Tag: எம் எஸ் லட்சுமணன்

  • வாடிக்கையாளரை அதிர்ச்சியில் உறையவைத்த பொதுத்துறை வங்கி

    வாடிக்கையாளரை அதிர்ச்சியில் உறையவைத்த பொதுத்துறை வங்கி

    எம். எஸ். லட்சுமணன், காரைக்குடி

    வங்கி வாடிக்கையாளர் விழிப்புணர்வு பதிவு 

    நண்பர்களே சில நாட்களுக்கு முன்பாக காரைக்குடியில் கல்லூரி சாலையில் உள்ள பொதுத்துறை வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ள நான் என்னுடைய கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக வங்கியின் ஏடிஎம் பிரிவிற்கு சென்றிருந்தேன்.

    ஏடிஎம் வழியாக பணம் எடுக்க முயற்சி செய்தபோது பணம் வரவில்லை. என்னுடைய பாஸ்வேர்டு கொடுத்து, OTP கொடுத்து என அனைத்தையும் கொடுத்த பிறகும் பணம் வெளியாகவில்லை.

    PLEASE CONTACT YOUR BRANCH என்று அதனில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. . மேலும் எனது இணையத்தின் வழியாக (NET BANKING)  வங்கி கணக்கை ஆப்ரேட் செய்ய முயற்சி செய்தபோது, FREEZE ACCOUNT FREEZE என்று வந்தது.

    இதனைத்தொடர்ந்து வங்கியின் மேலாளர் அவர்களை சென்று சந்தித்தேன். தங்களுடைய ஆவணங்கள் எதுவுமே எங்களுடைய வங்கியில் இல்லை. எனவே உங்களது அக்கவுண்ட்டை நாங்கள் FREEZE செய்துள்ளோம். அதுவும் CENTRALIZE ஆக  இதுபோன்று  செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    கடந்த 20 ஆண்டுகளாக நான் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளேன். எனக்கு எந்தவிதமான கடனும் அந்த வங்கியில் இல்லை. அப்படி இருக்கும் பொழுது எனது வங்கிக் கணக்கை பிரீஸ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

    பலமுறை நான் அவர்களுக்கு ஆவணங்களை நேரில் சென்று கொடுத்துள்ளேன். ஆனால் அவர்களோ சர்வசாதாரணமாக இதுபோன்று ஒரு அதிர்ச்சியான தகவலை என்னிடம் தெரிவித்தார்கள்.

    நான் முக்கியமான ஒரு மருத்துவ செலவுக்காக மருத்துவமனையில் இருந்து தான் ஏடிஎம் மூலம் பணம் எடுத்து கொடுப்பதற்காக சென்று இருந்தேன். ஆனால் இணையத்தின் வழியாகவும் எனது வங்கிக் கணக்கை இயக்க முடியவில்லை. ஏடிஎம்மில் இருந்தும் பணம்  எடுக்க முடியும் முடியவில்லை.

    முக்கியமான மருத்துவ செலவுக்கு கூட எனது அக்கவுண்டில் இருந்து எனது பணத்தை எடுப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதுதொடர்பாக வங்கி மேலாளரை நேரில் சந்தித்து கேட்டேன். மேலாளர் அவர்களோ  மிக அலட்சியமாக ஆயிரக்கணக்கான வங்கிக் கணக்குகளை நாங்கள் இது போல் ஃப்ரீஸ் செய்து உள்ளோம்.என்று கூறினார்.

    தங்களது ஆவணங்கள் எதுவுமே எங்களது வங்கியில் இல்லை. எனவே ஆவணத்தை கொடுங்கள். freeze செய்ததை  எடுத்து விடுகிறோம் என்று தெரிவித்தார் ஆவணம் பலமுறை அந்த வங்கிக்கு நான் நேரில் சென்று கொடுத்துள்ளேன்.

