Tag: செல்வரகு

  • பத்திரிகையாளர்கள் எதிர் கட்சியாக செயல்பட வேண்டும்

     

    டி .எஸ்ஆர் சுபாஷ்


    02.12.2012 நெல்லை மாவட்டம்  தென்காசியில் அமைந்துள்ள பத்திரிக்கையாளர் சங்க கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டி .எஸ் .ஆர் .சுபாஷ் கலந்து கொண்டு பேசியபோது, ”எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், எந்த கட்சி எதிர்கட்சியாக விளங்கினாலும் பத்திரிக்கையாளர்கள் எதிர்க்கட்சிப் போல செயல்படவேண்டும் என்று பேசினார். மகாகவி பாரதியைப் பற்றி பேசுகையில் தேசப்பிதாவாக     விளங்கிய மகாத்மா காந்தியையே விமர்சித்து, அவருக்குகே கடிதம் எழுதிய தைரியப் பத்திரிக்கையாளராக விளங்கிய பாரதிக்கு மட்டுமே இருந்தது என்றும், பாரதி பிறந்த தினத்தை தமிழக அரசு பத்திரிக்கையாளர் தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் பேசினார்.

    நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசிய  ‘தமிழக கதர் மற்றும் கிராமத்தொழில் துறை அமைச்சர்’ மாண்புமிகு ராஜா P.செந்தூர்பாண்டியன் அவர்கள் பேசுகையில் “பத்திரிகையாளர்கள் எதிர்க்கட்சிப் போல செயல்பட வேண்டிய அவசியம் அம்மாவின் ஆட்சியில் இருக்காது”  என்றும், எதிர்க்கட்சிகளும், பத்திரிகையாளர்களும் குறை சொல்ல முடியாதவாறு  செயல்பட்டுக் கொண்டு வருவதாகும் பதில் அளித்து பேசினார்.

    சங்க  கட்டிடத்திற்கு நிதி உதவி செய்த தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தோழர். பொ.லிங்கம்  பத்திரிகையாளர்களின் கடமையை பற்றி பேசினார்.

     

    திருநெல்வேலி  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமிகு. எஸ். விஜயேந்திரபிதாரி I.P.S, அவர்கள் சமுதாயத்தில் பத்திரிகையாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
     
    தென்காசி  சட்டமன்ற உறுப்பினரும் சமத்துவ  மக்கள் கட்சி தலைவருமான, ‘சுப்ரீம் ஸ்டார்” ஆர்.சரத்குமார் அவர்கள் பேசுகையில், ‘மாநில தலைவர்’ டி.எஸ்.ஆர்.சுபாஷ் பேசுகையில் பத்திரிக்கையாளர்கள் எதிர்க்கட்சி போல செயல்பட வேண்டும் என்று பேசினார். நான்  திரைப்பட உலகிற்கும், அரசியல் உலகிற்கும் வரும் முன்பே நான் பத்திரிகையாளராகத்தான் என் பொது வாழ்க்கையை துவங்கினேன் என்றும் ஜனாதிபதியையே கேள்வி கேட்கும் வலிமை பத்திரிகையாளருக்கே இருக்கிறது என்றும், வாள் முனையை விட பேனாவின் முனை கூர்மையானது என்றும் பேசினார்.

    அரசு  செயல்பாடுகள் சிறப்பாக அமைவதாலும், பத்திரிகையாளர்களின்  நியாயமான கேள்விகளுக்கு செவி சாய்ப்பதாலும், எந்த எதிர் கட்சிகளுக்கும் வேலை இல்லை என்றும், பத்திரிகையாளர்கள்  எதிர்க்கட்சி போல் செயல்படவேண்டிய அவசியம் இருக்காது என்றும்  பதில் அளித்து பேசினார்.

    மேலும்  இந்நிகழ்ச்சிக்கு, தென்காசியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களான, கோட்டாட்சித் தலைவர் P.இராஜா  கிருபாகரன், காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் R.பாண்டியராஜன், நகரமன்ற தலைவி  திருமதி S.பானு, V.சுடலை, R.இசக்கியப்பன், M.இப்ராஹிம், மற்றும் ஏராளமான  அரசியல் பிரமுகர்களும்  பத்திரிகையாளர்களும் கலந்து கொண்டனர்.

    (TUJ) சங்கத்தின் பொதுச்செயலாளர்கள்  கு.வெங்கட்ராமன், ‘கடலூர்’ K.ரமேஷ்குமார், ‘விருதுநகர்’  பழனிகுமார், ‘நெல்லை’ ராமகிருஷ்ணன், சென்னை மாவட்ட நிர்வாகிகள், “வாசன் பார்வை” செல்லப்பாண்டியன், “கழுகு” K.ராஜேந்திரன், “கடலூர்”  முனுசாமி, பக்ருதீன், , ஏ.வி.பி  ஜான்சன், பீர் ஹுசைன் I.ஆனந்தராஜ் ‘உடுமலை செல்வராஜ், எஸ்.செல்வரகு-PRO, ‘திருப்பூர்’ முரளி, விஜயா, இளங்கோ, ‘ஆடிட்டர்’ கண்ணன் மற்றும் பலர்.  

    கலந்து  கொண்டு சிறப்பித்தார்கள்.

     
    சிறப்பு அழைப்பாளராக புதுவை பிரஸ்கிளப் தலைவர் மதி மகாராஜா பங்குபெற்றார். முன்னதாக தென்காசி பத்திரிகையாளர் சங்க கௌரவ தலைவரும், மூத்த பத்திரிகையாளருமான தோழர் M. சண்முகம் வரவேற்புரை வழங்க, தென்காசி பத்திரிகையாளர் சங்கத் தலைவர் தோழர் M.முத்துசாமி நன்றியுரையாற்றினார்.

