Tag: செல்வரகு

  • “மக்கள் மனசுல யாரு “

    S.Selvaragu-PRO

    (Film – Media – Event- Castg mgr )
    9003024334
    8015765631
    9382209649
    selvaragu.s.pro@gmail.com

    Makkal Manasuka yaru for Paper

    நியூஸ்7தமிழில் “மக்கள் மனசுல யாரு “என்ற மாபெரும்  கருத்துக்கணிப்பின் முடிவுகள் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. ரஜினி, கமல், விஜய் மூவரில் திரையுலகிலிருந்து அரசியலுக்கு அடுத்து யார் வருவார்? வந்தால் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புள்ளியியல் வல்லுநர் குழுவின் வழிகாட்டுதலின்படி வயது, பாலினம், மதம், கல்வித்தகுதி மற்றும் தொழில் அல்லது பணி அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. நியூஸ்7 தமிழ் மற்றும் குமுதம் குழுமம் இணைந்து நடத்தும் “மக்கள் மனசுல யாரு” மாபெரும் கருத்துக்கணிப்புக்கான முடிவுகள் இந்தவாரம் 27, 28, 29, 30மற்றும் டிசம்பர் 1​ ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.

    Share
  • பிறந்தநாள் கொண்டாடவில்லை ; முதல்வர் நலம் பெற வேண்டும் அது போதும் : விஜய டி ராஜேந்தர் பேட்டி

    செல்வரகு

    atr2

    இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் விஜய டி ராஜேந்தர், தன் பிறந்தநாளை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
    அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது, பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துப் பேசினார். அவர் பேசிய போது,

    ” பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லையா ஏன்?

    இன்று என் பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை.கொண்டாடாததற்கு முதல்வர் உடல்நிலை காரணம். தமிழகமுதல்வர் மருத்துவமனையில் இருக்கிற இந்தச் சூழலில் அவர் நலம் பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவதைத் தவிர வேறு ஒரு செய்தியும் இல்லை.

    இதை நான் சொல்வதற்கு மனிதாபிமானம் ஒன்றைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அதிமுகவிடம் ஒரு கவுன்சிலர் சீட்டு கூட வாங்காதவன் நான்.

    அவர் ஈழத்தமிழர் சம்பந்தமாக தைரியமாகச் சட்டசபையில் ஒரு தீர்மானம் போட்ட வீராங்கனை. எனக்கு அவர் எதிரிகளை வீழ்த்தும் ஏவுகணையாக தெரிகிறார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், இதைப் பேசுகிறேன். எனக்கு யாரிடமும் சாதிக்க வேண்டியதில்லை காரியம். யாரிடமும் எதிர் பார்ப்பதில்லை ஒரு வாரியம் .

    atr

    atr1

    கலைஞர் மீது என்ன வருத்தம்?

    மறைந்து விட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் போல நானும் தி.மு.கவுக்கு உழைத்திருக்கிறேன். கலைஞருக்கு மாடாய் உழைத்திருக்கிறேன் . ஓடாய்த் தேய்ந்திருக்கிறேன்.ஆனால் அவரால் காயப்பட்டிருக்கிறேன்.

    எம்.ஜி.ஆரையே தூக்கி வீசியவருக்கு நான் எம்மாத்திரம். என்னையும் தூக்கி வீசிவிட்டார்.

    கலைஞர், தான் பெற்றெடுத்த பிள்ளைக்காக எதையும் இழப்பார்.

    சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஈழத்தமிழருக்கு துரோகம் இழைத்த காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்றேன்.

    ‘நேற்று இன்று நாளை ‘ படத்தில் எம்.ஜி.ஆர் பாடுவதைப் போல கலைஞர் ‘ மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்,தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் ‘ என்றிருப்பவர்.

    தி.மு.கவில் நான் இருந்த போது என் 33 வயது பிறந்தநாளின் போது கலைஞர் ஒரு கடிதம் எழுதினார். அதில் திறமையிலும் சரி வயதிலும் சரி டி. ராஜேந்தர் என்னில் பாதி என்று எழுதியிருந்தார்.

    கலைஞரோடு முடிந்து விட்டது சரிபாதி. இனி கடவுள் விட்ட வழி சரிபாதி.

    பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆன்மா காட்டுகிறது வழி.

    உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

    ஏன் இந்தக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் ? வாழ்க்கையில் கர்மாதான் எல்லாவற்றுக்கும் காரணம்.

    யார் மீதும் நான் குற்றம் சொல்லவில்லை. நான் பிடிவாதக்காரன். இரட்டைவேடம் போட்ட போது கூட நடிப்பதற்கு தாடியை எடுக்காதவன் நான்.
    நோட்டை எதிர்ப்பார்த்து நான் போகவில்லை. !
    கடந்த சட்டமன்றத் தேர்தலில் அத்தனை கட்சியும் கூட்டணி என்று அமைத்தபோது என்னைக் கூப்பிடாமலா இருந்திருப்பார்கள்? ஓட்டை உடைக்க நோட்டை எதிர்ப்பார்த்து நான் போகவில்லை.

    அ.தி.மு.க.வில் கவுன்சிலர் சீட்டுக் கூட கேட்காதவன் நான்.

    இப்போது என்ன சொல்ல வேண்டும் என விரும்புகிறீர்கள்?

    என் கொள்கைக்குக் கிடைத்த மரியாதை என்ன?

    கர்நாடகத்தில் காங்கிரசின் சீத்தாராமையா காவிரி தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்கிறார்.

    இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் தி.மு.க .வுக்குக் கூட்டணி தேவையா?

    மத்தியிலுள்ள கர்நாடக அமைச்சர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள் ஏன்?

    மோடி அரசு இதற்குப் பதில் சொல்ல வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு மீது மோடி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை,? மோடி அரசு ஏன் தட்டிக் கேட்கவில்லை?

