Tag: வல்லமையாளர்

  • வல்லமையாளர்!

     

    திவாகர்

    நம் நாட்டில் ‘சிஸ்டம்’ சரியில்லை என்ற குற்றச்சாட்டு அடிக்கடி வருவதுண்டு. இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை ஏராளமாக உண்டு. இது மிகப் பெரிய குறைதான். பல மேலை நாடுகளில் ‘சிஸ்டம்’ சரிவரப் பயன்படுத்தப்படும்போது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மட்டும் ஏன் இந்த ‘சிஸ்டம்’ சரிவரப் பயன்படுத்தப்படவில்லை என்றால் பொதுவான காரணமாக அரசியல்வாதிகளையும், ஆட்சி செய்யும் அதிகாரிகளையும் அவர்களை ஆதரித்து வ்ரும் சமூகக் கூட்டத்தையும் உதாரணமாகக் காட்டுவார்கள். நம்மால் இந்த ஒழுங்கான இந்த ‘வரைமுறைக்குள்’ செயல்படமுடியாதா என்ற பயம் அவ்வப்போது நடுநிலைப் பார்வையாளருக்கு எழத்தான் செய்யும்.

    இந்த சிஸ்டம் என்கிற வரைமுறை இந்தியாவில் முழுவதுமாக செயலழிந்து போனால் நாசம்தான் ஏற்படும். ஆனால் ஆண்டவன் கருணையால் இந்த நாசம் நம்மை நாசமாக்கும்போதெல்லால், இந்தியாவின் நீதித் துறை விழிப்போடு செயல்பட்டு நம்மை மறுபடியும் சமநிலைக்குக் கொண்டு வருகின்றது. இதற்கு எத்தனையோ உதாரணங்களைக் காண்பிக்கலாம்

    நீதிபதிகள் என வரும்போது சில கடமைகள் அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றன என்பதும் விருப்பு வெறுப்பு என்பது ஒவ்வாத விஷயம் என்பதும் நம் நாட்டு நீதிபதிகளுக்கு நன்றாகத் தெரியும். ஓ.. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.. நீதிபதிகள் எல்லோருமே ஒழுங்கானவர்கள்தானா என்ற கேள்விகள் கூட எழ்லாம். ஆனால் எங்கோ ஓரிரண்டு விஷயங்களை நாம் தவிர்த்துப் பார்க்கும்போதெல்லாம் நம் நாட்டு நீதிபதிகள் தங்கள் பணிக்ளைச் செவ்வனே செய்து வருகிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

    ஒரு கால கட்டத்தில் பல கொள்ளை கொலை செய்தவர்களுக்கு வாதாடி இருக்கும் வக்கீல்கள் எல்லாம் கூட நீதிபதியாக வந்தவுடன் அந்த நியாயஸ்தானத்தில் அமரும்போது தான் நீதிக்கு மட்டுமே தலை வணங்க வேண்டியவர்கள் என்பதை அறிவார்கள். ஒரு சினிமாவில் வசனம் கூட வந்தது. கிரிமினல் குற்றவாளிகளின் வக்கீல் காலப்போக்கில் நீதிபதியாகிறார். அவர் வாதம் செய்துகொண்டிருந்த காலத்தில் ஒரு பொய்யான வழக்கில் கதாநாயகன் ஜோடிக்கப்பட்டு சாட்சியாதாரத்தினால் சிறைக்குச் சென்று வருகிறான். வெளியில் வந்த பிறகு அவன் எதேச்சையாகப் பார்க்கும்போது தன்னை எதிர்த்து அநியாயமாக வாதாடிய வக்கீல் நீதிபதியாக நியமனம் ஆகிறார். இது என்ன நியாயம் என்பது அவன் கேள்வி, ஏனெனில் அந்த இருவருக்குமே தெரியும் நாயகன் அப்பாவி என்பது. அதனால் தைரியமாகக் கேட்கிறான் – அநியாயத்துக்குத் துணை போனவனிடம் நியாயத்துக்கான நீதி கிடைக்குமா?, அதற்கு அந்தப் புதிய நீதிபதி அவனைக் கருண்யோடு பார்த்துச் சொல்வார் – ‘நண்பா.. நான் வக்கீலாக இருக்கும்போது வெறும் கல்லாக இருந்தேன்.. கல் யார் கையில் கிடைத்தாலும் என்னைக் கையாளலாம். அது கல்லான வக்கீலின் தர்ம்ம கூட, ஆனால் இப்போது கல்லால் செதுக்கப்பட்ட சிலையாக, நீதிக்கு நாயகனாக எல்லோரும் மதிக்கும்படியான நிலையில் இருக்கிறேன். என்னிடம் நியாயம் கேட்டு வரும் எல்லோருக்கும் நியாயமான முறையில் நீதி கிடைக்கச் செய்ய வேண்டியதுதான் என்னுடைய தர்மம், என்பார் – (படம் – ரிக்‌ஷாக்காரன், எம்ஜீயார், மேஜர் சுந்தர்ராஜன்)