    அந்த ஆவணங்களை என்ன செய்தார்கள் என்பதே தெரியவில்லை.ஆவணங்கள் இல்லாமல்  இருக்க வாய்ப்பில்லை. ஆவணங்கள் இல்லை என்றால் மெயில் வழியாக, மொபைல் வழியாக  எனக்கு ஒரு தகவல் தெரிவித்து , குறிப்பிட்ட நாட்கள் கொடுக்க  கேட்டிருக்கவேண்டும்.

    ஏனென்றால் எனக்கு இணையத்தின் வழியாக அங்கே கணக்கு ஆப்பரேட் செய்யப்படுகிறது. எனவே எனது மெயில் அவர்களிடம் உள்ளது. மேலும் எனது மொபைல் நம்பரும் அவர்களிடம் உள்ளது.

    மொபைல் நம்பரில் ஒரு மெசேஜ் கொடுத்து அல்லது மெயிலில் ஒரு மெசேஜ் கொடுத்து எத்தனை நாளுக்குள் நீங்கள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்திருக்கலாம்.

    ஆனால் அவர்களோ எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் அக்கவுண்ட் FREEZE  செய்து விட்டார்கள்.  இதை நான் ஒரு முக்கியமான வெளியூர் பயணத்தில் இருக்கும்போது ,   குறிப்பாக மும்பை, டெல்லி என்று வேறு மாநிலங்களில் பயணிக்கும் பொழுது , எனது வங்கி கணக்கில் போதிய அளவு பணம் இருந்தும் ,நானே  பணம் எடுக்க முடியவில்லை என்றால் எனது நிலைமை என்னவென்று  யோசியுங்கள்.

    முக்கியமான மருத்துவ செலவிற்கு அன்று என்னால் பணம் எடுத்து செலவுக்கு கொடுக்க இயலவில்லை.  நான் மேலாளரை சந்தித்து மேலாளரிடம் உங்களுக்கு என்ன ஆவணம் வேண்டுமோ அதனை ஈமெயில் வழியாகவும், மெசேஜ் வழியாகவும் எனக்கு தெரிவியுங்கள். நான் அவற்றை எடுத்து வந்து தந்து விடுகின்றேன்.என்று கூறினேன்.

    ஆனால் இப்பொழுது எனது கணக்கை எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் ஃப்ரீஸ் செய்ததை வன்மையாக ஆட்சேபித்து  பதிவு செய்கின்றேன் என்று அவரிடம் கூறினேன்.

    எனவே  எனது கணக்கை தற்பொழுது freeze இல்  இருந்து எடுத்து விடுமாறு  அன்போடு கேட்டுக் கொண்டேன். சில மணி நேரங்கள் அவரிடம் பேசிய பிறகு அவர் எனது கணக்கை ஆக்டிவேட் செய்தார்கள்.

    பலமுறை நான் ஆவணங்கள் கொடுத்தும் அதனை வங்கியின் இணையத்தில் ஏற்றாதது அவர்களுடைய தவறு தானே தவிர  அது எனது தவறு கிடையாது.

    ஆனால் முக்கியமான கட்டத்தில் வங்கியில் முன்பு கொடுத்த ஆவணங்கள்  இல்லை என்பதற்காக கணக்கை freeeze  செய்தது மிகவும் தவறானது  என்பதை பதிவு செய்துவிட்டு வந்தேன்.

    பொதுத்துறை வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு உங்களுடைய கணக்குகள் ஃப்ரீஸ் ஆகி இருந்தால் அதனை சரி செய்து கொள்ளுமாறு இந்த தகவலின் மூலமாக அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    நன்றி

    Share
  • வீட்டுக் கடனில் வங்கிகளின் உள்குத்து

    எம். எஸ். லட்சுமணன்
    காரைக்குடி 

    கடன் வாங்காதவர்கள் வங்கிச் சட்டத்தின்படி, வட்டி அதிகம் கட்ட வேண்டியவர்கள்.

    ரெபோ ரேட் படி வட்டியைக் குறைக்க மறுக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி.

    வீட்டுக் கடன் வாங்கப் போகிறீர்களா? மக்களே உஷார்! உஷார்! பகுதி 2!