    கர்நாடகத்திற்கு ஒன்று,நீங்க உங்கள் மாநிலத்தை நேசியுங்கள் .நீருக்காக தமிழ்நாட்டையும் யோசியுங்கள். ஆனால் ஒன்று, மொழி உணர்வில் மாநில உணர்வில் கர்நாடகத்தில் மக்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.இதற்காக அவர்களின் திசைநோக்கி வணங்குகிறேன்.தமிழ்நாட்டில் ஆளுக்கு ஒன்று பேசலாம் .எது வேண்டுமானாலும் பேசலாம்.

    அந்த ஒற்றுமை ஏன் தமிழ்நாட்டில் இல்லை?

    அங்கே நடிகர்கள் ஒற்றுமையாக குரல் கொடுக்கிறார்களே ?

    அங்கே நடிகர்கள் ஒற்றுமையாக குரல் கொடுக்கிறார்கள்.எல்லா நடிகர்களும் ஒன்றாக இருக்கிறார்கள்.கர்நாடகத்தில் ஒரு திருட்டு விசிடி இருக்கிறதா? திருட்டு விசிடியை அங்கு வாங்கவே முடியாது . இங்கே இவ்வளவு டிவிக்கள் இருக்கின்றன. ஆனால் இங்கே கேபிள் டிவி யில் படம் போடுகிறார்கள் மீண்டும் அதையே பிரபல டிவிக்கு விற்க நினைக்கிறார்கள். இதை தயாரிப்பாளர் சங்கம் தட்டிக் கேட்க முடியாதா? உங்க துணிவு எங்கே போயிற்று? உங்கள் முதுகெலும்பு எங்கே?

    ஆந்திராவில் எல்லா தயாரிப்பாளர்களும் ஒன்றாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தயாரிப்பாளர்களின் நிலை தத்தளிப்பாக இருக்கிறது.

    அண்மையில் வந்த தனுஷ், விஜய்சேதுபதி படங்கள் ‘தொடரி’யும் ஆண்டவன் கட்டளை’ யும் நெட்டில் போடுகிறான். ஏன் தடுக்க முடியவில்லை? ஏன் தட்டிக் கேட்க முடியவில்லை?

    உள்ளாட்சித்தேர்தலில் லட்சிய தி.மு.க. போட்டியிடுமா?

    உள்ளாட்சித்தேர்தலில் பல முதலமைச்சர் வேட்பாளர்களே தத்தளித்துக் கொண்டிருக்கும் போது லட்சிய தி.மு.க.என்ன செய்யும்?நாங்கள் தேர்தலில் நிற்பதைவிட என் கருத்தை தைரியமாக எடுத்துச் சொல்லி மக்களைச் சிந்திக்க வைப்பேன்.” இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.

    Share
  • ஜஸ்ட் பீட் இட்

    செல்வரகு

                                 ஜஸ்ட் பீட் இட்

    as

    புதுயுகத்தின் வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல் கல்லாக தமிழகத்தின் சிறந்த இசைக்குழுவிற்கான பிரம்மாண்ட தேடல் நிகழ்ச்சி ” ஜஸ்ட் பீட் இட்” தமிழகம் முழுவதும் முதற்கட்ட தகுதிசுற்றை நடத்தி வருகிறது.

    as1

    அதகளமான கோவை, நெல்லை ஆடிஷன்சை தொடர்ந்து திருச்சியில் NITT – வளாகத்தில் இசைக்குழுவிற்கான ஆடிஷன்ஸ் நடைபெறவுள்ளது.

    இந்த ஜஸ்ட் பீட் இட் – திருச்சி ஆடிஷன்ஸில் கலந்து கொள்ள 4 – 8 பேர் கொண்ட குழுவாக தங்கள் அணியை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    as2

    இதில் பங்கெடுத்து இறுதி சுற்றில் வெற்றி பெறும் அணி ’ஜஸ்ட் பீட் இட்’ – 2016 க்கான சேம்பியனாகவும், ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசையும் வெல்லும் அற்புத வாய்ப்பை பெறுங்கள்.

    நடைபெறும் நாள் : 30.09.2016 – வெள்ளி, காலை 9 .00– மணி முதல்.

    NITT வளாகம், தஞ்சாவூர் மெயின் ரோடு

    BHEL அருகாமையில்

    திருச்சி.

    மேலும் விவரங்களுக்கு, 7358771145

    Share
  • போட்ட காசை எடுத்தால் போதும் : தயாரிப்பாளருக்கு கே. பாக்யராஜ் யதார்த்த வாழ்த்து!

    bagy3

    ‘அய்யனார் வீதி ‘ படக்கதை. இப்படத்தில் ஐயராக பாக்யராஜும், ஐயனாராக பொன்வண்ணனும் நடித்துள்ள னர்.. ஜிப்ஸி என். ராஜ்குமார் இயக்கியுள்ளார். யூ.கே..முரளி இசையமைத்துள்ளார். ஸ்ரீசாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல், விஜயசங்கர் தயாரித்துள்ளனர்.

    இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கேவி ஸ்டுடியோவில் இன்று நடந்தது.

    bagya

    பொதுவாக சினிமா விழாக்களில் வாழ்த்திப் பேசும்போது ‘இந்தப்படம் நூறுநாள் ஓடவேண்டும்’,’ வெற்றிவிழாவில் சந்திப்போம் ‘என்றெல்லாம் மிகையாகப் பேசி வாழ்த்துவதுண்டு. இன்றைய சினிமா சூழலில் நூறுநாள் ஓடுவது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்றாகும்.. ஆனாலும் விழாவுக்கு விழா அப்படித்தான் கூறிக் கொண்டு வருகிறார்கள். ஆனால் ‘அய்யனார் வீதி’ படத்தின் பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டு விட்டு அந்த விழாவில் பேசிய கே.பாக்யராஜ், ‘தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும் ‘ என்று யதார்த்தமாக பேசினார்.

    விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது ,

    ” இந்தப் படத்தில் நான் நடித்த போது தயாரிப்பாளர் செந்தில்வேலின் சுறு சுறுப்பைக் கண்டேன். அவருடன் தயாரிப்பில் இணைந்து கொண்டிருக்கிறார் அவரது நண்பர் விஜயசங்கர். பொதுவாகவே சினிமாவில் யாரும் துணைக்கு வரமாட்டார்கள். நீ முன்னாலே போ; நான் பின்னாலே வருகிறேன் என்பார்கள். முன்னாடி போகவிட்டு போகிறவனை ஆழம் பார்ப்பார்கள். ஆனால் அப்படிப் பார்க்காமல், அவரது நண்பர் உடன் வந்து இணைந்திருக்கிறார்.

    bagy2

    இப்போது எனக்கு என் பழைய நினைவு வருகிறது.அன்றைக்கு ‘நீ முன்னாலே போநான் பின்னாலே வருகிறேன்’ என்று இருந்தவர் ஆர்.சுந்தர்ராஜன் .நானும் அவரும் சின்ன வயதில் ஒரே பள்ளியில்தான் படித்தோம். ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு அவர் வேறுபள்ளிக்குப் போனார். நாங்கள் நண்பர்கள்தான் .என்னைப் போலவே அவருக்கும் சினிமா மீது ஆர்வம்.ஆனாலும் லேசா பயம் .அதனால் வரத் தைரியமில்லை. ஆனால் நான் துணிச்சலாக சென்னைக்கு வந்து விட்டேன் .நான் சோறு தண்ணி பார்க்க மாட்டேன். அவருக்கு சாப்பாடு சரியாக இருக்க வேண்டும்.

    நான் இங்கு வந்தேன். கஷ்டப் பட்டேன். உதவி இயக்குநராகச் சேர்ந்து விட்டேன். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்தேன். நான் 92 சி எண்ணுள்ள என் அறையில் இருப்பேன்.அங்கு வருவார். வந்து என் நிலைமையைப் பார்த்து விட்டுப் போவார். நான் உயர்ந்த பிறகு அவரை ஊர்க்காரர்களே விட வில்லை. பாக்யராஜே பெரிய ஆளாய்ட்டார். நீ இங்கு என்னசெய்கிறாய் எனப்.. பாடாய்ப் படுத்த,அவர் புறப்பட்டு விட்டார். இங்கு வந்து பாண்டிபஜார். ,தேனாம் பேட்டை என என்னைப் போலவே இருந்து அவரும் பெரிய ஆளாகிவிட்டார்.

    bag1
    அப்படி இல்லாமல் விஜயசங்கரோ கூடவே வந்து விட்டார். இந்தத் தயாரிப்பாளர்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. நான் இந்தப் படத்தில் ஆரம்பிக்கும் முன்பு இல்லை. ஆரம்பித்த பிறகுதான் உள்ளே வந்தேன். படத்துக்காக சொந்த ஊரில் படப்பிடிப்பு நடத்தினார்கள். சொந்த ஊரில் படப்பிடிப்பு நடத்துவது ஒரு பெருமையாக இருந்தாலும் சில நேரம் தொந்தரவாகிப் பதற்றமாக இருக்கும்.

    ராஜபாளையத்தில் நான் படப்பிடிப்பு நடத்தியது இல்லை. இந்தப் படத்துக்காகத்தான் போனேன். போனபிறகுதான் தெரிந்தது, அங்கே எனக்கு வேண்டியவர்கள் பலபேர் இருந்தார்கள். இதில் நடித்த போதுதான் ஐயனார் பற்றியே எனக்கு விரிவாகத் தெரிந்தது. படத்தில் 108 ஐயனார் பற்றிய பாடலும் வருகிறது.

    படத்துக்கு வெறும் ஐயனார் மட்டும்போதாது படத்தில் இளைஞர்களும் வந்தால்தான் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.இளைஞர்யுவனும் நடித்திருக்கிறார். இந்தப்படம் பற்றிப் பெரிய பேராசை எல்லாம் இல்லை. தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும் என்று மட்டும் வாழ்த்துகிறேன்..தயாரிப்பாளர் போட்ட காசை எடுத்தால் போதும் ,அவர் தப்பித்துக்கொள்வார். நிறைய படங்கள் எடுக்கும் தைரியம் வந்து விடும்.பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நிலைக்கு வந்து விடுவார். ” என்று கே.பாக்யராஜ் இயல்பாகப் பேசி படக்குழுவினரை வாழ்த்தினார்.

    முன்னதாக தயாரிப்பாளர் செந்தில் வேல் பேசும் போது,

    “ஒரு ரசிகனாக தியேட்டர் போய் பாக்யராஜ் சார் படம். பார்த்தவன் நான். அவரையே என்படத்தில் நடிக்க வைத்தது எங்கள் பாக்யம்” என்றார் பிரமிப்புடன்.

    பாடலாசிரியர் ப்ரியன்பேசும் போது,

    ” படத்துக்குப் பாடல் எழுதுவது என்பது ஒரு வகை. இதில் பாடல் ,தானே வந்தது. ஐயனார் பற்றிய தேடலில் 108 ஐயனார்கள் பற்றித் தேடித்தேடி திரட்டி ஒரு பாடல் உருவாக்கினோம். இப்போதெல்லாம் ஒரு திரைப்படக் பாடலுக்கு மாதக்கணக்கில் மட்டுமே ஆயுள் இருக்கிறது. சூழல் அப்படி இருக்கிறது.” என்றார் கவலையுடன்.

    இயக்குநர் ஜிப்ஸி என். ராஜ்குமார் பேசும் போது,

    ” இந்தப் படத்தில் பாக்யராஜ் சார் நடிப்பதாக இருந்தால் மட்டுமே மேலே செல்வது என்பதில் கவனமாக இருந்தேன். அவர் வந்ததும் அது படத்துக்குப் பெரிய பலமாக மாறியது. அவரும் பொன்வண்ணன் சாரும் இந்தப் படத்தைத் தங்கள் தோளில் சுமந்திருக்கிறார்கள்.”என்றார் மகிழ்ச்சியுடன்.

    நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் சக்திவேல், இசையமைப்பாள்ர் யூ.கே.முரளி,தயாரிப்பாளர் விஜயசங்கர். நாயகன் யுவன்.பி.ஆர்ஒ.சங்கப் பொருளாளர் விஜயமுரளி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

    விழாவில் பி.ஆர்ஒ.சங்கத்தின் தலைவர் டைமண்ட்பாபு, செயலாளர் ஏ.ஜான், பொருளாளர் விஜயமுரளி , வி. பி மணி ,முன்னாள் செயலாளர் பெரு.துளசி பழனிவேல் ஆகியோர் கௌரவிக்கப் பட்டனர்,

    Share
  • அய்யனார் வீதி

    ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் தயாரிப்பில்
    நட்பையும், பாசத்தையும் சொல்லும்
    அய்யனார் வீதி

    ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் P.செந்தில்வேல். விஜயசங்கர், இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அய்யனார் வீதி’.

    1
    முக்கிய கதாபாத்திரத்தில் புரட்சி திலகம் K.பாக்கியராஜ், பொன்வண்ணன் நடிப்பில், கதாநாயகனாக யுவன், கதாநாயகிகளாக சாராஷெட்டி, சிஞ்சுமோகன் அறிமுகமாகிறார்கள். மேலும் சிங்கம்புலி, ராஜா, வின்சென்ட்ராய், செந்தில்வேல், விஜயசங்கர், தாஸ் பாண்டியன், முத்துக்காளை, மார்த்தாண்டம், கோட்டைப்பெருமாள் மற்றும் பலமுன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை பாஸ்கரன் எழுத, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜிப்ஸி N.ராஜ்குமார்.

    2

    பழக்க வழக்கங்கள், நாகரீகம், பண்பாடு, கலை இலக்கியம், இவை எல்லாம் தமிழக வரலாற்றில் ஒன்றோடு ஒன்று மெல்லிய இழைகளாக பின்னிக் கிடக்கிறது. இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டினர் இந்தியாவை வியப்போடு பார்க்க துவங்கியிருக்கிறார்கள்.

    4ஆனால் இந்தியாவில் இன்னும் பண்பாட்டுச் சுழல் கெட்டுப் போகாமல் இருக்கும் ஒரு சில மாநிலங்களில் முக்கிய இடம் தமிழகத்திற்கு தான் உண்டு.

    அத்தகைய சூழல் மாறாமல், ஆபாசம், அசிங்கம், இரட்டைஅர்த்த வசனங்கள்.. புரையோடிப்போன வன்மங்கள் எதுவுமின்றி அன்பு…பாசம்… நட்பு…வீரம்…அளவான கோபம்… இவை அனைத்தும் இன்னும் நம்மை பாதுகாக்கும் கவசகுண்டலங்கள் என்பதை மக்களுக்கு சொல்வதற்காகவும், குடும்பத்தோடு திரைப்படம் பார்க்கும் ஆவலை து£ண்டும் வண்ணம்… இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதுதான் “அய்யனார் வீதி’ படத்தின் வெற்றிக்கான சூட்சமம்.

    இப்படத்தில் மொத்தம் 5 பாடல்களை இசையமைப்பபாளர் U.K.முரளியின் இசையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    3

    இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை, ராஜபாளையம், மேலுர், மேலப்பூங்குடி, குற்றாலம், கொடைக்கானல், சொக்கலிங்கபுரம், சென்னை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

    படப்பிடிப்பு முடிந்து பட ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருந்த இயக்குனர் N. ராஜ்குமாரிடம் படம் பற்றி கேட்டபோது:

    உலகமே பார்த்து வியக்கும் கலாச்சாரத்தை கொண்ட நமது மக்களிடையே இப்போது நாகரீக மோக அதிகரித்திருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக பாரம்பரியமிக்க கலாச்சாரத்தை இழந்து வருகிறோம். நகரங்களில் மறைந்து கொண்டிருக்கும் அன்பு, பாசம், குடும்ப உறவுகளின் கலாச்சார பாரம்பரியம் கிராமங்களில் இன்னும் பல இடங்களில் அழியாமல் இருக்கிறது என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்வதுதான் ‘அய்யனார் வீதி’ கதை.

    5

    கதையே கேட்டதுமே பாக்யராஜ் சார் மிகவும் மகிழ்ச்சியோடு நடிக்க சம்மதித்தார். அவருக்கும் பொண்வண்ணனுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நட்பை ஊரே எதிர்க்கிறது. அப்படி ஊரே எதிர்த்தாலும் நட்புக்காக எல்லாவற்றையும் எதிர்த்து இவர்கள் எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறோம்.
    ஊரைக் காக்கும் அய்யனார் சாமியை பற்றி 108 மந்திரங்கள் அடங்கிய பாடலும் இடம் பெற்றிருக்கிறது. இதற்காக சாமி படம் என்று நினைக்க வேண்டாம். அழகான கிராமத்து நட்பை சொல்லும் படம். நட்பு, அன்பு, பாசம் அனைத்தும் இன்னமும் கிராமங்களில் மறையாமல் இருக்கிறது என்பதை ரொம்ப அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறேன்.

    பிரமாண்ட செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை தயாரிப்பதோடு, ஒரு பாடலும் எழுதியிருக்கிறார் தயாரிப்பாளர் செந்தில்வேல். அடுத்த மாதம் பாடல் வெளியிட முடிவு செய்திருக்கிறோம். 65 நாட்களில் மிக திட்டமிட்டு முழு படத்தையும் முடித்து ரிலீசுக்கு தயாராகி வருகிறோம் என்றார் இயக்குனர் ராஜ்குமார்.

