முன்னேறிய நாடாக விளங்கும் சிங்கப்பூர், பலரின் கனவு தேசம். உலக நாடுகள் மதிப்புடன் வியந்து நோக்கும் இந்திரபுரி. வளம், வளர்ச்சி, வாய்ப்புகள் குவிந்துள்ள சொர்க்க பூமி. சிங்கப்பூர்வாசிகளுக்கு அந்நாட்டு அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. முதலீட்டாளர்களுக்குச் சாதகமான நாடாக விளங்குகிறது. எளிதில் குடியுரிமையும் பெற முடிகிறது.
கல்வி, தொழில், வேலை வாய்ப்புகள் எனப் பலவற்றிலும் சிங்கப்பூரில் எத்தகைய வாய்ப்புகள் உள்ளன? தி சிராங்கூன் டைம்ஸ் இதழின் முதன்மை ஆசிரியரும் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று, அங்கே 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருபவருமான ஷாநவாஸ், நம்முடன் வெளிப்படையாக உரையாடுகிறார்.
இது, உலகின் மிகப் பெரிய நீரூற்று எனக் கின்னஸ் சாதனை (1998) படைத்தது. செல்வ நீரூற்று (The Fountain of Wealth) எனப் பெயர் பெற்றது. சிங்கப்பூரின் சன்டெக் சிட்டி என்ற வணிக வளாகத்தில் அமைந்துள்ளது. நீரூற்றுடன் வண்ண விளக்குகளும் லேசர் ஒளிக் காட்சிகளும் எழுத்துகளும் அலங்கரிக்கின்றன. இந்த நிகழ்வில், நம் அன்புக்கு உரியவர்களுக்கு லேசர் செய்திகளும் வாழ்த்துகளும் விடுக்கலாம். தொழில்நுட்பத்தில் 2002ஆம் ஆண்டிலேயே சிங்கப்பூர் எந்த அளவுக்கு முன்னேறியிருந்தது என்பதை இந்தக் கோலாகலக் காட்சிகள் காட்டுகின்றன.
இதில் இன்னொரு சிறப்பும் உண்டு. ஒவ்வொரு நாளும் சில நேரங்களில் பெரிய நீரூற்றை நிறுத்திவைப்பர். அதன் மையப் பகுதியில் உள்ள சிறிய நீரூற்றை இயக்குவர். அதை மூன்று முறை சுற்றி வருபவர்களுக்கு அதிர்ஷ்டம் சேரும் என்பது நம்பிக்கை. இந்தப் பதிவின் தொடக்கத்தில், அந்தச் சிறிய நீரூற்றைப் பலரும் சுற்றி வருவதைப் பார்க்கலாம். அவர்களுடன் என் மனைவி ஹேமமாலினியும் சுற்றி வருகிறார்.
சத்தியநாராயணனின் படப்பதிவைப் பார்த்து மகிழுங்கள்.
The Fountain of Wealth is listed by the Guinness Book of Records in 1998 as the largest fountain in the world. It is located in one of Singapore’s largest shopping malls, Suntec City.
During certain periods of the day, the fountain is turned off and visitors are invited to walk around a mini fountain at the centre of the fountain’s base, three times for good luck. At night, the fountain is the setting for laser performances, as well as live song and laser message dedications between 8 pm to 9 pm daily. It is situated in such a way the fountain is the hub of the shopping mall (Wiki).
Images courtesy: Wikimedia.org
Video captured by SathyaNarayanan.L in 2002
சிங்கப்பூரின் செந்தோசாத் தீவில், அண்டர்வாட்டர் வேர்ல்டு என்ற நீர்வாழ் உயிரினக் காட்சியகம் இருந்தது. இதன் உள்ளே, அக்ரிலிக் என்ற நெகிழியால் ஆன, நீரடிச் சுரங்கம் இருந்தது. இந்தச் சுரங்கத்தின் வழியே நீர்வாழ் உயிரினங்களை மிக நெருக்கமாகக் கண்டு மகிழ முடிந்தது. 1991ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இது, 2016ஆம் ஆண்டு மூடப்பட்டது. 25 ஆண்டுகளில் பல்லாயிரம் பார்வையாளர்களை ஈர்த்தது. 2002 காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் வசித்தபோது ஹேமமாலினி இந்தக் காணொலியை எடுத்தார். இதைப் பார்க்கும்போது, ஆழ்கடலில் விழிவிரியப் பார்த்துக்கொண்டே நாம் நடந்து வரும் உணர்வைப் பெறுகிறோம். சின்னஞ்சிறியதும் பென்னம்பெரியதுமாக, விதவிதமான நீர்வாழ் உயிரினங்கள், நம் தலைக்கு மேலும் நாலாபுறத்திலும் வலம் வருவது, அரிய ஓர் அனுபவம்.