    விழிப்புணர்வுப் பதிவு

    நண்பர்களே சமீபத்தில் வீட்டுக் கடன் வாங்கி  ஒரு வருடமாக மீளக்கட்டி வருகின்றேன்.  நான் வீட்டுக் கடன் வாங்கச் செல்லும்பொழுது வங்கி சார்ந்து எனக்கு எந்தவிதமான கடனுமே  இல்லை. இதனால் என்ன நன்மை இல்லாத விஷயம் நடக்கும் என்று நினைக்கின்றீர்களா?  நடந்த விஷயத்தைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கும்.

    கடந்த ஓராண்டாக ரெப்போ ரேட் எனப்படும் வங்கி வட்டியானது 6.65 என்றும்,வங்கி வீட்டுக் கடன் 6.5 முதல் 6.65 வரைதான் என்று இருக்கின்றது. தேசியமயமாக்கப்பட்ட பாரத வங்கியில் தற்போது வழங்கப்படும் வீட்டுக் கடனுக்கான வட்டி 6.70 மட்டுமே. ஆனால் எனக்கான வட்டியானது 7.30 என்று நடந்துகொண்டிருக்கின்றது .இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு நாள் இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டு வங்கிக்குச் சென்று, எனது வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்துக் கொடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். வங்கி மேலாளரிடம் இருந்தும், வீட்டுக்கடன் பிரிவு பார்ப்பவரிடம் இருந்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை.

    ஒரு மாதத்தில் இரண்டு மூன்று முறை நானும் நேரில் சென்று கேட்டேன். எந்தவிதமான பதிலும் இல்லை. மீண்டும் ஒருநாள் வங்கிக்கு நேரில் சென்று நான் அருகில் உள்ள தேசிய  வங்கிக்கு எனது வீட்டுக்கடனை மாற்றினால் 6.50 வட்டியில் கடன்   தருவதாகக் கூறுகின்றனர். எனவே நான் அங்கு செல்கின்றேன் என்று கூறினேன். அதனைக் கேட்டவுடன் வங்கியின் மேலாளர் ஓராண்டாக எந்தவிதமான ஜம்பும்  இல்லாமல் பணத்தைச் செலுத்தி வருகிறீர்கள். எனவே எனது மேலதிகாரிகளிடம் கேட்கிறேன் என்று மூன்று மேலதிகாரிகளிடம் இது தொடர்பான தகவலை என் முன்பே கேட்டார்கள். அவர்களும் வட்டியை 6.80 ஆக மாற்றிக் கொடுக்கலாம் என்றும், அதற்காக படிவங்களில் கையெழுத்துப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும், அதற்கான ரூபாய் 2000 பிளஸ் ஜிஎஸ்டி 360 ரூபாய்க்கான வித்ட்ராயில் சலனும் பூர்த்தி செய்து கையெழுத்துப் பெற்று கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார்கள்.

    அன்று இரவு மற்றொரு தேசிய  வங்கியின் மேலாளர் என்னிடம் பேசும்பொழுது, நான் ஏற்கெனவே கடன் பெற்றுள்ள வங்கியிலேயே எனக்கு 6.80 வட்டி  தருவதால் நான் பிறகு பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டேன் (மிகவும் பெருமையாக).

    ஆனால் நண்பர்களே மறுநாள் மாலை,  எனது வீட்டுக் கடன் வங்கி மேலாளரைச் சந்தித்தேன். அவர்கள் மிக எளிமையாக, சார் சிஸ்டம் மாற்ற விடவில்லை, எனவே உங்களுக்கான வட்டி வீதத்தை மாற்ற முடியாது என்று தெரிவித்துவிட்டார்கள். நானும் மிக வேதனையாக, மன  வருத்தத்துடன் மேலாளர் அவர்களைப் பார்த்து, ஏன் மேடம் நேற்று 3 அலுவலரிடம், உயரதிகாரிகளிடம் பேசினீர்கள். மூவரும் மாற்றிக் கொள்ளலாம் என்று கூறினார்கள். நானும் கையெழுத்திட்டு உங்களிடம் கொடுத்து விட்டுத்தான் சென்றேன். சிஸ்டம் என்பதை மனிதர்கள் தான் இயக்குகிறார்கள். எனவே மனிதர்கள் இயக்குவதை நீங்களே சிஸ்டத்தில் மாற்றி எனக்கு வட்டியை மாற்றித் தர வேண்டும் என்று கூறினேன்.

