இறகைச் சுமக்கும் காற்று
திரிவேணி சுப்ரமணியம்
கோயம்புத்தூர்
பறவையின் எல்லை –
கூண்டு கிடையாது
பரந்த வானம்.
சிறு இறகைச் சுமக்கும்
காற்றென சுமந்து
செல்கிறோம் வாழ்வை.
நீரில் விழும் கல்
பிம்பத்தை சலனப்படுத்துகிறது.
நம் பிம்பங்களின் மீதும்
கொட்டப்படுகிறது விமர்சனக்கல்.
மனவலியின் சாயல்
படிந்து படிந்து இறகின்
சுமைதாங்காமல்
தள்ளாடுகிறது காற்று.
