இறகைச் சுமக்கும் காற்று

திரிவேணி சுப்ரமணியம்
கோயம்புத்தூர்

பறவையின் எல்லை –
கூண்டு கிடையாது
பரந்த வானம்.
சிறு இறகைச் சுமக்கும்
காற்றென சுமந்து
செல்கிறோம் வாழ்வை.
நீரில் விழும் கல்
பிம்பத்தை சலனப்படுத்துகிறது.
நம் பிம்பங்களின் மீதும்
கொட்டப்படுகிறது விமர்சனக்கல்.
மனவலியின் சாயல்
படிந்து படிந்து இறகின்
சுமைதாங்காமல்
தள்ளாடுகிறது காற்று.

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *