Tag: உ. சீர்காழி செல்வராஜூ

  • பூக்களைப் பறியுங்கள்!

    சீர்காழி உ. செல்வராஜு

    புதைந்து செரிந்த புலனெறி வழக்கங்கள்
    புதைபொருள் போலப் புராணங்கள் பற்பல!                                        roses for பூக்களைப் பறிக்காதீர் கவிதை
    பூத்துக் குலுங்கும் சொற்பூக்கள் ஏராளம்
    பூஞ்சோலை போன்றதே பைந்தமிழைப் பாரீரோ?

    எதுகையும் மோனையும் எழிலாய் மின்னிடும்!
    எழுத்துகள் யாவையும் எக்காலும் இனித்திடும்!
    ஆடலாய்ப் பாடலாய் ஆகமங்கள் கமழ்ந்திடும்!
    ஆலம் விழுதுபோல் அத்தனையும் தோரணங்கள்!

    கலையும் சுவையும் இரண்டறக் கலந்த
    கன்னித் தமிழோ கவிநயம் புகட்டிடும்!
    காப்பியப் படைப்புகள் கண்முன் நிறுத்திடும்
    காலத்தால் அழியாக் கலைச்சொற்கள் பாரீரோ?

    எளிதில் புரிந்திடவே எடுத்தாள்வோம் புதுமுறையில்
    எங்கெங்கும் மணம்வீச எழுத்துப்பணி செய்திடுவோம்!
    புலமையோர் ஆக்கங்கள் புதுமை படைத்திடவே
    புவியெங்கும் பரப்பிடுவோம் பூக்களைப் பறியுங்கள்!!

    Share
  • அன்னையின் கருணை!

    -சீர்காழி உ. செல்வராஜு

    அன்னையின் கருணை அமுதம் போன்றது

    அன்பே தாயென வடிவம் பெற்றதுmother and a child

    உயிரைக் காத்திடும் பண்பில் உயர்ந்தது

    உறவே நிறையென உள்ளம் நிறைந்தது!

     

    வாழ்வின் தத்துவம் சொல்லித் தந்தது

    வாழ்வே கலையென வகுத்துச் சொன்னது

    உணர்வைச் செதுக்கிடும் மகிமை வாய்ந்தது

    உழைப்பே உயர்வென ஊக்கம் படைத்தது!

     

    பசியில் பகிர்ந்திடக் கற்றுத் தந்திடும்

    பரிவே மூச்சென மலரச் செய்திடும்

    இனிய சொற்களைப் பேச வைத்திடும்

    இல்லமே கோயிலென உணரச் செய்திடும்!

     

    வினாக்கள் பற்பல விடைகள் கிடைத்திடும்

    விதியே இன்றி வினோதம் படைத்திடும்

    நிழலாய் ஒளியாய் நிலையாய்க் காத்திடும்

    நினைந்தே நெஞ்சம் நிம்மதி பெற்றிடும்!

     

    கருணை உள்ளம் கண்களில் மின்னிடும்

    கண்களில் கண்ணீர்ச் சொரிந்து வடிந்திடும்

    தேகம் வளர்ந்திடத் தேனாய்ச் சுரந்திடும்

    தேறிட மனமோ அம்மா என்றிடும்.

     

    Share