1965ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது மலேசிய வானொலி நிலையத்திற்கு அண்ணா அளித்த நேர்காணல் இது.
1965ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, மலேசியத் துறைமுகத் தொழிலாளர் விழாவில் பேசினார். மலேசியத் தமிழர்களுக்குத் தொலைநோக்குடன் கூடிய அறிவுரைகளை வழங்கினார். இது, மலேசியத் தமிழர் மட்டுமல்லாது, புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய உரை. அன்றைக்கு மட்டுமின்றி, இன்றைக்கும் பொருந்துகின்ற அண்ணாவின் உரையைக் கேளுங்கள்.
முஸ்லிம்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள் இல்லை. சில தலைமுறைகளுக்கு முன்பு சின்னச்சாமியாக இருந்தவர்கள் சிக்கந்தர் ஆகவும் இன்னாசிமுத்து ஆக இருந்தவர்கள் இப்ரஹீம் ஆகவும் மாறியவர்கள். இன்னொரு தப்பபிப்ராயம் இருக்கிறது. இஸ்லாத்தை வாளுடைய பலத்தைக் கொண்டு பரப்பியிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அப்படியானால், முகலாயர் ஆட்சியில் இந்தியா முழுவதும் முப்பது கோடிப் பேரும் முஸ்லிம்களாக ஆகியிருக்க வேண்டும். வாளோடு இருந்த காலத்தை விட, வாள் போன பிறகு தான் முஸ்லிம் சமுதாயம் வளர்ந்திருக்கிறது. எனவே இதுவும் பொருந்தாது.
1965ஆம் ஆண்டு இந்தியப் பாராளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த அறிஞர் அண்ணா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான் நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது, மலேசிய முஸ்லிம்கள் விழாவில் அவர் ஆற்றிய உரை.
அமெரிக்க, ஜப்பான் பயணங்களுக்குப் பிறகு சென்னை திரும்பிய அறிஞர் அண்ணா, அகில இந்திய வானொலி நிலையத்திற்கு ஆங்கிலத்தில் அளித்த நேர்காணல் இது. அந்த நாடுகளில் தாம் சந்தித்த மனிதர்கள், இடங்கள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பலவற்றையும் குறித்து இதில் பேசியுள்ளார்.
The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai Interview in English to All India Radio on his visit to United States of America & Japan.
1967இல் காரைக்குடியில் உள்ள இந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் அண்ணா பங்கேற்றார். ‘அண்ணாதுரை மதத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது’ எனத் தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கம் பேசினார். அதற்குப் பதில் அளித்து, பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை இங்கே.
‘தண்டவாளத்திலே தலைவைத்துப் படு என்று சொன்னாலும் பொதுப்பணித் துறை அமைச்சராகப் பணியாற்று என்று சொன்னாலும் இரண்டையும் ஒரே விதமான ஆணை என்று ஏற்றுக்கொண்டு, நிறைவேற்றிக் கொடுப்பவன் என் தம்பி கருணாநிதி’ என்பது அண்ணாவின் பேச்சு. இதைப் பலரும் பல இடங்களில் மேற்கோள் காட்டிப் பேசுவார்கள். இதோ அண்ணாவின் குரலில் இதைக் கேளுங்கள்.
மூதறிஞர் இராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் அண்ணா தலைமையிலான தி.மு.க., கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்தித்தது. 1962 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், இராஜாஜியுடன் ஒரே மேடையில் நின்று அண்ணா பேசினார். அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையைக் கேளுங்கள்.
தமிழைப் போலவே ஆங்கிலத்திலும் அண்ணா அழகாகப் பேசக் கூடியவர். அண்ணாவின் ஆங்கிலப் புலமையும் பேச்சாற்றலும் ஆளுமைத் திறனும் புகழ் பெற்றவை. பாராளுமன்றத்திலும் வீறுடன் முழங்கியவர். சென்னை வழக்குரைஞர் சங்கத்தில் அண்ணா ஆற்றிய ஆங்கில உரையை இங்கே கேளுங்கள்.
தமிழ்நாட்டரசின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, பேரறிஞர் அண்ணா 1967ஆம் ஆண்டு வானொலியில் ஆற்றிய உரை இங்கே. அன்று அவர் பேசிய பலவும் இன்றும் பொருந்துவது நம்மை வியப்பில் ஆழ்த்தும். 55 ஆண்டுகள் கடந்த பிறகும் உயிர்ப்போடு திகழும் இந்தக் குரலைக் கேளுங்கள்.