Underwater World (Chinese: 新加坡海底世界) (13 May 1991 – 26 June 2016), also known as Underwater World Singapore Pte Ltd, was a former oceanarium located on the offshore Singaporean island of Sentosa. Underwater World had a 83-metre (272 ft) long travelator that moved visitors along a submerged 6-millimetre (0.24 in) thick acrylic-windowed tunnel from which they could look at an array of marine life including coral reefs, stingrays, moray eels, turtles, sharks and others. (Wiki)
சிங்கப்பூரில் நடைபெற்ற பிங்க் டால்பின் கேளிக்கைக் காட்சி, இதோ. டால்பின்கள் நடனமாடுவதையும் நடப்பதையும் வளையத்துக்குள் பாய்வதையும் வளையத்தை மூக்கால் சுழற்றுவதையும் பந்து எடுத்து வருவதையும் பார்வையாளருக்கு முத்தம் கொடுப்பதையும் இன்னும் பல சாகசங்களையும் கண்டுகளியுங்கள்.
படப்பதிவு – ஹேமமாலினி லோகநாதன்.
This is Pink Dolphin show in Sentosa Island, Singapore. These Indo-Pacific Humpback Dolphins, also known as “pink dolphins”. Trainers interact with two pink dolphins during this show. Visitors can meet the dolphins. Dolphins can also kiss visitors. You can watch dolphins dancing, walking, diving… and much more. Enjoy the show.
சிங்கப்பூரில் வாழும் தமிழ் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், இந்தியாவில் பிறந்து வளர்ந்து, 22 வயது வரை தான் பெற்ற அனுபவங்களை, கற்ற கலைகளை, பயணித்த ஊர்களை, சந்தித்த மனிதர்களைப் பற்றி இந்த அமர்வில் பகிர்ந்துகொண்டுள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 40 புத்தகங்களை எழுதியவர், எனக்குப் பிடித்த மொழி மலையாளம் எனக் கூறுகிறார். இந்தச் சுவையான உரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.
சிங்கப்பூரின் செந்தோசாத் தீவில், சிங்கப்பூரின் வரலாற்று அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் சிங்கப்பூரின் மொத்த வரலாறும் அருமையாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் காலத்தில், மலேசிய ஆட்சியில், ஆங்கிலேயர் ஆட்சியில், ஜப்பானிய ஆதிக்கத்தில், விடுதலைக்குப் பிறகு பிரதமர் லீ குவான் யூ ஆட்சியில் சிங்கப்பூர் எப்படியெல்லாம் இருந்தது என்பதை நேரடியாகக் காணும் வகையில் தனித் தனி உள்ளரங்க வடிவமைப்புடன் அமைத்துள்ளார்கள். புகைப்படங்களை மாதிரியாகக் கொண்டு அதே போல் தத்ரூபமாகச் சிலைகளையும் உள்ளரங்கத்தையும் ஒளி ஒலி அமைப்புகளையும் செய்துள்ளார்கள். சில இடங்களில் சிலைகள் அசைகின்றன, பேசுகின்றன. வரலாற்றுக் காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்வதில் இவை வெற்றி பெற்றுள்ளன. இந்த அபாரமான அருங்காட்சியகத்தைக் கண்டு மகிழுங்கள்.
சிங்கப்பூரின் செந்தோசாத் தீவில் நடைபெற்ற இசை நீரூற்று நடனத்தையும் லேசர் ஒளிக்கற்றைக் காட்சிகளையும் இந்தப் பதிவில் கண்டுகளியுங்கள். 25 ஆண்டுகளாக நடைபெற்ற இந்தக் கண்கவர் வண்ண நிகழ்ச்சி, 2007இல் நிறுத்தப்பட்டது. ஆயினும் இப்போதும் இது நம்மைத் தொடர்ந்து வசீகரிக்கிறது.
சிங்கப்பூர் கேபிள் காரில், செந்தோசாத் தீவு நோக்கி, இதோ ஓர் இனிய பயணம். அண்ணாந்து பார்க்கின்ற கட்டடங்களை எல்லாம், இதில் குனிந்து பார்க்கின்றோம். பறவைப் பார்வையில் சிங்கப்பூரையும் கெப்பல் துறைமுகத்தையும் மெர்லயன் சிலையையும் நீலக் கடலையும் கப்பல்களையும் இதில் நீங்கள் காணலாம்.
சிங்கப்பூரின் வாட்டர்லூ தெருவில் கிருஷ்ணன் கோவிலும் சீனக் கோவிலும் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இதில் ஒரு கோவிலுக்கு வரும் பக்தர்கள், அடுத்த கோவிலுக்கும் சென்று வழிபடுகின்றனர். பல்லின மக்கள் வாழும் சிங்கப்பூரில், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக இவை திகழ்கின்றன. இந்தக் கிருஷ்ணன் கோவில், 1870இல் கட்டப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் மிகப் பழைமையான கோவில்களுள் ஒன்றான இது, அந்நாட்டின் தேசிய நினைவுச் சின்னமாகவும் அறிவிக்கப்பெற்றுள்ளது. இராம நவமியை முன்னிட்டு, இந்தக் கோவில்களைக் கண்டு மகிழுங்கள்.