Tag: கிருஷ்ணகுமார்

  • கமலா வல்லப கோவிந்தா | கிருஷ்ணகுமார் | ஷ்ரேயா குமார்

    கமலா வல்லப கோவிந்தா | கிருஷ்ணகுமார் | ஷ்ரேயா குமார்

    ‘கமலா வல்லப கோவிந்தா’ என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார், ஷ்ரேயா குமார் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

    வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

    அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்ற அமுத வாசகத்தை அருளிய வடலூர் வள்ளல் பெருமான், இராமலிங்க அடிகள் இயற்றிய ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்’ என்ற வானளாவிய புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காக்கைச் சிறகினிலே நந்தலாலா

    காக்கைச் சிறகினிலே நந்தலாலா

    மகாகவி பாரதியாரின் ‘காக்கைச் சிறகினிலே நந்தலாலா’ என்ற அற்புதமான பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • லலிதா நவரத்தின மாலை

    லலிதா நவரத்தின மாலை

    லலிதா நவரத்தின மாலை, அகத்திய மாமுனிவர் அருளியது. இதில் அகத்தியர், அம்பாளை நவரத்தினங்களாக வர்ணித்துப் போற்றுகின்றார். இந்த எளிய தமிழ்ப் பாடல், பக்திச் செறிவும் அருட்பிழிவும் மிக்கது. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்துக்கு இணையாகக் கருதப் பெறுகின்றது. சக்தி வாய்ந்த இந்தப் பாடலைப் பாடுவோருக்கும் கேட்போருக்கும் சகல நன்மைகளும் கிட்டும். இந்தப் பேரிடர் காலத்தில் இதைப் பாடியும் கேட்டும் பயன் பெறுங்கள்.

    பாடியோர்: கிருஷ்ணகுமார் & ஷ்ரேயா குமார்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தன்வந்திரி மகாமந்திரம்

    தன்வந்திரி மகாமந்திரம்

    மகாவிஷ்ணுவின் அவதாரமாகப் போற்றப்படும் தன்வந்திரி, பாற்கடலைக் கடைந்தபோது தோன்றினார். இவரின் திருக்கரத்தில் உள்ள கலசத்திலிருந்து வழங்கிய அமிழ்தத்தைத் தேவர்கள் உண்டதால் நிறைவாழ்வு பெற்றார்கள். ஆயுர்வேத மருத்துவத்தின் தந்தையாக வணங்கப்பெறும் தன்வந்திரி, எல்லா நோய்களையும் அச்சங்களையும் நீக்க வல்லவர். கொரோனா அலைகளால் உலகமே துன்புறும் இக்காலத்தில், மிகச் சக்தி வாய்ந்த இந்தத் தன்வந்திரி மகாமந்திரத்தை ஜபியுங்கள். நலமும் குணமும் அருளும் திடமும் பெறுங்கள்.

    ஜபம் – கிருஷ்ணகுமார், ஷ்ரேயா குமார்
    இசை – சூர்யா நீலகண்டன்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அம்மா என்றழைக்காத உயிரில்லையே | கிருஷ்ணகுமார் குரலில்

    அம்மா என்றழைக்காத உயிரில்லையே | கிருஷ்ணகுமார் குரலில்

    இளையராஜா இசையில், வாலி வரிகளில், ரஜினி – பண்டரிபாய் நடிப்பில், உலகப் புகழ்பெற்ற, அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். இந்த அன்னையர் தினத்தைக் கொண்டாடுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குரு கிருபை | தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி

    குரு கிருபை | தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி

    தபோவனம் சத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றி, பூஜ்யஸ்ரீ முரளீதர சுவாமிகள் இயற்றிய ‘குரு கிருபை இல்லாமல் ஹரி கிருபை இல்லை’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். குருவருளும் திருவருளும் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • போற்றுவேன் போற்றுவேன் | அண்ணாகண்ணன் பாடல்

    போற்றுவேன் போற்றுவேன் | அண்ணாகண்ணன் பாடல்

    எந்தச் சுப நிகழ்ச்சியிலும் பாடத்தக்க வகையில் நான் இயற்றிய ‘போற்றுவேன் போற்றுவேன்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார், ராகமாலிகையாக இசையமைத்துப் பாடியுள்ளார். கண்டும் கேட்டும் மகிழுங்கள்.

    This is my first ‘lyric video’.