    தொழில்நுட்ப கலைஞர்கள்
    திரைக்கதை, வசனம், இயக்கம் : ஜிப்ஸி N.ராஜ்குமார்
    கதை – – பாஸ்கரன்
    ஒளிப்பதிவு – சக்திவேல்
    இசை – U.K.முரளி
    படத்தொகுப்பு – சுரேஸ் ஆர்ஸ்
    பாடல்கள் – பிரியன்
    நடனம் – சிவராஜ் சங்கர்
    ஆக்ஷன் – நாக்வுட் நந்தா
    மக்கள் தொடர்பு – செல்வரகு

    தயாரிப்பு
    P.செந்தில்குமார்
    விஜயசங்கர்

    Share
  • AYYANAR VEETHI movie press meet Greetings : 21-09-16 Wednesday at 5.30pm at RKV…

    Dear Sir/madam,

    bag

    I cordially Invite you to join our Movie AYYANAR VEETHI press meet to be held on 21-09-16 Wednesday at 5.30pm at RKV studio, Vadapalani,Chennai.

    Cast : Bhagyaraj Sir,Ponvannan,Yuvan (Saattai),Sinju mohan,Singam puli,Muthu kalai,Raja and others.

    Technicians : Director Gipsy N.Rajkumar,cinematographer Shakthi, Music UK Murali,Producers :Senthil Vel and Vijaya shankar.

    Expecting your presence with Camera crew.

    Thanks & Regards

    S.Selvaragu-PRO

    Share
  • Puthiyathaliamurai Tamilan Awards

    se

    (11th of August 2016 at 6.00 pm in Chennai Trade Centre)

    Puthiya Thalaimurai, TV channel with its unbiased and independent news, delivering live News, as-it-happens, has dramatically re-defined television journalism in Tamil Nadu. Puthiya Thalaimurai has done what it promised to its viewers; that it would provide a platform to the voiceless and bring out the aspirations and beliefs of Generation Next.

     Every year the channel recognizes legends and eminent rising stars for their achievements, contribution to the country and to the society. The Channel will be honouring them with the prestigious Puthiyathaliamurai Tamilan awards.

    Puthiyathalaimurai TV is set to announce the Tamilan Awards for the year 2016 in grand mega event organized on 11th of August 2016 at 6.00 pm in Chennai Trade Centre.

    The award categories are given below.

    1. Puthiya Thalaimurai Tamilian Award for Social Service
    2. Puthiya Thalaimurai Tamilian Award for Business
    3. Puthiya Thalaimurai Tamilian Award for Science & Technology
    4. Puthiya Thalaimurai Tamilian Award for Literature
    5. Puthiya Thalaimurai Tamilian Award for Sports
    6. Puthiya Thalaimurai Tamilian Entertainer (Cinema/ Music)

    Each category has a two sub divisions under which an Eminent legend and a Promising Star will be recognized.

    Share
  • பாடலாசிரியர் பிரியன் நேர்காணல்

    செல்வரகு

    60faedc9-0dd4-4f55-9461-d483f3b8fd13

    தமிழ்சினிமாவில் பாடல்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு. வெளிவந்த காலகட்டத்திற்கு மட்டுமே படங்கள் பேசப்படும். பாடல்கள் காலம் கடந்தும் நிற்பவை. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். சில பாடல்கள் கேட்ட உடன் மனதை ஈர்ப்பவையாக அமையும். சில பாடல்கள் கேட்கக் கேட்கப் பிடித்துப் போகும். சில பாடல்கள் கேட்கும் பொழுது ஒரு உணர்வையும், படத்தோடு, படத்தின் காட்சியமைப்போடு பார்க்கும் பொழுது ஒரு உணர்வையும் தரக்கூடியவை. அவ்வகையில் தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிச்சைக்காரன் திரைப்படத்தில் பாடலாசிரியர் பிரியன் எழுதி இருக்கும் “உனக்காக வருவேன்” பாடல் அனைவரின் மனதையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

    இவர் ஏற்கனவே “அஞ்சாதே படத்தில் மனசுக்குள் மனசுக்குள் புதுமழை..”, நினைத்தாலே இனிக்கும் படத்தில் செக்சி லேடி கிட்ட வாடி, உத்தமபுத்திரன் படத்தில் உசுமுலாரசே உசுமுலாரசே, வேலாயுதம் படத்தில் வேலா வேலா வேலாயுதம், நான் படத்தில் மக்காயாலா மக்காயாலா, கோலிசோடா படத்தில் ஜனனம் ஜனனம், சலீம் படத்தில் மஸ்காரா போட்டு மயக்குறியே என பல ஹிட் பாடல்கள் கொடுத்தவர்.

    தற்போது சசி இயக்கத்தில், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் “பிச்சைக்காரன்” திரைப்படத்தில் உணர்ச்சிமிக்க பாடலாக பெருவெற்றி பெற்றிருக்கும் உனக்காக வருவேன் பாடல் குறித்து அவரிடம் கேட்ட பொழுது….

    ஒரு பாடலாசிரியனுக்கு ஒவ்வொரு பாடலுமே முதல் பாடல்தான். இதுவரை ஏறக்குறைய நானூறு பாடல்களைக் கடந்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம். என்னைப் பொறுத்தவரையில் பொதுவான பாடல்களை விட கதையோடு பொருந்திவருகிற பாடல்களே வலிமை மிக்கவை.

    அப்படிப் பார்க்கும்பொழுது “பிச்சைக்காரன்” படத்தில் எழுதிய “உனக்காக வருவேன்” பாடல் முழுக்க முழுக்க கதைக்குச் சொந்தமானது. பாடல் பற்றிய தகவலை சொல்லும்பொழுது கவித்துவமாக இல்லாமல் எளிமையாகவும் காதலின் உணர்வை பேசக்கூடியதுமாக வரிகள் இருந்தால் நல்லது என்றார் விஜய் ஆண்டனி. அதனால் எளிய மனிதர்களின் வார்த்தைகளை.. எவருக்கும் புரியக்கூடிய மிக எளிமையான வரிகளைப் பயன்படுத்தி.. முழுக்க முழுக்க காதலின் ஆழமும்.. உணர்ச்சியும் மட்டும் பயணிக்கும் பாடலை எழுதிக் கொடுத்தேன். கிட்டத்தட்ட பத்து பல்லவி, பத்து சரணங்கள் எழுதி அதில் இருந்து தேர்ந்தெடுத்த வரிகள்தான் அவை.

