும் முன் நிலைமையைச் சீர்தூக்கிப் பார்த்துச் செயல்படுங்கள். கசப்பான அனுபவங்களைத் தவிர்த்து விடலாம். இந்த வாரம் கடன் பிரச்னைகள் பெண்களுக்குச் சற்று தொல்லை கொடுத்தாலும், தங்கள் வாக்கு வன்மையால் அனைத்தையும் சமாளித்து விடுவார்கள். வியாபாரிகள் அரசாங்க விவகாரங்களில் தக்க ஆலோசனையுடன் செயல்படுவதன் மூலம் பண விரயத்தைக் குறைத்து விடலாம். பணிவாகப் பேச்சு, இதமான அணுகுமுறை இரண்டையும் மேற்கொள்ளும் கலைஞர்களுக்கு வாய்ப்புக்களோடு பணவரவும் வந்து சேரும்.

    கன்னி: பெண்கள் பண வரவிற்கேற்றவாறு செலவுகளை வரிசைப்படுத்திக் கொண்டால், குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவது கடினமாக இராது. மாணவர்கள் சிறிய விஷயங்களைப் பெரிதாக்கி வம்பு செய்பவரிடமிருந்து ஒதுங்கியிருப்பது நல்லது. பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இதம், கண்டிப்பு இரண்டையும் தக்கவாறு பயன்படுத்தினால், அவர்களால் பிரச்னைகள் ஏதுமிராது. பணியில் இருப்போர்கள், உயரதிகாரிகளிடம் பணிவாய் நடந்தால், உங்களுக்குத் தேவையான சலுகைகள் நழுவாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் வீண் பிடிவாதத்தைச் சற்று தளர்த்திக் கொண்டால், உரிய நேரத்தில் உதவிகள் கிட்டும்.

    துலாம்: இந்த வாரம் கூட்டுத் தொழிலில் அவசியமில்லாத மாற்றம் எதையும் செய்ய வேண்டாம். பெண்கள் புதிய உறவுகள், பண வரவுகள் இரண்டிலும் கவனமாய் இருந்தால், பிரச்னைகள் புதிதாய்த் தோன்றாமலிருக்கும். மாணவர்கள் நண்பர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அரவணைத்துச் சென்றால், உங்களுக்குத் தோள் கொடுக்கத் தயாராய் இருப்பார்கள். கலைஞர்கள் வெற்றி கிடைக்கும் வரை எதிலும் அலட்சியம் இன்றி கவனமாகச் செயல்பட வேண்டும். வியாபாரிகள் புதிய தொழில் துவங்குதல், பெரிய அளவில் விரிவாக்கம் செய்தல் ஆகியவற்றில் நிதானமாகச் செயல்பட்டால் பல நன்மை பெறலாம்.

    விருச்சிகம்: வியாபாரிகள் வங்கி கணக்கு வழக்கு ஆகியவற்றை நேரடியாகக் கவனித்து வந்தால், பொருளாதாரம் இறங்காமலிருக்கும். மாணவர்கள் வாகனங்களில் ஏற்படும் சிறு பழுதை உடனடியாகச் சீர் செய்தால், அதிகச் செலவுகள் இருக்காது. உயர் பதவியில் இருப்பவர்கள் முக்கியப் பொறுப்புகளைத் தள்ளிப்போடாமல் செய்து முடித்தால், வெற்றியும் தடையில்லாமல் உங்களைத் தேடி வரும். சிலருக்குப் பணியிட மாற்றமும், அதனால் அதிருப்தியும் ஏற்படலாம். முதியவர்கள் உடற் பயிற்சி, உணவுப் பழக்கம் இரண்டிலும் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளுங்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

    தனுசு: பெண்கள் மிதமான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் அஜீரணம், வயிற்று வலி முதலியவை தலை காட்டாமலிருக்கும். பணியில் இருப்பவர்கள் பணப்பரிமாற்றத்தால் நல்ல நட்பு கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் முக்கியமான அலுவல்களில் உங்கள் முழுக் கவனத்தையும் திருப்பினால், விரும்பிய பலன் கிடைப்பது உறுதி. வியாபாரிகள் வரவில் காட்டும் அக்கறையைச் செலவிலும் காட்டி வந்தால், பொருளாதாரம் கையைக் கடிக்காமல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கருத்துக்கு இனிமைப் பூச்சு கொடுத்தால், எதிராளிகளையும் எளிதில் வென்று விடலாம்.