    அவர்களோ எனக்கு இது தொடர்பாக எதுவும் தெரியாது, உயரதிகாரியிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று போனைப் போட்டு எனக்குக் கொடுத்துவிட்டார்கள். நான் மீண்டும் உயர் அதிகாரியிடம் பேசினேன், அவரோ இல்லை தவறு நடந்துவிட்டது மன்னித்துக்கொள்ளுங்கள் என்று மிக எளிதாக என்னிடம் தெரிவித்தார். எனக்கோ மிகவும் மன வேதனையாகவும் வருத்தமாகவும் இருந்தது. அப்போது வங்கி மேலாளர் என்னிடம், சார் உங்களுக்கு மாற்றினால் எல்லோரும் கேட்பார்கள், எனவே மாற்ற இயலாது என்றும் கூறினார். மீண்டும் மேலாளரைப் பார்த்துக் கேட்டேன்.

    நேற்று ஒரு வங்கியில் 6.50 வட்டி தருவதாகக் கூறினார்கள். நான் அங்கு செல்கிறேன் என்று கூறினேன். அந்த மேலாளர் என்னிடம் இரவு கேட்ட பொழுது, நான் ஏற்கெனவே வீட்டுக் கடன் பெற்றுள்ள வங்கியில் இருந்துகொள்கிறேன் என்று தெளிவாகத்  தெரிவித்துவிட்டேன். இப்போது நான் எப்படி அந்த வங்கியின் மேலாளர் முகத்தில் சென்று முழித்து  மீண்டும் எனக்கு லோன் கொடுங்கள் என்று கேட்பது? நீங்களே ஒரு மேலாளர். தகவல் கூறுங்கள் என்று கேட்டேன். அவரிடம் இருந்து எனக்கு எந்தவிதமான தகவலும் வரவில்லை. மௌனமே பதிலாக வந்தது.

    மீண்டும் என்னுடைய கேள்விகளைத் தயார் செய்து  வங்கியின் சென்னை அலுவலகத்திற்கு குறைதீர் பிரிவுக்கு எழுதினேன். உடனடியாகப் பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் மீண்டும் மெயில் மூலம் தொடர்பு கொண்டதன் தொடர்ச்சியாக, சில நாட்கள் கழித்து அவர்களிடமிருந்து மண்டல மேலாளர், தொலைபேசியில் என்னை அழைத்து, சிஸ்டம் செயல்படவில்லை என்று என்னிடம் தெரிவித்தார்கள். நான் கேட்டேன்,  கோபித்துக் கொள்ளாதீர்கள் மேடம், தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்,  சிஸ்டத்தை இயக்குவதே மனிதர்கள் தான். அந்த சிஸ்டத்தில் தவறான ஏதோ ஒரு தகவல் வந்தால் அதனை நீங்கள் உடனடியாகச் செய்து விடுவீர்களா?  உதாரணமாக தூக்கு மாட்டிக்கொள்ளுங்கள் என்றால் உடனடியாக நீங்கள் அதனைச் செய்வீர்களா?  எனவே சிஸ்டம் செய்கிறது என்று கூறுவது தவறான தகவலாகும். அதனை இயக்குவதே மனிதர்கள் தான் என்று தெரிவித்தேன். அவரோ உண்மைதான் ஆனால் எங்களுக்கான பதில் இதுதான் என்று தெரிவித்தார்கள்.