    படம் பார்த்துவிட்டு பாடல் குறித்து திரைத்துறை பிரபலங்கள் பலர் போன் மூலம் வாழ்த்துகள் சொன்னார்கள். ஒரு நாளைக்கு குறைந்தது ஐம்பது பேருக்கு மேல் போன் வழியாகவும்.. பேஸ்புக் வழியாகவும்.. பல வழிகளிலும் வாழ்த்துகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

    ஒரு நல்ல பாடலை.. கதைக்கு கச்சிதமாகப் பொருந்தக்கூடிய பாடலை.. காதலின் உன்னத வலியை விளக்கக்கூடிய பாடலை.. எனது பயணத்தில் இன்னொரு வெற்றிபாடலை சாத்தியமாக்கிய அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வழக்கம்போல் எனக்கு இன்னொரு வெற்றிப்பாடலைத் தந்த அன்பு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்களுக்கும்.. அற்புதமான சூழலை கொடுத்த இயக்குநர் சசி அவர்களுக்கும் இதயத்தில் இருந்து நன்றிகள்.

    பல்லவி :

    உனக்காக வருவேன்..

    உயிர் கூடத் தருவேன்..

              நீ ஒரு பார்வை பார்த்திடு போதும்

    உனக்கு எதையும் நான் செய்வேன்..

              ஞாபகம் முழுதும் நீ வந்து நிறைய

    உனது நிழலென இருப்பேன்..

              நீ யாராய் இருந்தாலும்

    உன்னை ஏற்றுக் கொள்கிறேன்..

    என்னைப் பிரிந்தால் அந்த நொடியே

    நான் இறந்து போகிறேன்..        –        உனக்காக வருவேன்..

     

    சரணம் : 1

    யார் என்ன சொன்னாலும்

    என்னை இங்குக் கொன்றாலும்

    நான் உந்தன் பாதி புரிந்து கொண்டேன்..

    யார் கூட வந்தாலும்

    என்னோடு நின்றாலும்

    உன் பேரைச் சொன்னாலே திரும்பி நின்றேன்..

    இந்தக் காதல் உனக்காக

    என்றும் தீராது..

    உயிர் போகும் என்றாலும்

    அது போகாது..      –        உனக்காக வருவேன்..

    சரணம் : 2

    கண்ணோடு கண் பார்த்து

    கையோடு கை கோர்த்து

    உன்னோடு நான் போக விரும்புகிறேன்..

    துளியன்பு மாறாமல்

    நொடிகூடக் குறையாமல்

    உயிருக்குள் உனையள்ளி நிரப்புகிறேன்..

    ஒரு வாழ்க்கை உன்னோடு

    அது போதாது..

    நீ கனவில் பிரிந்தாலும்

    மனம் தாங்காது..    –        உனக்காக வருவேன்..

    Share
  • Dr.APJ Abdul kalam

    செல்வரகு

    டி. ஆர்.

    asel

    Share
  • புகை நமக்குப் பகை – புதிய தலைமுறை தொலைக்காட்சி குறும்படங்கள் போட்டி

    (மே 31 ம் தேதி ஞாயிறன்று மதியம் 12.00 மணிக்கு)

     apug

    புகை உயிருக்குப் பகை குறும்படப்போட்டி 2015…வெல்லப்போவது யார் ? (பத்திரிகை குறிப்பு)

    புகை உயிருக்குப் பகை என்ற தலைப்பில் புகை பிடிக்கும் வழக்கம் ஏற்படுத்தும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வுப் பரப்புரையை புதிய தலைமுறைத் தொலைக்காட்சி  மேற்கொண்டது.  கலந்துரையாடல்கள்,  விழிப்புணர்வு குறிப்புகளை அடங்கிய  அறிவிப்புகள், பிரபலங்களின் பேட்டிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஒளிபரப்பியதுடன் புகை உயிருக்குப் பகை என்ற தலைப்பில் குறும்படங்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது புதிய தலைமுறைத் தொலைக்காட்சி.

    புகை பிடித்தலின் தீமையை வெளிக்காட்டும் வகையிலும், புகையைத் தவிர்ப்பதை வலியுறுத்தவும் 2 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படங்கள் வரவேற்கப்பட்டன. அந்தவகையில் சுமார் 300 குறும்படங்கள் வந்து சேர்ந்தன. அவற்றில் ஒளிபரப்புக்குத் தகுதியானவை என 85 குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. அந்த 85 படங்களில் புதிய தலைமுறையின் நடுவர் குழு 25 குறும்படங்களைத் தேர்ந்தெடுத்தது. அந்த 25 படங்களின் படைப்பாளிகளை அரங்க்த்திற்கு அழைத்து இயக்குனர் சரண் முன்னிலையில் அந்தப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் முதல் மூன்று பரிசுகளை வென்ற குறும்படங்களும், 10 ஊக்கப்பரிசு பெற்ற குறும்படங்களையும் இயக்குனர் சரண் தேர்ந்தெடுத்து அறிவித்ததுடன், அவர்களுக்குப் புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் பரிசுகள் அளித்து கவுரவித்தார்.மேலும் முதல் இரண்டு பரிசுகளைப் பெற்ற குறும்பட இயக்குனர்களுக்கு தன்னுடன் இணைந்து பணியாற்ற உதவி இயக்குனர்கள் வாய்ப்பையும் தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

    இந்த பரிசு வழங்கும் நிகழ்ச்சி புகையிலை எதிர்ப்பு தினமான மே 31 ம் தேதி ஞாயிறன்று மதியம் 12.00 மணிக்கு புதிய  தலைமுறை  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

    Share
  • புதிய தலைமுறையின் புதிய நிகழ்ச்சி!