    மகரம்: வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் பெற, வியாபாரிகள் அவ்வப்போது தேவையான புதுமைகளைப் புகுத்தினால் நல்ல பலன்களை அடையலாம். பெண்கள் அடிக்கடி இல்லத்தில் பயன்படுத்தும் மின் சாதனங்களை நல்ல முறையில் பராமரித்து வந்தால், வீண் செலவுகள் கணிசமாகக் குறையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உங்கள் கோப தாபங்கள் வார்த்தைகளில் பிரதிபலிக்காமலிருந்தால், நீங்கள் நினைத்தபடி உதவிகள் பெறுவது எளிதாகும். பணியில் இருப்பவர்கள் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு சிபாரிசு செய்வதைத் தவிர்த்து விட்டால், வீண் தலைவலி உங்கள் அருகே வராமலிருக்கும்.

    கும்பம்: கலைஞர்கள் தேடி வரும் வாய்ப்புகளைத் தங்கள் வளர்ச்சிக்கு அடித்தளமாக மற்றிக் கொள்வதன் மூலம் அதிக நன்மைகளை அடையலாம். வேலைக்குப் போகும் பெண்கள் அலுவலகம், இல்லம் இரண்டிடத்திலும் உள்ள பணிச்சுமையைச் சமாளித்து நடந்து கொள்ள வேண்டியிருக்கும். வியாபாரிகள் பணத்தைக் கையாளும் போது ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்த பின் பட்டுவாடா செய்தால் பணக் கஷ்டம், மனக்கஷ்டம் இரண்டையும் தவிர்த்து விடலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருந்தால் இழப்புகளும் நஷ்டங்களும் குறையும்.

    மீனம்: இது வரை நெருக்கம் காட்டி வந்த உறவுகள் இந்த வாரம் சற்று விலகியே இருக்கும். பெண்கள் உங்கள் சக்திக்கு மீறிக் கடன் வாங்கிச் செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் புதிய இடங்களில் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் இருந்தால், சிக்கல்களை எளிதில் சமாளிக்க முடியும். பணியில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் திருப்தியைச் சம்பாதிக்க சற்று அதிகமாகப் பாடுபட வேண்டியிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் உடல்நலம், மன நலம் இரண்டையும் நல்ல விதமாகப் பராமரித்து வந்தால், அவர்களின் பாதையில் வெற்றியும், வாழ்த்தும் வந்து சேரும்.

    Share
  • வார ராசி பலன் 07.10.2012 முதல் 13.10.2012 வரை

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்: மாணவர்கள் சீதோஷ்ண நிலைமைக்கு ஏற்ற உணவு வகைகளை உண்பது நல்லது. பெண்கள் வீண் செலவுகளைக் குறைப்பது மூலமாகப் பணத் தட்டுப்பாட்டையும், தேவையற்ற மன உளைச்சலையும் குறைக்கலாம். வியாபாரிளுக்குக் கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை மாறி, நீண்ட நாள் கடன் பிரச்சினைகள் குறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், பங்குதாரர்களுடன் அனுசரித்துப் போனால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள், அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனமாக இருந்தால், வேலைகள் தேங்காமலிருக்கும். கலைஞர்களுக்கு வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் நல்ல பலன் கை மேல் கிடைக்கும்.