    இந்த  வரலாற்று சிறப்பு மிக்க  நிகழ்ச்சியில் டி.யூ.ஜெ வின் மாநில துணைப் பொதுச்செயலாளரும், நெல்லை மாவட்டத்தின் செயல்  வீரருமான தோழர் ஜி.பரமசிவம் அவர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து அனைவரையும் வியக்க வைத்தார்.

     

     

    Share
  • மாநகர காவல் ஆணையரை சந்தித்தது TUJ

     

    செல்வரகு

    நடவடிக்கை எடுக்குமாறு மறு கோரிக்கை

     

    தமிழ்நாடு  பத்திரிக்கையாளர் சங்க தலைவர் DSR சுபாஷ் அவர்கள் சிக்கிமில் நடைபெறும் அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தின் (IJU)தேசிய மாநாட்டில் கலந்துகொண்டிருந்த சமயத்தில் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட சில விஷமிகள் சென்னை காவல் ஆணையாளரிடம் கொடுத்த பொய் புகார் கொடுத்ததை கண்டித்து சங்கத்தின் மாநில பொது செயலாளர் கு.வெங்கட்ராமன் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் ஒன்று கூடி இன்று 10-11-12 —மாலை  5.30 மணிக்கு சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து  நடவடிக்கை எடுக்குமாறு மறு கோரிக்கை அளித்துள்ளனர் . அதன் நகல் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது .

     

    Share
  • Ladies special weekly Magazine 15th Anniversary Function

     


    Looking forward your presence

    Parvathy balasubramanian

    (Sruthilaya Vidyalaya)

     
     

    Thanks & Regards

    S.Selvaragu-PRO 

    (Film & Channel)
    9003024334
    9382209649
    8015765631
    selvaragu.s.pro@gmail.com
    Share
  • விஜயகாந்திற்கு எதிராக போராட்டம் வலுக்கிறது

     

    செல்வரகு

    தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக அதன் மாநில தலைவர் DSR சுபாஷ் தலைமையில் கொட்டும் மழையில் இன்று 30-10-12 வள்ளுவர் கோட்டம் முகப்பில்  டிவி நிருபரை அவதுறாக பேசிய தே .மு .தி .க தலைவர் விஜயகாந்தை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது .பத்திரிக்கையாளர்கள்

    ஒன்று திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, மேலும் சாலை மறியலும் நடைபெற்றதால் பதட்டமான சூழ்நிலை நிலவியது .அங்கு பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த போலீசார் தலையிட்டு கூட்டத்தை கலைத்தனர் .இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு கைது செய்யாவிடில் மேலும் போராட்டம் தொடரும் என்று TUJ மாநில தலைவர் DSR சுபாஷ் அறிவித்துள்ளார் .

     

     

     

     

     

     

    Share
  • மீண்டும் ‘இல்னாவின்’ தலைவராக பரேஷ் நாத்

     

    செல்வரகு

     

    BY,

    T.JAYANTHI

    EDITORIAL IN-CHARGE,
    GRIHSHOBHA (Delhi press Group)

     

    Share
  • சங்கரா தொலைக்காட்சி – குலதெய்வங்கள்

     

    குலதெய்வங்கள்

    ஒரு கிராமத்து மக்களின் வாழ்வியலை  அறிய வேண்டுமானால், அக்க்ராமத்தில் உள்ள கோவில்களையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  தம் வாழ்க்கை மேம்பாட்டுக்காக, வழிமுறைகள் சீர் குலையாமல் இருப்பதுற்காக அமைந்ததுதான் குல தெய்வம். 

     

    தம் முன்னோரை தெய்வமாக கொண்டு கல் நட்டு  போற்றிய மனிதனின் வழிபாட்டில் வளர்ச்சி ஏற்பட்டு, வீட்டுக்கு என்று, காட்டுக்கு என்று தெய்வ வழிபாடு பெருகி வீட்டுத் தெய்வமாய், உயிர்த தெய்வமாய் வளர்ந்த வரலாற்றை கூறும் நிகழ்ச்சியிது.

     

    நாட்டுபுற  தெயுவங்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய நிகழ்ச்சி.  கள ஆய்வு மேற்கொண்டு வழிபடும் ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள், குல தெய்வங்கள் பற்றிய தொகுப்பு.  நாட்டுப்புறத் தெய்வங்களின் வழிபாட்டு சடங்குகள் குறித்தும், வழிபாட்டு பாடல்களையும், தெய்வங்களின் பெயர்களையும் இணைத்து வழங்கும் நிகழ்ச்சியிது.

     

    படித்தவரை விட பாமரர் இடத்துச் செல்வாக்கு பெற்றது  குல தெய்வங்கள்.  இது அவர்கள் தொழிலோடும், ஒழுக்கத்தோடும் நெருங்கிய தொடர்பு

    கொண்டது.

    குல தெய்வம் பற்றிய புதுமையான நிகழ்ச்சி சங்கரா தொலைகாட்சியில் ஒளிபரப்பவிருக்கிறது .

    இந்நிகழ்ச்சியில் உங்கள் குல தெய்வமும் இடம் பெற வேண்டுமானால் தொடர்பு கொள்ள வேண்டியது – mariappan@srisankaratv.net (o) 95000 52250. 

     

    Thanks & Regards

    S.Selvaragu-PRO (Film & Channel)
    9003024334
    9382209649
    8015765631
    selvaragu.s.pro@gmail.com
    tweet to @selvaragupro

    Share