    உண்மைதான் தெய்வத்துக்கு சமானமாகத்தான் நீதிபதிகளை மக்களும் மதிக்கிறார்கள். இப்படிப்பட்ட நீதிபதியாக ஒருவரைத் தன் முடிவின் மறுபக்கம்’எனும் கதையில் இந்த வாரம் கொண்டு வந்துள்ளார் ஸ்ரீமதி ஸ்ரீஜா வெங்கடேஷ். நீதிபதியானவர் எப்படி தன் வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டும் என்றும் விளக்குகிறார். ஒரு ‘சிஸ்டம்’ வேலை செய்யாத இந்த ஜனநாயகத் திருநாட்டில் இப்படியெல்லாம் இந்தக் கால நீதிபதிகள் சிந்தனை செய்கிறார்களே என்ற ஒரு எண்ணமும், அந்தப் பாத்திரத்தைப் படைத்த ஸ்ரீஜா வெங்கடேஷ் அவர்களைப் பாராட்டியும் இந்த வார வல்லமை விருதினை அவர்களுக்கு வல்லமைக் குழு சார்பில் வழங்கப்படுகிறது. ஸ்ரீஜா அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா::ஹ்ரிகி அவர்களின் பாஞ்சாலி சபதம் உரை வல்லமையாக வலம் வந்து கொண்டிருக்கும் வேளை இது. நம் பாண்டியன் பாரதத்தில் வரும் கட்டத்தை பாண்டியதேசத்தில் பிறந்த பாரதி நெஞ்சை நிமிர்த்தி உரைக்கும் வரிகள்.

    பொற்கொடி சேதியர் கோமகன் வந்துதொடுத்ததும்
    உற்றதோர் தம்பிக்குத் தென்னவன் மார்பணி தந்ததும் –

    சேதியர்கோன் (சேதிநாட்டு அரசன்) சிசுபாலன் கண்ணனுக்கு உறவு, தென்னவனோ நமக்கு உறவு,,
    தொடர்ந்து பாரதியின் அமுதத் துளிகளை அள்ளி வழங்கி வரும் ஹரிகி அவர்களுக்கு நன்றி!!

    Share
  • வல்லமையாளர்!

     

    திவாகர்

    வாள்முனைக் குளே இருந்து நூல் முனைக்கு
    வித்தெடுத்த மன்னந்தனைப் பாடு மனமே
    கோகுலத்தில் லீலை செய்து போர்முகத்தில்
    கீதை சொன்ன கோகுலனைப் பாடு மனமே
    வேத ஞான மாம்பழத்தில் கீதை என்ற சாறு
    பெய்த வித்தகத்தைப் பாடு உள்ளமே
    விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் பண்ணளந்து
    கீதை சொன்ன வித்தகனைப்பாடு மனமே
    ஆதிமூலம் வேதமூலம் நாதமூலம்
    கீதமூலம் அந்தமூலம் பாடு உள்ளமே!

    கண்ணதாசனின் வைரவரிகள் இத்தனையும்.

     பஜகோவிந்தம் தமிழாக்கத்தில் தன் மனதில் கீதை பற்றி தோன்றியபோதெல்லாம் அந்தப் பாடலுக்கு தோதாக கீதையைத்தான் முன்வைப்பான் இந்த தமிழ்த்தாயின் தவப்புதல்வன்.

    கீதை உலகத் தத்துவத்துக்கெல்லாம் மூல தத்துவம்தான். எந்த மதத்தின் தத்துவத்துள்ளும் கீதையின் ஆதாரத்தைப் பெறலாம். அதுதான் கீதையின் தனித்துவம். கீதையில் இல்லாதது இவ்வுலகில் இல்லை. இவ்வுலகில் இருப்பதெல்லாம் இருந்ததெல்லாம் இருக்கப்போவதெல்லாம் கூட கீதையில் ஏற்கனவே கொடுக்கப்பட்டதுதான்.

    கண்ணன் இந்த உலகில் அவதாரம் செய்ததற்கு எத்தனையோ காரணங்கள நம் பெரியவர்கள் சொல்லிக்கொண்டிருந்தாலும் முக்கியமான காரணம் இவ்வுலகுக்கு நல்வாழ்வு கொடுக்க கீதை எனும் கொடை கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவன் அவதாரம் செய்தான் என்றும் சொல்லலாம்.