    ரிஷபம்: பிள்ளைகள் மூலம் பெற்றவர்களின் சந்தோஷமும், மரியாதையும் கூடுவதோடு, இந்த வாரம் சற்றுச் செலவுகளும். கூடும். மாணவர்களுக்கு உல்லாசப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும் உறவுகள் நடுவே சிறுசிறு விஷயங்களுக்குக்காகக் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அதனால் உறவுகளிடம் பெண்கள் பண விவகாரங்களில், எச்சரிக்கையுடன் செயல்படவும். வியாபாரிகளுக்கு, வேண்டிய சலுகைகள் வந்து சேரும். முதியவர்களுக்கு, அதிகப்படியாக இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். சுய தொழில் செய்பவர்களின் பண வரவு திருப்திகரமாக இருக்கும். கலைஞர்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். .

    மிதுனம்: பங்குச் சந்தை, பணம் கொடுக்கல்-வாங்கல் எதுவாக இருந்தாலும் வியாபாரிகள் தங்கள் கணக்கு வழக்குகளை முறையாகப் பராமரித்து வந்தால் வீண் அபராதத்தைத் தவிர்க்கலாம். சுய தொழில் புரிபவர்கள், புதிய முதலீடுகளில் கவனமாய் இருந்தால், எதிர்பார்க்கின்ற லாபம் கிட்டும். மாணவர்கள், உடனிருந்து தொல்லை தருபவர்களிடமிருந்து விலகி இருப்பது புத்திசாலித் தனம். பொது வாழ்வில் இருப்பவர்கள், உண்மையான திறமைக்கும், நேர்மைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்வரை பொறுமை காக்கவும். கலைஞர்கள் பயணங்களின்போது புதியவர்களிடம் அதிக நெருக்கம் காட்ட வேண்டாம். பணிபுரிவோருக்கு, உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லை என்ற குறை அவ்வப்போது வந்து போகும்.

    கடகம்: மாணவர்கள், இணக்கமாய் நடந்து கொள்வதில் கவனமாய் இருந்தால் உடனிருப்பவர்களின் மூலம் கிடைக்கும் உதவி உங்களுக்குச் சாதகமாய் இருக்கும். சிறிய வேலைகளை முடிப்பதற்கான அலைச்சல் அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதால், பணியில் இருப்பவர்கள், அதிலும் கவனமாக இருப்பதே புத்திசாலித்தனம். கர்ப்பிணிப் பெண்கள், ஆயாசம் தோன்றாத வகையில் சத்தான உணவு வகைகளை உண்ணவும். பொது வாழ்வில் உள்ளவர்கள், பணப்புழக்கத்தில் உள்ள பிரச்சினைகளை நிதானமாகக் கையாளவும். கலைஞர்களுக்குப் புதிய நட்புகள் கிடைக்கும். எனினும் அளவோடு பழகுதல் நல்லது. பங்குதாரகள் இடையே கருத்து வேறுபாடு வரலாம். எனவே வியாபாரிகள் பக்குவமாக நடந்து கொள்ளவும்.

    சிம்மம்: வேலையில் இருப்பவர்கள், மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையைத் திறமையுடன் செய்து, பாராட்டுக்களைப் பெறுவார்கள். படிப்பு விஷயங்களில் சிறிது மந்த நிலை ஏற்பட்டாலும், மாணவர்கள் உங்கள் விடா முயற்சியை மேற்கொண்டால், இந்த நிலைமாறி விடும். பொது வாழ்வில் உள்ளவர்கள், அதிக அலைச்சல் அறிமுகமில்லாத புதிய உணவு வகைகள் ஆகியவற்றை விலக்குவது நலம். பெண்கள், செலவுகளில் சிக்கனமாக இருப்பது புத்திசாலித்தனமாகும். வியாபாரிகள், வாடிக்கையாளர்களின் வரவுக்கு ஏற்றவாறு சரக்குகளைக் கொள்முதல் செய்து கொண்டால், வருகின்ற லாபம் சீராக இருக்கும். கலைஞர்களுக்கு, அதிக முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறும்.

