-பா. ராஜசேகர்
ஆயிரம்
சொந்தங்கள்
ஆரவாரம்
செய்தாலும்…
காசு
பணம்
கை நிறைய
சேர்த்தாலும்…
வான் முழங்க
உன் புகழ்
கொடிகட்டிப்
பறந்தாலும்…
உலகமெல்லாம்
உன்
கைக்குள்
வந்தாலும்…
அதிசயங்கள்
செய்வதிலே
நீ ஆளாகிப்
போனாலும்…
தொப்புள்கொடி
உறவுன்னு
உனக்கில்லை
என்றிருந்தால்…
பத்து மாசம்
சுமப்பதற்குப்
பெத்தவளே
மறுத்திருந்தால்…
வித்தைகாட்டி
நீ நடத்தும்
நாடகத்தின்
உருவெங்கே?
பெத்தவளைப்
பட்டினியில்
தள்ளிவிடும்
நிலை நிறுத்து !
அன்னையவள்
தெய்வமாக
எண்ணுகின்ற
நிலைவேண்டாம் !
உனக்கு
அவளுயிரைப்
பங்கிட்ட
மனம் போதும் !

Leave a Reply