Tag: இணையத் தமிழ்

  • Q & A: எங்கே புத்தாக்கம்? – அண்ணாகண்ணன் பதில்கள்

    அண்ணாகண்ணன்

    தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில் உரையாற்றினேன். இதைத் தொடர்ந்து, ஆய்வாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தேன். இதில் பேராசிரியர்கள் உமாராஜ், சிதம்பரம், துரை.மணிகண்டன், மென்பொருளாளர் நீச்சல்காரன், யாழ்பாவாணன், எட்வர்டு பாக்கியராஜ், ஆய்வு மாணவர் தமிழ் பாரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்தக் கேள்வி – பதில் அமர்வை, இந்தப் பதிவில் காணலாம்.

     

    09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு தொடங்கி நடைபெற்றது.

    நன்றி: முனைவர் துரை.மணிகண்டன், தமிழ் இணையக் கழகம்

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை

    தமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை

    தமிழ் இணையக் கழகத்தின் இணையத் தமிழ்ச் சொற்பொழிவுத் தொடரில் ‘எங்கே புத்தாக்கம்?’ என்ற தலைப்பில், வல்லமை ஆசிரியர் முனைவர் அண்ணாகண்ணன் உரையாற்றுகிறார். 09.08.2020 அன்று இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு Teamlink செயலி ஊடாக இந்த அமர்வு நடைபெறுகிறது. Teamlink ID 5526828256. வாய்ப்புள்ள அன்பர்கள் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

     

     

    Share
  • குருஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரிப் பயிலரங்கில் எனது உரை

    குருஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரிப் பயிலரங்கில் எனது உரை

    அண்ணாகண்ணன்
     
    கர்ணன் கவச குண்டலத்துடன் பிறந்தது போல், இந்தத் தலைமுறையில் பிறந்த நீங்கள் ஒவ்வொருவரும் அறிவியலுடனும் தொழில்நுட்பத்துடனும் பிறந்துள்ளீர்கள் என்று என் உரையைத் தொடங்கினேன்.
     
    சென்னை, வேப்பேரியில் உள்ள குருஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவை சார்பில் 20.02.2020 அன்று நடைபெற்ற பயிலரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். இணையமும் தமிழ்ப் பயன்பாடும் என்ற தலைப்பில் ஓர் அமர்வை நடத்தினேன். கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஹெலன், நிகழ்வைத் திட்டமிட்டு நடத்தினார். பேரவையின் செயலாளர் பூஜா எனக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
     
     
    அரங்கில் மாணவியர் இருவரை அழைத்து, அவர்களின் செல்பேசியில் குரல்வழியே தட்டச்சு செய்ய வைத்தேன். இணையத்தை அவரவர் தாய்மொழியில் அணுக வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தேன். இணையத்தில் தமிழுக்கு உள்ள வாய்ப்புகளை விளக்கினேன்.
     
     
    கணித்தமிழ்ப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்குச் சான்றிதழ்களை வழங்கினேன். நிகழ்ச்சி முடிந்த பிறகும் மாணவியர் தங்கள் கேள்விகளைத் தொடுத்து உரையாடினர்.
    Share
  • குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்

    குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியில்

    அண்ணாகண்ணன்

    20.02.2020 அன்று சென்னை வேப்பேரி குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின் மகளிர் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவையில் உரையாற்றுகிறேன். 

    வாய்ப்புள்ளோர் வருக.

    Share