    கன்னி : பெண்கள் எல்லாத் தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவார்கள் சுய தொழில் புரிபவர்களுக்குப் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்றாலும் அதற்குரிய பண வரவு கிடைப்பதில், சிறிது தொய்வு உண்டாகும். கலைஞர்கள், ஆடம்பர செலவைச் குறைப்பது புத்திசாலித் தனம். பணியில் இருப்பவர்கள், பித்தம், தொடர்பான உபாதைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம். மாணவர்கள், எடுக்கும் பணியில் சிரத்தை எடுத்துச் செய்தால், வேண்டிய பாராட்டும் தானே வந்து சேரும். பொது வாழ்வில் உள்ளவர்கள், புதிய சொத்து வாங்கும் எண்ணங்களைத் தள்ளிப்போடுவது நல்லது. வியாபாரிகள், திறமையை முழு அளவில் பயன்படுத்தினால் நல்ல வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.

    துலாம்: இந்த வாரம், பெண்கள், எதிர்பார்த்த வகையில் விஷயங்கள் அமையாமல் சிற்சில பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டி வரலாம். பொறுப்பில் உள்ளவர்கள், திட்டங்கள் நிறைவேறும்வரை பொறுமையாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படுவது அவசியம். பணியில் உள்ளவர்கள், பண விவகாரங்களில் விழிப்புடன் இருந்தால், அமைதியாக வேலைகளில் ஈடுபட முடியும். வியாபாரிகள், அவ்வப்போது வழக்குகளில் போக்கைக் கவனித்து வருவது அவசியம். கலைஞர்கள், உடன் இருப்பவர்களோடு அனுசரித்து நடந்து கொண்டால், உங்கள் முயற்சிக்குத் தகுந்த பலன்கள் ஓரளவு கிடைக்கும் மாணவாகள் மனதை ஒருநிலைப்படுத்திப் படிப்பதில், உறுதியாக இருந்தால் சுலபமாக அதிக மதிப்பெண்கள் எடுக்கலாம்.

    விருச்சிகம்: நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் வாய்ப்புக் கிடைப்பதால், மாணவர்களுக்கு இது மகிழ்ச்சி நிறைந்த வாரமாய் அமையும். வியாபாரிகள் கொடுக்கல்- வாங்கலில், கவனமாக இருந்தால், லாபம் குறையாமல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள், வலிய உறவு கொண்டாட வருபவர்களிடமிருந்து விலகி இருப்பதே நல்லது. இழுபறியாக இருந்த வழக்குகளில், நல்ல சாதகமான முடிவுகள் ஏற்படும். சுய தொழில் செய்பவர்கள், மெத்தனமாக இருந்தால், கையில் உள்ள பணம் தண்ணீராய்க் கரையும். பெண்கள் குடும்பச் சூழலுக்கேற்றாற்போல் வளைந்து கொடுத்தால், காரியங்களைச் சாதிக்கும் வழி எளிதாகும். இந்த வாரம், உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும்.

    தனுசு: மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கடினமான வேலைகளில், ஈடுபட்டிருப்பவர்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் வேலைகள் தேங்காமல் இருக்கும். பங்குதாரர்கள் திடீரென்று விலகிப் போகும் சூழல் உருவாகலாம். அதனால் வியாபாரிகள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள் கடன் அட்டைகளைப் பயன்படுத்திப் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கவும். பொதுவாழ்வில் இருப்பவர்கள், சாமர்த்தியமாகச் செயல்பட்டால், எதிரிகளை எளிதில் வெல்ல முடியும் பெற்றவர்கள் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பெண்களுக்குப் பிரியமானவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.

