Tag: அறிஞர் அண்ணா

  • C.N.Annadurai Speech in English on Indo-China war

    C.N.Annadurai Speech in English on Indo-China war

    1962இல் இந்தியா மீதான சீனப் படையெடுப்பு குறித்து ஆங்கிலத்தில் அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி இதோ.

    The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai Speech in English on Indo-China war during 1962.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாவின் மலேசிய வானொலி நேர்காணல் | 1965

    அண்ணாவின் மலேசிய வானொலி நேர்காணல் | 1965

    1965ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது மலேசிய வானொலி நிலையத்திற்கு அண்ணா அளித்த நேர்காணல் இது.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மலேசியாவில் அண்ணா உரை | துறைமுகத் தொழிலாளர் விழா

    மலேசியாவில் அண்ணா உரை | துறைமுகத் தொழிலாளர் விழா

    1965ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, மலேசியத் துறைமுகத் தொழிலாளர் விழாவில் பேசினார். மலேசியத் தமிழர்களுக்குத் தொலைநோக்குடன் கூடிய அறிவுரைகளை வழங்கினார். இது, மலேசியத் தமிழர் மட்டுமல்லாது, புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய உரை. அன்றைக்கு மட்டுமின்றி, இன்றைக்கும் பொருந்துகின்ற அண்ணாவின் உரையைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மலேசிய முஸ்லிம்கள் விழாவில் அறிஞர் அண்ணா பேச்சு

    மலேசிய முஸ்லிம்கள் விழாவில் அறிஞர் அண்ணா பேச்சு

    முஸ்லிம்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இல்லை. சில தலைமுறைகளுக்கு முன்பு சின்னச்சாமியாக இருந்தவர்கள் சிக்கந்தர் ஆகவும் இன்னாசிமுத்து ஆக இருந்தவர்கள் இப்ரஹீம் ஆகவும் மாறியவர்கள். இன்னொரு தப்பபிப்ராயம் இருக்கிறது. இஸ்லாத்தை வாளுடைய பலத்தைக் கொண்டு பரப்பியிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்படியானால், முகலாயர் ஆட்சியில் இந்தியா முழுவதும் முப்பது கோடிப் பேரும் முஸ்லிம்களாக ஆகியிருக்க வேண்டும். வாளோடு இருந்த காலத்தை விட, வாள் போன பிறகு தான் முஸ்லிம் சமுதாயம் வளர்ந்திருக்கிறது. எனவே இதுவும் பொருந்தாது.

    1965ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, மலேசிய முஸ்லிம்கள் விழாவில் அவர் ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறிஞர் அண்ணாவின் அனல் பறக்கும் பேச்சு | 1962

    அறிஞர் அண்ணாவின் அனல் பறக்கும் பேச்சு | 1962

    1962இல் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் அனல் பறக்கும் அதிரடிப் பேச்சு.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாவின் ஆங்கில நேர்காணல்

    அண்ணாவின் ஆங்கில நேர்காணல்

    அமெரிக்க, ஜப்பான் பயணங்களுக்குப் பிறகு சென்னை திரும்பிய அறிஞர் அண்ணா, அகில இந்திய வானொலி நிலையத்திற்கு ஆங்கிலத்தில் அளித்த நேர்காணல் இது. அந்த நாடுகளில் தாம் சந்தித்த மனிதர்கள், இடங்கள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பலவற்றையும் குறித்து இதில் பேசியுள்ளார்.

    The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai Interview in English to All India Radio on his visit to United States of America & Japan.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நான் இந்து மதத்தின் துப்புரவாளன் | அறிஞர் அண்ணா உரை

    நான் இந்து மதத்தின் துப்புரவாளன் | அறிஞர் அண்ணா உரை

    1967இல் காரைக்குடியில் உள்ள இந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் அண்ணா பங்கேற்றார். ‘அண்ணாதுரை மதத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது’ எனத் தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம் பேசினார். அதற்குப் பதில் அளித்து, பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தண்டவாளத்தில் படு | அண்ணா உரை

    தண்டவாளத்தில் படு | அண்ணா உரை

    ‘தண்டவாளத்திலே தலைவைத்துப் படு என்று சொன்னாலும் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பணியாற்று என்று சொன்னாலும் இரண்டையும் ஒரே விதமான ஆணை என்று ஏற்றுக்கொண்டு, நிறைவேற்றிக் கொடுப்பவன் என் தம்பி கருணாநிதி’ என்பது அண்ணாவின் பேச்சு. இதைப் பலரும் பல இடங்களில் மேற்கோள் காட்டிப் பேசுவார்கள். இதோ அண்ணாவின் குரலில் இதைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கலைஞர் கருணாநிதி பற்றிய அறிஞர் அண்ணாவின் உரை

    கலைஞர் கருணாநிதி பற்றிய அறிஞர் அண்ணாவின் உரை

    கலைஞர் கருணாநிதியின் 45ஆவது பிறந்தநாள் விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறிஞர் அண்ணாவின் காஞ்சி உரை

    அறிஞர் அண்ணாவின் காஞ்சி உரை

    மூதறிஞர் இராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் அண்ணா தலைமையிலான தி.மு.க., கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்தித்தது. 1962 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், இராஜாஜியுடன் ஒரே மேடையில் நின்று அண்ணா பேசினார். அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரை

    அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரை

    தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் அண்ணா அழகாகப் பேசக் கூடியவர். அண்ணாவின் ஆங்கிலப் புலமையும் பேச்சாற்றலும் ஆளுமைத் திறனும் புகழ் பெற்றவை. பாராளுமன்றத்திலும் வீறுடன் முழங்கியவர். சென்னை வழக்குரைஞர் சங்கத்தில் அண்ணா ஆற்றிய ஆங்கில உரையை இங்கே கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • முதலமைச்சர் அண்ணா வானொலி உரை

    முதலமைச்சர் அண்ணா வானொலி உரை

    தமிழ்நாட்டரசின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பேரறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு வானொலியில் ஆற்றிய உரை இங்கே. அன்று அவர் பேசிய பலவும் இன்றும் பொருந்துவது நம்மை வியப்பில் ஆழ்த்தும். 55 ஆண்டுகள் கடந்த பிறகும் உயிர்ப்போடு திகழும் இந்தக் குரலைக் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பேரறிஞர் அண்ணா உரை | இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு

    பேரறிஞர் அண்ணா உரை | இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு

    சென்னையில் 1968ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டில், பேரறிஞர் அண்ணா ஆற்றிய தலைமையுரை இங்கே.

    இந்தப் பதிவு, 2008ஆம் ஆண்டு, அண்ணாகண்ணன் ஆசிரியராக இருந்து தயாரித்த, தமிழ் சிஃபி அண்ணா நூற்றாண்டுச் சிறப்பிதழில், இணையத்தில் முதன்முதலில் வெளியானது.

    நன்றி – வீ.சு.இராமலிங்கம், செம்பியன் இராமலிங்கம், அறிஞர் அண்ணா பேரவை

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share