Tag: பா. வானதி வேதா. இலங்காதிலகம்

  • நளிர் நளினம் (குளிர் நீர்)

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    பளிங்கு பளிங்கு கண்ணாடி
    பளிங்கு பளிங்கு படிகம்
    வெளிப்படை! உயிர் காக்கும்!
    நளினம் தண்ணீர் – தெளிநீர்                  water
    தெளிப்பு சீவன்கள் கொழிப்பு!
    நளினமின்றி உயிருலகு இல்லை
    துளி பட்டாலும் துளிர்க்கும்
    நளிவுடை நளிர் திரவம்

    ஆறு, கடல், குளத்தில்
    பீறும் மழையாயும், குட்டையிலும்
    ஊறும் பஞ்சபூதத்தில் ஒன்று
    சேறு, குற்றம் களையும்
    மீறும் தீ அணைக்கும்
    வீறு கொண்டு பாயும்
    நீருக்குச் சிறை பனி
    நீராவி குளிர, திரவம்
    அசுத்தம் சிறுநீர்  உப்புநீர்
    அருமைப் பதநீர் தேனீர்
    அழுதால் கண்ணீர் சுடுநீர்
    பித்தநீர் மஞ்சள் நீர்
    இளநீர் குடிநீர்  பலவகை
    நீர் பூமியில் 71விகிதம்
    நிறமற்ற புதுமை தனித்தன்மை
    திறமைப் பயன் மின்சாரம்!

     

    Share
  • வணங்கி வாழலாம்!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    பூவினை ஒன்றொன்றாய் மாலையில் தொடுத்துப்
    பாவினைப் பண்ணாகப் பாடித் தொழுது
    என்வினை தீர இறையை வணங்கி
    வாழ்வினையொரு சுப வினையாக்குதல் நோக்கு!

    அன்பினைப் பெற அருகினில் நெருங்கி
    அறிவினை வளர்க்க ஆய்வினை நகர்த்தி
    உயர்வினைத் தாருமெனப் பாவினை ஆக்கத்
    தேய்வினை எண்ணாது அறிவினைத் தீட்டலாம்!

    தீங்கினைப் பாங்காக விலக்கி நம்முள்
    தேங்கிட நல்லவை நிறைத்துத் திருப்தியாய்
    ஓங்காரனை, காங்கேயனை ஓயாது துதித்துப்
    பூங்காவென வாழ்வைப் பயமின்றித் தேடலாம்!

    குயவனைக் குவலயம் அமைத்த குருபரனின்
    தயவினைத் வேண்டித் தலைவணங்கி
    அருளினைத் தாருமென அன்பினைக் கொட்டி
    ஊழ்வினை, பாவவினை உதறிட வணங்கலாம்!

     

    Share
  • நயம் விரும்பும் மனம்!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    நயம் ஒன்றே விரும்பும் மனம்
    யெயம் காணத் துடிக்கும் தினம்
    பயமற்ற தன்னம்பிக்கைத் தூணெனும் மனம்
    சுயமழியாது காக்கும் தனம்!

    இன்ப மேகங்கள் சுகமான சுமையாய்
    அன்பின் இராகமாய் புது அனுராகமாய்
    இன்னிதழ்களின் எழில்மிகு நடனத்தில்
    மென்னகைப்பது கண்களில் நிதரிசனம்!

    வினைமனத் தினப்போரின் வில்லங்கப்
    பிணைதலில் விதி யென்று கூறிடும்
    புனையால் மனம் இறுகிடும்; இளகிய
    நினைவு இன்பம் சேர்ப்பதியல்பு!

     

    Share