    மகரம்: பொது வாழ்வில் இருப்பவர்கள், சிக்கலான விஷயங்களில், இறங்கும் முன் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. கலைஞர்களுக்குத் திடீர் பண முடை மனக் கிலேசத்தை ஏற்படுத்தும். இந்த வாரம் பெண்கள் நினைத்தது போலக் காரியங்கள் நடக்காதது ஏமாற்றத்தை உண்டாக்கும். அதனால் பொறுமையுடன் இருந்து வருவது அவசியம். மாணவர்கள் .தன்னம்பிக்கையுடன் பாடங்களைப் படித்து வர கூடுதல் மதிப்பெண்களோடு பாராட்டும் கிடைக்கும். வியாபாரிகள் நிதானத்துடன் செயல்பட்டால் பணப்பற்றாக்குறை என்னும் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும். அதிகாரத்தில் இருப்பவர்கள், இதமான அணுகுமுறையை மேற்கொண்டால், காரியங்களை எளிதில் சாதித்துக் கொள்ளலாம்.

    கும்பம்: மாணவர்கள் தங்கள் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கும் நட்பு வட்டத்தை விட்டு விலகி இருந்தால், படிப்பில் முழுக்கவனம் செலுத்த இயலும். சுப காரியங்கள் நினைத்தது மாதிரி நடப்பதால், பெண்களுக்கு இது சிறப்பான வாரமாக அமையும். படிப்புக்காக வெளியூர் சென்றிருந்தவர்கள் மீண்டும் வந்து சேர்வதால் குடும்பத்தில், மகிழ்ச்சிக்கும், கலகலப்புக்கும் பஞ்சமிராது. பெண்கள், வாழ்க்கைத் துணையின் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், மருத்துவச் செலவுகளைத் தடுக்கலாம். சிறு சிறு போட்டிகள், பொறாமைகள் எழுந்தாலும், கலைஞர்கள் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது. கலைஞர்கள் வெற்றி கிட்டும் வரை, பொறுமை என்னும் தாரக மந்திரத்தைக் கடைப்பிடித்தால், சிறப்பான பலன்களைப் பெறலாம்.

    மீனம்: இந்த வாரம் பணியில் இருப்பவர்கள், எந்தக் காரியத்திலும் இயல்பான மனநிலையோடு செயல்பட முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. பெண்கள், குடும்ப அமைதிக்காக அதிக முயற்சி எடுத்தாலும் அவ்வப்போது சலசலப்பு தலைகாட்டும். பொது வாழ்வில் இருப்பவர்கள், உழைப்புக்குத் தரும் முக்கியத்துவத்தை ஓய்வுக்கும் தந்தால், ஆரோக்கியம் பொலிவுடன் விளங்கும். கலைஞர்கள், புதிய வீடு மாற்றம், மனை வாங்குதல் போன்றவற்றில், சற்று யோசனைக்குப் பின் செயல்படுதல் அவசியம். பொது வாழ்வில் உள்ளவர்கள், பிறரை நம்பி முக்கிய பொறுப்புகளைத் தருவதையும் தவிர்த்தால் சஞ்சலம், வீண் சங்கடம் ஆகியவற்றைத் தவிர்த்து விடலாம் மாணவர்கள், கருத்துடன் படிப்பில் ஈடுபடுவது அவசியம்.

