பளிங்கு பளிங்கு கண்ணாடி
பளிங்கு பளிங்கு படிகம்
வெளிப்படை! உயிர் காக்கும்!
நளினம் தண்ணீர் – தெளிநீர்
தெளிப்பு சீவன்கள் கொழிப்பு!
நளினமின்றி உயிருலகு இல்லை
துளி பட்டாலும் துளிர்க்கும்
நளிவுடை நளிர் திரவம்
ஆறு, கடல், குளத்தில்
பீறும் மழையாயும், குட்டையிலும்
ஊறும் பஞ்சபூதத்தில் ஒன்று
சேறு, குற்றம் களையும்
மீறும் தீ அணைக்கும்
வீறு கொண்டு பாயும்
நீருக்குச் சிறை பனி
நீராவி குளிர, திரவம்
அசுத்தம் சிறுநீர் உப்புநீர்
அருமைப் பதநீர் தேனீர்
அழுதால் கண்ணீர் சுடுநீர்
பித்தநீர் மஞ்சள் நீர்
இளநீர் குடிநீர் பலவகை
நீர் பூமியில் 71விகிதம்
நிறமற்ற புதுமை தனித்தன்மை
திறமைப் பயன் மின்சாரம்!
(திருமதி. வேதா. இலங்காதிலகம்- டென்மார்க் இலங்கையள் 1976 லிருந்து இலங்கை வானொலிக்கு எழுதத் தொடங்கிப் பயணம்
தொடர்கிறது. இரண்டு கவிதைப் புத்தகமும் ஒரு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாய் 3 புத்தகங்கள் வெளியிட்டுள்ளேன்.
ஒரு இணையத்தளம் 4 வருடமாக இயக்குகிறேன்.- வேதாவின் வலை.
எனது நூல்களாக
2002ல் வேதாவின் கவிதைகள்- கவிதைத் தொகுப்பு
2004ல் மொழிபெயர்ப்புக் கட்டுரைத் தொகுப்பு – ”..குழந்தைகள் இளையோர் சிறக்க..”
2007ல் உணர்வுப் பூக்கள் – தொகுப்பு – இதில் எனது 69 கவிதைகளும் எனது கணவரின் கவிதகள் 43மாகத் தொகுக்கப் பட்டது. இவை மின்னூல்களாக நூலகம் டொற் ஓர்க் லும். பார்க்கலாம். பல விபரங்களும் ” எனது நூல்கள்” என்ற தலைப்பில் என் வலையிலும் காணலாம்.
1976லிருந்து இலங்கை வானொலி பூவும் பொட்டும் மங்கையர் மஞ்சரிக்குக் கவிதை எழுத ஆரம்பமானது என் எழுத்துப் பயணம்.
அதன் பின் 1987ல் டென்மார்க் வந்து டென்மார்க்கில் குழந்தைகள் ( பிள்ளைகள்) பராமரிப்புக் கல்வியை 3 வருடம் டெனிஸ் மொழியில் படித்து முடித்தேன் ”பெட்டகோ” எனும் தகுதி பெற்றேன்.
14 வருடங்கள் 3 – 12 வயதுப் பிள்ளைகளுடன் பணி புரிந்து ஒய்வு பெற்றேன். 26 வருடங்களிற்கும் மேலாக டென்மார்க்கில் வசிக்கிறேன் என் கணவருடன்.