    போற்றுவேன் போற்றுவேன்

    போற்றுவேன் போற்றுவேன் பூவென, பொன்னென
    போற்றுவேன் போற்றுவேன் பொலிவென, வலிவென
    போற்றுவேன் போற்றுவேன் தேனென, மின்னென
    போற்றுவேன் போற்றுவேன் வானென, மீனென

    போற்றுவேன் போற்றுவேன் அழகென, சுடரென
    போற்றுவேன் போற்றுவேன் அமுதென, வடிவென
    போற்றுவேன் போற்றுவேன் விடிவென, விடையென
    போற்றுவேன் போற்றுவேன் உலகென, உயிரென

    போற்றுவேன் போற்றுவேன் நீரென, நிலமென
    போற்றுவேன் போற்றுவேன் சீரென, சாறென
    போற்றுவேன் போற்றுவேன் வேரென, வீறென
    போற்றுவேன் போற்றுவேன் ஆறென, நூறென

    போற்றுவேன் போற்றுவேன் தாயென, தந்தையென
    போற்றுவேன் போற்றுவேன் வாழ்வென, வண்ணமென
    போற்றுவேன் போற்றுவேன் விதையென, விளைவென
    போற்றுவேன் போற்றுவேன் வினையென, வெற்றியென

    போற்றுவேன் போற்றுவேன் தமிழென, செயலென
    போற்றுவேன் போற்றுவேன் கருவென, திருவென
    போற்றுவேன் போற்றுவேன் நுண்ணென, விரிவென
    போற்றுவேன் போற்றுவேன் கண்ணென, கருத்தென

    போற்றுவேன் போற்றுவேன் கதிரென, நிலவென
    போற்றுவேன் போற்றுவேன் கவியென, இசையென
    போற்றுவேன் போற்றுவேன் புதிதென, இனிதென
    போற்றுவேன் போற்றுவேன் மிகமிக மிகமிக.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மீனாட்சி திருக்கல்யாணம் | கிருஷ்ணகுமார்

    மீனாட்சி திருக்கல்யாணம் | கிருஷ்ணகுமார்

    மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், அண்மையில் நடைபெற்றது. இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பானது. பக்தர்கள் வீட்டிலிருந்தே கண்டு வழிபட்டனர். மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, கண்ணன் கணேசன் எழுதிய பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் பாடக் கேளுங்கள். மாணிக்கவல்லி மரகதவல்லி அன்னை மீனாட்சி அருள்விழியின் கருணை மழையில் நனையுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஆலயம் அருளாலயம் – தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி

    ஆலயம் அருளாலயம் – தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி

    சித்திரா பவுர்ணமியில் குருவை வணங்குவது மரபு. அந்த வகையில், தபோவனம் சத்குரு ஞானானந்த கிரி சுவாமிகளைப் பற்றி, ஜி.எஸ்.மணி இயற்றிய ‘ஆலயம் அருளாலயம்’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். குருவருள் பெறுங்கள்.

    ராகம் – திலங்
    தாளம் – ஆதி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ராம நாமமே துதி மனமே!

    ராம நாமமே துதி மனமே!

    தஞ்சாவூர் சங்கர ஐயர் இயற்றிய ராம நாமமே துதி மனமே என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். ராம நாமத்தை ஜபியுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வால்மீகியின் இராம காதை – எளிய பாடலாக

    வால்மீகியின் இராம காதை – எளிய பாடலாக

    மூல வடிவமான வால்மீகி இராமாயணத்தை எளிய தமிழ்ப் பாடலாக நமக்கு வழங்குகிறார், கான பிரம்மம் கிருஷ்ணகுமார். கேட்டு மகிழுங்கள். இந்த இராம நவமியில் அண்ணல் இராமபிரான் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சீதம்மா மாயம்மா | தியாகராஜர் கிருதி | கிருஷ்ணகுமார் குரலில்

    சீதம்மா மாயம்மா | தியாகராஜர் கிருதி | கிருஷ்ணகுமார் குரலில்

    இராம நவமியை முன்னிட்டு, தியாகராஜர் கிருதியான ‘சீதம்மா மாயம்மா’ என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். இராமபிரான் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள்

    தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள்

    ஞானானந்தகிரி சுவாமிகள், ஓர் அத்வைத வேதாந்தி. ஆதிசங்கரர் இந்தியாவில் உருவாக்கிய நான்கு அத்வைத மடங்களுள் ஒன்றான ஜோதிர்மடத்தின் பீடாதிபதியாக விளங்கியவர். இமயமலையில் தவமியற்றி, கங்கோத்ரியில் பல ஆண்டுகளைக் கழித்த ஞானானந்தர், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றதோடு, திபெத், நேபாளம், இலங்கை, மலேசியா முதலிய இடங்களுக்கும் சென்று வந்தார்.

    திருக்கோவிலூருக்கு அருகில் தபோவனம் ஒன்றை ஏற்படுத்தி, பக்தர்களுக்கு வழிகாட்டினார். நாம சங்கீர்த்தனத்தில் பெரிதும் ஆர்வமுடைய ஞானானந்தரைப் பின்பற்றி இன்றளவும் இவர்தம் சீடர்கள் பஜனைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். இவரைப் பற்றிய ‘அன்பே ஆரமுதே அருட்கடலே’ என்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். குருவருளும் திருவருளும் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சந்திர சேகரேந்திர சரஸ்வதியே சரணம்

    சந்திர சேகரேந்திர சரஸ்வதியே சரணம்

    சந்திர சேகரேந்திர சரஸ்வதியே சரணம்
    காஞ்சிவாழ் தயாநிதியே

    என்ற பாடலைக் கான பிரம்மம் கிருஷ்ணகுமார் குரலில் கேளுங்கள். காஞ்சி மகான் அருள் பெறுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share