    மீண்டும் நான் அதனை ஆர்பிஐ ஓம்புட்ஸ்மன் மெயில்  கொடுத்தேன். அவர்கள் மீண்டும் ரீபிளையில்  அப்படித்தான் தங்களுக்கு வட்டி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்கள். நான் கடன் பெறும் பொழுது எனக்கான வட்டி 7.05. ரெப்போ ரேட். நான் கடனே  வாங்காத காரணத்தினால் எனது சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததால் (கடன் வாங்காதவர்களுக்கு சிபில் ஸ்கோர் குறைவு என்று இப்பொழுதுதான்  தெரிந்துகொண்டேன்), வட்டியில் எனக்கு 0.65 சதவிகிதம் சேர்த்திருக்கிறார்கள். 7.70 ஆக இருந்திருக்கின்றது. ரெபோ ரேட் வட்டி 6.65 ஆக மாறும் பொழுது 6.65+0.65=  7.30 ஆக உள்ளது.

    இதனை மாற்றிக் கொடுங்கள் என்று ஆர்பிஐ ஓம்புட்ஸ்மேனிலும் அப்ளை செய்தேன். அங்கும் எனக்குப் பழைய பதில் தான்  கிடைத்தது.  மீண்டும் சென்ட்ரல் கவர்மெண்ட் உள்ள பிஜி போர்ட்டலில்  சென்று அப்ளை  செய்தேன். அங்கும் அவர்கள் மாற்ற இயலாது என்று தெரிவித்து விட்டார்கள். மீண்டும் அப்பீல்  செய்தேன். அதிலும் எனக்கு வட்டியை மாற்ற இயலாது என்று தெரிவித்து விட்டார்கள்.

    எனது முக்கியமான கேள்வி என்னவெனில் புதிதாக வரக்கூடிய வாடிக்கையாளருக்கு 6.70 என்று கொடுக்கும் வங்கியானது, நல்ல முறையில் கடனைக் கட்டிவரும் எனக்கு சிபில் ஸ்கோர் தற்போது அதிக புள்ளிகள் இருக்கும் பொழுது, ஏன் வட்டியைக் குறைக்கக் கூடாது என்பது கேள்வி. எனது நியாயமான இந்தக் கேள்விக்கு கடைசிவரை எனக்குப் பதில் கிடைக்கவில்லை.

    மேலும் மூன்று அதிகாரிகளிடம் பேசிய பிறகு மாற்ற முடியாது என்று மேலாளர் அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். அதற்கான காரணத்தைக் கேட்ட பொழுது வங்கியில் இருந்தோ, ஆர்பியை ஓம்புட்ஸ்மேனிலிருந்தோ, பிஜி போர்ட்டலில் இருந்தோ எனக்குச் சரியான தகவல் கிடைக்கப்பெறவில்லை. இதை அவர்கள் ஒரு விஷயமாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பது தான் வேதனையான தகவல். வங்கி அதிகாரிகள் வாய்க்கு வந்தபடி  எதை வேண்டுமானாலும் சொல்கிறார்கள். ஆனால் செயலில் காண்பிக்க மாட்டேன் என்று தெரிவித்து விடுகிறார்கள். எனவே இந்த வங்கியின் வட்டியைக் குறைப்பதற்கு ஏதேனும் வழிமுறைகள் இருந்தால் தாங்களும் தெரிவிக்கவும். இதனைப் படிப்பவர்களும் ஏதேனும் யோசனைகள் இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும். வங்கியில் புகார் அளிக்கும் உச்சம் வரை போராடியும் வங்கி தொடர்பான ஓம்புட்ஸ்மன் கம்ப்ளைன்ட் செய்தும் எனக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை என்பதை இங்கே பதிவு செய்கின்றேன்.

    முடிந்தவரை முயற்சி செய்தேன், போராடினேன். பதிலனுப்பினேன். பலமுறை டோல் பிரீ எண்ணில் தொடர்பு கொண்டேன். மெயில் அனுப்பினேன். அதன் பிறகுதான் எனக்கு இந்தப் பதில்  கிடைக்கப்பெற்றது.  எனவே புதிதாக வருபவர்களுக்கு வழங்குவது போல் எங்களுக்கும், சரியாகக் கடனைக் கட்டி வருபவர்களுக்கும் ரெபோ ரேட் படி, வட்டியைக் குறைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    Share
  • வீட்டுக் கடனுக்குக் காப்பீடு எடுக்கிறீர்களா? உஷார்! உஷார்!