    அப்படிப்பட்ட கீதையை எல்லோருக்கும் புரியும் வண்ணம் சொல்லிவரும் சிரிப்பானந்தாவான ஹாஹோ எனும் திரு சம்பத் அவர்கள் பாராட்டப்படவேண்டியவர். கீதை நகைச்சுவையாக சொல்லக்கூட நம் பயன்பாட்டுக்கு வருகிறது என்பதே கீதையின் பெருமை என்பதற்கு சம்பத் அவர்கள் எழுத்துக்களே உதாரணம்..
    http://www.vallamai.com/paragraphs/26798/

    ”அட! கீதையானது போர் ஆரம்பமான அன்றே அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டு விட்டது. ஆனால் திருதராஷ்ட்டிரர் சஞ்சயனிடத்து கேட்பது பத்து நாள் போர் முடிவிலேதான். அதாவது பத்தாம் நாள் போரிலே பீஷ்மர் அர்ஜுனனால் அம்புப் படுக்கையில் கிடத்தப் படுகிறார். அது தீராத சோகத்தைத் திருதராஷ்ட்டிரருக்கு ஏற்படுத்தி விடுகிறது. ‘போர் ஆரம்பம் முதல் என்ன நடந்தது என்பதை உனது விசேஷ சக்தியைப் பயன்படுத்தி எனக்குச் சொல்’, என சஞ்சயனிடத்தில் கேட்கிறார் . அதனால்தான் திருதராஷ்டிரர், ‘தர்மபூமியாகிய குருசேத்திரத்தில் கூடி நின்ற என்னவர்களும், பாண்டவர்களும் (பத்து நாட்கள் முன்பு) என்ன செய்தார்கள் சஞ்சயா?’, எனக் கேட்கிறார். இப்போது புரிகிறதா சாதாரணீ?”, என்று கேட்டார் ஹாஹோ.

    “நல்ல வேளை, அவர் அப்படித் திரும்பக் கேட்காமல் போயிருந்தால் நமக்கு இந்தஅற்புதக் கீதையே கிடைக்காமல் போயிருக்கும் அல்லவா?”, என்றார் சமூகன்.

    “ஆமாம் .. ஆமாம்..கிடைக்காமலே போயிருக்கும்!”, என்றார் ஆமாம்பிரபு.

    “அதான் கெடைச்சுடிச்சில்ல, சட்டுனு அடுத்த ஸ்லோகத்துக்கு போங்களேன்!”, என்று அவசரப் படுத்தினார் அவசரகுமார்.

    “பாண்டவர்களுடைய படையைப் பார்த்து விட்டு படைத்தளபதி துரோணாச்சாரியாரிடம் ராஜா துரியோதனன் இப்படிக் கூறலானான், இது இரண்டாவது ஸ்லோகம். துரியோதனனின் குரு துரோணர், ஆனால் இப்போது அவர்கள் குரு சிஷ்யராக இருக்கவில்லை. துரியோதனன் ராஜா, துரோணர் படைத் தளபதி அவ்வளவே! அதாவது இங்கு படையை நடத்திச் செல்ல, போர்த்திட்டங்கள் வகுக்க அதைச் செயல்படுத்த துரோணனருக்கு அதிகாரம் உண்டே தவிர இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் துரியோதனனுக்கே, என்று வலியுறுத்தவே ராஜா துரியோதனன் என்கிறார்”, இப்படிச் சொன்னார் ஹாஹோ.

    “அப்புடின்னா சிஷ்யனா இருந்தப்ப எடுத்த ட்ரில்லுக்கெல்லாம், வட்டியும் முதலுமாச் சேர்த்து துரோணரை இப்போ ட்ரில் எடுக்கலாம் துரியோதனன்!”, என்று சொல்லிவிட்டு உரத்த குரலில் சிரித்தது தமாசு.

    “துரோணர் தன்னோட பெரிய தாடியோட போர்க்களத்துல தோப்புக் கரணம் போட்டா தமாஷா இருக்குமில்ல?”, என்றான் மக்கான்.

    “நம்ம ஹாஹோ கூட பெரிய தாடியோட இருகார், உனக்கு ஆசையா இருந்தா அவரை தோப்புக் கரணம் போடச்சொல்லேன்”, என்றது தமாசு மக்கானைப் பார்த்து.

    பாமரரும் புரியும் வண்ணம் கீதை எடுத்துச் சொல்லப்படவேண்டும், சிரிக்க சிரிக்கச் சொன்னாலும் கடைசியில் கீதை பற்றிய சிந்தனை மட்டுமே அங்கே மூளையில் பதிவாகும் வண்ணம் எழுதிவரும் ‘சிரிப்பானந்தா’ என்கிற ஹாஹோ சம்பத் அவர்களை இவ்வார வல்லமையாளராக தேர்ந்தெடுப்பதில் வல்லமை குழு பெருமையடைகிறது. அவருக்கு நம் நல்வாழ்த்துகள்.”

    கடைசி பாரா:

    இவ்வாரக் கடைசி பாராவில் வருபவர் திரு தி.ந. இளங்கோவன். மனதில் தேடி வந்து தைத்து விட்டுப் போன கவிதை இது. திரு இளங்கோவுக்கு நம் வாழ்த்துகள்.

    காதலில் அலையும் மனம் போல்
    உன்னுடன் எங்கும் திரிந்தேன் நான்.
    பிறிதொரு நாள் எனக்கென்று ஒரு பார்வை, ரசனை.
    வேறுபட்டதாய், உன்னில் முற்றிலும் மாறுபட்டதாய்…
    உன்னில் ஒரு அங்கமாய் நானிருந்த நாட்கள் போய்
    நான் என்னைப் பெற்ற வலி மிகுந்த காலமது…

    Share