     செல்வரகு

    சினிமா 360 டிகிரி

    (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு)

     puthu

    செய்தி தொலைக்காட்சியான புதியதலைமுறையில் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி “சினிமா 360டிகிரி” சனிக்கிழமைகளில் இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவின் பங்கு,முக்கியமான திரைப்படங்கள்,திரையுலக பிரச்சினைகள்,சாதனைகள்,சந்திக்கும் சோதனைகள் என பலதரப்பட்ட கோணங்களில் அலசி ஆராயும் தொகுப்புகள் ஒளிபரப்பாகிறது.

    puthu1

    balaji

    ஞாயிற்றுக்கிழமைகளில் முன்னணி நட்ச்சத்திரங்கள் மற்றும் சாதிக்க காத்திருக்கும் புதுவரவுகள் நடிக்கும் புத்தம் புதிய படங்களின் கலைஞர்கள்,தொழில்நுட்பக்கலைஞர்கள் பங்குபெறும் சிறப்பு நேர்க்காணல் இடம்பெறும்.தமிழ்த்திரை உலகின் முன்னணி நட்ச்சத்திரங்கள் மட்டுமின்றி,பாலிவுட் பிரபலங்களான ரண்பீர் கபூர்,ஜான் ஆப்ரஹாம்,ஸ்ரீதேவி உள்ளிட்டோரும் பங்கு பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியினை பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.

    Share
  • “வரலாற்றின் மறுபக்கம்.”

    செல்வரகு

    (திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு)

    “வரலாற்றின் மறுபக்கம்.”

     

    சத்தியம் தொலைக்காட்சி வழங்கி வரும் உலகத்தரம் வாய்ந்த பிரமாண்ட படைப்பின் தமிழ் வடிவம் “வரலாற்றின் மறுபக்கம்.”

    இது வரைக்கும் பார்க்காத உலகத்தைப் பார்த்து வியக்க வைக்கும் ஆணவக் களஞ்சியமாக , திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு உங்கள் சத்தியம் தொலைக்காட்சியில் வரலாற்றின் மறுபக்கம் ஒளிபரப்பாகி வருகிறது .

    ஒவ்வொரு முறையும் உலகத்தில் நடக்கும் ஒரு புதிய நிகழ்வைப் பதிவு செய்து வரும் வரலாற்றின் மறுபக்கத்தில் , வருகின்ற வாரத்தில் ஒளிபரப்பாக இருக்கும் ஆவணத் தொடர்கள் :

    06.05.2013 . உலகத்தில் – இரண்டு முறை வாழலாம் .

    கற்பனைக்கு எப்போதும் தடையில்லை . இன்று இருக்கும் தொழில் நுட்ப வெளியில் மனிதர்கள் கம்யூட்டரின் மூலம் எல்லை கடந்து வாழலாம் -என்ற அறிவின் தேடலைப் பற்றிய ஒர் ஆவணமே “உலகத்தில் இரண்டு முறை வாழலாம்”

    07.05.2013 . பூட்டான் – மகிழ்ச்சியின் உச்சம் .

    தெரியாத மனிதர்களைத் தெரிந்து கொள்ளலாம் . பூட்டான் நாட்டில் தொழில் நுட்ப வளர்ச்சிகள் அவ்வளவாக இல்லையென்றாலும்,  உலகத்தின் மகிழ்ச்சியான மனிதர்கள் அங்கு வாழ்வதாகச் சொல்கிறார்கள். பூட்டான் மக்களின் கலாச்சாரத்தையும் , அவர்களின் புத்த மதக் கொள்கைகளையும் தெரிந்து கொள்ளுங்கள் .

    08.05.2013 . புதைந்த – இந்திய சுற்றுச் சூழல் .

    இந்தியா முழுக்க பரந்த ஒர் பார்வையில் சுற்றுச் சூழல் மாசுபாடுகளைத் தத்ரூவமாக ஆவணமாக்கியுள்ளார்கள் .

    09.05.2013 . ஆப்கானிஸ்தான் – ‘காபூல்’ கால்பந்து மன்றம் .

    33 வருடங்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் – பாக்கிஸ்தானுடன் உலக கால்பந்தாட்டத்தில் களம் இறங்கி , தகுதிச் சுற்றுக்குத் தயாராகிய நிகழ்வை இப்போது நீங்கள் காண இது ஒரு நல்லவாய்ப்பாக இருக்கும்.

    10.05.2013 . சௌத்ஆப்பிக்காவின் – முக்கிய நாசக்காரன் .

    சௌத்ஆப்பிக்காவில் , யூஜின் அலெக்சான்டர் எனும் கொடுமைக்காரனைப் பற்றிய சுயசரிதை பார்வையாளர்களை நிச்சயம் அதிர்ச்சியடையச் செய்யும் .

    வாரத்தின் 5 நாட்களும் தவறாமல் வரலாற்றின் மறுபக்கத்தைப் பாருங்கள். உலக நிகழ்வின் உருவாக்கத்தை உணருங்கள் .

    Share
  • ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிப்பில் 3 ஜீனியஸ்

    செல்வரகு
    ஆன்ட்ராக் அனிமேஷன் மற்றும் பிலிம் கம்பைன் தயாரிக்கும் புதிய படம் 3 ஜீனியஸ். இது மலேசியாவில் தயாரிக்கப்பட்டத் தமிழ்த்திரைப்படம்.

    கதைச்சுருக்கம்

    மக்களின் விழிப்புணர்ச்சிக்கு விஞ்ஞானம் ஒரு மகத்தான பங்கு வகிக்கிறது. அணு சக்தியால் ஏற்படும் நன்மைகள் நானோ தொழில் நுட்பம் போன்ற அறிவியல் விழிப்புணர்வை வலியுறுத்தி உருவாக்கப் படுகிறது 3 ஜீனியஸ். அதி புத்திசாலிகளாகப் பிறக்கும் 3 குழந்தைகளை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட கதை 3 ஜீனியஸ்.