    Share
  • வார ராசிபலன் 30.09.2012 முதல் 06.10.2012 வரை

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்: நெடுநாளாக மகப்பேறை எதிர்பார்த்திருந்த பெண்கள் தாயாகும் பாக்கியம் பெறுவதால், இல்லத்தில் இருக்கும் மகிழ்ச்சி, உள்ளத்திலும் நிறைந்திருக்கும்.பணியில் உள்ளவர்கள், கவனமாகவும், பொறுமையாகவும் இருந்தால், குழம்பிக் கொண்டிருந்த விவகாரங்களில் நல்லதொரு தீர்வு கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்கள், பிறர் உங்கள் குடும்ப விஷயங்களில் தேவையற்ற உரிமை எடுத்துக் கொள்ள இடம் தர வேண்டாம். மனதில் இருந்த குழப்பம் தானே விலகி விடும். கலைஞர்கள், வரவுக்கு மீறிய செலவு வைப்பவர்களை உங்கள் பக்கம் நெருங்க விடாதீர்கள். பணப்பற்றாக்குறை என்பதிராது. மாணவ மாணவியர் கிடைத்த சந்தர்ப்பத்தைத் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொண்டால், உங்களின் மேதாவிலாசம் மேலும் பெருகும். வியாபாரிகள் அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய கணக்கு வழக்குகளில் குளறுபடி இல்லாமல் பார்த்துக் கொண்டால், வீண் தண்டம் கட்டுவதைத் தவிர்த்து விடலாம்.

    ரிஷபம்: சரளமான பண வரவால் பெண்களின் மனதில் சந்தோஷம் தங்கும். மாணவர்கள் நம்பிக்கையுடன் தங்கள் பணிகளில் ஈடுபட்டால் எதிலும் வெற்றி பெறலாம். கலைஞர்கள், எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுப்பதால், வெற்றி வாய்ப்புக்கள் பல வந்து சேரும். பணியில் இருப்பவர்களுக்கு, மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம் பழகுவதில் ஒரு எல்லைக் கோடு இருப்பது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள், உடனிருப்பவர்களிடம், வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இந்த வாரம், வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டால் நிலைமையை ஓரளவு கட்டுக்குள் வைக்கலாம்.

    மிதுனம்: பொதுச் சேவை ஆற்றுபவர்கள் அலட்சியப் போக்கைத் தவிர்த்தால், வெற்றிப் படியில் எளிதாக ஏறலாம். மாணவர்கள், கல்விக்கான செய்முறைப் பயிற்சிகளில் தகுந்த விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம். இந்த வாரம் கடன் தொல்லையால் சில நிகழ்ச்சிகள் தள்ளிப் போக வாய்ப்பிருக்கிறது. பெண்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட வேலையில் கண்ணும் கருத்தாக இருந்தால், நல்ல பெயரைப் பெற இயலும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் எதிலும் கவனமாக இருந்தால், வருகின்ற லாபம் குறையாமல் இருக்கும். கலைஞர்கள் சின்ன விஷயங்களுக்குச் சுள்ளென்று கோபப்படுவதைத் தவிர்த்தல் அவசியம்.

    கடகம்: வெளிடங்களில் வேலைக்காகவும் படிப்பிற்காகவும் தங்கியிருப்பவர்கள் அதிகமாக ஆசைப்படுதலையும், வீண் செலவுகளையும் சுருக்கிக் கொண்டால், பற்றாக் குறையை ஓரளவு சமாளித்துவிட முடியும். யாரையும் குற்றம் சாட்டிப் பேசாமலிருந்தால், கலைஞர்களின் குடும்பத்திலும், தொழிலிலும் குழப்பம் இராது. பணியில் இருப்பவர்கள் கடனில் வண்டி வாங்குவதைச் சற்று ஆறப் போடவும். மாணவர்கள் திறமையோடு பொறுமையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நினைத்த காரியத்தைச் சாதிக்கலாம். வீடு, மனை ஆகியவற்றை வாங்கி விற்பவர்கள் அதிக லாபத்திற்கு ஆசைப்படாமலிருந்தால், தங்கள் பெயரை நிலை நிறுத்திக் கொள்ளலாம்.