    வீட்டுக் கடனுக்குக் காப்பீடு எடுக்கிறீர்களா? உஷார்! உஷார்!

    எம் எஸ் லட்சுமணன்,
    காரைக்குடி

    வீட்டுக் கடன் வங்கியில் வாங்கப் போகிறீர்களா? மக்களே உஷார் ! உஷார்!

    பிராப்பர்டி இன்சூரன்ஸ் எடுக்கப் போகும் முன் கவனமாக இருங்கள் மக்களே !

    10 வருஷ லோனுக்கு 20 வருடம் பிரீமியம் கட்டும் அவலம் !

    விழிப்புணர்வுப் பதிவு

    நண்பர்களே சமீபத்தில் தேசிய மயமாக்கப்பட்ட மிகப் பெரிய  வங்கியில் வீட்டுக் கடன் பெற்றுள்ளேன். வீட்டுக்கடன் எனக்கு வட்டி அதிகமாக வருகிறது என்கிற காரணத்தினால் மற்றொரு தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கியில் லோன் மாற்றலாம் என்று முயற்சி செய்தேன். அங்குள்ள மேலாளர் என்னிடம் வீட்டுக் கடனுக்கான லோனை மாற்றும் பொழுது பிராப்பர்டி இன்சூரன்சையும் மாற்றித் தர வேண்டும் என்று கூறினார்.  பிராப்பர்டி இன்ஷூரன்ஸ் தொடர்பான தகவல்களை  எஸ்பிஐ வங்கியில் சென்று கேட்டேன்.

    முன்பே உங்களின் வீட்டிற்கு நகல் வந்திருக்கும் என்று தெரிவித்தார்கள். ஆனால் எனக்கு நகல் வரவில்லை என்று கூறினேன். ஒரு வாரம் என்னை அலைய விட்டு இரண்டு பக்க  நகல்கள் தந்தனர். அதனில் இன்சூரன்ஸ் அலுவலக இடத்தில் முகவரி மட்டுமே இருந்தது. தொடர்பு எண் எதுவுமே இல்லை. மீண்டும் இரண்டு பக்கங்களையும் நன்றாகப் படித்துவிட்டு அதில் உள்ள டோல் பிரீ எண்ணுக்குத் தொடர்பு கொண்டேன். இன்சூரன்ஸில் உள்ள, எனது முன்பு குடியிருந்த வீட்டின் முகவரியை  மாற்றுவதற்கு முயற்சி செய்தேன்.

    கஸ்டமர் கேரில் 30 நிமிடங்கள் கழித்துத் தான் தொடர்பு கிடைத்தது. அவர்களுக்கு என்னுடைய மெயில் ஐடி மெயில் பண்ணச் சொன்னார்கள். தகவலை ஏன் எனக்குக் காப்பி அனுப்பவில்லை என்று கேட்டேன். அதற்கு உங்களுடைய மெயில் ஐடி அப்டேட் செய்யப்படவில்லை,  மெயில் ஐடி அப்டேட்  செய்திருந்தால் அனுப்பி இருப்போம். கொரோனா காரணமாகத் தபாலில் அனுப்பவில்லை என்றும் தெரிவித்தார்கள் .அதன் தொடர்ச்சியாக பல மெயில்கள் அனுப்பிய பிறகு எனது முகவரி மாற்றப்பட்டது. மீண்டும் எனது பிராப்பர்ட்டி முகவரியும் தவறாக இருந்தது. அதனையும் மாற்ற, பல மெயில்கள் கொடுத்தோம். டோல் பிரீயில் 10 முறை தொடர்பு கொண்டு, விடா முயற்சி செய்து முகவரி மாற்றம் செய்துகொண்டேன்.