    இப்படத்தில் மலேசிய முன்னணி நடிகர்கள் லண்டன் டான் பிரசன்னா, சசி அபாஸ், அகோதரன், சங்கீதா, கவிதா, ஜஸ்பீர் , ஆனந்த ராஜ் , இவர்களுடன் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரமான விஞ்ஞானி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

    இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்காக நான்கு நாடுகளில்  நான்கு பேர் அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள்.பாகிஸ்தானிலிருந்து யாசின், சிங்கப்பூரிலிருந்து ஆனந்த்ராஜ், நைஜீரியாவிலிருந்து கிரிஷ், அரேபியாவிலிருந்து அலிபாய் ஆகியோர் தான் அந்த நான்கு வில்லன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்குகிறார் P.K. ராஜ். அதிநுட்பத் தொழில் நுட்பத்துடன் ஒளிப்பதிவு செய்கிறார் மகேஷ் K தேவ். இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியன் இசையமைக்கிறார்.

    இந்தப் படத்தில் இடம்பெறும் 5 பாடல்களும் மலேசியா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டிருக்கிறது.

    தொழில் நுட்பக் கலைஞர்கள்

    கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்: P.K.ராஜ்

    ஒளிப்பதிவு: மகேஷ் K தேவ்

    இசை: ஆதிஷ் உத்ரியன்

    நடனம்: சந்துரு

    கலை: முருகன்

    ஆக்‌ஷன்: கெளதம் முருகன்]

    P.R.O  : S.செல்வரகு

    தயாரிப்பாளர்கள்: புண்ணியமூர்த்தி கணேசன்  – சிவா கணேசன் – விஜேந்திரன்

     

     

    Share
  • ஐ.ஏ.எஸ். இலவச பயிற்சி முகாம், புதுக்கல்லூரி

    செல்வரகு

    சீட் அறக்கட்டளை தமிழ்நாடு சார்பாக இலவச ஐ.ஏ.எஸ்.பயிற்சி முகாம் துவக்க விழா புதுக்கல்லூரி கணினி அறையில் சிறப்பாக நடைபெற்றது.விழாவில் டாக்டர் வி.இறைஅன்பு I.A.S தமிழ்நாடு அரசு பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை,V.H.முஹம்மது ஹனிபா I.P.S, எஸ்.எம்.இதயத்துல்லா,தலைமை நிர்வாகி சீட் அறக்கட்டளை,கலீலுல்லாஹ் சாஹிப் ,தலைவர் மியாசி மற்றும் புதுக்கல்லூரி, முகமது அஷ்ரப், செயலாளர் மியாசி மற்றும் புதுக்கல்லூரி,அபூபக்கர், அகில இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர்,டாக்டர் கே.அல்தாப், முன்னாள் முதல்வர் புதுக்கல்லூரி, டாக்டர் அப்துல் மாலிக்,முதல்வர் புதுக்கல்லூரி,எஸ்.அப்துல் கரீம், நிர்வாகி சீட் அறக்கட்டளை, எம்.எஸ்.ஹபீப் ரஹ்மான், நிர்வாகி சீட் அறக்கட்டளை.ஆகியோர் கலந்துகொண்டனர்.

    Share
  • மெகா இண்டர் காலேஜ் உலக சாதனையாளர் திருவிழா

    செல்வரகு

    சத்தியம் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் “மெகா இண்டர் காலேஜ் உலக சாதனையாளர் திருவிழா” தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளிலும் தொடங்க இருக்கிறது . இந்தப் பிரமாண்டமான நிகழ்விற்குத் திரையுலக முன்னணி பிரபலங்கள் பெறும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

     

    நடிகர் ஆரியா , “மெகா இண்டர் காலேஜ் திருவிழா”வில் கலந்து கொள்வாதகத் தெரிவித்துள்ளார்.  “விளையாட்டுத்தனமாக இருந்தாலும் படிக்கின்ற வயதில் இம்மாதிரியான போட்டிகள் மாணவர்களுக்கு நல்ல அங்கிகாரத்தைக் கொடுக்கும் . இந்தச் சாதனையாளர் திருவிழாவில் கலந்து கொண்டு , நாம் யார் என்பதை இந்த உலகத்திற்கு நிரூபிப்போம்” என நடிகர் ஆர்யா கூறினார் . அவரைத் தொடர்ந்து,  நடிகை அஞ்சலி மற்றும் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியும் இந்த உலக சாதனையாளர் திருவிழாவில் இணைந்து செயல்படுவதாகக் கூறியுள்ளார்கள் .

    ஒரே நிகழ்வில் 100 விதமான போட்டகளைத் –  தனித்தனித் துறைகள் வாரியாக நடத்த முடிவு செய்திருக்கிறார்கள் . கல்லூரிப் பேராசியர்களுக்கும் தனித்துவமான போட்டிகள் உண்டு .

    கல்லூரிப் பருவத்தில் போராடத் துடிக்கும் இளைய தலைமுறைகளுக்குத் தமிழக அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு , வெற்றியாளர்களை இந்தியளவிலும் – உலகளவிலும் மேடை ஏற்ற பல விதமான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள் . ஒட்டு மொத்த அளவில் வெற்றி பெறும் கல்லூரிக்குக் கேடயமும் , பதக்கமும்  வழங்கப்படும் .

    மாணவர்களே ..! திறமையிருந்தும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று புலம்ப தேவையில்லை .  வெறும் ஆர்வமும் , வெற்றுக் கரிசனும் மட்டும் இருந்தென்ன செய்வது …? உங்களைத் தேடி விருதுகள் கொடுக்க வருகிறார்கள் . உங்களை நீங்கள் தகுதிப்படுத்துங்கள் . 10 லட்சத்திற்கும்  அதிமான மாணவ – மாணவிகள் கலந்து கொள்ளும் இந்தச் சாகச நிகழ்வுகளில்  உங்களுக்கான இடத்தை நீங்களே தேர்ந்துக் கொள்ளுங்கள் . சத்தியம் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் இந்த மாபெறும் முயற்சியின் வழி , உலக அரங்கில் உங்களுடைய  நாற்காலியை வந்து பாருங்கள்

    மேலும் விவரங்களுக்கு : www.micrf.com

    Share