-சுரேஜமீ

முன்னம் பெற்றவளோ
பின்னம் பிறப்பானோ
இன்னம் இவனன்றி                                      facebook
யாவரும் உறவின்றிப்
போவதும் எங்கென்பேன்?

பிறந்தால் இவன்போல்
அற்றேல் பிறந்தென்ன?
உற்றார் தாண்டி
உலகம் உறவுகொள்ள
உற்றான் இவன்!

வரும் எனக் காத்திருந்து
வந்ததல்ல வரம்
வல்லமை தாங்கிநின்று
வாழ்த்துக்கள் குவிந்ததனால்
வருமானம் கொட்டிநிற்க
வானெட்டும் புகழின்று!

தேர்வில் வெற்றிபெற்றால்
தேடிடும் வேலையிங்கே
வாழ்க்கைத் தேடலில்
வாகை சூட
வாழ்வின் பயனதன்றோ
வள்ளுவம் சொன்ன வழி!

வாழ்க நீ மார்க்
வாழ்வே வணங்க உன்னை
வாருங்கள் தலைமுறையே
வாழ்க்கையைக் கற்றிடவே
வாழ்ந்திட இவன்போல
வாழ்தலின் பொருள் விளங்க!

வாழி நீ மார்க் சுக்கெர்பெர்க்
வாழி நீ பல்லாண்டு
வாழிய தமிழ் போல!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.