    இதற்காக எனக்கு எஸ்பிஐ கடன் பெற்ற வங்கியிலிருந்து எந்த விதமான உதவியும் இல்லாமல் இருந்தது. ஆனால் பிராப்பர்டி  இன்சுரன்ஸ் முழுவதுமே அந்த வங்கியின் வழியாகத்தான் செய்யப்பட்டிருந்தது. எனக்கு இன்சூரன்ஸ் தொடர்பான எந்தவிதமான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மீண்டும் நான் அறிந்துகொள்ள முயற்சி செய்தபோது வங்கியிலிருந்து எனக்குச் சரியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. மிகப்பெரிய எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முகவரி மட்டுமே உள்ளது. தொடர்பு எண்கள் (டோல் பிரீ எண்கள் தவிர) எதுவுமே இல்லாதது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வங்கியைத்  தொடர்பு கொண்டால் மேலாளர் அவர்களோ, இன்சூரன்ஸ் நிறுவனத்தினரை டோல் பிரீ எண் வழியாகத்தான் தொடர்பு கொள்வோம்  என்று தெரிவிக்கிறார்கள். என்ன செய்வது மக்களை ஏமாற்றுவதற்குப் பல்வேறு வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். எனது இன்ஷூரன்ஸ் எடுத்துப் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சி. நான் 10 ஆண்டுகள் மட்டுமே லோன் போட்டு உள்ளேன். ஆனால் 20 ஆண்டுகளுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளார்கள். இதுகுறித்து மேலாளரிடம் கேட்ட போது, மீண்டும் சரியான தகவல் இல்லை.

    இது தொடர்பாக கடந்த ஒரு மாதமாக கஸ்டமர் கேருக்கு மெயில்  வழியாகவும், டோல் பிரீ எண் வழியாகவும் பலமுறை பேசிவிட்டேன். மெயில், டோல் பிரீ எனப் பல  போராட்டங்களுக்கு பிறகு வங்கியில் ஒருவர் இதற்கெனத் தனியாக ஏஜென்ட் போல் செயல்படுகிறார் என்ற தகவல் தெரிந்தது. அவர்களுக்கு குழு மேலாளர்  இருப்பதாகவும் அறிந்தேன். அவர்களுக்கு நோடல்  மேலாளர் திருச்சியில் இருப்பதாகவும் அறிந்தேன். இவர்கள் அனைவருக்கும் பலமுறை நான் மெயில்  போட்டு, என்னுடைய தகவலை  நானே பலமுறை டோல் பிரீ எண்ணில் கேட்ட பிறகுதான் தொடர்பிலேயே வருகிறார்கள். அதன் பிறகும் எனக்குச் சரியான தகவல் வழங்கப்படவில்லை.

    10 வருடம் லோன் போட்டு உள்ள எனக்கு 20 ஆண்டுகளுக்கு அவர்களது இன்சூரன்ஸ் செய்துள்ளார்கள். இது தவறு. 20 ஆண்டுகள் உள்ளதைப் பத்தாண்டுகளாக மாற்றிக் கொடுங்கள் என்றால், இல்லை அது முடியாது. நீங்கள் போட்ட பொழுது ஒரு ஸ்கீம் இருந்தது. இப்பொழுது ஒரு ஸ்கீம் இருக்கின்றது. எனவே மாற்ற முடியாது என்று தெரிவித்தார்கள். உங்கள் செயல்பாடு தவறானது, மாற்றிக் கொடுங்கள் என்று கேட்டேன். அப்பொழுது நீங்கள் இந்த பாலிசியை குளோஸ் செய்து கொள்ளுங்கள். மீண்டும் புதிதாக ஒரு பாலிசி எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்கள்.