    சிம்மம்: பணியில் இருப்பவர்கள் பிறருக்கு வழங்கும் பணம், ஆலோசனை இரண்டிலும் கவனமாய் இருப்பது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கென்று ஒரு வரையறை வைத்துக் கொண்டு செயல்படுவது புத்திசாலித்தனமாகும். உறவுகளின் வருகையால் பெண்கள் இல்லத்தில் சில இடையூறுகளை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டியிருக்கும். தொழிலாளர்கள் தங்களின் சலுகைகளை முறையாகப் பயன்படுத்துவது நல்லது. முதியவர்கள் எலும்பு சம்பந்தமான உபாதைகளை உடனுக்குடன் கவனித்து விடுவது நலம். இந்த வாரம் வியாபாரிகள் எதிர்பார்த்த வரவுகள் சற்றே தாமதமாகலாம். பிள்ளைகளின் நட்பு வட்டத்தின் மீது பெற்றோரின் கவனம் தேவை.

    கன்னி: பெண்கள் சொல்லும் வார்த்தை, செலவழிக்கும் பணம் இரண்டிலும் நிதானமாக இருங்கள். உறவுகள் கசக்காமலிருக்கும். வியாபாரிகள் புதியவரை நம்பிப் பொறுப்புக்களைத் தருவதைக் காட்டிலும் நேரடியாக நீங்களே கவனம் செலுத்தி வர, லாபம் தடையின்றி வரும். வேலை செய்யும் இடங்களில் தோன்றும் சிறு பிரச்னைகளைப் பொறுமையாகக் கையாண்டால், பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமாகும். சுய தொழில் புரிபவர்கள். தொழிலில் இருந்த பின்னடைவு, நெருக்கடி ஆகியவை நீங்கி, புதுத் தெம்புடன் செயல் படுவார்கள். கலைஞர்களுக்கு, எளிதில் முடியக் கூடிய வேலைகள் சில சமயம் வளர்ந்து கொண்டே போகும்.

    துலாம்: வாகனங்களைப் புதிதாக ஓட்டுபவர்கள், அதிக வேகத்தில் செல்வதை இயன்றவரை தவிர்ப்பது நலம். விளையாட்டுப் போட்டிகளை மாணவர்கள் நேர் வழியில் எதிர்கொண்டால் வெற்றி உறுதி! வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் சக ஊழியர்களினால் உருவாகும் பிரச்னைகளைச் சமாளிக்க நேரிடும். வயதான நோயாளிகள் தேவையான பரிசோதனைகளைத் தள்ளிப் போட வேண்டாம். கலைஞர்கள் தவறான வழிக்கு மாறாமலிருந்தால், உங்கள் பெயர், புகழ் இரண்டும் குறையாமலிருக்கும். பங்குத்துறையில் உள்ளவர்கள் அளவான முதலீடு என்பதில் உறுதியாக இருப்பது நலம்.

    விருச்சிகம்: கலைஞர்கள் தன்னுடைய பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், புதிய கதைகளைத் திரிப்பவர்களின் வாயைக் கட்டி விடலாம். பெண்கள் உறவுகளின் போக்கறிந்து பக்குவமாக நடந்தால், இல்லத்தில் அமைதி நிலவும். சுய தொழில் புரிபவர்கள் தொழில் வகையில் எந்த ஒரு முயற்சியையும் தக்க ஆலோசனையின் பேரில் செயல்படுத்தினால், நினைத்தவாறு லாபம் பெறலாம். கவலைகள் முன்னேற்றத்தின் வேகத்தைக் குறைக்காதவாறு மாணவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும். பணியில் இருப்பவர்கள் நிர்வாகம் மற்றும் உயர் அதிகாரிகளின் செயல் பாடுகள் பற்றிய அலசல்கள். விமர்சனங்கள் ஆகியவற்றில் ஈடுபடாமலிருப்பதே நலம்.