    நானும் இது உங்களின் தவறு. நீங்கள் மாற்றிக்  கொடுங்கள் என்று கேட்டேன். இதற்காக என்னிடம் பலமுறை நான் ஈ மெயில் வழியாகவும், தொலைபேசி வழியாகவும் தொடர்பு கொண்ட பிறகு தோராயமாக ஒரு பதில் தருகிறார்கள். நீங்கள் தற்போது குளோஸ் செய்தால் 11,000 மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கிறார்கள். நான் அப்படி கேட்கவில்லை. 20 ஆண்டுகளை 10 ஆண்டுகளாக மாற்றிக்கொடுங்கள் என்றுதான். ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து முறையான பதில் இல்லை.

    எனவே நான்  தற்போது 20 ஆண்டுகள் போட்டுள்ளதால், 23 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி உள்ளேன். இது 10 ஆண்டுகள் என்றால் எனக்கு   11,000 அல்லது  12,000 தான்  வரும். ஆனால் அவர்கள் இதனை அதிகப்படியாக அவர்களாகவே முடிவு செய்து போட்டுள்ளார்கள். இது குறித்துப் பலமுறை கஸ்டமர் கேரில் தொடர்பு கொண்டோம். எனக்கு இதுவரை சரியான தகவல் கிடைக்கப் பெறவில்லை. எனவே வீட்டுக் கடனுக்கு இன்சூரன்ஸ் செலுத்தும் போது மிக கவனமாக இருங்கள். வீட்டுக் கடன் பெறும் பொழுது பணம் கொடுக்கும் நிலையில் அவர்களை –  மேலாளர்களை நாம் கடவுளாக நினைக்கின்றோம். எனவே அவர்கள் அதனை வாய்ப்பாக எடுத்துக்கொண்டு இஷ்டப்பட்ட இடத்தில் நம்மிடம் கையெழுத்து பெற்றுக்கொண்டு அவர்களாக முடிவுகளை எடுத்துக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் நமது தலையில் மிளகாய் அரைப்பதற்குத் தயாராக இருக்கின்றனர்.

    எனவே நண்பர்களே, டோல் ப்ரீ என்னை நான் தொடர்பு கொள்ளும்பொழுது 30 நிமிடத்திற்கு மேலாக ஆகின்றது. ஆனால் அவர்களோ ஒரு நிமிடத்தில் நம்மைத் தொடர்பு கொண்டு விடுகிறார்கள். இதுவும் வருத்தமான விஷயம்தான். எனவே நண்பர்களே வீட்டுக் கடன் வாங்கும்போது பிராப்பர்டி இன்சூரன்ஸ் தொடர்பாகத் தெளிவான தகவல்களைக் கேட்டு கொள்ளுங்கள். எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் அவர்கள் உங்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுத்துத் தர உள்ளார்கள்? அது எத்தனை ஆண்டுகளுக்கு எடுக்கின்றார்கள்? எவ்வளவு பிரீமியம்?

    ஏனென்றால் எனது நண்பர்கள் இருவர் இதே எஸ்பிஐயில் லோன் வாங்கி, கட்டி முடிக்கும் பொழுது பிராப்பர்டி இன்சூரன்ஸ்க்குப் பல ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டார்கள் என்று தெரிவித்தார்கள். எனவே உங்களது பணம் உங்களது கையில்தான் இருக்க வேண்டும்.  இதில் கொஞ்சம் ஆர்வம் எடுத்து உங்களைத் தெளிவாக்கிக் கொள்ளுங்கள். இதுவரை நீங்கள் இன்சூரன்ஸ் என்ன போடப்பட்டு இருக்கிறது என்று தெரிந்துகொள்ளவில்லை என்றால்  வங்கிக்குச் சென்று உங்களது இன்சூரன்சுக்கான சரியான நகலைப் பெற்றுக் கொள்ளுங்கள். அது தொடர்பான தகவலைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

    இந்தப் பதிவை நான் தரும் நிலையிலும் எனக்கு இதுவரை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து முழுமையான பதில் இல்லை. நான் அடுத்த கட்டத்துக்கு இதனைக் கொண்டு சென்று முழுமையான பதில் பெறுவேன் என்பதில் உறுதியாக உள்ளேன். இந்தப் பதிவு முழுவதுமாக விழிப்புணர்வுக்கான பதிவு.

    Share