    தனுசு: நெருங்கிப் பழகிய பங்குதாரர்கள் கருத்து வேறுபாடால் உங்களை விட்டுப் பிரியலாம். எனவே வியாபாரிகள் எதிலும் நிதானமாய் இருப்பது நல்லது. பணி புரிபவர்கள் எந்த விஷயத்திலும் விடாப்பிடியாய் இருப்பதைக் குறைத்துக் கொண்டால் வாக்குவாதங்களும், வேதனைகளும் இராமல் வேலைகளை செய்ய முடியும். மாணவர்கள் விரும்பிய உணவு வகைகளை உண்பதிலும் ஒரு வரையறை வைத்துக் கொண்டால், ஆரோக்கியம் குன்றாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் செல்வாக்கைச் சிதறச் செய்யும் காரியங்களுக்கு ஆதரவு தருவதை அறவே தவிர்ப்பது புத்திசாலித்தனமாகும். முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் கலைஞர்கள் எச்சரிக்கையாய் செயல்படுவது அவசியம்.

    மகரம்: பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்ளாமல் விலகிச் செல்லும் நிலை நிலவினாலும், பெண்கள் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு, பிரச்னைகளைத் தீர்த்தால் உறவுகள் இதமாகத் திகழும். இந்த வாரம் பங்குதாரர்கள் இடையே வீண் சர்ச்சை, வேண்டாத சந்தேகம் ஆகியவை நுழைந்து மன அமைதியைக் கெடுக்கலாம். மாணவர்கள் படிப்பில் உள்ள கவனத்தைச் சிதறடிக்கும் விஷயங்களுக்குத் தலையசைக்காமலிருப்பது அவசியம். முயன்றால் முடியாதது இல்லை என்பதை உணர்ந்து, கலைஞர்கள் முழு மூச்சாகச் செயல்பட்டால் எடுத்த காரியங்களில் வெற்றி அடைவீர்கள். பணி புரிபவர்கள் வாக்கில் நிதானம், செயல்களில் பணி ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தால், சங்கடம் ஏதும் வரமல் சமாளித்து விடலாம்.

    கும்பம்: வியாபாரிகள் புதியவர்களை நம்பிப் பணம் கொடுக்காமலிருந்தால், நஷ்டங்களும், கஷ்டங்களும் உங்கள் அருகே வராது. பொது வாழ்வில் உள்ளவர்கள் மன உளைச்சல், சந்தேகம், குழப்பம் ஆகியவை வராதவாறு, பொறுமையுடனும், திறமையுடனும் செயல்பட்டு வந்தால், உங்கள் திறமைக்குரிய திறமைக்குரிய பாராட்டு கிடைக்கும். வேண்டாத தொல்லைகளால் சுறுசுறுப்பாக நடந்த சில பணிகளில் தேக்க நிலை உருவாகும். பொறுப்பான பதவி வகிப்பவர்கள் பணியாளர்களிடம் நயமாக நடந்து கொள்ளுங்கள். உங்களிடம் விசுவாசமாய் இருப்பார்கள். பெண்கள் உடல்நலம் பாதிப்பு ஏற்படாதவாறு, பணியில் தகுந்த மாற்றங்களை மேற்கொள்ளுங்கள். எல்லா வேலைகளும் சீராக நடக்கும்.

    மீனம்: முதியோர்களுக்கு, உடலில் சில அசௌகரியங்கள் தோன்றி மறையலாம். தகுந்த மருந்துகளை உட்கொண்டால், ஆரோக்கியம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். பெண்கள் கோப தாபங்களைக் குறைத்துப் பொறுமையாய் இருங்கள். குடும்பத்தில் பல பிரச்னைகள் தீர்ந்து விடும். இந்த வாரம் கவனத் தடுமாற்றம், மறதி ஆகியவை பொது வாழ்வில் உள்ளவர்களை அலைக்கழிக்கும். மாணவர்கள் இனிய அனுபவங்களைப் பெற்று மகிழ்வதோடு நெருக்கமானவர்கள் காட்டும் பாசமும் உங்களை உற்சாகப்படுத்தும். நம்பிக்கை வைத்தவர்களில் சிலர் ஏமாற்றங்களைத் தருவார்கள். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் முக்கியமான ஆவணங்கள், சாவிகள் ஆகியவற்றைப் பத்திரமாக வைப்பது அவசியம்.

    Share